21-0905 தேவசித்தமாயில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல்

செய்தி: 65-0718m தேவசித்தமாயில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல்

BranhamTabernacle.org

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்புள்ள தேவனின் குரல் சபையே,

நாம் அவருடைய,  தேவனின் குரல்  சபை, அவருடைய அன்பான வார்த்தை மணவாட்டி, இந்த ஞாயிற்றுக்கிழமை பிதாவானவர்
என்ன பேசுவார் மற்றும் வெளிப்படுத்தப் போகிறார் என்பதைக் கேட்க நாம் காத்திருக்க முடியாது.


நம் விரல் நுனியில் உயிருள்ள தேவனின்  குரல் இருக்கிறது. நம் விரலின் ஒரு தொடுதலால் தேவன் மனித உதடுகளால் பேசுவதை நாம் கேட்கலாம், நித்திய ஜீவனின் வார்த்தைகள். ஒரு விரலால் அவர் நம்முடன் பேசுகிறார் மற்றும் உலகின் அஸ்திவாரத்திலிருந்து மறைக்கப்பட்ட அனைத்து மர்மங்களையும் நமக்கு வெளிப்படுத்துகிறார்.


நம் இருதயத்தில் உள்ள எந்த கேள்விக்கும் ஒரு விரலால் அவர் பதிலளிக்கிறார். நாம் தெரிந்து கொள்ள வேண்டிய எதையும் அவர் ஒரு விரலால் சொல்கிறார். ஒரு விரலால் தேவனின் குரல் நம்மிடம் பேசுவதை நாம் கேட்கலாம் மேலும்   எடுத்துக்கொள்ளப்படுதளின் விசுவாசத்தை நமக்கு கொடுக்கிறது. ஒரு விரலால் தேவன் பேசுவதை நாம் கேட்கலாம் மேலும் நீங்கள் குணமாகிவிட்டீர்கள் என்று கூறுகிறது.

நாம்  தேவனின் மணவாட்டி அல்ல நீங்கள் ஒரு தோல்விதான் என்று எதிரி கூறும்போது, ​​, ஒரு விரலால் நாம் ஒளிநாடாவை இயக்கி, பிதா நம்மிடம் பேசுவதையும், நமக்கு உறுதியளிப்பதையும் கேட்க முடியும், “நீங்கள் என் தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டி.  உலக அஸ்திவாரத்திற்கு முன்பே நான் உங்களை முன்னறிந்தேன். என்கிறது.


நாம் ஆவியில் குறைவாக இருக்கும்போது, ​​எதிரி ஒவ்வொரு கோணத்திலும் நம்மைத் தாக்கும்போது, ​​நம் ஒரு விரலால் அவர் நம்முடன் பேசுவதைக் கேட்கலாம் மற்றும் வெறுமனே, “காலை வணக்கம் நண்பர்களே” என்று சொல்லும்போது, பரிசுத்த ஆவியின் அமைதி அறையை நிரப்புகிறது.


நீங்கள் ஒரு மனிதனைப் பின்தொடர்ந்து, அவருக்கு அதிக இடம் கொடுக்கிறீர்கள் என்று எதிரிகளின் கூற்றை நாம் கேட்கும்போது , ஒரு விரலால் தேவனின் குரல் நமக்குச் சொல்வதைக் கேட்கிறோம்:



அவர் என்னிடம் கூறினார் ,நான் மக்கள் என்னை நம்பும்படி செய்தால் .அப்படி கூறுவது எனக்கு வினோதமாக இருக்கிறது .”நீங்கள் என் மேல் விசுவாசம் வைக்கிறீர்களா?”  “நீங்கள் தேவனை அல்லவா விசுவாசசிக்க வேண்டும்?” நீங்கள் அதை விவாசிக்க வேண்டும். நீங்கள் தேவனை விவாசிக்க வேண்டும் மேலும் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும், மேலும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் விசுவாசித்தப் பிறகு, நீங்கள் என்னை நம்ப வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.



எதிரி நம்மிடம்  ​​”இது வேதம் அல்ல, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றாக வந்து ஒளிநாடாக்களைக் கேட்பது தவறு,” என்று கூற முயற்சிக்கும்போது, ஒரு விரலால் தேவனின் குரல் நமக்கு சொல்வதைக் கேட்கிறோம்:



மேலும்  இந்த  சபையும், இந்த ஒளிநாடாவும், ஒளிநாடாவிலிருக்கும் மக்களும், நாட்டின் பிற பகுதிகளில்  இணைந்திருக்கும்  மக்களும்,
நீங்கள் இதை  கூர்ந்து கேட்க வேண்டும், நீங்கள் தவிர்க்க வேண்டாம்.


