22-1127 விவாகமும் விவாகரத்தும்

செய்தி: 65-0221Mவிவாகமும் விவாகரத்தும்

BranhamTabernacle.org

அன்புள்ள தீர்க்கதரிசியின் மந்தையே, 

நினைவில் வைத்து கொள்ளுங்கள், நான் இதை என் குழுவிற்கு மட்டுமே கூறுகிகிறேன். மேலும் , நான் இதை என் சொந்தமான பின்தொடர்பவர்களிடம் மட்டுமே கூறுகிறேன். நான் இங்கு என்ன சொல்லப் போகிறேனோ.  இந்தச் செய்தி அவர்களுக்கு மட்டுமே, 

எந்த ஊழியரோ, அவர், அது அவருடையது, ஆம், அவரே மந்தையை மேய்ப்பவர், அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அது அவரையும் தேவனையும் பொறுத்தது. எந்த ஒரு பிரசங்கியோ, எந்த ஒரு போதகரோ, அது உங்களைப் பொருத்தது, என் சகோதரரே. 

நான் இங்கே ஜெபர்சன்வில்லில் மட்டுமே பேசுகிறேன், இது நான் பேசும் ஒரே இடம், ஏனென்றால் இது என்னுடைய சொந்த மந்தை என்பதால். இது பரிசுத்த ஆவியானவர் நான் மேற்பார்வையாளராக இருப்பதற்கு புரிந்துகொன்டு ,எனக்குக் கொடுத்த மந்தை, அதற்கு அவர் என்னைப் பொறுப்பாக்குவார். என்னுடைய இந்த மக்கள் இங்கு நாடு முழுவதும் இருந்து மதம் மாறியவர்கள், நான் கிறிஸ்துவிடம் வழிநடத்தினேன்.

ஒரு நன்றி வார இறுதிக்கு என்ன ஒரு தலைக்கல். அவர் இன்னும் உங்கள் ஒவ்வொருவருடனும் கவனித்துக் கொண்டிருக்கும் அந்த சிறிய மந்தையின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாம் செல்ல வேறு இடம் இல்லை. 

பிதாவானவர் தனது மணவாட்டியை வழிநடத்த ஒரு பெரிய பறக்கும் கழுகை நமக்கு அனுப்பியுள்ளார். மக்களை ஊக்குவிக்கும் மற்றும் அவரது தீர்க்கதரிசியால் பேசப்பட்ட வார்த்தைகளைப் பேசும் பல குரல்கள் உள்ளன, ஆனால் அவரது மணவாட்டி வழிநடத்தவும் ஒன்றிணைக்கவும் அனுப்பப்பட்ட ஒரே ஒரு குரல் மட்டுமே உள்ளது. 

தேவனின் தீர்க்கதரிசி டேப்பில் பேசிய வார்த்தைகள் நமது முற்றிலுமானவை. ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம் என்று சொல்வதால் நாம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறோம், ஆனால் அதைச் சரியாகச் செய்யும்படி தேவனின் தீர்க்கதரிசி நமக்குக் கட்டளையிட்டார். 

எனவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கூறுகிறேன்: நீங்கள் ஒன்றையும் சேர்க்காதீர்கள், எடுக்காதீர்கள், உங்கள் சொந்த யோசனைகளை அதில் வைக்கவும் வேண்டாம், அந்த ஒலிநாடாக்களில் கூறப்பட்டதை அப்படியே கூறுங்கள், தேவனாகிய ஆண்டவர் உங்களுக்கு கட்டளையிட்டதை சரியாகச் செய்யுங்கள். அதில் எதையும் சேர்க்காதீர்கள்!

உலகமே விழித்துக்கொள். நேரம் நெருங்கிவிட்டது. தேவனின் தீர்க்கதரிசி பேசிய வார்த்தைகள், அது தேவன் நமக்கு கட்டளையிட்டார்; ஒலிநாடாக்களில் அவர் சொன்னதை சரியாக விசுவாசியுங்கள், கூறுங்கள் மற்றும் செய்யுங்கள். நான் கூறுவது அல்ல, உங்கள் போதகரோ அல்லது பிரசங்கிகளோ சொல்வதல்ல, ஆனால் தேவனின் தீர்க்கதரிசி டேப்பில் கூறின்னது.

