இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரத்தில் நாம் அனைவரும் ஒன்று கூடி, 65-0725E அன்று பிரசங்கித்த ” மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?” என்ற செய்தியைக் கேட்போம்.
ஒவ்வொரு வாரமும் தேவனின் ஆட்டுத் தொழுவத்தில் உங்கள் ஒவ்வொருவருடனும் கூடிவருவதில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன், தேவனுக்கு நன்றி கூறுகிறேன், எங்கே நாம் அந்த மறைந்திருக்கும் இடத்தில் உண்டுக்கொண்டும் மற்றும் அந்த மறைத்து வைத்த உணவை உண்ணவும், ஜீவிக்கவும் செய்கிறோம். அது இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு, தன்னை நமக்கு நியாயப்படுத்தவும் மற்றும் வெளிப்படுத்தவும் செய்கிறது.
அவர் தன்னை மறைத்துக்கொண்டார், அதனால் மற்றவர்கள் அதை சரியாகப் பார்த்து மற்றும் அதைப் பார்க்க மாட்டார்கள், ஆனால் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டியான நமக்கோ, நாம் அதை எளிய பார்வையில் பார்க்கிறோம், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம். அவருடைய வார்த்தையும் அவருடைய தீர்க்கதரிசியும் ஒன்றே என்பதால் அவர்களுடன் நாம் தங்கியிருக்கிறோம்.
நீங்கள் தேவனின் குழந்தையாக இருந்தால், நீங்கள் இந்த வேதாகமத்தின் தீர்க்கதரிசியுடன் தரித்திருப்பீர்கள். அதுவே அந்த வார்த்தை.
இன்று பல அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசிகள் கூறுகிறார்கள், “நீங்கள் இருக்க வேண்டியது பரிசுத்த ஆவியானவருடன், தீர்க்கதரிசி அல்ல.” என்கிறார்கள், பழங்கால தீர்க்கதரிசிகளைப் போலவே, நமக்கும் ஒரு கேள்வி இருந்தால், அதற்கு சரியான பதில் இருக்க வேண்டும். நமக்கு முன்னிருந்த தீர்க்கதரிசி என்ன சொன்னார் என்று பார்க்க நாம் வார்த்தைக்கு செல்ல வேண்டும்.
ஆனால் அங்கே ஒரே ஒரு உண்மையான கிறிஸ்து ஆவி இருக்கிறது, மேலும் அதுவே அவர் அதைச் செய்வதாக வாக்களித்தபடி வார்த்தை மாம்சமானது .
அவர் வாக்குறுதியளித்த ஒரு உண்மையான கிறிஸ்து ஆவி, மல்கியா 4, லூக்கா 17, அது மனித மாம்சத்தில் தன்னை வெளிப்படுத்தும் மனுஷகுமாரன்.
ஆம், அபிஷேகம் செய்யப்பட்ட ஆண்கள் இருக்கிறார்கள். ஆம், அவர்களுக்கு அழைப்பு இருக்கிறது. ஆம், அவர்களிடம் உண்மையான பரிசுத்த ஆவி இருக்கிறது. ஆம், அவர்களுக்கு சரியான நோக்கமும் குறிக்கோலும் இருக்கிறது.
பிறகு எது சரி எது தவறு என்று எப்படி தெரிந்து கொள்வது?
கவனியுங்கள், அவர்கள் ஒரே மாதிரி இருப்பார்கள், அவர்கள் ஒரே மாதிர் அபிஷேகம் செய்யப்படுவார்கள். ஆனால் கவனிக்கவும், “அவர்களின் கனிகளால்…”
இந்த விஷயங்களைப் பற்றி சொல்வதை நான் வெறுக்கிறேன் ஆனால் இந்த மணிநேரம் தாமதமாகிறது மேலும் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. பவுல் இதைப்பற்றி சபையை எச்சரித்தார், அந்தக் கொடிய ஓநாய்களால் இன்று சொல்வதும் பிரசங்கிப்பதும் இதுதான். பொய்யான அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் வருவார்கள் என்று சகோதரர் பிரன்ஹாம் கூறினார்.அவர்கள் சொன்னது போலவே நம்மிடையே இருக்கிறார்கள்.
ஒரு ஊழியர் ஒருவர் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இங்கே இருக்கிறது. அவர்களின் கனி தேவனின் தீர்க்கதரிசி மீது சந்தேகத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. பின்பற்றி ஒலிநாடாவை இயக்குவதன் மூலம் நாம் தீர்க்கதரிசியின் தெய்வீகத்தன்மைக் கொண்ட மக்கள் என்று அவர்களை எச்சரிக்கிறார்.
இது எவ்வளவு வஞ்ஜிக்கிறது என்று கேளுங்கள்.
