22-1120 தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம்

செய்தி: 65-0219 தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம்

BranhamTabernacle.org

அன்புள்ள திருமதி இயேசு கிறிஸ்து, 

நமது பெயர்களை கூப்பிடுவதைக் கேட்க நாம் எவ்வளவு விரும்புகிறோம். இதை யோசித்துப் பார்கையில், அவர் வருவதே நமக்காகதான் என்பதாகும். ராஜரீக வாக்குறுதியளிக்கப்பட்ட குமாரனுக்கு ராஜரீக மணவாட்டி. ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்மையாகவும் விசுவாசமுடனும் இருக்கும் ஆபிரகாமின் மிக மேன்மையான ராஜரீக சந்ததி. 

நாம் வேறு எந்த வார்த்தையுடனும் விபச்சாரம் செய்யவில்லை, அல்லது ஊர்சுற்றவில்லை; நாம் நம்மைத் தூய்மையாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு வார்த்தையிலும் தங்கியிருக்கிறோம். 

இன்று உலகில் பல நல்ல கிறிஸ்தவ பெண்கள் உள்ளனர், விசுவாசமுள்ள பெண்கள்; ஆனால் திருமதி இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் மட்டுமே இருக்கிறார். அவருடன் வீட்டிற்குச் செல்பவர்கள் நாம். நாமே அவருடைய தெறிந்துக்கொள்ளப்பட்ட மணவாட்டி.

அவர் , முன்பு வந்த விதமாகவே மீண்டும் ஒருமுறை வருவார் என்று அவருடைய வார்த்தையில் கூறின்னார். அங்கே அவர் நின்று, மனித மாம்சத்தில் தம்மை வெளிப்படுத்தி, வார்த்தையைப் படித்து, “இன்று இந்த வேதவாக்கியம் உங்கள் பார்வையில் நிறைவேறிற்று” என்று நம்மிடம் கூறினார், நாம் அவரை அடையாளம் கண்டுகொண்டோம், மேலும், நாம் அவருடைய திருமதி இயேசு கிறிஸ்து மணவாட்டியானோம்.

கிழக்கிலிருந்து வந்து, மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்று தன்னை நிரூபித்த அதே தேவன், மேற்கு பகுதியில், தனது மணவாட்டி மத்தியில் தன்னை அடையாளப்படுத்திய அதே தேவனின் கு-மா-ர-ன் என்பது நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த குமாரனின் மாலை வெளிச்சம் வந்துவிட்டது. 

மேலும் நான் எதைப் பற்றி ஒரு கேள்விக் கேட்டாலும், அதற்கு உண்மையான பதில் இருக்க வேண்டும். அதற்கு சிலது அருகாமையில் இருக்கலாம்; ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் உண்மையுள்ள, நேரடியான பதில் இருக்க வேண்டும். எனவே, அதனால், நம் வாழ்வில் எழும் ஒவ்வொரு கேள்விக்கும் உண்மையான, சரியான பதில் இருக்க வேண்டும்.

நம் நாட்களில் பல கேள்விகளும் மற்றும் சர்ச்சைகளும் மக்கள் மத்தியில் உள்ளன.  

• தேவனின் தீர்க்கதரிசியின் ஒலிநாடாக்களைக் கேட்பது எவ்வளவு முக்கியம்?

 • ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு விசுவாசிப்பது எவ்வளவு முக்கியம்? 

• எது நமது முற்றிலுமானது ? அவர் இந்த டேப்பில் கூறின்னதா, அல்லது பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு மனிதனையும் எது வார்த்தை , எது வார்த்தை அல்ல என்பதை தீர்மானிக்க வழி நடத்துகிறதா? 

• நமக்காக ஒரு மனிதனையோ அல்லது கூட்ட ஆண்களின் குழுவையோ வைத்து அதைப்பற்றி அறிய வேண்டுமா? 

• அவர் எலியா தீர்க்கதரிசியை அனுப்பிய பிறகு, அதை உங்களுக்கு விளக்க அவர் ஒரு குழுவை அனுப்புவார், என்று வார்த்தை கூறுகிறதா?

 • வார்த்தையை விளக்குவதற்கு அல்லது அதை உடைப்பதற்கு யாராவது நமக்கு தேவையா ?

 • நம் வீடுகளிலும், கார்களிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டேப்களை மட்டும் கேட்டுவிட்டு, மேலும் சபைக்குப் போகும்போது ஊழியத்தைக் கேட்க வேண்டுமா?

 • நம் சபைகளில் டேப்களை இயக்க வேண்டுமா?

