admin5 ன் அனைத்து பதிவுகள்

22-0717 விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார்

செய்தி: 63-1229M விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்புகளே,

அந்த சிறு பையன் கண்ணாடியைப் பார்த்த போது,  அவன் தன்னையே பார்ப்பதை உணராதிருந்தான், நாம் இப்போது தேவனின் கண்ணாடியை, அவருடைய வார்த்தையைப் பார்த்து, தந்தையே, அது நான்தான், நான் உமது வார்த்தையின் பிரதிபலிப்பு என்பதை உணர்கிறேன். நான்தான் உமது வார்த்தையின் வெளிப்பாடு. நான் ஒரு விசுவாசி, நான் உங்களுடைய மணவாட்டி!

நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் நமது விசுவாசத்தை புதிய உயரத்திற்கு உயர்த்துகிறது. அவர் கூறினார் நாம் இந்த மூன்று வகையில் ஒன்றில் நாம் பொருந்த வேண்டும்: விசுவாசிகள், பாவனைவிசுவாசிகள் அல்லது அவ்விசுவாசிகள். நாம் அவருடைய கண்ணாடியைப் பார்த்தபோது நாம் கூச்சலிடுகிறோம், ​​”நான் , எந்த சந்தேகமும் இல்லாமல், நாம் ஒரு விசுவாசி என்றுப் பார்க்கிறேன். ஒரு விசுவாசி மட்டுமே ஒவ்வொரு குறிபையும் ஒவ்வொரு தலைப்பையும் விசுவாசிப்பாள்; தகப்பனே, அது நான்தான்.”

டேப்பில் பேசப்படும் தேவனின் வார்த்தையைத் தவிர, வேறு எதுவும் நம்மைத் திருப்திப்படுத்தாது, ஜீவியத்தைத் தருவதற்கான ஒரே வழி இதுவே. அவர் பேசிய அந்த வார்த்தையின் மூலம். அது நமது நாளுக்கான தேவனின் குரல்.

தயாராகுங்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 17, 2022 அன்று இன்னும் நிறைய வரவிருக்கிறது. இங்கே ஒரு மனிதன் விளக்கை போடப் போகிறான், அவன் அதைச் செய்யும்போது, ​​ஆமென், அல்லேலூயா என்று கூச்சலிடுவதும், கத்துவதும் நம் அனைவருக்கும் தொண்டை வலியை உண்டாக்கும். , கர்த்தரின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, தேவனுக்கு மகிமை, ஏனென்றால் தேவன் தாமே நம்மிடம் நேரடியாகப் பேசி, அவருடைய வார்த்தையை அதிகமாக வெளிப்படுத்துவார்.

அந்த அதே சூரியன், இன்றும் பிரகாசிக்கட்டும்,  அது ஜூலையில் அறுவடை செய்யவிருக்கும்  தானியங்களை பழுக்குவிக்கிறதாக இருக்கட்டும் . நான் என்ன கூறுகிறேன் என்று பாருங்கள்? ஆனால் இந்த இன்றைய  வெளிச்சம் ஜூலையில் எந்த நன்மையும் செய்யாது. இது வலுவானது. கோதுமை மிகவும் மேம்பட்டது; அதை எடுக்க தயாராக உள்ளது. ஆமென். நிச்சயமாக உள்ளது.

அந்த அறுவடையானது  கனிந்திருக்கிறது! நாம் மிகவும் மேம்பட்டவர்கள் மேலும் அதை எடுக்க தயாராக இருக்கிறோம். இயேசு ஒரு மேசை முழுவதும் பரப்பி வைத்திருக்கிறார், அங்கு தேவனின் பரிசுத்தவான்கள் இன்றைய கனிந்த உணவை உண்ணுகிறார்கள். அவர் இன்று நம்முடன் இருக்கிறார் என்பதை நற்செய்தி ஒளி மெய்ப்பித்து நிரூபிக்கிறது. பரிசுத்தவான்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆவிக்குறிய உணவை உண்ணுகிறார்கள், எடுத்துக்கொள்ளப்படுவதற்கு தயாராகி வருகின்றனர்.

நம்முடைய போதகரான, பரிசுத்த ஆவியானவர் தம்முடைய நியாயப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி மூலம் பேசும்போது, ​​அந்த சுவிட்சைப் இயக்கி, வெளிப்படுத்தலின் ஒளியை எறியும்படி செய்யும்போது, ​​அவர் நம் நாளில் யார் என்று நமக்குச் சொல்வார். அவர் சத்தமிட்டு நம்மை எச்சரிப்பார். நீங்கள் தூங்கவில்லை என்று நம்புகிறேன்.

நோவா அவருடைய நாளில் ஒளியாக இருந்தார். மோசே அவருடைய மணிநேரத்தின் ஒளியாக இருந்தார், இப்போது நான் உங்கள் நாளில் ஒரு வலிமைமிக்க தீர்க்கதரிசியை உங்களுக்கு அனுப்பியுள்ளேன், அவர் மூலம் எனது வாக்குறுதியை வெளிப்படுத்துகிறேன். அவரே உங்கள் நாளில் வெளிப்படுத்தப்பட்ட தேவனின் வார்த்தை. அவர் இன்றைய நாளின் ஒளி.

கடந்த முறை நான் மாம்சமாக பூமியில் இருந்தபோது, ​​அசலான ஐந்து பார்லி ரொட்டிகளை எடுத்து அப்பங்களாக உடைக்க ஆரம்பித்தேன். அந்த அசலில் இருந்து , நான் ரொட்டி செய்து அது ஐந்தாயிரம் பேருக்கு  உணவளித்தேன்.

பிறகு எனக்கு ஒரு மீன் கிடைத்தது, மேலும் அந்த மீனில் இருந்து இன்னொரு மீனையும் இன்னொரு மீனையும் செய்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்தேன்.

ஆனால் உங்கள் நாளில் என்னிடம் எதுவும் இல்லை. நான் பேசிக் கூறினேன், ” எதுவும் இல்லாமல் இருந்தபோது அது நடக்கும் என்று சொல்லுங்கள்” என்று கூறினேன், அங்கு என்னிடம் அணில் இருந்ததில்லை; அங்கு யாருமே இல்லை. நான் கூறினேன், அங்கு “இருக்கட்டும்” என்றேன், மேலும் அது இருந்தது. என் வார்த்தை தவறாதது, அது நிறைவேற வேண்டும்.

அந்த இஸ்ரவேல் புத்திரரைப் போலவே, அவர்கள் தங்கள் பயணத்தின்போது, ​​ஒவ்வொரு நாளும் புதிய மன்னாவைப் புசித்தனர். அவர்கள் அக்னி ஸ்தம்பத்தின் வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த அக்னி ஸ்தம்பம்  இயேசு கிறிஸ்து.

