21-0829 வெட்கப்படுதல்

செய்தி: 65-0711 வெட்கப்படுதல்

BranhamTabernacle.org

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்புள்ள பிரன்ஹாம் கூடாரமே,

நம் குடும்பங்களை சரியான சபையில் சேர்க்க அவர் முன்னரிந்ததால் நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)
நான் ஒரு சபையைத் தேர்ந்தெடுத்தால், நான் எனது குடும்பத்தை சேர்க்க ஒரு உண்மையான, அடிப்படையான, முழு நற்செய்தி, வேதாகமம் சபையைத் தேர்வு செய்வேன்.


( சகோதர். ஜோசப் தொடர்கிறார் )
எங்கள் மேய்ப்பர் யார் என்பதை உலகுக்குச் சொல்வதற்கு நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் நாமும் அவரைப் போலவே செயல்படுகிறோம்.

(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)

அந்த சபையின் நடத்தையை நீங்கள் கவனித்தால், நீங்கள் மேய்ப்பரை சிறிது நேரம் பார்த்தால், சபை மேய்ப்பரை போல் செயல்படுவதை நீங்கள் வழக்கமாக காணலாம்.


(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )

நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் உலகில் நாம் எங்கிருந்தாலும் பரவாயில்லை, அவர் நம்மை சந்திக்கிறார்.


(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)

உண்மையிலேயே, இரண்டு அல்லது மூன்று பேர் கூடும் இடங்களில் சந்திப்பதாக அவர் வாக்களித்தார். . அங்குதான் உண்மையான விசுவாசி தனது நம்பிக்கையில் இளைபாருகிறார், தேவனின் வார்த்தையில் அந்த  நிரூபிக்கப்பட்ட
உண்மையின் மேல்.


(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )

அவருடைய தீர்க்கதரிசியையும்  ஒவ்வொரு உரைக்கப்பட்ட  வார்த்தையையும் நாம் நம்புகிறோம் அதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.


(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)

நான் தேவனின் தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசித்தால், நான் உங்களுக்குச் கூறுவதைக் கேளுங்கள்.

(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )
அவருடைய தீர்க்கதரிசி என்ன பிரசங்கிக்க வேண்டும்?


(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)
சரியான செய்தி, மீண்டும் வார்த்தைக்கு,


(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )
அவர் எதற்காக அனுப்பப்பட்டார்?



(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)
“அந்த மணவாட்டியைப் பெறுவதற்காக!” அது ஒரு கடமை. அதற்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன். அதைத்தான் நான் செய்ய முயற்சிக்கிறேன், மணவாட்டியை அழைப்பது.


(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )
நாம் அந்த இடத்திலிருந்து வெளியேறினால் என்ன செய்வது?


(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)
அதைத்தான் நான் செய்ய வேண்டியிருந்தது, அந்த மணவாண்டியை அந்த இடத்தில்
வைக்க வேண்டும்.


( சகோதர். ஜோசப் தொடர்கிறார் )
இப்போது பிதா தனது மணவாட்டிக்கு
என்ன சேமித்து வைத்திருக்கிறார்?


(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)
நான் வீடு திரும்புகிறேன், என் சபதத்தை மீண்டும் புதுப்பித்து, புதிதாக தொடங்குகிறேன். அதனால் நாங்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளோம், அதற்காக நான் இங்கே இருக்கிறேன்.



(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )
தேவனுக்கு ஸ்தோத்திரம்,
நாம் எப்போது புதுப்பிக்கும் ஆராதனையை ஆரம்பிப்போம்?






(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)

பின்னர், தேவனுக்கு
சித்தமானால், அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை நாங்கள் ஆரதைனயை ஆரம்பிக்கிறோம். நீங்கள் அனைவரும் எனக்கு உதவுங்கள், நாம் பிரார்த்தனை செய்வோம், ஏனென்றால் முயற்சி செய்ய வேண்டும் என்று என் இருதயத்தில் இருந்தது … அவர்கள் சொன்னார்கள், “சரி, நாம் லூயிஸ்வில்லுக்கு செல்லலாம் அல்லது நாம் நியூ அல்பானியில் செல்லலாம்.” ஆனால் கூட்டம் ஜெபர்சன்வில்லில் இருக்க வேண்டும். நான் வெவ்வேறு நேரங்களில் லூயிஸ்வில்லி மற்றும் நியூ அல்பானிக்குச் செல்வேன், ஆனால் இது இங்கே ஜெபர்சன்வில்லில் இருக்க வேண்டும்.


