21-0926 மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?

செய்தி: 65-0725e மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?

BranhamTabernacle.org

அன்புள்ள வெளிப்படுத்தல் மூலம்  தூன்டுதல் கொண்ட மணவாட்டியே,

கடந்த வார இறுதியில்
உலகம் முழுவதிலும் என்ன நடந்தது? என்ன நடந்ததுக்கொண்டிருந்தது? அந்த பெரும் அமளி எதைப் பற்றியது? உலகம் முழுவதிலுமிருந்து மணவாட்டி  ஒன்றுக்கூடினார்கள், களிமண், மணல் மற்றும் கொம்புகளால் மலைகளை உருவாக்கினர்கள். நெருப்பைத்தழலைச் சுற்றி ஒன்றுக்கூடி, ஆராதனை பாடல்களைப் பாடி மற்றும்  தேவனைத் துதித்தார்கள். இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வெளிப்பாடு மூலம் தூன்டுதல்
என்று கூறப்பட்ட சட்டைகளை அணிந்தார்கள் . அவர்கள் மிச்சிகனில் இருந்து புளோரிடா வரை, மைனே முதல் கலிபோர்னியா வரை, வட அமெரிக்கா முதல் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, பூமியின் ஒவ்வொரு மூலையிலும் இருந்தனர். அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இணைந்ததன் மூலம் கேட்டார்கள், தேவனின் குரல் அவர்களிடம் நேரடியாக பேசுவதைக் கேட்டார்கள்.


அந்த ஈர்ப்பு என்ன? அந்த  முன்குறிக்கப்பட்ட வித்து , அதனால் எதுவும் செய்ய முடியாது  ஆனால்  இந்த  நேரத்து  செய்தியைப் பின்பற்றும், அந்த தேவனின் ஊதுகுழலாகப் பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் நம்பும்,  சூரிய அஸ்தமிக்கிற மலையில் நடந்த அந்த மகத்தான  நிகழ்வைக் கொண்டாட  நம் நாளில் ஒன்றுக்கூடி  துதித்து ஆராதித்தது .



அது தேவன் தனது வார்த்தையை உறுதிப்படுத்துகிறார். அந்த சத்தம் எல்லாம் அதைப்பற்றிதான். கவனியுங்கள், தேவன் தனது வாக்குறுதியளிக்கப்பட்ட வார்த்தையை மீண்டும் வெளிப்படுத்துகிறார், அது வெளிப்படுத்துதல் 10: 1 முதல் 7 வரை, “ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அந்த எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று.”


இது தேவன் வரலாற்றை உருவாக்குவது. இது தேவன் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவது. இது தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின் பதில். அவருடைய தீர்க்கதரிசி மூலம் அவர் செய்த எதையும் பெறவும் கேட்கவும் நாம் அங்கு இருக்க விரும்பினோம்.


அவிசுவாசி மற்றும் பாவனை விசுவாசியின் விமர்சனத்தை நாம் புறக்கணிப்போம். அவர்களுடன்
நமக்கு எந்த விவாதமும் இல்லை. நாம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது, அது விசுவாசித்து
மற்றும் நம்மால் முடிந்தவரை ஒவ்வொரு  சிறு காரியத்தையும் பெற்றுக்கொள்ளவேண்டும். மேசியாவின்  வருகைக்காகக் காத்திருக்கையில், ​​ஒவ்வொரு வாரமும் தேவனின் குரலைக் கேட்பதற்காக ஒன்றாக, ஒன்று கூடுவோம்.



நாம் எவ்வளவு மகத்தான  மணி நேரத்தில் ஜிவிக்கிறோம். வேதாகமம் நம் வாழ்வில் நிறைவேறப்படுவதைக் காண. ஆனால் தவறான அபிஷேகம் மிக நெருக்கமாக இருக்கும், அது  தேவனால் தெறிந்துக்கொள்ளபட்பவர்களை கூடுமானால் வஞ்சிக்கும் என்று அவர் தமது வார்த்தையில் எச்சரித்தார். ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம், அவருடைய மணவாட்டியை வஞ்சிக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் அந்த அசல், வெளிப்படையான, நியாயப்படுத்தப்பட்ட தேவனின் குரலுடன் இருப்பார்கள், ஒரு குறிப்பையும் ஒரு தலைப்பையும் மாற்ற மாட்டார்கள். அவர்கள் தங்கள் சொந்த விளக்கத்தை சேர்க்க மாட்டார்கள், ஆனால் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பார்கள்.

அது நெருங்கி இருப்பதால் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். நாம் ஆச்சரியப்படுகிறோம், அது ஸ்தாபன சபைகளாக இருக்குமா? அவர்கள் வெகு தொலைவில் இருக்கிறார்கள் மேலும் நெருக்கமாக கூட இல்லை. அது யாராக இருக்கும்?



இப்போது, ​​ஒரு குளிரான, முறையான, விரப்பான சபைகள் மற்றும் பல, மனிதனால் உருவாக்கப்பட்ட இறையியல், அது முடியாது; தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட உண்மையான விஷயத்தைப் போன்றதாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது ,ஒரு வார்த்தையை மட்டும் விட்டுவிட வேண்டும்.