இன்று அவர் மீண்டும் நம்முடன் இருக்கிறார், அதே அக்கினித் ஸ்தம்பம், அவர் இங்கே பூமியில் இருந்தபோது அவர் தம் வார்த்தையை நிறைவேற்றியபோது செய்த அதே விஷயங்களைச் செய்கிறார். ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில்லி நேரப்படி, எங்களுடன் இனைய உங்களை அழைக்கிறோம், நம் போதகர், பரிசுத்த ஆவியானவர், அக்னி ஸ்தம்பத்தை , அவருடைய வெளிப்பாட்டின் ஒளியை இயக்குகிறார். 63- 1229M அன்று பிரசங்கித்த  “விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதன் இருக்கிறார்” என்ற செய்தியை நாம் அனைவரும் கேட்கையில்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்


படிக்கவேண்டிய வேத வசனங்கள்

ஆதியாகமம் 1:3,  2 ஆம் அதிகாரம்

சங்கீதம் 22

யோவேல் 2:28

ஏசாயா 7:14, 9:6, 28:10, 42:1-7

பரிசுத்த மத்தேயு 4:12-17,  24 மற்றும் 28  ஆம் அதிகாரங்கள்

பரிசுத்த மார்க்  16 ஆம் அதிகாரம்

வெளிப்படுத்துதல்   3 ஆம் அதிகாரம்

22-0710 மூன்று வகைகளான விசுவாசிகள்

செய்தி: 63-1124E மூன்று வகைகளான விசுவாசிகள்

BranhamTabernacle.org

 அன்புள்ள விசுவாசிகளே, 

இதை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்,சகலத்தையும் உண்டாக்கி, ஒழுங்குபடுத்திய தேவன், நம்மை மீட்பதற்காக, நம்மிடையே மாம்சமானார். பின்னர் அவர் தனது மகத்தான பிரசன்னத்தால் நம்மை மிகவும் கொளரவப்படுத்தினார், அதனால் அவர் கடைசி நாட்களில் இந்த பாவ பூமியில் இங்கே நின்று, அவருடைய வார்த்தையை நிரூபிப்பார், ஏனென்றால் அவர் அந்த வார்த்தைக்கு கடமைப்பட்டவர். 

பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை நமக்கு உயிர்ப்பித்திருக்கிறார். அது உயிர்பித்துவிட்டது. விசுவாசத்தினால் நாம் அதை காண்கிறோம். அது அப்படி என்று நாம் அறிந்திருக்கிறோம் ஏனென்றால் வார்த்தை அப்படி கூறினது , மேலும் ஆவியானவர் அந்த வார்த்தையை நமக்குத் துரிதப்படுத்துகிறார். தீர்க்கதரி கூறினது போலவே, மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையால் இப்போது நாம் ஒன்றுபடுகிறோம்.

அந்த விசுவாசி அதை விசுவாசிக்கும், (என்ன?) அந்த வார்த்தையை . மதத்தை அல்ல; அந்த வார்த்தையை! ஸ்தாபனம் அல்ல; அந்த வார்த்தையை! வேறு யாரோ சொல்வது அல்ல; வார்த்தை என்ன சொல்கிறதோ அதை! இப்போது, ​​நினைவில் கொள்ளுங்கள், இதுதான் விசுவாசி. விசுவாசி கேள்வி கேட்பதில்லை. விசுவாசி இப்படி கூறவில்லை, “அது எப்படி இருக்கும்? எனக்கு மட்டும் அதை விளக்கினால்!” அதுதான் அவிசுவாசி . ஊஹூம். இது அந்த விசுவாசி, அது எதுவாக இருந்தாலும், “இது வார்த்தையாக இருந்தால், இது வார்த்தை! அது உண்மை.” அதுதான் விசுவாசி. 

ஒவ்வொரு தலைப்பையும், ஒவ்வொரு குறிப்பையும், அதில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அது உண்மையாக இருக்க வேண்டும். நீங்கள் இப்படியாக கூறினால், “நான் அதை நம்பவில்லை. அதில் சிலது தேவனுடையது, சிலது மனிதனுடையது, சில வேட்டைக் கதைகள் உள்ளது. சரி, அப்படி என்றால் நீங்கள் ஒரு அவ்விசுவாசி. விசுவாசி கேள்வி கேட்கவில்லை. விசுவாசி அதை விசுவாசிக்கும், அது எப்படித் தோன்றினாலும் அல்லது வேறு யாரேனும் அதைப் பற்றி என்ன சொன்னாலும், அது எவ்வளவு சாத்தியமற்றது என்று தோன்றினாலும், நாம் அதை விசுவாசிப்போம்!

இங்கே இருக்கும் ஒவ்வொரு நபரும், தற்போது, ​​இந்த டேப்பைக் கேட்கும் ஒவ்வொரு நபரும்; மேலும் சில நாட்களில் நான் இந்த உலகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தாலும், இந்த ஒலிநாடாக்கள் இன்னும் ஜீவிக்கும். அது சரி. பாருங்கள்? நீங்கள் இந்த வகைகளில் ஒன்றில் உள்ளீர்கள். அவற்றில் ஒன்றில் நீங்கள் இருக்க வேண்டும். 

நாம் கடைசி நாட்களில் ஜீவிக்கிறோம், உங்கள் ஜீவியத்தைப் பார்த்து, நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள்பார்க்க வேண்டும். “அக்கினி ஸ்தம்பத்தால் நிரூபிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசியை தேவன் அனுப்பினார் என்று நான் விசுவாசிக்கிறேன்?” என்று நீங்கள் கூறுகிறீர்களா? ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசியுங்கள் என்று கூறின்னார். டேப்பில் உள்ளதைச் சரியாகச் கூறவும், ஒரு வார்த்தையையும் மாற்ற வேண்டாம். அவர் சொன்னதை வைத்து நாம் தீர்மானிக்கப்படுவோம், யாரோ ஒருவர் என்ன சொன்னார், அல்லது யாரோ அவர் என்ன சொல்கிறார் என்று சொல்வதன் மூலம் அல்ல, ஆனால் ஒலிநாடாக்கள் என்ன சொல்கிறது. 

அல்லது, நீங்கள் கோரா மற்றும் தாத்தானுடன் போகபோகிறீர்களா, மேலும் அவர்கள் இப்படியாக கூறினார்கள் “அவர் மட்டும் பரிசுத்தவான் அல்ல” அவர் செய்த இந்தக் காரியங்களைச் செய்ய மற்றவர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் தேவனின் தீர்க்கதரிசி மீது அதிகமாக கவனம் செலுத்துகிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் இப்போது எங்களையும் வழிநடத்துகிறார். இது வேறு காலமாக இருக்கிறது ”.

நீங்கள் இந்த வகைகளில் ஒன்றில் உள்ளீர்கள். உங்கள் தற்போதைய நிலையில், தற்போதைய மனநிலையில், இந்த காணக்கூடிய பார்வையாளர்களில் நீங்களும் இங்கே இருக்கிறீர்கள், மேலும் இந்த டேப்பின் கண்ணுக்கு தெரியாத பார்வையாளர்களில் நீங்களும் இருக்கிறீர்கள், இந்த டேப்பைக் கேட்ட பிறகு உங்கள் தற்போதைய மனநிலை, உங்களுக்கு என்ன என்பதை நிரூபிக்கிறது. நீங்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர்கள். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் வார்த்தையின் மீது விசுவாசம் உள்ளவரா மேலும் அதனுடன் தரித்திருப்பீர்களா அல்லது நீங்கள் வெளிநடப்பு செய்வீர்களா, அல்லது அந்த டேப்பை மூடுவீர்களா . 

கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்பாவதாக, நாம்தான் அந்த உண்மையான விசுவாசிகள், வேறு யாரோ ஒருவரால் வற்புறுத்தப்பட்டவர்கள் அல்ல; வேறு ஏதோவொன்று காரியத்தால் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அந்த வார்த்தையையே வெளிப்படுத்தினார். அந்த வார்த்தையானது தெளிவாகி, நிருபிக்கப்பட்டு மேலும் வெளிப்படுத்தப்பட்டதை நாம் காண்கிறோம்.