 • இது நம் நாளுக்கான தேவனின் குரலா அல்லது இல்லையா?

இப்போது, ​​இது ஒரு வேதாகம்ம கேள்வி என்றால், அதற்கு வேதாகம்ம பதில் இருக்க வேண்டும். இது ஒரு கூட்ட ஆண்களின் குழுவிலிருந்தோ, எந்த ஒரு குறிப்பிட்ட கூட்டுறவிலிருந்தோ, அல்லது சில கல்வியாளரிடமிருந்தோ அல்லது சில பிரிவினரிலிருந்தோ வரக்கூடாது. அது வேதத்திலிருந்து நேரடியாக வரவேண்டும்… 

எனவே நமது கேள்விகளுக்கு சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், நாம் வேதாகமத்திற்குச் செல்ல வேண்டும். அடுத்து, வேதத்தின் தெய்வீக மொழிபெயர்ப்பாளர் யார் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அதை தனக்குத்தானே முடிவு செய்கிறார்களா? 

ஒரு தீர்க்கதரிசி என்பது வார்த்தையைப் பேசுவது மட்டுமல்ல, ஆனால் வெளிப்படையாகக் கூறுவதும், மற்றும் தெய்வீக வார்த்தையாக எழுதப்பட்ட வார்த்தையின் தெய்வீக மொழிபெயர்ப்பாளர்.

ஆகவே, தீர்க்கதரிசி வேதாகமத்தின் தெய்வீக மொழிபெயர்ப்பாளர் என்றால், அந்த தீர்க்கதரிசி அவருடைய மணவாட்டியிடம் கூறின்னது தேவனுடைய வார்த்தையாகும், அது ஏற்கனவே விளக்கப்பட்டாயிற்று. ஒரு காலத்திற்காக.

இது ஊழியத்தையோ அல்லது தேவன் அவர்களை அழைத்த பதவியையோ பறிப்பதில்லை. தேவனின் தீர்க்கதரிசியால் சொல்லப்பட்ட அந்த வார்த்தையை தங்கள் மந்தையின் முன் கடைப்பிடிக்க அவர்கள் தேவனால் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் மக்களை அந்த தூதருக்கும், இந்தமணி நேரத்தின் செய்திக்கும் சுட்டிக்காட்ட வேண்டும். 

அவர்கள் பிரசங்கிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் தேவனின் தீர்க்கதரிசி டேப்பில் சொன்ன வார்த்தைகளால் நியாயதீர்க்கப்பட வேண்டும். அவர்களால் மாற்ற முடியாது, அல்லது ஒரு வார்த்தையையும் அவர்களால் விளக்கவும் முடியாது. தேவனின் வேதாகமம் அவருடைய தீர்க்கதரிசியால் மட்டுமே விளக்கப்படுகின்றன. 

இப்போது, ​​அவர்கள் ஒவ்வொருவரும், நிச்சயமாக, நீங்கள் அவர்களின் யோசனையைப் பார்க்க முடியும், நான் அவர்களைக் குறை கூற முடியாது. ஒவ்வொருவரும் தாங்கள் தான் உண்மை என்று உரிமைக்ககோருகிறார்கள், தங்களிடம் உண்மை உள்ளதென்று கூறிக் கொள்கிறார்கள். அந்த சபைகளைச் சேர்ந்த மக்கள் அதை நம்ப வேண்டும், ஏனென்றால் அவர்கள் தங்கள் இலக்கை, தங்கள் நித்திய இலக்கை, அந்த சபையின் போதனையின் மீது வைத்திருக்கிறார்கள். மேலும் அவை தொன்னூறுக்கு அதிகமாக மற்றும் வேறு ஏதாவது கேள்விகளை உருவாக்கும் வரை ஒன்று மற்றொன்றிலிருந்து மிகவும் வேறுபட்டவை. 

தேவனின் தீர்க்கதரிசியால் சொல்லப்பட்ட இந்தச் செய்தி உங்கள் முற்றிலுமானது அல்ல என்றால், ஆனால் சில மனிதர்கள் அல்லது மனிதர்கள் சொல்வது வார்த்தையாக இருந்தால், உங்கள் நித்திய இலக்கு அவர்கள் சொல்வதில் தங்கியுள்ளது. 