வில்லியம் பிரன்ஹாமின் பிரசங்கங்களின் வெளியீடுகளை இப்போது தேவனின் குரல் என்று அழைக்கும் வகையில் இந்த சாத்தான் எங்கள் செய்தி வரிசையில் ஊடுருவியதால் நான் புண்படுத்தப்பட்டேன். வில்லியம் பிரன்ஹாம் உண்மையில் தேவனின் குரல் அல்ல, மாறாக தேவன் பயன்படுத்திய ஒரு மனிதனின் குரல். அவர் தேவனின் குரல் என்று வேதாகமம் ஒருபோதும் கூறவில்லை, மாறாக வேதாகமம் அவரை 7வது தேவ தூதர் குரல் என்று அடையாளப்படுத்துகிறது. (வெளி. 3:14; 10:7).
நாம் வார்த்தைக்குச் செல்வோம், தேவனின் தீர்க்கதரிசி இந்த தவறான போதனையை அம்பலப்படுத்தட்டும்.
அப்படிச் சொல்லி நான் உங்களை புண்படுத்தியிருந்தால், என்னை மன்னியுங்கள், ஆனால், அது கோபமாக இருக்கலாம் என்று நான் உணர்ந்தேன், ஆனால், நான் உங்களுக்கு தேவனின் குரல்.
இப்போது நீங்கள் யாரை நம்பப் போகிறீர்கள், இந்த போலி அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசியா, அல்லது
தேவன் நியாயப்படுத்தப்பட்ட ஏழாவது தேவ தூதரா? இதுபோன்ற விஷயங்களை நம்பும் அல்லது உங்களுக்குக் கற்பிக்கும் எந்த ஊழியரின் கீழ் நீங்கள் எப்படி அமர்ந்திருக்க முடியும்? இன்னும் நேரம் இருக்கும் போது நீங்கள் வார்த்தைக்குள் நுழைவது நல்லது.
வில்லியம் பிரன்ஹாமை முழுமையடையச் செய்து அவரை தெய்வமாக்குவதில் செய்தி சமூகத்தால் ஒரு பயங்கரமான தவறு நடந்துள்ளது. வில்லியம் பிரன்ஹாம் ஒருபோதும் முழுமையானவர் அல்ல! தேவனுடைய வார்த்தையே முழுமையானது.
ஆமென், தேவனுடைய வார்த்தையே நம்முடைய முழுமையானது. வார்த்தை யாரிடம் வந்தது, உங்களுக்கா அல்லது அவருக்கு? தேவனின் வார்த்தையின் தெய்வீக மொழிபெயர்ப்பாளர் யார், நீங்கள் அல்லது அவரா? அக்கினி ஸ்தம்பமானது யாரை கர்த்தர் உரைக்கிறதாவதாக நிரூபித்தது , நீங்களா அல்லது அவரா?
உங்களுக்கு இரண்டு நபர்கள் கிடைத்ததால், உங்களுக்கு இரண்டு கருத்துகள் கிடைத்தன.
நமக்கு இரண்டு மனிதர்களோ அவர்களின் கருத்துகளோ தேவையில்லை, தேவனின் தீர்க்கதரிசி டேப்பில் சொன்னதுதான் நமக்குத் தேவை.
மேலும் இது ஒரு இறுதியான முற்றிலுமான நிலைக்கு வர வேண்டும், மேலும் எனது முற்றிலுமானது வார்த்தையான வேதாகமமே.
நீங்கள் சொன்னது போல், வேதாகமம் அவருடையது மற்றும் நம் முற்றிலுமானது, ஆனால் அவர் கூறுகிறார்:
எனக்குத் தெறியும், எங்கள் சகோதரர்களே, நீங்கள் என்னை உங்கள் முற்றிலுமானதாக பார்க்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.
எனவே ஒரு நிமிடம் காத்திருங்கள், அது நீங்கள் சொன்னதற்கு முரணாகத் தெரிகிறது. நாங்கள் அவரை எங்கள் முற்றிலுமானவராக பார்க்கிறோம் என்று கூறினார்.
நான் தேவனைப் பின்பற்றும் வரை, பவுல் வேதத்தில் கூறியது போல், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல் நீங்களும் என்னைப் பின்பற்றுங்கள்.”
அது அபிஷேகம் இல்லையா? அவர் எதைப் பற்றி பேசுகிறான் என்று தெரியாதா?
கடந்த வாரம் தேவனின் தீர்க்கதரிசி என்ன சொன்னார்?
ஒரு மனிதன் வரும்போது, தேவனால் அனுப்பப்பட்டு, தேவனால் நியமிக்கப்பட்டு, உண்மையான இது கர்த்தர் உரைக்கிறதாவது செய்தியுடன் வரும்போது , அந்த செய்தியும் செய்தியாளரும் ஒன்றே.