அந்த குரலை டேப்பில் கேட்பதை விட முக்கியமானது வேறு எதுவுமில்லை, எதுவும் இல்லை. ஒலிநாடாக்களில் பேசப்பட்டதை வைத்து நாம் தீர்மானிக்கப்படப் போகிறோம். நான் கூறின்னது அல்ல, ஆனால் அவர் கூறின்னது.

நான் உங்களுக்கு மிகவும் சிறந்ததை விரும்புகிறேன். அது எந்த ஒரு போதகரை போலவே, என்னுடைய வார்த்தைகள் உங்களை ஊக்குவிக்கவே இருக்கின்றன. டேப்பில் தவறுகள் உள்ளன, நீங்கள் தீர்க்கதரிசியைக் கேட்கும் அளவுக்கு நீங்கள் என்னைக் கேட்க வேண்டும் என்றும் டேப்பில் நீங்கள் கேட்கும் எதையும் சந்தேகிக்க, நான் உங்களுக்கு போதிக்கவில்லை, . அசல் வார்த்தையுடன் தொடர்ந்து ஒலிநாடாவை இயக்கவே உங்களை ஊக்குவிக்க சில வார்த்தைகளை நான் எழுதுகிறேன். நீங்கள் தூய்மையான, மாசற்ற வார்த்தை மணவாட்டிகளாக இருக்க விரும்புகிறேன்.

இந்த நாளுக்காக தேவன் தனது வார்த்தைகளை பதிவு செய்தார், அதனால் ஒவ்வொரு உயிரினமும் அவருடைய குரலைக் கேட்க முடியும். பவுலின் நாட்களில், அவர் என்ன பிரசங்கிக்கிறார் என்பதை எழுதுவதற்கு அவர்களுக்கு வேதபாரகர்கள் இருந்தார்கள், அது அந்த வேதாகமம். ஆனால் இன்று, அது இன்னும் பெரியதாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். நாம் ஒலிநாடாவை இயக்கி, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து நம்மிடம் பேசுவதை நம் காதுகளால் கேட்கலாம்.

நாம் என்ன ஒரு நாளில் ஜீவிக்கிறோம். நம்மைச் சுற்றி உலகம் உண்மையிலேயே வீழ்ச்சியடைந்து வருவதால், நாம் சென்று ஓய்வெடுக்க ஒரு இடம் உள்ளது. நாம் அதை டேப்பில் பெறுகிறோம். நம் அறையை குளிர்ச்சியாக அமைத்து, சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சேமித்து வைக்கப்பட்ட உணவுகளை விருந்துண்னுங்கள். நம் தீர்க்கதரிசி வெகு தொலைவில் இருக்கலாம், ஆனால் இவை உண்மை என்பதை நாம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறோம், மேலும் தேவன் நமக்குக் கட்டளையிட்டபடியே செய்வோம், ஒலி நாடாக்களுடன் தறித்திருங்கள்.

இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரத்தில் நீங்கள் சாப்பிட சிறந்த நன்றி விருந்துக்கு வாருங்கள், தேவனின் குரல் நம்மிடம் பேசும் செய்தி: 65-0221M அன்று பிரசங்கித்த” விவாகமும் மற்றும் விவாகரத்தும் ” என்ற செய்தியைக் கேளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

பரிசுத்த மத்தேயு 5: 31-32 / 16: 18 / 19: 1-8 / 28:19

அப்போஸ்தலர் 2:38

ரோமர் 9:14-23

1 தீமோத்தேயு 2:9-15

1 கொரிந்தியர் 7:10-15 / 14:34

எபிரெயர் 11:4

வெளிப்படுத்துதல் 10:7

ஆதியாகமம் 3ஆம் அதிகாரம்

லேவியராகமம் 21:7

யோபு 14:1-2

ஏசாயா 53

எசேக்கியேல் 44:22