23-0115 கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்

செய்தி: 65-0725M கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்

BranhamTabernacle.org

அன்புள்ள செம்மறி ஆட்டு தொழுவத்தில் கூடுபவர்களே, 

ஒவ்வொரு வாரமும் தேவனின் ஆட்டுத் தொழுவத்தில் உங்கள் ஒவ்வொருவருடனும் கூடிவருவதில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன், தேவனுக்கு நன்றி கூறுகிறேன், எங்கே நாம் அந்த மறைந்திருக்கும் இடத்தில் உண்டுக்கொண்டும் மற்றும் அந்த மறைத்து வைத்த உணவை உண்ணவும், ஜீவிக்கவும் செய்கிறோம். அது இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு, தன்னை நமக்கு நியாயப்படுத்தவும் மற்றும் வெளிப்படுத்தவும் செய்கிறது.

அவர் தன்னை மறைத்துக்கொண்டார், அதனால் மற்றவர்கள் அதை சரியாகப் பார்த்து மற்றும் அதைப் பார்க்க மாட்டார்கள், ஆனால் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டியான நமக்கோ, நாம் அதை எளிய பார்வையில் பார்க்கிறோம், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம். அவருடைய வார்த்தையும் அவருடைய தீர்க்கதரிசியும் ஒன்றே என்பதால் அவர்களுடன் நாம் தங்கியிருக்கிறோம்.

நீங்கள் தேவனின் குழந்தையாக இருந்தால், நீங்கள் இந்த வேதாகமத்தின் தீர்க்கதரிசியுடன் தரித்திருப்பீர்கள். அதுவே அந்த வார்த்தை.

இன்று பல அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசிகள் கூறுகிறார்கள், “நீங்கள் இருக்க வேண்டியது பரிசுத்த ஆவியானவருடன், தீர்க்கதரிசி அல்ல.” என்கிறார்கள், பழங்கால தீர்க்கதரிசிகளைப் போலவே, நமக்கும் ஒரு கேள்வி இருந்தால், அதற்கு சரியான பதில் இருக்க வேண்டும். நமக்கு முன்னிருந்த தீர்க்கதரிசி என்ன சொன்னார் என்று பார்க்க நாம் வார்த்தைக்கு செல்ல வேண்டும். 

ஆனால் அங்கே ஒரே ஒரு உண்மையான கிறிஸ்து ஆவி இருக்கிறது, மேலும் அதுவே அவர் அதைச் செய்வதாக வாக்களித்தபடி வார்த்தை மாம்சமானது . 

அவர் வாக்குறுதியளித்த ஒரு உண்மையான கிறிஸ்து ஆவி, மல்கியா 4, லூக்கா 17, அது மனித மாம்சத்தில் தன்னை வெளிப்படுத்தும் மனுஷகுமாரன். 

ஆம், அபிஷேகம் செய்யப்பட்ட ஆண்கள் இருக்கிறார்கள். ஆம், அவர்களுக்கு அழைப்பு இருக்கிறது. ஆம், அவர்களிடம் உண்மையான பரிசுத்த ஆவி இருக்கிறது. ஆம், அவர்களுக்கு சரியான நோக்கமும் குறிக்கோலும் இருக்கிறது. 

பிறகு எது சரி எது தவறு என்று எப்படி தெரிந்து கொள்வது?

கவனியுங்கள், அவர்கள் ஒரே மாதிரி இருப்பார்கள், அவர்கள் ஒரே மாதிர் அபிஷேகம் செய்யப்படுவார்கள். ஆனால் கவனிக்கவும், “அவர்களின் கனிகளால்…” 

இந்த விஷயங்களைப் பற்றி சொல்வதை நான் வெறுக்கிறேன் ஆனால் இந்த மணிநேரம் தாமதமாகிறது மேலும் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. பவுல் இதைப்பற்றி சபையை எச்சரித்தார், அந்தக் கொடிய ஓநாய்களால் இன்று சொல்வதும் பிரசங்கிப்பதும் இதுதான். பொய்யான அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் வருவார்கள் என்று சகோதரர் பிரன்ஹாம் கூறினார்.அவர்கள் சொன்னது போலவே நம்மிடையே இருக்கிறார்கள். 