அவர் கூறினார், நீங்கள் அவர்களைப் பிரிக்க முடியாது, அவர்கள் ஒன்றே, ஆனால் நீங்கள் கூறுகிறீர்கள் நாங்கள் அப்படி செய்வோம் என்று ?
வில்லியம் பிரன்ஹாம் எந்த மனிதரையும் விட வித்தியாசமானவர் அல்ல, ஏனெனில் அவர் எலியாவைப் போலவே உணர்ச்சிவசப்பட்ட மனிதராக இருந்தார்.
ஆமென், அவர் நிச்சயமாக ஒரு மனிதராக இருந்தார், ஆனால் தேவன் தம்முடைய எல்லா வார்த்தைகளையும் வெளிப்படுத்தவும், வாக்குத்தத்த தேசத்திற்கு நம்மை வழிநடத்தவும் தேர்ந்தெடுத்த மனிதர் அவர். மக்கள் உன்னை நம்பும்படி செய் என்று தேவன் சொன்னவர் அவர்தான்.
அதே விஷயம், அபிஷேகம் செய்யப்பட்டு, பெந்தெகொஸ்தே நற்செய்தியைப் பிரசங்கிப்பது, ஆனால் நிரூபிக்கப்பட்ட வார்த்தையின் இன்றைய வாக்குறுதியை மறுப்பது. “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்”
அவர்கள் உண்மையான பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்றால் வித்தியாசத்தை நாம் எப்படி அறிவது? உண்மையான தீர்க்கதரிசியிலிருந்து தவறான தீர்க்கதரிசிகளை நாம் அறிந்துகொள்ள அவர் நமக்கு உதாரணங்களைத் தருகிறார்.
பிலேயாம் மற்றும் மோசே. மிகாயா மற்றும் சிதேக்கியா. யெரேமியா மற்றும் ஹனனியா. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இருவரும் தேவனின் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசிகள், ஆனால் அவர் என்ன செய்யச் சொன்னார், தேவனின் நியாயப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியுடன் தரித்திருங்கள். நீங்கள் தேவன் வழங்கிய வழியைப் பின்பற்றுகிறீர்கள், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த ஒரே வழி இதுதான்.
அவர் அதைச் செய்யும்போது நான் மட்டுமே அருகில் இருக்கிறேன். நான் அதைச் சொல்ல அவர் பயன்படுத்திய ஒரு குரல் மட்டுமே. நான் அறிந்தது அல்ல; நான் என்னை சரணடைந்தேன், அதைத்தான் அவர் பேசினார்.
மணவாட்டி விரும்புவதும் தேவைப்படுவதும் அவ்வளவுதான். ஒரு குரல். ஒரு தீர்க்கதரிசி. ஒரு செய்தி. ஒரு தூதர்.
ஓ பிதாவே, உமது கிருபைக்கும் இறக்கத்திற்க்கும் நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்களால் முடியாதது எதுவுமில்லை என்று கூறினீர். எங்களால் முடியாதது எதுவுமில்லை. ஏனென்றால், விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும், மேலும் நாங்கள் விசுவாசிக்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில்லி நேரப்படி எங்களுடன் இனையுங்கள், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட குரல், 65-0725M அன்று பிரசங்கித்த “கடைசிக்காலத்தில் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள்” என்ற செய்தியைக் கேட்க எங்களுடன் இனையுங்கள்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் நமக்குள் குமிழிக்கொண்டிருக்கும் வெளிப்படுத்தலின் ஊற்று கிணறு உள்ளது. இந்தச் செய்தியை நாம் வாழ்நாள் முழுவதும் கேட்டிருக்கிறோம், ஒவ்வொரு வார்த்தையையும் எப்போதும் நம்பி வருகிறோம், ஆனால் இப்போது அது முன்னெப்போதும் இல்லாத வகையில் நமக்குள் பிரத்தியட்ச்சமாகிறது.
உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட தேவனின் இரகசிய விஷயங்களை நாம் உண்ணும் காலம் இது. மக்கள் சிரிக்கின்ற விஷயம் தான் நாம் பிரார்த்தனை செய்யும் விஷயம். மக்கள் “பைத்தியம்” என்று அழைக்கும் விஷயத்தை நாம் ” மிக பெரியது!” என்று அழைக்கிறோம். தேவன், அவருடைய மணவாட்டியாக இருப்பதற்கு ஒரே ஒரு வழி இருப்பதை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், அது ஒலிநாடாவை இயக்குவது.
ஆனால் தேவனுக்கு நன்றி உண்டாவதாக, இந்த கடைசி நாட்களில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் நன்மை மற்றும் கிருபையின் அடிப்படையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அவருடைய மக்களிடையே தன்னை நிரூபிக்கிறோம் என்பதற்கு மறைக்கப்பட்ட உணவு, ஆவிக்குறிய உணவு கிடைத்தது.