சோதனைகள், தூசி நிறைந்த சாலைகள், துன்புறுத்தலின் வெப்பமான சோதனை ஆகியவற்றால் நாம் உட்படுத்தப்படுகிறோம், ஆனால் நம் இருதயங்களின் விசுவாசம் அந்த வார்த்தையின் பொருளைத் தாக்குகிறது. நாம் இப்போது நம்மை வடிவமைத்து செல்ல தயாராக இருக்கிறோம். நாம் தேவனின் பிள்ளைகள், அவருடைய வார்த்தையில் சரியாக உருவாக்கப்பட்டவர்கள். நாம் ஜீவிக்கும் உதாரணங்களாக இருக்கிறோம், தேவனுடைய வார்த்தை நம் மூலம் ஜீவிக்கிறது. சோதனைகள் நம்மை உலுக்கி, நம்மை மிகக் கீழே தள்ளினாலும் , அப்போது நாம் எங்கு நிற்போம் என்று பார்பதர்காக, ஆனாலும் நம்மை அசைக்க முடியாது, நாம் ஒவ்வொரு வார்த்தையிலும் நிற்க்கிறோம். 

நீங்கள் யார் என்று அவர் கூறுவேதைக் கேளுங்கள்.

தேவன் உலகத்தைப் உண்டாக்கினபோது உங்களில் ஒவ்வொரு பகுதியும் இங்கே இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போதே உங்கள் உடலை இங்கே வைத்தார். மேலும் தேவனைத் தவிர வேறு எதுவும் அதை எடுத்துச் செல்ல முடியாது. 

அதை உங்களிடமிருந்து எதுவும் பறிக்க முடியாது. நீங்கள் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் உங்கள் இடத்தை யாரும் பிடிக்க முடியாது. “நான் ஒரு இல்லத்தரசி” என்று நீங்கள் கூறுகிறீர்களா. உங்கள் இடத்தை யாரும் பிடிக்க முடியாது! தேவன், தம்முடைய பெரிய பொருளாதாரத்தில், கிறிஸ்துவின் சரீரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும், அதனால் உங்கள் இடத்தைப் பிடிக்க யாரும் இல்லை. 

மகிமை… அல்லேலூயா… தேவன் சேமித்து வைத்த உணவைக் கேட்பது மகத்தானதாகவும் இன்னும் மகத்தானதாகவும் இருக்கிறது. நாம் யார் என்று தேவன், தாம் தேர்ந்தெடுத்த தூதர் மூலம் பேசுவதை நாம் எவ்வளவு அதிகமாகக் கேட்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நமது விசுவாசம் அதிகமாகிறது. இது தெரிந்ததில் தனி மகிழ்ச்சி:

நாம்தான் “உண்மையான விசுவாசிகள்” 

நாம்தான் “அவர்களில் ஒருவர்” 

நாம்தான் “மணவாட்டி”

கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலிருந்து நாம் கூடிவருவதால், ஜெபர்சன்வில்லி நேரப்படி மதியம் 12:00 மணிக்கு உலகம் முழுவதிலுமிருந்து வரும் மணவாட்டி எங்களுடன் டேப்பை இயக்க செய்து உங்களை செய்தியைக் கேட்க அழைக்க விரும்புகிறேன் : 63-1124E. அன்று பிரசங்கித்த மூன்று வகையான விசுவாசிகள் என்ற செய்தியைக் கேட்போம். இதைத்தான் பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துகிறார். நம்மைப் பொறுத்தவரை இது தேவனின் திட்டம். 

டேப்பை இயக்கவும்: தேவன் உங்கள் இருதயத்தில் எந்த டேப்பை வைத்தாலும்.

டேப்பை இயக்கவும்: நீங்கள் தேர்வு செய்யும் நேரத்தில் கேளுங்கள். 

டேப்பை இயக்கவும்: இதுதான் உங்களுக்கான எனது செய்தி.

 சகோ. ஜோசப் பிரன்ஹாம். 

படிக்க வேண்டிய வேத வசனம்

பரிசுத்த யோவான் 6:60 – 71 

22-0703 கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?

செய்தி: 63-1124M கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?

PDF

BranhamTabernacle.org

22-0626 உங்களிலிருக்கிறவர்

செய்தி: 63-1110E உங்களிலிருக்கிறவர்

BranhamTabernacle.org

அன்புள்ள சிறந்த விசுவாசமுள்ள மணவாட்டியே,

இது தவறான இலக்கணத்துடன் கூடிய எளிய கடிதம் என்று எனக்குத் தெரியும், ஆனால் நம் தீர்க்கதரிசி கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நாம் விசுவாசிக்கிறோம், அதை ஏற்றுக்கொள்கிறோம் என்பதை உலகம் அறிய விரும்புகிறேன். டேப்பில் அவர் ஏதாவது சொல்வதைக் கேட்டவுடன்,  நாம் அதை விசுவாசிக்கிறோம், நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம், பிறகு தேவன் நம்மிடம் நேரடியாக  பேசுகையில் அதை தனிப்பட்ட முறையில் பெற்றுகொள்கிறோம்.

அது மனிதனாக இருக்க முடியாது, அது தேவனாக இருக்க வேண்டும் என்று தேவனின் வார்த்தையால் பிரசங்கிக்கப்பட்டு, முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இயேசு இருந்தபோது தோன்றிய அதே
அடையாளப் பொருள், இன்று பூமியில் தோன்றியதாக நாம் விசுவாசிக்கிறோம். பரிசுத்த பவுல் அதே இயற்கையுடன் பார்த்த அதே அக்னி ஸ்தம்பம், அதையே செய்து, நம் நாளில் வந்து. அது தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார்:

அவர் தன்னை மேசியாவாக அடையாளப்படுத்திய அதே ஆவிக்குறிய அடையாளம், இன்று அவரை அடையாளப்படுத்தியுள்ளது. அவர் இன்னுமாக மேசியா!

டேப்பை இயக்குவதன் மூலம் ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள்  விசுவாசித்தால் மட்டுமே இந்த பெரிய ஆசீர்வாதங்களைப் பெற முடியும். நீங்கள் அதை நம்பாத ஒருவராக இருந்தால், அறிவுப்பூர்வமாகவோ அல்லது யாரேனும் உங்களுக்குச் சொல்லி முடிவெடுக்க வேண்டும் அல்லது அவர்கள் இப்படி கூறுவார்களென்றால் :  “இது கர்த்தருடைய வார்த்தை, இது வெறும் சகோதரர் பிரான்ஹாம் பேசுகிறார்,” அப்படி என்றால் , இது உங்களுக்கானது அல்ல.

மோசே இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திய காலத்தில், ஒருவர் இருந்தார், அது மோசே. மீதமுள்ளவர்கள் செய்தியை அப்படியே  பின்பற்றினர். பாருங்கள்?

ஆனால் இன்று, அப்படி விசுவாசிக்கும் நமக்கு, நம் இருதயங்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், பொங்கிக்கொண்டும் இருப்பதால், நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது.

அவர் நம்மை மீட்டுவிட்டார் என்று உணர்கிறேன். அவருடைய புஸ்த்தகத்தில் நம் பெயர்கள் இருப்பதாக உணர்கிறேன். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் நாம் மீட்கப்பட்டோம் என்று நான் விசுவாசிக்கிறேன்.

ஏனென்றால் இந்தச் செய்தி தேவனின் குரல் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறது என்று நாம் விசுவாசிப்பதால், தேவனே நம்மிடம் உதட்டோடு காதில் பேசுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவருடைய புஸ்த்தகத்தில் நம் பெயர்கள் உள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நான் இப்படி வைக்கலாமா, இயேசு கிறிஸ்துவின் ஊழியம் இந்த கடைசி நாளில் அவருடைய சபையில் மறுபிறவி எடுத்தது. அதைத்தான் நம்மில் பலர் நம்புகிறோம். நானும் உங்களுடன் விசுவாசிக்கிறேன்.