ஒரு ஊழியர் ஒருவர் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இங்கே இருக்கிறது. அவர்களின் கனி தேவனின் தீர்க்கதரிசி மீது சந்தேகத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. பின்பற்றி ஒலிநாடாவை இயக்குவதன் மூலம் நாம் தீர்க்கதரிசியின் தெய்வீகத்தன்மைக் கொண்ட மக்கள் என்று அவர்களை எச்சரிக்கிறார்.

இது எவ்வளவு வஞ்ஜிக்கிறது என்று கேளுங்கள்.

வில்லியம் பிரன்ஹாமின் பிரசங்கங்களின் வெளியீடுகளை இப்போது தேவனின் குரல் என்று அழைக்கும் வகையில் இந்த சாத்தான் எங்கள் செய்தி வரிசையில் ஊடுருவியதால் நான் புண்படுத்தப்பட்டேன். வில்லியம் பிரன்ஹாம் உண்மையில் தேவனின் குரல் அல்ல, மாறாக தேவன் பயன்படுத்திய ஒரு மனிதனின் குரல். அவர் தேவனின் குரல் என்று வேதாகமம் ஒருபோதும் கூறவில்லை, மாறாக வேதாகமம் அவரை 7வது தேவ தூதர் குரல் என்று அடையாளப்படுத்துகிறது. (வெளி. 3:14; 10:7). 

நாம் வார்த்தைக்குச் செல்வோம், தேவனின் தீர்க்கதரிசி இந்த தவறான போதனையை அம்பலப்படுத்தட்டும். 

அப்படிச் சொல்லி நான் உங்களை புண்படுத்தியிருந்தால், என்னை மன்னியுங்கள், ஆனால், அது கோபமாக இருக்கலாம் என்று நான் உணர்ந்தேன், ஆனால், நான் உங்களுக்கு தேவனின் குரல்.

இப்போது நீங்கள் யாரை நம்பப் போகிறீர்கள், இந்த போலி அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசியா, அல்லது 

தேவன் நியாயப்படுத்தப்பட்ட ஏழாவது தேவ தூதரா? இதுபோன்ற விஷயங்களை நம்பும் அல்லது உங்களுக்குக் கற்பிக்கும் எந்த ஊழியரின் கீழ் நீங்கள் எப்படி அமர்ந்திருக்க முடியும்? இன்னும் நேரம் இருக்கும் போது நீங்கள் வார்த்தைக்குள் நுழைவது நல்லது.

வில்லியம் பிரன்ஹாமை முழுமையடையச் செய்து அவரை தெய்வமாக்குவதில் செய்தி சமூகத்தால் ஒரு பயங்கரமான தவறு நடந்துள்ளது. வில்லியம் பிரன்ஹாம் ஒருபோதும் முழுமையானவர் அல்ல! தேவனுடைய வார்த்தையே முழுமையானது. 

ஆமென், தேவனுடைய வார்த்தையே நம்முடைய முழுமையானது. வார்த்தை யாரிடம் வந்தது, உங்களுக்கா அல்லது அவருக்கு? தேவனின் வார்த்தையின் தெய்வீக மொழிபெயர்ப்பாளர் யார், நீங்கள் அல்லது அவரா? அக்கினி ஸ்தம்பமானது யாரை கர்த்தர் உரைக்கிறதாவதாக நிரூபித்தது , நீங்களா அல்லது அவரா? 

உங்களுக்கு இரண்டு நபர்கள் கிடைத்ததால், உங்களுக்கு இரண்டு கருத்துகள் கிடைத்தன.

நமக்கு இரண்டு மனிதர்களோ அவர்களின் கருத்துகளோ தேவையில்லை, தேவனின் தீர்க்கதரிசி டேப்பில் சொன்னதுதான் நமக்குத் தேவை.

 மேலும் இது ஒரு இறுதியான முற்றிலுமான நிலைக்கு வர வேண்டும், மேலும் எனது முற்றிலுமானது வார்த்தையான வேதாகமமே.

நீங்கள் சொன்னது போல், வேதாகமம் அவருடையது மற்றும் நம் முற்றிலுமானது, ஆனால் அவர் கூறுகிறார்: 

எனக்குத் தெறியும், எங்கள் சகோதரர்களே, நீங்கள் என்னை உங்கள் முற்றிலுமானதாக பார்க்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.

எனவே ஒரு நிமிடம் காத்திருங்கள், அது நீங்கள் சொன்னதற்கு முரணாகத் தெரிகிறது. நாங்கள் அவரை எங்கள் முற்றிலுமானவராக பார்க்கிறோம் என்று கூறினார்.