(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )

நாங்கள் தயாராக இருக்கிறோம் தகப்பனே. இந்த நேரத்தில் என்ன நடக்கப் போகிறது என்று .உங்கள் கழுகுகள் கூடி கேட்கிறது ?


(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)
“… எனக்கு அதிக விசுவாசம் தேவை.” அதற்குதான் இப்போது நான் வீட்டில் இருக்கிறேன் – ஒரு புதிய நம்பிக்கையின் வெடிப்புக்காக.




(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )

தேவனுக்கு ஸ்தோத்திரம், நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம் தகப்பனே, விசுவாசத்தின் புதிய வெடிப்பு. நாங்கள் அறிவோம் விசுவாசம் கேட்பதினால் வரும், உங்கள் வார்த்தையைக் கேட்பது, மேலும் உங்கள் வார்த்தை தீர்க்கதரிசிக்கு வருகிறது.


இந்த செய்தி, சர்வவல்லமையுள்ள தேவனின் வல்லமை, உலகம் முழுவதும் பரவியது, ஆனால் இப்போது பிரிவு நேரம் நடைபெறுகிறது. தேவன் மணவாட்டியை  அழைக்கிறார், பிசாசு சபையை அழைக்கிறது. நாம் இந்த செய்தி, அவருடைய வார்த்தை, அவருடைய மணவாட்டியின் ஒரு பகுதியாக இருக்கிறோம்!


நாம் எதைப் பற்றி பேசுகிறோம் என்பது நமக்குத் உருதியாகத் தெரியும். இந்த செய்தியையும் அவருடைய தூதரையும் விசுவாசிப்பதில் நாம் வெட்கப்படவில்லை, ஏனென்றால் அவை ஒன்றே. “நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்” என்று சொல்ல நாங்கள் வெட்கப்படவில்லை. “நாம் நம் சபையில் ஒலிநாடாக்களை இயக்குகிறோம்” என்று சொல்ல நாம் வெட்கப்படவில்லை. “நாம் ஒலிநாடா மக்கள்” என்று சொல்ல நாம்
வெட்கப்படவில்லை.


இந்த செய்தியை நம்புவதாகக் கூறும் எந்த விசுவாசியோ அல்லது ஐந்து கட்ட ஊழியரோ, சகோதரர் பிரன்ஹாம் தேவனின் தீர்க்கதரிசி மற்றும் தூதர் என்று கூறி
பிறகு அதை விசுவாசித்து
தேவனின் நிரூபிக்கப்பட்ட குரலை சபைகளில் இயக்குவது தவறு என்று மக்களிடம் கூறுகிறார்கள்.


(சகோதரர் பிரான்ஹாம் கூறினார்)

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்திரன் உள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு


(சகோதர். ஜோசப் தொடர்கிறார் )

உண்மையான, கலப்படமில்லாத தேவனின் வார்த்தைக்கு வரும்போது, அது தேவனால் உறுதிப்படுத்தப்பட்டது, தேவனின் நியாயமான குரல், இது மற்ற குழுவை கூட சங்கடப்படுத்துவதாக தெரிகிறது. அவர்கள் அதைப் பற்றி வெட்கப்படுகிறார்கள் மற்றும் ஒளிநாடா சபையாக இருப்பது வார்த்தை எதிர்ப்பு என்று நம்புகிறார்கள்.

ஆனால் எங்களுக்கு, இது ஒரு உண்மை. நாங்கள் வெட்கப்படவில்லை. நாம் அந்த வெளிப்பாட்டைப் பெற்றபோது, ஏதோ ஒன்று நமக்குள் குடியேறியது, இப்போது அந்த இடத்தை பெற எதுவும் இல்லை. அவர்களில் ஒருவர், ஒரு ஒலிநாடா சபை , ஒரு ஒலிநாடா குழு, ஒலிநாடா மக்கள்

என்று கூறுவதில்  நாங்கள் பெருமைப்படுகிறோம்.

நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிவரும் போது, ஜெபர்சன்வில் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணியளவில் தேவனின் ஒளி நாடா ஊழியத்திற்கு பிரன்ஹாம் கூடாரத்துடன் கேட்க வருமாறு உங்களை அழைக்கிறோம்; எங்கள் சபதங்களை மீண்டும் புதுப்பித்து, கேட்பதன் மூலம் புதிதாகத் தொடங்குங்கள்: வெட்கப்படுதல் 65-0711.

சகோ. ஜோசப் பிரன்ஹாம்


பரிசுத்த மார்க் 8: 34-38

34. பின்பு, அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

35. தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

38. ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.