அதுபோல்தான் நாம் அதை அப்படியே விசுவாசிக்கிறோம், இயேசு கிறிஸ்து மறுபிறவி எடுத்தார், அவரது மணவாட்டிகளிடம் டேப்பில் பேசுகிறார்.

ஒவ்வொரு முறையும் நாம் டேப்பை இயக்கும்போது நமது விசுவாசம் புதிய உச்சத்தை அடைகிறது. இது வேறொரு பிரசங்கியார் பேசுவது அல்ல, இது தேவனே நம்மிடம் பேசுவது. நமக்கு  100% தூய வார்த்தை மட்டுமே வேண்டும்.

உங்களிடம் ஒன்று கேட்கிறேன். வில்லியம் மரியன் பிரன்ஹாம் உங்கள் போதகரா? அவர் தேவனின் ஏழாவது தூதரா? அவர் தேவனிடம் கேட்பதை, தேவன் செய்ததாக நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்த நாளுக்கு அவர் தேவனின் குரல் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறீர்களா? அப்போது ஞாயிறு அன்று சொல்ல முடியாதபடி மீண்டும் ஒருமுறை ஆசீர்வதிக்கப்படப் போகிறீர்கள்.

நீங்கள் ஒலிநாடாக்களைக் கேட்டு, நீங்கள் கேட்பதை விசுவாசித்தால் தவிர, இந்த ஆசீர்வாதத்தைப் பெற வேறு வழியில்லை. தேவன் உங்களிடம் நேரடியாக பேசுகிறார் என்று அவர் சொல்வதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.

நான், உங்கள் போதகராக, உங்கள் சகோதரனாக, எனக்கு என்ன விசுவாசம் இருக்கிறதோ, அதை நான் உங்கள் மீது வைக்கும்படி தேவனிடம் கேட்டேன். நான் கேட்டதை நான் பெறுவேன் என்று விசுவாசிக்கிறேன். இப்போது நீங்கள் அதை என்னுடன் நம்பினால்; அத்தகைய நம்பிக்கையுடன் நான் இந்த மணிநேரத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

நமக்கு, அவர் நம் போதகர். நமது போதகரான தேவனின் தீர்க்கதரிசியை விட அதிகமான அல்லது பெரிய விசுவாசம் கொண்டவர்கள்  உலகில் வேறு யாரும் இல்லை. இப்போது தேவனின் தீர்க்கதரிசி தேவனிடம் அவருடைய பெரிய விசுவாசத்தைத் தரும்படி கேட்டார். நீங்கள் அதை முழு இருதயத்துடன் விசுவாசித்தால், அது இப்போது உங்களுடைய விசுவாசமாகும்….மகிமை, நாம் பெருகிறோம்!!! நம்முடைய விசுவாசம் பலவீனமாக இருந்திருக்கலாம், ஆனால் இனி இல்லை, ஏனென்றால் இப்போது அவருடைய விசுவாசம் நம்மிடம் உள்ளது.

இப்போது, ​​​​தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்கள் துன்பத்தையும், நோயையும் விரட்டி, அதனிடம், “நீ இப்போது போக வேண்டும்” என்று சொல்லுங்கள், ஏனென்றால்  உங்கள் விசுவாசம் உங்களிடம் உள்ளது, மேலும் என்  விசுவாசமும் உங்களுக்கு உள்ளது. இது இயேசு கிருஸ்துவின் வல்லமையுடன் ,எங்கும் நிறைந்தவராக நிரூபித்து, அவர் இங்கே இருக்கிறார் என்பதை நிரூபிக்க, இந்த நேரத்தில் உங்களை நலமாக்குவார்.

நீங்கள் எங்களுடன் வந்து இந்த பெரிய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு நான் என்ன சொல்ல கூடும்? யோசித்துப் பாருங்கள், உங்களுக்கு எது தேவையோ, அதை நீங்கள் கேட்டு, விசுவாசித்தால், நீங்கள் அதைப் பெறலாம்.

ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில்லி நேரத்தில், மணவாட்டிகளுடன் கேளுங்கள். கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் நாம் ஒன்றுகூடி, ஒரே நேரத்தில் கேட்போம், இது கர்த்தர் உரைக்கிறதாவது ,63-1110E அன்று பிரசங்கித்த உங்களிலிருக்கிறவர் என்ற செய்தியைக் கேட்போம்.

ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நேரத்தில் எங்களுடன் உங்களால் கேட்க முடியாவிட்டால், அது பரவாயில்லை, எந்த நேரத்திலும் டேப்களை இயக்கி, மேலும் நீங்கள் கேட்பது தேவனின் குரல் உங்களிடம் பேசுகிறது என்று நீங்கள் விசுவாசியுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

22-0619 இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள்

செய்தி: 63-1110M இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள்

BranhamTabernacle.org

அன்புள்ள தகப்பனே,

உங்களின் விலைமதிப்பற்ற மணவாட்டியை ஊக்குவிக்க, நீங்கள் என்னை சிறிய வழியில் பயன்படுத்திக்கொள்ள  இன்று நான் என்ன எழுத வேண்டும்?

தேவன் நம் நாளில் வந்து மனித மாம்சத்தில் ஜீவித்தார், வில்லியம் மரியன் பிரன்ஹாம் என்ற பெயர் கொண்ட மனிதனில், அதனால் அவர் தனது வார்த்தையை வெளிப்படுத்தவும் நிறைவேற்றவும் முடியும். அதுவே நம் நாளில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு.

அந்தக் குரலைக் கேட்டு, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதும்தான் இன்றைய நாளுக்கான தேவன் அளித்த ஒரே வழி. அவர் தனது பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட பல மனிதர்களை உலகிற்கு அனுப்பினார், ஆனால் அவர் தனது வார்த்தையை வெளிப்படுத்தவும் அவரது மணவாட்டியை வழிநடத்தவும் ஒரே ஒரு மனிதன் மூலம் மட்டுமே அனுப்பி பேசினார்.

அவர் தனது திட்டத்தை அல்லது விஷயங்களைச் செய்யும் முறையை ஒருபோதும் மாற்றுவதில்லை. முதல் முறை எப்படிச் செய்தாரோ, ஒவ்வொரு முறையும் அதையே செய்கிறார். அவர் தனது மக்களை வழிநடத்த, அவரே
அக்னி ஸ்தம்பத்தால் வழி நடத்தினார்.

நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டி, மேலும் பிசாசு எதுவும் செய்யவோ அல்லது சொல்லவோ முடியாது  அதனால் உங்களிடமிருந்து பறிக்க முடியாது, எதுவும் இல்லை! உலகம் தோன்றுவதற்கு முன்பே அவர் உங்களை முன்னறிந்தார். அப்போது அவர் உங்களை அறிந்திருந்தார், அப்போது நீங்கள் அவருடன் இருந்தீர்கள். அவர் உங்கள் பெயரை அறிந்திருந்தார். அவர் உங்களைப் பற்றி அனைத்தையும் அறிந்திருந்தார். உங்கள் ஏற்ற தாழ்வுகளை அவர் அறிந்திருந்தார். அவர் உங்கள் தோல்விகள், உங்கள் தவறுகளை அறிந்திருந்தார், அவர் இன்னும் உங்களை நேசித்தார், ஏனென்றால் நீங்கள் அவருடைய ஒரு பகுதியாக இருந்தீர்கள்.

