23-0108 ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரம்

செய்தி: 65-0718E ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரம்

BranhamTabernacle.org

அன்புள்ள ஆய்வாளர்களே,

முன்னெப்போதும் இல்லாத வகையில் நமக்குள் குமிழிக்கொண்டிருக்கும் வெளிப்படுத்தலின் ஊற்று கிணறு உள்ளது. இந்தச் செய்தியை நாம் வாழ்நாள் முழுவதும் கேட்டிருக்கிறோம், ஒவ்வொரு வார்த்தையையும் எப்போதும் நம்பி வருகிறோம், ஆனால் இப்போது அது முன்னெப்போதும் இல்லாத வகையில் நமக்குள் பிரத்தியட்ச்சமாகிறது.

உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட தேவனின் இரகசிய விஷயங்களை நாம் உண்ணும் காலம் இது. மக்கள் சிரிக்கின்ற விஷயம் தான் நாம் பிரார்த்தனை செய்யும் விஷயம். மக்கள் “பைத்தியம்” என்று அழைக்கும் விஷயத்தை நாம் ” மிக பெரியது!” என்று அழைக்கிறோம்.
தேவன், அவருடைய மணவாட்டியாக இருப்பதற்கு ஒரே ஒரு வழி இருப்பதை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், அது ஒலிநாடாவை இயக்குவது.

ஆனால் தேவனுக்கு நன்றி உண்டாவதாக, இந்த கடைசி நாட்களில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் நன்மை மற்றும் கிருபையின் அடிப்படையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அவருடைய மக்களிடையே தன்னை நிரூபிக்கிறோம் என்பதற்கு மறைக்கப்பட்ட உணவு, ஆவிக்குறிய உணவு கிடைத்தது.

மணவாட்டி கேட்கும் ஒவ்வொரு செய்தியிலும், அது அவருடைய பரிபூரண சித்தம் என்பதை அவர் நமக்கு உறுதிப்படுத்துகிறார். அது நாம் என்ன நினைங்கிறோமோ அவர்  சொல்வது அல்ல,அல்லது நாம் என்ன நினைக்கிறோமோ அதை அவர் அர்த்தம் கொள்வது அல்ல, அவர் என்ன சரியாக சொல்கிறாரோ அதை மற்றவர்களால்  பார்க்க முடியவில்லை; அவர்கள் பார்வையற்று இருக்கிறார்கள். தேவன் அதை மறைத்துவிட்டார். அவர்கள் அதை சரியாகப் பார்க்கிறார்கள், ஆனால் பார்க்க மாட்டார்கள். நம்மைப் பொறுத்தவரை, நாம் எல்லாவற்றையும் பார்க்கிறோம்.

ஒவ்வொரு வாரமும் நாம் கூடிவரும்போது, ​​அவர் என்ன சொல்லப் போகிறார் மற்றும் நமக்கு வெளிப்படுத்தப் போகிறார் என்பதைக் கேட்க நாம் காத்திருக்க முடியாது. இந்த ஞாயிற்றுக்கிழமை, அவர் நமக்கு சில சிறிய மறைத்து வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களைத் தரப் போவதில்லை, அவர் நமக்கு ஒரு தாய் கொடுப்பதுப்போல வழங்கப் போகிறார் மேலும் நாம் அதைப் பெறுவதை உறுதிசெய்ய மீண்டும் மீண்டும் அதை உடைக்கப் போகிறார்.

• தீர்க்கதரிசி, தேவனின் பிரசன்னத்தில் நீண்ட காலமாக இருந்தார், பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் அல்லது, எந்த நேரத்திலும் அவர்கள் வார்த்தையாக மாறும் வரை அவர்கள் தேவனின் பிரசன்னத்தில் வாழ்ந்ததால், அவர்களின் செய்தி வார்த்தையாகவே இருக்கிறது. மேலும்,  நினைவில்க்கொள்ளுங்கள் ” இது கர்த்தர் உரைக்கிறதாவது” என்று அவர் கூறின்னார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

• ஒரு மனிதன் வரும்போது, ​​தேவனால் அனுப்பப்பட்ட, தேவனால் நியமிக்கப்பட்ட,   உண்மையான கர்த்தர் உரைக்கிறதாவதுடன் , அந்த செய்தியும் தூதரும் ஒன்றே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

• ஒரு மனிதன் கர்த்தர் உரைக்கிறதாவதுடன்  வரும்போது, ​​அவனும் அந்தச் செய்தியும் ஒன்று.

• பரலோகம் அதை அறிவிக்கிறது, வேதாகமம் அதை அறிவிக்கிறது, செய்தி அதை அறிவிக்கிறது, எல்லாமே ஒன்றுதான் என்று.