மணவாட்டி கேட்கும் ஒவ்வொரு செய்தியிலும், அது அவருடைய பரிபூரண சித்தம் என்பதை அவர் நமக்கு உறுதிப்படுத்துகிறார். அது நாம் என்ன நினைங்கிறோமோ அவர் சொல்வது அல்ல,அல்லது நாம் என்ன நினைக்கிறோமோ அதை அவர் அர்த்தம் கொள்வது அல்ல, அவர் என்ன சரியாக சொல்கிறாரோ அதை மற்றவர்களால் பார்க்க முடியவில்லை; அவர்கள் பார்வையற்று இருக்கிறார்கள். தேவன் அதை மறைத்துவிட்டார். அவர்கள் அதை சரியாகப் பார்க்கிறார்கள், ஆனால் பார்க்க மாட்டார்கள். நம்மைப் பொறுத்தவரை, நாம் எல்லாவற்றையும் பார்க்கிறோம்.
ஒவ்வொரு வாரமும் நாம் கூடிவரும்போது, அவர் என்ன சொல்லப் போகிறார் மற்றும் நமக்கு வெளிப்படுத்தப் போகிறார் என்பதைக் கேட்க நாம் காத்திருக்க முடியாது. இந்த ஞாயிற்றுக்கிழமை, அவர் நமக்கு சில சிறிய மறைத்து வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களைத் தரப் போவதில்லை, அவர் நமக்கு ஒரு தாய் கொடுப்பதுப்போல வழங்கப் போகிறார் மேலும் நாம் அதைப் பெறுவதை உறுதிசெய்ய மீண்டும் மீண்டும் அதை உடைக்கப் போகிறார்.
• தீர்க்கதரிசி, தேவனின் பிரசன்னத்தில் நீண்ட காலமாக இருந்தார், பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் அல்லது, எந்த நேரத்திலும் அவர்கள் வார்த்தையாக மாறும் வரை அவர்கள் தேவனின் பிரசன்னத்தில் வாழ்ந்ததால், அவர்களின் செய்தி வார்த்தையாகவே இருக்கிறது. மேலும், நினைவில்க்கொள்ளுங்கள் ” இது கர்த்தர் உரைக்கிறதாவது” என்று அவர் கூறின்னார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
• ஒரு மனிதன் வரும்போது, தேவனால் அனுப்பப்பட்ட, தேவனால் நியமிக்கப்பட்ட, உண்மையான கர்த்தர் உரைக்கிறதாவதுடன் , அந்த செய்தியும் தூதரும் ஒன்றே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
• ஒரு மனிதன் கர்த்தர் உரைக்கிறதாவதுடன் வரும்போது, அவனும் அந்தச் செய்தியும் ஒன்று.
• பரலோகம் அதை அறிவிக்கிறது, வேதாகமம் அதை அறிவிக்கிறது, செய்தி அதை அறிவிக்கிறது, எல்லாமே ஒன்றுதான் என்று.
• அந்த தீர்க்கதரிசி, வார்த்தை, செய்தி; தூதர், செய்தி மற்றும் செய்தி ஒன்றுதான்.
• எந்த மனிதனும் அவனது செய்தியும் ஒன்றே.
தங்கச் சுரங்கத்தைப் பற்றி பேசுகையில்.
உங்களிடம் ஏதேனும் வெளிப்பாடு இருந்தால், அவர் அதை அழகாக தெளிவுபடுத்துவார் என்று நான் நினைக்கிறேன்; செய்தியும் தூதரும் ஒன்றே. அவர் கூறுகிறதைக் கேட்கிறீர்களா…அந்த அதே!! அப்படியானால் ஊழியர்களே நீங்கள் செய்தியிலிருந்து தூதரை பிரிக்க முடியாது.
அவர் கொண்டு வந்த செய்தியுடன் நீங்கள் உங்கள் சபையில் தூதரை வைக்க வேண்டும் அல்லது நீங்கள் அனைத்து செய்திகளையும் ஏற்கவில்லை என்றால் நீங்கள் மணவாட்டி அல்ல.
ஓ! மீண்டும், இது செய்தியையும் தூதரையும் ஒன்றாக்குகிறது. ஆவிக்குறிய உணவு தயாராக உள்ளது, அது இப்போது குறித்தக் காலத்தில் உள்ளது.
நாம் தேவனின் காலத்தில் ஜீவிக்கிறோம் என்று விசுவாசிக்கும் நமக்கு, அவர் அனுப்பிய தூதர், அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும்; இந்த விஷயங்கள் ஒரு மறைக்கப்பட்ட உணவு.
இந்தச் செய்தியை நாம் எவ்வளவாக விரும்புகிறோம், மேலும் “இதற்கு மேல் இன்னும் எப்படி இருக்க முடியும்?” என்று நீங்கள் நினைக்கும் போது. நாம் யார் என்று சொல்வதன் மூலம் அவர் அதில் ஒரு தலைக்கல்லை வைக்கிறார்.