உங்கள் ஆன்மா அவருடைய வார்த்தையை மட்டுமே உண்ண முடியும். அவருடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவும் உங்களைத் திருப்திப்படுத்த முடியாது. நீங்கள் அவருடைய வார்த்தையைப் படித்து அவரை தியானிக்க விரும்புகிறீர்கள், உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபிக்கிறீர்கள், ஆனால் அவருடைய குரல் உங்களிடம் நேரடியாகப் பேசுவதைக் கேட்கும்போது, ​​அது உங்களை காலத்தின் திரைக்கு அப்பால் உயர்த்துகிறது. நீங்கள் அவருடன் பரலோக சூழலிளில் அமர்ந்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், அவர் உங்களிடம் உதட்டோடு காதுக்கு
பேசும்போது, அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறார், நீங்கள் என் மணவாட்டி என்று
உங்களுக்கு நினைவூட்டுகிறார்,

பிசாசு உங்களைத் தாக்கலாம் மேலும் தாக்கலாம் மேலும் உங்களைத் தாக்கலாம். நீங்கள் சில சமயங்களில் மிகவும் தாழ்ந்தநிலைக்குப்போய், நீங்கள் ஒரு முழுமையான தோல்வியாக உணரலாம்; மற்றவர்களை விட  நீங்கள் மிகவும் தோல்வியுற்றதாக உணரலாம். நீங்கள் மிக மோசமான மோசமானவராக இருந்திருக்கலாம், ஆனால் எங்கோ, உங்கள் ஆன்மாவின் ஆழத்தில், அசைவற்ற சிறிய 
குறள் கூறுவதை நீங்கள் கேட்பீர்கள்: “எதுவும் உன்னை என் வார்த்தையிலிருந்து பிரிக்க முடியாது, நீயே என் வார்த்தை. என் ஆட்டுக்குட்டியின் ஜீவப் புஸ்கத்தகத்தில் நானே உன் பெயரை வைத்தேன்.

இன்று உங்களை ஊக்குவிக்க நான் என்ன சொல்ல முடியும்? தினமும் டேப்களை இயக்குங்கள் , தேவன் உரைக்கிறதாவது கூறுவதை : தேவனின் குரல் பேசுவதின் மூலம் கேளுங்கள்.

இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில்லி நேரப்படி மணவாட்டிகளுடன் ஒன்றுசேர அழைக்கப்படுகிறீர்கள், அந்த சிறிய குரலைக் கேட்க நாம் கூடிவருவோம்:  63-1110M  அன்று பிரசங்கித்த : இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள், என்ற செய்தியைக் கேட்போம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

படிக்க வேண்டிய வேதம்:
ஆதியாகமம் 15:16
பரிசுத்த மத்தேயு 23: 27-34
பரிசுத்த யோவான் 4:23-24 / 6:49 / 14:12
1பேதுரு 3:18-22
2 பேதுரு 2:4-5
யூதா 1:5-6

22-0612 பதறல்கள்

செய்தி: 63-0901E பதறல்கள்

BranhamTabernacle.org

அன்புள்ள தேவனின் இரத்தத்தால் பிணைக்கப்பட்ட, அடையாளத்தால்-பிணைக்கப்பட்ட, உடன்படிக்கை மக்களே.

நினைவில் கொள்ளுங்கள், நாம் ஏவாள் அல்ல, சாத்தானுடன் சமரசம் செய்து கொள்ளும் இந்த சந்தேக நபர்களில் நாமும் ஒன்றல்ல. இந்த வார்த்தையில் நமக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருக்கிறது! ஒலிநாடாக்களில் அவர் எழுதிய மற்றும் பேசிய தேவனின் ஒவ்வொரு வார்த்தையையும் நாம் பிடித்துக்கொடிருக்கிறோம். இது நமக்கு பரிபூரண விசுவாசத்தை அளித்துள்ளது.

நாம் மிகப்பெரிய விசுவாசத்தை கொண்டிருக்க வேண்டும் என்று நாம் பார்த்துக்கொடிருக்கவில்லை. நாம் நல்லவர்களாக இருக்க முயற்சிக்கவில்லை; நாம் ஒருபோதும் நல்லவர்களாக இருக்க மாட்டோம், எப்போதும் நாம் தோல்வியடைவோம். அதைப்போல் ஒரு விசுவாசத்தை வைக்கவேண்டுமென்று அவர் கூறவில்லை, அவர் கூறினார் விசுவாசம்கொள்ளுங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசியுங்கள், அது கர்த்தர் உரைக்கிறதாவது என்றும் அவர் கூறினார். நாம் அதைதான் செய்கிறோம், அது அவருடைய வார்த்தையில் நமக்கு முழுமையான விசுவாசத்தை அளித்துள்ளது.

பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பற்றிப் பிதாவிடம் என்ன அறிக்கை செய்கிறார் என்பதைக் கேட்போம்.

“நான் உங்கள் கட்டளைக்கு கீழ்ப்படிந்தேன். நான் தேடிக்கொண்டிருந்தேன் , உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் சில சிறிய குழுக்களைக் கண்டுபிடித்தேன். நான் சில டேப்  சிறுவர்களை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி சில டேப்களை வாசித்தேன். அவர்கள் டேப்களைக் கேட்டதும், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்தார்கள். இப்போது அவர்கள் செய்தியைப் பெறுவதற்காக தங்கள் வீட்டை ஒரு சபையாக மாற்றியுள்ளனர். அவை உமது வார்த்தையைக் கேட்கக் கூடிவரும் உமது முன்னறிவிக்கப்பட்ட கழுகுகள்.

அந்த அடையாளத்தில் மற்றும் இந்தமணிநேரச் செய்தியின் கீழ் வரும் அனைத்தும் இரட்சிக்கப்படும் என்று நான் அவர்களிடம் கூறினேன். அவர்கள் உங்களுடனும் உங்கள் வார்த்தையுடனும் ஒன்றாக மாறுவார்கள் என்று நான் அவர்களிடம் கூறினேன். இது அவர்களுக்கு வேலை செய்தால், அப்போது அந்த அடையாளத்தை அவர்களின் குழந்தைகளுக்குப் பயன்படுத்துவார்கள். அவர்களின் அன்புக்குரியவர்களுக்குப் பயன்படுத்துவார்கள், அவர்களை அந்த அடையாளத்தின் கீழ் கொண்டு வாருங்கள், மேலும் அவர்களும்கூட மீட்கப்படுவார்கள்.

டேப்பைகளைக் கேட்டுக் கொண்டிருந்த அவர்களிடம் நான் கூறினேன்: நான் அவர்களை தேவனுக்காகக் உரிமைக்கூறுகிறேன். நான் அதைச் கூறினபோது அவர்கள் அதை முழு இருதயத்தோடும் முழு ஆத்மாவோடும் அதை விசுவாசித்தார்கள்.

அவர்கள் என் மக்கள், நான் விரும்புகிறவர்கள் ஒலிநாடாக்களைக் கேட்கிறார்கள்.

ஏழு முத்திரைகளுக்குப் பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதை கவனிக்கவேண்டும் என்று நான் அவர்களிடம் கூறினேன்: அது மக்களை ஒன்றிணைத்தல், ஒன்றினைக்கப்பட்ட அடையாளங்கள், கடைசி நாட்களில் ஒளிரும் சிவப்பு விளக்கு, இந்த ஒரு விஷயத்தை மூடியது, அந்த அடையாளம்.