ஏவாள் வெறுமனே வெளியேறவில்லை என்றும், அவள் தேவனை நம்பவில்லை என்று வேண்டுமென்றே சொன்னதாகவும் அவர் கூறினார்.  அவள் அந்த ஒரு பிழையை நம்பினால் . சாத்தான் அது தேவனின் வார்த்தை என்று கூறினான், ஆனால் பிரச்சனை என்னவென்றால், அவன் அதற்கு தனது சொந்த விளக்கத்தை வைத்தான், அது அவளை ஒரு பொய்யை நம்ப வைத்தது, மேலும் அது ஒரு தடையை ஏற்ப்படுத்தியது.




அந்த திரையானது நீக்கப்ப்பட்டது. அந்த கூர்நுனி கோபுரம் திறக்கப்பட்டது. வேதமானது திரை நீக்கப்பட்டது. வெளிப்படானது மணவாட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.



அதுதான்  சாத்தானுக்கு நம் மீது மிகவும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அவன் தனது முடிவுக்கு வந்துவிட்டான் என்று அவனுக்குத் தெரியும். நாம் யார் என்று அவன் கேள்வி கேட்க விரும்புகிறான். நாம் எப்போதையும் விட கடினமாக பரீட்சைக்கள் மற்றும் சோதனைகளை கடந்து வருகிறோம். சில நேரங்களில் நாம் ஆச்சரியப்படுகிறோம், இதெல்லாம் நமக்கு ஏன் நடக்கிறது?



அதற்கு காரணம், அவரது மணவாட்டி பரிசோதிக்கப்பட வேண்டும். அது … அவள் பிரத்தியட்ச்சம் ஆனதும், ​​சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, சாத்தானுக்கு நிரூபிக்கப்பட வேண்டும்.
மகிமை !!! நம் பரிட்ச்சையும் சோதனைகளும் நாம்தான் மணவாட்டி என்று சாத்தானுக்கு நிரூபிக்கபடுவதற்கே.



நாம் இப்போது கண்டுபிடித்துள்ளோம், இந்த பொல்லாத காலத்தில் ,அவள் ஏவாளைப் போல் இல்லை, அவள் அந்த வகை பெண் அல்ல என்பதை சாத்தானுக்கு நிரூபிக்கவே. ஆதாமின் மணவாட்டி  வார்த்தையால் சோதிக்கப்பட்டதைப் போல, அவறுடைய வார்த்தையாள் அவள் சோதிக்கப்படுவாள், அந்த மணவாட்டி.லேலும் ஆதாமின் மணவாட்டி  ஒவ்வொரு துளி வார்த்தையையும் நம்பினாள், ஆனால் ஒரு வாக்குத்தத்தில் குழப்பமடைந்தாள்.


ஆனால் நாம் ஒரு வார்த்தையில் கூட
குழப்பமடைய மாட்டோம் அல்லது அவர்களின் மரபுகள், வார்த்தையின் விளக்கங்களைப் பின்தொடர மாட்டோம், நாம் அசல் வார்த்தையுடன் இருப்போம்.




நம்மிடம் ஒரு டேப் மெஷின் இருந்தால், நாம் ஒரு குழுவினரை ஒன்றிணைத்து, அதை இயக்கி,நெருக்கமாக கேளுங்கள்,
என்று அவர் நம்மிடம் கூறினதுனதுபோல கேட்போம்!



நம் தகப்பனிடமிருந்த இயற்கையான இனப்பெருக்கத்திலிருந்து நம்முடைய இயல்பான வாழ்க்கையும் பண்புகளும் எவ்வாறு வழங்கப்படுகின்றனவோ, அதுபோலவே, உலகின் அஸ்திவாரத்திற்கு முன்பே நிர்ணயிக்கப்பட்ட தேவனின் ஆவியும் இருக்கிறது.


இந்த செய்தியின் உண்மையான வெளிப்பாட்டைக் கொண்டிருப்பதற்கும், தேவனின் ஆவி, நம் இனப்பெருக்கமாக இருப்பதற்கும், உலகின் அஸ்திவாரத்திற்கு முன்பே முன்னறிவிக்கப்பட்டதற்கு


நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

65-0801M இப்பொல்லாத காலத்தின் தேவன் , ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரத்தில் நாங்கள் கேட்க்கையில் , எங்களுடன் அதே வெளிப்படுத்துதல் மூலம் தூண்டுதலைப் பெற உங்களை வரவேற்க்கிறோம்.



சகோ. ஜோசப் பிரன்ஹாம்


படிக்க வேண்டிய வேத வசனங்கள்:


பரிசுத்த மத்தேயு – 24 வது
அதிகாரம் / 27: 15-23

பரிசுத்த லூக்கா – 17:30

பரிசுத்த யோவான்  – 1: 1 / 14:12

அப்போஸ்தலர் – 10: 47 – 48

1 கொரிந்தியர் – 4: 1-5 / 14 வது அதிகாரம்

2 கொரிந்தியர் – 4: 1-6

கலாத்தியர் – 1: 1-4

எபேசியர் – 2: 1-2 / 4:30

2 தெசலோனிக்கேயர் – 2: 2-4 / 2:11

எபிரேயர்  – 7 வது அதிகாரம்

1 யோவான் – அதிகாரம்1 / 3:10 / 4: 4-5

வெளிப்பாடு – 3:14 / 13: 4 /
அத்தியாயங்கள் 6-8 மற்றும் 11-12 / 18: 1-5

நீதிமொழிகள் – 3: 5

ஏசாயா  -14: 12-14