ஜீவனுள்ள சபையான மணவாட்டியில் வாழும் தேவனின் அதிகாரத்தை நீங்கள் காணவில்லையா? வியாதியஸ்தர்கள் குணமடைகிறார்கள், மறித்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள், ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள், சுவிசேஷம் அதன் வல்லமையில் வெளிப்படுகிறது, செய்தியும் தூதரும் ஒன்றே.அந்த வார்த்தை சபையில் உள்ளது,அது நம்மில் உள்ளது.
அந்த வார்த்தை நம்மில் உள்ளது, நாம் தான் செய்தி. நம்மிடம் அதிகாரம் உள்ளது. இந்த செய்தியும் நாமும் ஒன்றே!! அதைப் பற்றி பேசும்போது அது மீண்டும் மீண்டும் குமிழ்கிறது.
மணவாட்டி மணவாளனின் ஒரு பகுதி, சபை கிறிஸ்துவைப் போன்றது. “நான் செய்யும் கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.”
நாம் மணவாளனின் அங்கம்!!
நாம் கிறிஸ்துவைப் போன்றவர்கள்!!
இந்த மேற்கோள்களைப் படித்தாலே உங்கள் இருதயம் ஆசீர்வதித்தாக நீங்கள் நினைக்கிறீர்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு ஜெஃபர்சன்வில்லி நேரம், நாம் கேட்கும் போது: 65-0718E அன்று பிரசங்கித்த ” ஏற்ற காலத்தில் ஆவிக்குறிய ஆகாரம்” என்ற செய்தியில் தேவனின் குரல் உங்களுக்குச் சொல்வதைக் கேட்கும் வரை காத்திருங்கள்.
எங்களுடன் இனைய நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். உங்களால் முடியாவிட்டால், எந்த நேரத்திலும், எந்தச் செய்தியையும், எங்கும் ஒலிநாடாவை இயக்கி, மேலும் தேவனின் தூதர் உங்களுக்கு தேவனின் செய்தியைக் கொண்டு வருவதைக் கேளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்.
அதனால் இன்றைய தினத்தில் , குழந்தைகள் உண்ணும் ஜீவ அப்பம், வறட்சியின் போது அவர்களைத் தக்கவைக்க தேவனின் செய்தியைப் பின்பற்றுகிறது.
புத்தாண்டு தினம், டிசம்பர் 31 அன்று நம் வீடுகளில் மீண்டும் ஒருமுறை இராபோஜனம் அனுசரிக்க விரும்புகிறேன். எப்படிப் பெறுவது மற்றும் அப்பத்தை எப்படி சுடுவது என்பதற்கான வழிமுறைகளை கீழே உள்ள இணைப்புகளில் காணலாம். இந்த சேவையின் ஒலிநாடா பதிவிறக்கம் செய்யக்கூடிய இணைப்பு விரைவில் நம் இணையதளத்தில் கிடைக்கும்.அல்லது, லைஃப்லைன் பயன்பாட்டிலிருந்து இந்த சேவையின் ஒலிநாடாவை இயக்கலாம்.
Jeffersonville பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகளுக்கு, டிசம்பர் 30, வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1:00 – 4:00 க்கு இடையில், VGR அலுவலகத்தின் கீழே நீங்கள் இராபோஜன திராட்சை ரசத்தைக் பெற்றுக் கொள்ளலாம்.