ஓ, சபையே, எழும்பி உங்களை உதறிக்கொள்ளுங்கள்! உங்கள் மனசாட்சியைக் கிள்ளுங்கள், உங்களை எழுப்பிக்கொள்ளுங்கள், இந்த மணி நேரத்தில்! நாம் பதறலுடன் இருக்க வேண்டும், அல்லது அழிந்து போக வேண்டும்! கர்த்தரிடமிருந்து ஏதோ ஒன்று வருகிறது! இது கர்த்தர் உரைக்கிறதாவது என்று நான்  அறிவேன். ஏதோ ஒன்று வெளிவருகிறது, மேலும் நாம் அதை அடைய பதறலுடன் இருப்பது நல்லது. இது ஜீவியத்திற்க்கும் இறப்புக்கும் இடையில் உள்ளது. அது நம்மை கடந்து செல்லும், மேலம் நாம் அதை பார்க்க மாட்டோம்.

ஏதோ நடக்கப்போகிறது என்பதை நாம் அறிவோம். தேவனின் வருகை திடீரென, இரகசியமான செல்லுகையாக இருக்கும். நாம் அதற்காக பதறலுடன் இருக்கிறோம். நேரம் நெருங்கிவிட்டது. நம் நாளுக்கான அடையாளத்தை நாம் அறிந்துள்ளோம், அது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஞாயிற்றுக்கிழமை பஸ்காவின் சின்னங்களை நாம் எடுத்துக்கொள்கிறோம், இது அவசரகாலத்தில் எடுக்கப்பட்டது, நாம் உலகம் முழுவதும், அவருடைய வார்த்தையைச் சுற்றி கூடிவருகிறோம். இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு, ஜெபர்சன்வில்லி நேரப்படி, இந்த மாபெரும் நிகழ்வின் ஒரு பகுதியாக வாருங்கள்: 63-0901E  அன்று பிரசங்கித்த”பதறல்கள்” என்ற செய்தியைக் கேளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

படிக்கவேண்டிய வேத வசனங்கள்:

யாத்திராகமம் 12:11

எரேமியா 29:10-14

பரிசுத்த லூக்கா 16:16

பரிசுத்த யோவான் 14:23

கலாத்தியர் 5:6

பரிசுத்த யாக்கோபு 5:16

22-0605 அடையாளம்

செய்தி: 63-0901M அடையாளம்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள கழுகுகளே,

இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில்லி நேரப்படி 63-0901M அன்று பிரங்கித்த ” அடையாளம் ” என்ற செய்தியைக் கேட்போம்.


சகோதரர் ஜோசப் பிரன்ஹாம்

22-0529 பரிபூரண விசுவாசம்

செய்தி: 63-0825E பரிபூரண விசுவாசம்

BranhamTabernacle.org


அன்புள்ள பரிபூரண விசுவாசமுள்ள மணவாட்டியே,

மீண்டும் ஒருமுறை, இந்த செய்தி என்ன என்பதைக் குறித்து என்னால் வார்த்தைகளை பொருத்த முடியவில்லை. இந்தச் செய்தி, தேவனின் தனிப்பட்ட காதல் கடிதங்கள், அவருடைய இரத்தத்தால் எழுதப்பட்ட, அவரது குரலால் பேசப்பட்டது, அதுவே நமக்கு எல்லாமுமாக இருக்கிறது. மற்ற எதுவும் ஒன்றுமில்லாததாக இருக்கிறது. நாம் அவரை நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கிறோம், அது அவருக்கான பரிபூரண அன்பைக் கொடுத்திருக்கிறது. அந்த வார்த்தையிலிருந்து எதுவும் நம்மை அசைக்க முடியாது. அவர் ஒரு நண்பருக்கு நண்பராக நம்முடன் உரையாடுவதைக் கேட்பதைத் தவிர வேறு எந்த திருப்தியும் நம் வாழ்வில் எதுவும் இல்லை.

அது நாம் கூட இல்லை, அது அவர் நமக்குள்  ஜீவிக்கிகிறார், அவரிடம் அழைக்கிறார். இது ஆழமான ஆழத்தின் அழைப்பு. டேப்களை இயக்குவதின் சுத்த மகிழ்ச்சி மற்றும் தேவன் மனிதக் குரலைப் பயன்படுத்துவதைக் கேட்க, நாம் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். உலக அஸ்திபாரத்திற்கு முன்பே அவர் நம்மை நேசித்தார் என்று சொல்வதற்கு; ஏனென்றால், நமக்குள் இருக்கும் எல்லாவற்றிலும் நாம் அவரை நேசிக்கிறோம், அவருக்கும் அவருடைய வார்த்தைக்கும் உண்மையாக இருப்போம் என்பதை அவர் அறிந்திருந்தார்.

நமக்குத் தேவையான அனைத்தையும், அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஒன்றும் தவறிப் போகவில்லை. அவர் தம்முடைய வார்த்தையை கடித வடிவில் எழுதி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்தார், அதனால் அவர் நம்மீது உள்ள அனைத்து அன்பையும் நமக்குச் சொல்ல முடியும்.

அப்போது அவர் நம்மிடம் கூறியது போல் அவருடைய அன்பு இன்னும் அதிகமாகிறது: “நான் மீண்டும் ஒருமுறை மாம்சத்தில் வந்து உங்களிடம் வாய்விட்டுப் பேசுவேன், அதனால் தவறான புரிதல், குழப்பம், விளக்கம் தேவைப்படாது. நான் எனது நேரத்தை எடுத்துக்கொண்டு, என் அன்பை உங்களுக்கு வெளிப்படுத்துவேன், நீங்கள் அதை மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்க முடியும். பிதா என்னில் இருக்கிறார், நான் உங்களில் இருக்கிறேன், நீங்கள் என்னில் இருக்கிறீர்கள், நாம் ஒன்று என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் மாம்சம் என் மாம்சம், உங்கள் எலும்பு என் எலும்பு, உங்கள் ஆவி என் ஆவி.

என் இருதயத்தில் உள்ள அனைத்தையும் மிக தெளிவாகச் சொல்கிறேன். நான் அதை மிகவும் தெளிவாக்குகிறேன், சந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள், நான் எழுதிய மற்றும் பேசிய வார்த்தைகள் உங்களுக்காக, அவை ஒருபோதும் தோல்வியடையாது.

நான் உங்களுக்கு பரிபூரண விசுவாசத்தைத் தருவேன், அது எல்லாச் சூழ்நிலைகளிலும் தலைமைத்துவமாக இருக்கும். எதிரி என்ன சொன்னாலும் பரவாயில்லை, நீங்கள் என் வார்த்தை என்ன சொல்கிறது என்பதில் உங்களுக்கு பரிபூரண விசுவாசம் இருப்பதால் அது அதில் தேர்ச்சி பெறும். எதிரி உங்களுக்கு என்ன சொல்ல முயன்றாலும், நீங்கள் அவர்களை கவனிக்க வேண்டாம். உங்கள் காதுகள் வேறு எதற்கும் செவிடாக உள்ளன, ஆனால் என் ஆவி உங்களுக்கு ஏற்கனவே கூறியது. இது உங்கள் இருதயங்களில் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதிலிருந்து உங்களை நகர்த்த எதுவும் செய்யப் போவதில்லை.