• அந்த தீர்க்கதரிசி, வார்த்தை, செய்தி; தூதர், செய்தி மற்றும் செய்தி ஒன்றுதான்.

• எந்த மனிதனும் அவனது செய்தியும் ஒன்றே.

தங்கச் சுரங்கத்தைப் பற்றி பேசுகையில்.

உங்களிடம் ஏதேனும் வெளிப்பாடு இருந்தால், அவர் அதை அழகாக தெளிவுபடுத்துவார் என்று நான் நினைக்கிறேன்; செய்தியும் தூதரும் ஒன்றே. அவர் கூறுகிறதைக் கேட்கிறீர்களா…அந்த அதே!! அப்படியானால் ஊழியர்களே நீங்கள் செய்தியிலிருந்து தூதரை பிரிக்க முடியாது.

அவர் கொண்டு வந்த செய்தியுடன் நீங்கள் உங்கள் சபையில் தூதரை வைக்க வேண்டும் அல்லது நீங்கள் அனைத்து செய்திகளையும் ஏற்கவில்லை என்றால் நீங்கள் மணவாட்டி அல்ல.

ஓ! மீண்டும், இது செய்தியையும் தூதரையும் ஒன்றாக்குகிறது. ஆவிக்குறிய உணவு தயாராக உள்ளது, அது இப்போது குறித்தக் காலத்தில் உள்ளது.

நாம்  தேவனின் காலத்தில் ஜீவிக்கிறோம் என்று விசுவாசிக்கும் நமக்கு, அவர் அனுப்பிய தூதர், அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும்; இந்த விஷயங்கள் ஒரு மறைக்கப்பட்ட உணவு.

இந்தச் செய்தியை நாம் எவ்வளவாக விரும்புகிறோம், மேலும் “இதற்கு மேல் இன்னும் எப்படி இருக்க முடியும்?” என்று நீங்கள் நினைக்கும் போது. நாம் யார் என்று சொல்வதன் மூலம் அவர் அதில் ஒரு தலைக்கல்லை வைக்கிறார்.

ஜீவனுள்ள சபையான மணவாட்டியில் வாழும் தேவனின் அதிகாரத்தை நீங்கள் காணவில்லையா? வியாதியஸ்தர்கள் குணமடைகிறார்கள், மறித்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள், ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள், சுவிசேஷம் அதன் வல்லமையில் வெளிப்படுகிறது, செய்தியும் தூதரும் ஒன்றே.அந்த வார்த்தை சபையில் உள்ளது,அது நம்மில் உள்ளது.

அந்த வார்த்தை நம்மில் உள்ளது, நாம் தான் செய்தி. நம்மிடம் அதிகாரம் உள்ளது. இந்த செய்தியும் நாமும் ஒன்றே!! அதைப் பற்றி பேசும்போது அது மீண்டும் மீண்டும் குமிழ்கிறது.

மணவாட்டி மணவாளனின் ஒரு பகுதி, சபை கிறிஸ்துவைப் போன்றது. “நான் செய்யும் கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.”

நாம் மணவாளனின் அங்கம்!!

நாம் கிறிஸ்துவைப் போன்றவர்கள்!!

இந்த மேற்கோள்களைப் படித்தாலே உங்கள் இருதயம் ஆசீர்வதித்தாக நீங்கள் நினைக்கிறீர்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு ஜெஃபர்சன்வில்லி நேரம், நாம் கேட்கும் போது: 65-0718E அன்று பிரசங்கித்த ” ஏற்ற காலத்தில் ஆவிக்குறிய ஆகாரம்” என்ற செய்தியில் தேவனின் குரல் உங்களுக்குச் சொல்வதைக் கேட்கும் வரை காத்திருங்கள்.

எங்களுடன் இனைய நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். உங்களால் முடியாவிட்டால், எந்த நேரத்திலும், எந்தச் செய்தியையும், எங்கும் ஒலிநாடாவை இயக்கி, மேலும் தேவனின் தூதர் உங்களுக்கு தேவனின் செய்தியைக் கொண்டு வருவதைக் கேளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்.

அதனால் இன்றைய தினத்தில்  , குழந்தைகள் உண்ணும் ஜீவ அப்பம், வறட்சியின் போது அவர்களைத் தக்கவைக்க தேவனின் செய்தியைப் பின்பற்றுகிறது.

படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

1 ராஜாக்கள் 17:1-7

ஆமோஸ் 3:7

யோவேல் 2:28

மல்கியா 4:4

லூக்கா 17:30

பரிசுத்த யோவான் 14:12