டிசம்பர் 31, சனிக்கிழமை மாலை 5:00 EST மணிக்குத் தொடங்கும்,அப்போது 62-1231 அன்று பிரசங்கித்த” போட்டி ” என்ற செய்தியைக் கேட்போம். சகோதரர் பிரான்ஹாம் புத்தாண்டு இரவு செய்தியைக் கொண்டு வந்த பிறகு, நாம் டேப்பை இடைநிறுத்தி, தேவனின் இராப்போஜனத்திற்குத் தயாராகும் போது தோராயமாக 10 நிமிட வழிபாட்டுப் பாடல்களைக் கேட்போம். பிறகு சகோதரர் பிரன்ஹாம் இராபோஜன சேவையைத் தொடங்கும் இடத்தில் டேப்பை மீண்டும் தொடர்வோம். இந்த டேப்பில், சேவையின் கால்களைக் கழுவும் பகுதியை அவர் தவிர்க்கிறார், அதையே நாமும் செய்வோம். அவருடைய சேவையில் இன்னொரு வருடத்திற்கு நாம் திரும்பும்போது, முதலில் வார்த்தையைக் கேட்பதன் மூலமும், பின்னர் அவருடைய இராப்போஜனத்தில் பங்குகொள்வதன் மூலமும் நம் வாழ்க்கையை அவருக்கு மீண்டும் அர்ப்பணிப்போம். ராஜாக்களின் ராஜாவை நம்முடன் வந்து சேர வரவேற்க நம் வீடுகளை ஒரு சரணாலயமாக மாற்ற நமக்கு மீண்டும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக,
மனிதன் ஆபிரகாமைப் போல இருக்க வேண்டும் என்று எப்போதும் தன் இருதயத்தில் ஏங்குகிறான்.ஒரு நாள் மதியம் 11:00 மணியளவில் தனது வீட்டில் அமர்ந்திருந்தபோது, அவன் நிமிர்ந்து பார்த்தான், மூன்று புருஷர் தங்கள் ஆடை முழுவதும் தூசியுடன் தன்னை நோக்கி வருவதைக் கண்டான். அவன் விரைந்து அவர்களிடம் ஓடி வந்து, “என் ஆண்டவரே” என்றான். அங்கு அவனுக்கு முன் நின்று, மனித மாம்சத்தில், மிகபெரிய மெல்கிசெதேக் பேசினார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த ஏக்கம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். உலகம் முழுவதிலுமிருந்து நாம் அனைவரும் ஒன்று கூடுவோம், அதே பெரிய மெல்கிசெடெக் நம்மிடம் பேசுவதைக் கேட்போம். தகப்பனோ, தாயோ இல்லாத, நாட்களின் ஆரம்பமோ, ஜீவியத்தின் முடிவோ இல்லாத ஒரு நபர், தேவன், மனித உதடுகளால் நம்மிடம் பேசுகிறார், அந்த நாளில் ஆபிரகாமுக்கு எப்படி செய்தாரோ அப்படியே.
நீங்கள் ஒலிநாடாவை இயக்கினால் தவிர அந்த குரலைக் கேட்க வேறு வழியில்லை. அதே நேரத்தில் மெல்க்கிசெடேக்கின் குரல் பேசுவதைக் கேட்க மணவாட்டி உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றுபட்டதாக வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை. தேவன் தம்முடைய மணவாட்டியை அந்தக் குரலுடன் இணைக்கிறார்.
நாம் பல ஆண்டுகளாக, தேவனின் வார்த்தையைக் கொண்டுள்ளோம். இப்போது நாம் வார்த்தையின் தேவனைப் பெற்றுள்ளோம், பாருங்கள், சரியாக அவருடைய வார்த்தையுடன் இங்கேயே வாழ்கிறோம். எனவே இது உண்மைதான், தேவனின் வருகைக்கு முன் சபைக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட கடைசி பெரிய அடையாளங்களில் ஒன்றாகும்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, மணவாட்டி டிசம்பர் அன்று ஈஸ்டர் செய்தியைக் கொண்டிருக்கப் போகிறாள்; மேலும் என்ன ஒரு செய்தியை நாம் கேட்கப் போகிறோம்.
இயந்திரவியல். இயக்கவியல். துரிதமான வல்லமை. உயிர்த்தெழுந்த கிறிஸ்து பிரத்தியட்சமான தேவனின் குமாரர். கிறிஸ்துவுக்குள் குடியிருந்த அதே ஆவி நமக்குள்ளும் இருக்கிறது. அவருக்கு இருந்த அதே ஜீவியம், அதே அதிகாரங்கள், அதே பயனாளிகள், நமக்கும் உண்டு. சுருக்கமான செயல். முதிர்ச்சியடைந்த முதல் வித்து , மக்கள் முன் அசைக்கப்படுகிறது. நாம் இப்போது அவருடைய சதையின் சதை, அவருடைய எலும்பின் எலும்பு; அவரது ஜீவியத்தின் ஜீவியம், அவரது வல்லமையின் வல்லமை! நாமே அவர்!
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து; அந்த அந்த மெக்கிசெடேக் தாமே, கூச்சளிட்டு நம்மிடம் கூறுவார், “என்னுடைய குரலை பதிவு செய்து காந்த ஒலிநாடாவில் வைத்தேன், அதனால் நான் உன்னை என்னிடம் இழுக்க முடியும், மேலும் நான் ஆபிரகாமைப் போலவே உன்னிடமும் பேச முடியும். நீங்கள் என்னிடம் நேரடியாகக் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நீங்கள் என்னுடைய முன்னறிவிக்கப்பட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட சபை! உங்கள் சரிரம் வல்லமையுள்ள ஆலயமாகும், ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் இயந்திரத்தின் ஒரு பகுதியாக இருந்தீர்கள்.
அதுவே மாம்சமாகிய வார்த்தையின் தெய்வீக வெளிப்பாடு. அது அந்த நாளில் குமாரன் மாம்சமாக இருந்தால், அந்த மணவாளாக, அது இன்று மணவாட்டி மூலம் மாம்சமாக இருக்கிறது. பாருங்கள்?