இந்தச் செய்தியை அறிந்துகொள்வதில் நமக்கு இருக்கும் அந்த பரிபூரண விசுவாசமானது, இது கர்த்தர் உரைக்கிறதாவது, நாம் அதே பரிபூரண விசுவாசத்தை, அவர் நமக்குச் கூறின அவரது ஒவ்வொரு வார்த்தையின் வாக்குறுதியும் நம்முடையது. நாம் நோய்வாய்ப்பட்டிருந்து மேலும் நமக்கு சுகமலித்தல் தேவைப்பட்டால், அது நம்முடையது. நமக்கு ஏதேனும் தேவை இருந்தால், நாம் அதைப் பெறலாம், ஏனென்றால் நாம் அவருடைய ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறோம். நாம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை வெளிப்படுத்தும் கடைசி நாளின் அபிஷேகம் செய்யப்பட்ட மேசியாக்கள்.

அவர் தம்மையே நமக்குள் ஊற்றிக் கொண்டிருப்பது, அது ஒரு காதலாக இருக்கிறது. அந்த மகத்தான திருமண விருந்துக்காக நாம் அவருடன் ஒன்றாகி விடுகிறோம். அவருடைய ஆவி இங்கே நம்மோடும் நமக்குள்ளும் இருக்கிறது. நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான், அதை விசுவாசிப்பது, மற்றும் அதை ஏற்றுக்கொள்வது.

நாம் தேவனின் 7வது தூதன் அல்ல, ஆனால் நாம் அவருடைய மகன்கள் மற்றும் மகள்கள். நம் கைகள் அவருடைய கைகள். டேப்பில் பேசப்பட்டது,  கர்த்தர் உரைக்கிறதாவது என்று நாம் விசுவாசிக்கிறோம். அது ஜீவிக்கும் வார்த்தை.

அவருடைய தீர்க்கதரிசி நமது போதகர். பதிவுசெய்யப்பட்ட வார்த்தையை நாம் கேட்கும்போது, ​​தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார் என்று விசுவாசிக்கிறோம் என்று விசுவாசிக்கும் பரிபூரண நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

தேவன் தம் தீர்க்கதரிசியின் மூலம் நம்மிடம் பேசுவதைக் கேட்க நாம் உலகம் முழுவதும் ஒன்றுகூடும்போது, ​​தேவன் தம்முடைய மணவாட்டியை தம்முடைய நியாயப்படுத்தப்பட்ட வார்த்தையைச் சுற்றிக் கொண்டு வருவதால், நம்முடைய விசுவாசம் உயர்வாகவும் உயர்ந்ததாகவும் இருக்கிறது.

நாளை என்பது மற்ற நாள் போல் இருக்காது. அவர் நமக்குக் கொடுத்திருக்கும் நம் பரிபூரண விசுவாசத்தை  நாம் எடுத்துக்கொள்வோம், நமக்குத் தேவையான எல்லாவற்றிலும் அதைப் பயன்படுத்துவோம், மேலும் அக்னி ஸ்தம்பம்  அவர் தேர்ந்தெடுத்த தூதர் மூலம் பேசி நமக்குச் கூறுவதுப்போல் அதைப் பெறுவோம்:

நான் உனக்கு என்ன செய்தேன் தெரியுமா? நீங்கள் என்னை, “உங்கள் போதகர்” என்று அழைத்தீர்கள்; நீங்கள் நன்றாக சொல்கிறீர்கள், ஏனென்றால் நான் அப்படித்தான். நான், உங்கள் போதகர் என்றால், இயேசு கிறிஸ்துவால் அடையாளம் காணப்பட்டதினால், நான் அவருடைய வேலையைச் செய்கிறேன், என் வார்த்தையை விசுவாசியுங்கள். இந்த விசுவாசச் செயலைச் செய்து, உங்கள் மீது கை வைப்பதன் மூலம், உங்களைத் துன்புறுத்தும் நோய் மற்றும் துன்பங்களை நான் கண்டனம் செய்தேன். அதை விசுவாசியுங்கள், அதனால் உங்கள் கோரிக்கையை நீங்கள் பெறுவீர்கள், அது என்னவாக இருந்தாலும், விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் சாத்தியமாகும். நீங்கள் ஜெபிக்கும்போது, ​​நீங்கள் கேட்டதை நீங்கள் பெறுவீர்கள் என்று விசுவாசியுங்கள். நான் அதைப் பெறுகிறேன் என்று நான் உண்மையிலேயே விசுவாசிக்கிறேன், என் இருதயத்தில் உங்கள் ஒவ்வொரு குணப்படுத்துதலையும் ஏற்றுக்கொள்கிறேன், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன், அது முடிந்தது என்று. நான் அதை விசுவாசிக்கிறேன், என்னில் உள்ள அனைத்தையும் கொண்டு நான் அதை விசுவாசிக்கிறேன்.

இந்த நாளுக்காகப் பேசப்பட்டு, பதிவுசெய்யப்பட்ட, நியாயப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்ட,
தேவனின் குரலாக இந்தச் செய்தி உள்ளதென்று நம்மில் உள்ள அனைத்தையும்க்கொண்டு விசுவாசிக்கிறோம். நாம் எதைக் கேட்டாலும் பெறுவோம் என்று விசுவாசிக்கிறோம், ஏனென்றால் அது  கர்த்தர் உரைக்கிறதாவது, அது நம்முடையது.

ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் இனையுங்கள்,  64-0825E அன்று பிரசங்கித்த : பரிபூரண  விசுவாசம், நமக்கு தேவையான அனைத்தையும் எப்படிப் பெறுவது என்று நம்மிடம் தேவனின் தீர்க்கதரிசி கூறுவதைக் கேட்போம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்



படிக்க வேண்டிய வேத வசனங்கள் :

பரிசுத்த மார்க் 11:22-26 / 16:15-18

பரிசுத்த யோவான் 14:12 / 15:7

எபிரெயர் 11:1 / 4:14

யாக்கோபு 5:14

1 யோவான் 3:21

22-0522 நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்?

செய்தி: 63-0825M நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்?

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள ஐக்கியம்கொள்பவர்களே,

நேரமும் நித்தியும் ஒன்றாகக் கலக்கும், அது தேவனும் அவருடைய மக்களும் ஒன்றாக கலக்கும்போது.

நான் தேவனின் மணவாட்டி ஒன்றாக கலக்க அழைக்கிறேன். இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரத்தில் . 63-0825m அன்று பிசங்கித்த: நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்? என்ற செய்தியைக் கேட்க அழைக்கிறேன்.

சகோதரன். ஜோசப் பிரன்ஹாம்

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதம் வசனங்கள்.

வெளிப்படுத்துதல் : 3ஆம் அதிகாரம் 21 முதல் 22 வசனம் வரை.

22-0515 இணையும் நேரமும் அடையாளமும்

செய்தி: 63-0818 இணையும் நேரமும் அடையாளமும்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள முதன்மையான மணவாட்டியே,

ஞாயிற்றுக்கிழமை அன்று உலகெங்கிலும் ,பரலோக சூழலில் நாம் ஒன்றாக அமர்ந்திருந்தபோது, ​​தேவனின் ஒரே குரல் நம்மிடம் பேசுவதை நாம் கேட்டுக் கொண்டிருந்தோம். எப்பொழுதும் போல, அவர் என்ன கூறப்போகிறார் என்று நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம். இன்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார்?

அவருடைய வார்த்தைகளை நாம் இதற்கு முன்பு பலமுறை கேட்டிருக்கலாம், ஆனால் அந்த நாள் வித்தியாசமாக இருக்கும் என்று நாம் அறிந்திருக்கிறோம். நாம் இதுவரை கேள்விப்படாத ஒன்றைக் கேட்போம். நாம் கற்பனை செய்வதை விட அதிக வெளிப்பாட்டைப் பெறுவோம். அவர் நம் இருதயங்களையும், மனதையும், ஆன்மாவையும் திறந்து, இப்போது இருக்கும் ஒன்றை, சரியான காலத்தில் வெளிப்படுத்துவார்.