எனது வார்த்தைகள் அனைத்து ஊழியர்களுக்கும் முற்றிலும் எதிரானதாகத் தெரிகிறது. நான் அப்படி இல்லை. இந்தச் செய்தியை அவர்கள் முன் வைக்க தேவன் உண்மையான மனிதர்களை அவருடைய சபையிலும் அவரது மந்தைகளின் மீதும் வைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர்கள் இந்தச் செய்தியைப் பிரசங்கித்து நம்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர்கள் ஏன் சகோதரர் பிரன்ஹாமை அவர்களின் பிரசங்க மேடைகளில் கேட்க வேண்டிய மிக முக்கியமான குரலாக ஏன் வைக்கவில்லை? அவர்கள் ஏன் தங்கள் ஊழியத்தை அந்தக் குரலுக்குச் சமமாகவும் முக்கியமானதாகவும் வைக்கிறார்கள்?

மல்கியா 3 கூறின்னது, “வழியை ஆயத்தப்படுத்த என் முகத்திற்கு முன்பாக என் தூதரை அனுப்புவேன்” என்றது. மேலும் வழியைத் தயார் செய்ய அனுப்பப்பட்டவர், அது அவரே, அந்த இடத்தை அடையாளம் காட்டினார். “அது அவர்தான்! எந்த தவறும் இல்லை. அது அவர்தான்! அவரைப் பின்தொடரும் அடையாளத்தைக் காண்கிறேன். அது அவர் என்று எனக்குத் தெரியும்; ஒரு ஒளி வானத்திலிருந்து இறங்கி அவர்மீது செல்கிறது. அது நேர்மறையானது, அது அவர்தான். 

பிறகு, என் சகோதரரே, முடிவில், நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். இதை நாம் மல்கியா 4ல் என்று கூறலாம், மேலும் மற்றொரு கழுகு, அக்னி ஸ்தம்பத்தை பின்தொடர்வதாக வாக்களிக்கவில்லையா? அது அந்த தவறிழைக்கும் சபைக்குக் காட்டுவதற்காக, எபிரெயர் 13:8ல் அவர் “நேற்று, இன்றும், என்றென்றும் மாறாதவர்” என்று கூறினது , இன்னொருவர் வனாந்தரத்திலிருந்து பறந்து வருவார் என்று நமக்கு வாக்குறுதி அளிக்கப்படவில்லையா? 

நாம் எதைப் பின்பற்ற வேண்டும்? அந்த அக்னி ஸ்தம்பத்தை. அந்த அக்னி ஸ்தம்பம் யார்? அந்தக் கழுகு, மல்கியா 4. தான் யார் என்பதை நிரூபிப்பதற்காகத் தன் தலைக்கு மேல் அக்னி ஸ்தம்பத்தை வைத்திருந்தவர் யார்? வில்லியம் மரியன் பிரன்ஹாம்.

ஒவ்வொரு முறையும் நாம் கூடும் போதும் அந்த குரலை மக்கள் முன் வைக்க வேண்டும். நாம் தேவனின் குரலை முதலில் வைக்க வேண்டும். அந்த மனிதனை வணங்குவதற்கு அல்ல, ஆனால் அந்த மனிதனுல் இருக்கும் தேவனையே வணங்க வேண்டும். 

அதுதான், தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்தத் தேர்ந்தெடுத்த மனிதன். தேவன் தம்முடைய வார்த்தையை விளக்குவதற்குத் தேர்ந்தெடுத்த மனிதர் , அந்த மனிதர். தேவன் தம்முடைய எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்தத் தேர்ந்தெடுத்த மனிதர் அந்த மனிதர். அந்த மனிதனை தான், தேவன் கூறின்னார், “மக்களை நம்பும்படி செய்”, வேறு யாரோ அல்லது வேறு யாரோ சொல்வதையோ அல்ல, அந்த, வில்லியம் மரியன் பிரன்ஹாம். அந்த மனிதர்தான் இயேசு கிறிஸ்துவை நமக்கு அறிமுகப்படுத்துவார். 

நான் சொல்வதை வைத்து எந்த ஆணோ பெண்ணோ வேறு ஏதாவது அதில் சேர்த்தால் , நான் என்ன கூறினேனோ அதை நம்பாதீர்கள். 

இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில்லி நேரத்தில் எங்களுடன் திருமதி இயேசு கிறிஸ்துவாக ஆக வாருங்கள், தேவன் தேர்ந்தெடுத்த ஊதுகுழல் பேசி நம்மிடம் கூறுவதைக் கேளுங்கள்: 65-0220 அன்று பிரசங்கித்த 

“தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட ஆராதனை ஸ்தலம் ” என்ற செய்தியைக் கேளுங்கள். 

சகோ. ஜோசப் பிரன்ஹாம்

 உபாகமம் 16:1-3