அந்த துரிதப்படுத்தும் வல்லமை நம்மில் ஜீவிக்கிறது. நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அவரில் இருந்த அதே ஆவி, இப்போது நம்மில் உள்ளது, அது நமது சாவுக்கேதுவான உடலைத் துரிதப்படுத்துகிறது. நாம் அவ்வாறு நம்பவில்லை, நமக்குத் அது தெரியும். நாம் ஏற்கனவே அதை உருவாக்கிவிட்டோம், அவர் அதை நமக்காக செய்தார்.
பிறகு, அந்த மெல்கிசெதேக் மீண்டும் ஒருமுறை பேசி கூறுவார்;
இந்த மக்கள் ராஜ்யத்தின் சக குடிமக்கள், துரிதப்படுத்தும் வல்லமையை உடையவர்கள், ஆண்டவரே, இப்போது அவர்களுக்கு அதைத் துரிதப்படுத்துங்கள். ஆவியானவர் கழுகிலிருந்து கழுகிற்கு, வார்த்தையிலிருந்து வார்த்தைக்கு, இயேசு கிறிஸ்துவின் முழுமை ஒவ்வொரு உடலிலும் வெளிப்படும் வரை, சரிரத்திலும், ஆவிக்குறிய அல்லது அவர்களுக்குத் தேவையான எந்தவொரு தேவைக்காகவும், நாம் ஒருவர் மற்றொருவர் மீது கைகளை வைக்கும்போது. இயேசு கிறிஸ்துவின் பெயரில்.
கழுகிலிருந்து கழுகுக்கு, வார்த்தையிலிருந்து வார்த்தைக்கு, இயேசு கிறிஸ்துவின் முழுமை நம் ஒவ்வொரு சரிரத்திலும் பிரத்தியட்ச்சமாகும். மகிமை!!
இது ஒலிநாடாவை இயக்குவதன் மூலம் மட்டுமே இது நடக்கும், எனவே எங்களுடன் இனைந்து சேமித்து வைக்கப்பட்ட பலவகை உணவின் விருந்தில் பங்கேற்கவும், அந்த குரல், ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரத்தில், 65-0418M. அன்று பிரசங்கித்த ” இது சூரிய உதயம் ” என்ற செய்தியை கொண்டுவருகையில் அதை கேளுங்கள்.
நினைவில் வைத்து கொள்ளுங்கள், நான் இதை என் குழுவிற்கு மட்டுமே கூறுகிகிறேன். மேலும் , நான் இதை என் சொந்தமான பின்தொடர்பவர்களிடம் மட்டுமே கூறுகிறேன். நான் இங்கு என்ன சொல்லப் போகிறேனோ. இந்தச் செய்தி அவர்களுக்கு மட்டுமே,
எந்த ஊழியரோ, அவர், அது அவருடையது, ஆம், அவரே மந்தையை மேய்ப்பவர், அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அது அவரையும் தேவனையும் பொறுத்தது. எந்த ஒரு பிரசங்கியோ, எந்த ஒரு போதகரோ, அது உங்களைப் பொருத்தது, என் சகோதரரே.
நான் இங்கே ஜெபர்சன்வில்லில் மட்டுமே பேசுகிறேன், இது நான் பேசும் ஒரே இடம், ஏனென்றால் இது என்னுடைய சொந்த மந்தை என்பதால். இது பரிசுத்த ஆவியானவர் நான் மேற்பார்வையாளராக இருப்பதற்கு புரிந்துகொன்டு ,எனக்குக் கொடுத்த மந்தை, அதற்கு அவர் என்னைப் பொறுப்பாக்குவார். என்னுடைய இந்த மக்கள் இங்கு நாடு முழுவதும் இருந்து மதம் மாறியவர்கள், நான் கிறிஸ்துவிடம் வழிநடத்தினேன்.
ஒரு நன்றி வார இறுதிக்கு என்ன ஒரு தலைக்கல். அவர் இன்னும் உங்கள் ஒவ்வொருவருடனும் கவனித்துக் கொண்டிருக்கும் அந்த சிறிய மந்தையின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாம் செல்ல வேறு இடம் இல்லை.
பிதாவானவர் தனது மணவாட்டியை வழிநடத்த ஒரு பெரிய பறக்கும் கழுகை நமக்கு அனுப்பியுள்ளார். மக்களை ஊக்குவிக்கும் மற்றும் அவரது தீர்க்கதரிசியால் பேசப்பட்ட வார்த்தைகளைப் பேசும் பல குரல்கள் உள்ளன, ஆனால் அவரது மணவாட்டி வழிநடத்தவும் ஒன்றிணைக்கவும் அனுப்பப்பட்ட ஒரே ஒரு குரல் மட்டுமே உள்ளது.