நான் தேவனைப் பின்பற்றும் வரை, பவுல் வேதத்தில் கூறியது போல், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல் நீங்களும் என்னைப் பின்பற்றுங்கள்.” 

அது அபிஷேகம் இல்லையா? அவர் எதைப் பற்றி பேசுகிறான் என்று தெரியாதா?

கடந்த வாரம் தேவனின் தீர்க்கதரிசி என்ன சொன்னார்? 

ஒரு மனிதன் வரும்போது, ​​தேவனால் அனுப்பப்பட்டு, தேவனால் நியமிக்கப்பட்டு, உண்மையான இது கர்த்தர் உரைக்கிறதாவது செய்தியுடன் வரும்போது , அந்த செய்தியும் செய்தியாளரும் ஒன்றே.

அவர் கூறினார், நீங்கள் அவர்களைப் பிரிக்க முடியாது, அவர்கள் ஒன்றே, ஆனால் நீங்கள் கூறுகிறீர்கள் நாங்கள் அப்படி செய்வோம் என்று ? 

வில்லியம் பிரன்ஹாம் எந்த மனிதரையும் விட வித்தியாசமானவர் அல்ல, ஏனெனில் அவர் எலியாவைப் போலவே உணர்ச்சிவசப்பட்ட மனிதராக இருந்தார். 

ஆமென், அவர் நிச்சயமாக ஒரு மனிதராக இருந்தார், ஆனால் தேவன் தம்முடைய எல்லா வார்த்தைகளையும் வெளிப்படுத்தவும், வாக்குத்தத்த தேசத்திற்கு நம்மை வழிநடத்தவும் தேர்ந்தெடுத்த மனிதர் அவர். மக்கள் உன்னை நம்பும்படி செய் என்று தேவன் சொன்னவர் அவர்தான்.

அதே விஷயம், அபிஷேகம் செய்யப்பட்டு, பெந்தெகொஸ்தே நற்செய்தியைப் பிரசங்கிப்பது, ஆனால் நிரூபிக்கப்பட்ட வார்த்தையின் இன்றைய வாக்குறுதியை மறுப்பது. “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்” 

அவர்கள் உண்மையான பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்றால் வித்தியாசத்தை நாம் எப்படி அறிவது? உண்மையான தீர்க்கதரிசியிலிருந்து தவறான தீர்க்கதரிசிகளை நாம் அறிந்துகொள்ள அவர் நமக்கு உதாரணங்களைத் தருகிறார். 

பிலேயாம் மற்றும் மோசே. மிகாயா மற்றும் சிதேக்கியா. யெரேமியா மற்றும் ஹனனியா. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இருவரும் தேவனின் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசிகள், ஆனால் அவர் என்ன செய்யச் சொன்னார், தேவனின் நியாயப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியுடன் தரித்திருங்கள். நீங்கள் தேவன் வழங்கிய வழியைப் பின்பற்றுகிறீர்கள், அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த ஒரே வழி இதுதான். 

அவர் அதைச் செய்யும்போது நான் மட்டுமே அருகில் இருக்கிறேன். நான் அதைச் சொல்ல அவர் பயன்படுத்திய ஒரு குரல் மட்டுமே. நான் அறிந்தது அல்ல; நான் என்னை சரணடைந்தேன், அதைத்தான் அவர் பேசினார். 

மணவாட்டி விரும்புவதும் தேவைப்படுவதும் அவ்வளவுதான். ஒரு குரல். ஒரு தீர்க்கதரிசி. ஒரு செய்தி. ஒரு தூதர்.

ஓ பிதாவே, உமது கிருபைக்கும் இறக்கத்திற்க்கும் நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்களால் முடியாதது எதுவுமில்லை என்று கூறினீர். எங்களால் முடியாதது எதுவுமில்லை. ஏனென்றால், விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும், மேலும் நாங்கள் விசுவாசிக்கிறோம். 

ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில்லி நேரப்படி எங்களுடன் இனையுங்கள், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட குரல், 65-0725M அன்று பிரசங்கித்த “கடைசிக்காலத்தில் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள்” என்ற செய்தியைக் கேட்க எங்களுடன் இனையுங்கள்.

 சகோ. ஜோசப் பிரன்ஹாம்