எதிரி சொல்கிறான், சகோதரர் பிரான்ஹாம்  கூறினார் வார்த்தையுடன் இருங்கள், ஒளிநாடாக்களுடன் அல்ல என்று , அப்போது ஒரு விரலால் தேவனின் குரல் கூச்சலிடுவதைக் நாம் கேட்க்கிறோம் மேலும் கூறுகிறது:



அதனால் நான் கூறுகிறேன் , இயேசு கிறிஸ்துவின் பெயரால்  நீங்கள் ஒரு வார்த்தையும் சேர்க்காதீர்கள், எடுக்காதீர்கள், உங்கள் சொந்த யோசனைகளை அதில் வைக்காதீர்கள், அந்த ஒளிநாடாக்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதைச் சொல்லுங்கள், ஆண்டவராகிய  தேவன் உங்களுக்கு  என்ன  செய்யவேண்டும் என்று  கட்டளையிட்டாரோ அதை செய்யுங்கள்; அதனுடன் எதையும்  சேர்க்க வேண்டாம்! அந்த குரல் நாம் எப்படி வார்த்தையை வைத்து  சரிபார்க்கலாம் என்று சொல்கிறது அதனால் நாம் தவறு செய்யாமல் இருக்கமுடியாம்.



அதோ உங்கள் ஐந்து கட்டாயங்கள்  உள்ளது. அது அப்படியாக இருக்க வேண்டும்.




அவரது நேரம்.
அவரது காலம்.
அவர் தேர்ந்தெடுத்த மனிதன்.
அது தீர்க்கதரிசிக்கு வர வேண்டும். தீர்க்கதரிசி ஒரு நிருபிக்கப்பட்ட தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்.


நமது தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்து.
இந்த நேரத்தின் நிரூபிக்கப்பட்ட வார்த்தை! மோசேயின் நாட்களின் நிருபிக்கப்பட்ட வார்த்தை இயேசு. ஏசாயா, எலியா, யோவான் ஆகியோரின் நாட்களில் நிருபிக்கப்பட்ட வார்த்தை இயேசு. மேலும் இன்று அந்த நிரூபிக்கப்பட்ட வார்த்தை இயேசு, அந்த நேற்றும், இன்றும் என்றென்றும் மாறாதவர்.


ஒரு விரலால் நாம் ஒளிநாடாவை இயக்கி இயேசுகிறிஸ்து தாமே பேசுவதையும் நமக்கு வெளிப்படுத்துவதையும் கேட்கலாம்:


இதுவே அந்த நேரம்,
இதுவே அந்த காலம்,
இவர்தான் நான் தேர்ந்தெடுத்த மனிதன்,
இவரே என் தீர்க்கதரிசி,
இந்த தீர்க்கதரிசி என் மற்ற தீர்க்கதரிசிகளை விட அதிகமாக நிரூபிக்கப்பட்டுள்ளார்.



இன்று, பரலோகத்தின் தேவன் நம்மிடம் பேசுவது மட்டுமல்லாமல், அவர் நம்முல் இருக்கிறார், நம்முல் வாசம் செய்கிறார்,  மேலும் நம் ஊடாக அவருடைய ஜீவியத்தை ஜீவிக்கிறார். இது நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது.


நம்மை நாமே தயார் படுத்திக்கொள்வோம். நேரம் நெருங்கிவிட்டது. வேதம் தினமும் நிறைவேறப்படுவதை நாம் காண்கிறோம். இந்த செய்தி இன்றைய செய்திகளைப்போல  வாசிக்கப்படுகிறது :

“காலத்தின் குழப்பம், தேசங்களுக்கிடையேயான துன்பம், பல்வேறு இடங்களில் நிலநடுக்கம், கடல் உறும்புகிறது, பயத்தால் மனிதனின் இருதயம் செயல் இழக்கிறது.”


இயற்கை கூட இன்று நமக்கு சொல்கிறது, தேசங்கள் உடைந்து, பூமி மூழ்கி, கையெழுத்து சுவரில் உள்ளது.

மணவாட்டி மற்றும் அவள் இருக்கும் நிலையை நாங்கள் பார்க்கிறோம். மேலும் இயற்கையாகவே, சபைகள் வெளியேறத் தயாராகிறது என்பது எங்களுக்குத் தெரியும்.


மகிமை, நாங்கள் கிளம்பத் தயாராகி வருகிறோம். ஒரே ஒரு விரலால் நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணிக்கு எங்களுடன் சேர்ந்து வருமாறு நான் உங்களை அழைக்கிறேன்: தேவ சித்தமாக இல்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல் 65-0718M. கேளுங்கள்.

சகோ. ஜோசப் பிரன்ஹாம்.

படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

உபாகமம் 4: 1-4 / 4: 25-26
1 நாளாகமம் 13
1 நாளாகமம் 15:15
சங்கீதம் 22
பரிசுத்த மார்க் 7: 7
ஜோயல் 2:28
ஆமோஸ் 3: 7
மலாக்கி 3
பரிசுத்த மத்தேயு 11: 1-15
1 கொரிந்தியர் 13: 1