தேவனின் தீர்க்கதரிசி டேப்பில் பேசிய வார்த்தைகள் நமது முற்றிலுமானவை. ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம் என்று சொல்வதால் நாம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறோம், ஆனால் அதைச் சரியாகச் செய்யும்படி தேவனின் தீர்க்கதரிசி நமக்குக் கட்டளையிட்டார்.
எனவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கூறுகிறேன்: நீங்கள் ஒன்றையும் சேர்க்காதீர்கள், எடுக்காதீர்கள், உங்கள் சொந்த யோசனைகளை அதில் வைக்கவும் வேண்டாம், அந்த ஒலிநாடாக்களில் கூறப்பட்டதை அப்படியே கூறுங்கள், தேவனாகிய ஆண்டவர் உங்களுக்கு கட்டளையிட்டதை சரியாகச் செய்யுங்கள். அதில் எதையும் சேர்க்காதீர்கள்!
உலகமே விழித்துக்கொள். நேரம் நெருங்கிவிட்டது. தேவனின் தீர்க்கதரிசி பேசிய வார்த்தைகள், அது தேவன் நமக்கு கட்டளையிட்டார்; ஒலிநாடாக்களில் அவர் சொன்னதை சரியாக விசுவாசியுங்கள், கூறுங்கள் மற்றும் செய்யுங்கள். நான் கூறுவது அல்ல, உங்கள் போதகரோ அல்லது பிரசங்கிகளோ சொல்வதல்ல, ஆனால் தேவனின் தீர்க்கதரிசி டேப்பில் கூறின்னது.
அந்த குரலை டேப்பில் கேட்பதை விட முக்கியமானது வேறு எதுவுமில்லை, எதுவும் இல்லை. ஒலிநாடாக்களில் பேசப்பட்டதை வைத்து நாம் தீர்மானிக்கப்படப் போகிறோம். நான் கூறின்னது அல்ல, ஆனால் அவர் கூறின்னது.
நான் உங்களுக்கு மிகவும் சிறந்ததை விரும்புகிறேன். அது எந்த ஒரு போதகரை போலவே, என்னுடைய வார்த்தைகள் உங்களை ஊக்குவிக்கவே இருக்கின்றன. டேப்பில் தவறுகள் உள்ளன, நீங்கள் தீர்க்கதரிசியைக் கேட்கும் அளவுக்கு நீங்கள் என்னைக் கேட்க வேண்டும் என்றும் டேப்பில் நீங்கள் கேட்கும் எதையும் சந்தேகிக்க, நான் உங்களுக்கு போதிக்கவில்லை, . அசல் வார்த்தையுடன் தொடர்ந்து ஒலிநாடாவை இயக்கவே உங்களை ஊக்குவிக்க சில வார்த்தைகளை நான் எழுதுகிறேன். நீங்கள் தூய்மையான, மாசற்ற வார்த்தை மணவாட்டிகளாக இருக்க விரும்புகிறேன்.
இந்த நாளுக்காக தேவன் தனது வார்த்தைகளை பதிவு செய்தார், அதனால் ஒவ்வொரு உயிரினமும் அவருடைய குரலைக் கேட்க முடியும். பவுலின் நாட்களில், அவர் என்ன பிரசங்கிக்கிறார் என்பதை எழுதுவதற்கு அவர்களுக்கு வேதபாரகர்கள் இருந்தார்கள், அது அந்த வேதாகமம். ஆனால் இன்று, அது இன்னும் பெரியதாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். நாம் ஒலிநாடாவை இயக்கி, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து நம்மிடம் பேசுவதை நம் காதுகளால் கேட்கலாம்.
நாம் என்ன ஒரு நாளில் ஜீவிக்கிறோம். நம்மைச் சுற்றி உலகம் உண்மையிலேயே வீழ்ச்சியடைந்து வருவதால், நாம் சென்று ஓய்வெடுக்க ஒரு இடம் உள்ளது. நாம் அதை டேப்பில் பெறுகிறோம். நம் அறையை குளிர்ச்சியாக அமைத்து, சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சேமித்து வைக்கப்பட்ட உணவுகளை விருந்துண்னுங்கள். நம் தீர்க்கதரிசி வெகு தொலைவில் இருக்கலாம், ஆனால் இவை உண்மை என்பதை நாம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறோம், மேலும் தேவன் நமக்குக் கட்டளையிட்டபடியே செய்வோம், ஒலி நாடாக்களுடன் தறித்திருங்கள்.
இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரத்தில் நீங்கள் சாப்பிட சிறந்த நன்றி விருந்துக்கு வாருங்கள், தேவனின் குரல் நம்மிடம் பேசும் செய்தி: 65-0221M அன்று பிரசங்கித்த” விவாகமும் மற்றும் விவாகரத்தும் ” என்ற செய்தியைக் கேளுங்கள்.