பிறகு அது நடக்கும். மணவாளன் தனது மணவாட்டிகளுக்குச் சொல்லக்கூடிய மற்றும் வெளிப்படுத்தக்கூடிய மிகச் சிறந்த வார்த்தைகள், “நீங்களே தெய்வீக சரீரத்தின் முழுமையான முழுமை, முதன்மையானவர்கள். எனக்குள் இருந்த அனைத்தையும், நான் கிறிஸ்துவுக்குள் ஊற்றினேன்; கிறிஸ்துவில்  இருந்த அனைத்தையும், நான் உங்களுக்குள் ஊற்றினேன். நீங்கள் என் சரியான தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை மணவாட்டி.

நம் முழு உள்ளமும் மகிழ்ச்சியில் துள்ளியது. தகப்பனானவர் நம்மிடம் கூறினார், நாம்தான் அவருடைய மணவாட்டி. நாம்தான் அவர் நேசிக்கிறார். நாம் அவருடைய வார்த்தையால் செறிவூட்டப்பட்டுள்ளோம், அவருடைய வார்த்தை மட்டுமே. நம் கருப்பை வேறு எதற்கும் மூடப்பட்டுள்ளது. அவர் நமக்காக காத்திருந்தார், ஏங்குகிறார்…நமக்காக!!

மேலும் என்னவென்று யூகியுங்கள்? இந்த வார்த்தைகளை நம்மிடம் சொல்ல அவர் வேறு யாரையும் அனுப்பவில்லை, அவர் மீண்டும் ஒருமுறை மனித மாமிசத்தில் வந்து வசித்தார், அதனால் அவர் நேரடியாக, உதட்டோடு காதுகளில் பேச முடியும், மேலும் “நான் உன்னை நேசிக்கிறேன், என் நேச மணவாட்டி.” என்று நம்மிடம் கூறுகிறார்.

நாம் பாடல் பாடுவதை விரும்புகிறோம், ஐக்கியம் கொள்வதை விரும்புகிறோம், விசுவாசிகளுடன் கூடிவருவதை விரும்புகிறோம், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நாம் விரும்புவது தேவனின் குரலைக் கேட்பது; இது தேவன் உரைக்கிறதாவது, நம்மிடம் நேரடியாகப் பேசுவது. ஒவ்வொரு செய்தியும் நமக்குத் தனிப்பட்ட காதல் கடிதம். அவர் நமக்குச் சொல்ல விரும்பும் ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு காந்த நாடாவில் வைத்தார், அதனால் அவற்றை நாமே கேட்க முடியும்.

இந்த ஞாயிற்றுக்கிழமை நாம் கூடும்போது அவர் நமக்கு என்ன சொல்லப் போகிறார்? மேல்ம் இது என்ன காலம்?

ஏசாயா பேசி, “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்” என்று கூறினார், ஆனால் இது நடபதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தது. தாவீது ராஜா, “அவர்கள் என் கைகளையும் கால்களையும் துளைக்கிறார்கள்” என்றார். அவர் தனது கைகள் மற்றும் கால்களைப் போல பேசினார், ஆனால் காலம் இதுவல்ல, இன்னும் 1000 ஆண்டுகள் கடந்து செல்லும்.

தேவன் நம் நாளில் நம் தீர்க்கதரிசி மூலம் பேசினார், இந்த நாள் வரும் வரை பல விஷயங்கள் நடக்க முடியாது என்று கூறினார். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடுகளும் உலகமும் ஒன்றுபடுவதை நாம் காண்கிறோம். கம்யூனிசம் என்பது கடந்த காலத்தின் ஒரு விஷயம் என்றும் அழிந்துவிட்டதாகவும் நாம் நினைத்தோம், ஆனால் இப்போது அது மிகவும் உயிருடன் இருப்பதையும் தேவனின் கைகளில் ஒரு கருவியாக இருப்பதையும் காண்கிறோம், அவர் தீர்க்கதரிசனம் சொல்லி நமக்குச் சொன்னதுபோல.

அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் இனி இல்லை மேலும் அந்தப்பனிப்போர் முடிந்துவிட்டதாக உலகம் நினைத்தது, . ஆனால் இன்று அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் நிஜமாகிவிட்டது. அவர் சொன்னது போலவே எல்லாம் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த காலம் வந்துவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை, அவர் மீண்டும் நம்மிடம் நேரடியாகப் பேசுவார், உதட்டோடு காதுக்கு, நாம் கேட்பதற்காகப் பேசப்பட்டு சேமிக்கப்பட்ட மற்றொரு காதல் கடிதத்தைக் கேட்போம். அவர் நமக்கு என்ன சொல்லி வெளிப்படுத்துவார்? அந்த காலம் என்ன? என்ன நடக்கிறது?

தேவன் தனது மணவாட்டியை ஒன்றுபடுத்துகிறார். அவள் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் ஒன்றாக வருகிறாள். இது ஒன்றுபடுவதற்கான நேரமாக உள்ளது, அது இப்போது உள்ளது. அவள் எதற்காக ஒன்றுபடுகிறாள்? அந்த எடுத்துக்கொள்ளப்படுவதற்காக.

உலகெங்கிலும் தேவனின் குரலை நாம் கேட்கும்போது இந்த செய்தி என்ன செய்கிறது? மணவாட்டியை வார்த்தையுடன் ஐக்கியப்படுத்துகிறது. அந்த வார்த்தை தேவன். மணவாளன் என்பது வார்த்தை. மணவாட்டி அந்த வார்த்தையைக் கேட்கும், நாம் ஒரு ஐக்கியத்தில் ஒன்றாக வருகிறோம். நாம் ஒரு திருமணத்திற்கு தயாராகி வருகிறோம், அங்கு நாம் வார்த்தையுடன் ஒன்றாக மாறுகிறோம்.

பிதாவில் உள்ள அனைத்தும் நானே; மேலும் என்னில் உள்ள அனைத்தும், நீங்களே; மேலும் உங்களில் உள்ள  அனைத்தும், நானே. மேலும், நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.” பாருங்கள்? “அந்த நாளில்.” எந்த நாள்? இந்த நாள்! தேவன் வெளிப்படுத்தப்படுவதைப் பற்றிய பெரிய மறைந்திருக்கும் மர்மங்களை நாம் காண்கிறோம். ஓ, நான் அதை எவ்வாறாக நேசிக்கிறேன்!

இப்போதே அந்த நேரம். இப்போதே அந்த காலம். மணவாட்டி மணவாளனுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டாள். “இதோ, மணவாளன் வருகிறார்!” என்ற நள்ளிரவில் கூக்குரல் இடுவதை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  நாம் சரியாக கடைசி நேரத்தில் இருக்கிறோம்.

ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெஃபர்சன்வில்லே நேரத்தில் நாம் வார்த்தையைச் சுற்றி ஒன்றுபடும்போது, ​​எங்களுடன் ஒன்றுபடுங்கள், தேவனின் குரல் நமக்குச் சொல்வதைக் கேட்போம்: 63-0818 அன்று பிசங்கித்த இணையும் நேரமும் அடையாளமும்
செய்தியைக் கேட்போம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

படிக்க வேண்டிய வேதங்கள்
சங்கீதம் 86: 1-11.
பரிசுத்த மத்தேயு 16 : 1 – 3