22-0731 தேவன் திரைநீக்கப்படுதல்

செய்தி: 64-0614M தேவன் திரைநீக்கப்படுதல்

BranhamTabernacle.org

அன்புள்ள எழுதப்பட்ட வார்த்தையே, 

ஒவ்வொரு வாரமும் அதிகமாகவும் இன்னும் அதிகமாகவும் ஆகிகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று , நாம் பார்த்து, மற்றும் முடிவு செய்யும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது. நாம் எதைப் பார்த்தோம்? நாம் ஒரு ஊழியரைப் பார்த்தோமா, இல்லை! நாம் நம் போதகரைப் பார்த்தோமா, இல்லை! மனித மாம்சத்தின் திரைக்கு அப்பால் நாம் பார்த்தபோது, ​​இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துவதையும், தம்மை பிரத்தியட்ச்சப்படுத்துவதையும் நாம் பார்த்தோம். 

அந்த ஒளிநாடாக்களை நாம் கேட்டுக் கொண்டிருக்கையில், நீங்கள் கேட்பதற்கு காதுகள் மற்றும் பார்க்க கண்கள் இருந்தால் அவை இன்னுமாக தெளிவாகவும் தெளிவாகவும் மாறிவிட்டது, நாம் இப்போது தேவனை வெளிப்படையாகக் காண்கிறோம். அந்த திரையானது நீக்கப்பட்டுவிட்டது, தேவன் நம் முன் வெளிப்படையாக நிற்பதைக் காண்கிறோம், அந்த அக்னிஸ்தம்பமானது தன்னைத் தானே பிரத்தியட்சப்படுத்துகிறதைத் தெளிவாகப் பார்க்கிறோம். 

இது சிலரைக் குருடாக்கியுள்ளது, ஆனால் நமக்கோ, அது உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. தேவன் மோசேக்கு செய்ததைப் போலவே, நமக்கு முன்பாக அவருடைய தூதரை மகிமைப்படுத்தினார்.

 நீங்கள் இனிமேல் அந்த திரைக்கு பின்னால் இல்லை, சிறியவர்களே, தேவன் உங்களுக்கு தன்னை முழுமையாக காட்சிப்படுத்த வந்துள்ளார்.

அது என்ன? தெய்வீகத்தன்மை, மனித மாமிசத்தில் மறைந்திருந்தார். தேவன், மனித வடிவில், அவர்களின் பார்வையில் இருந்து தன்னை மறைத்துக் கொள்கிறார். அவர்கள் ஒரு மனிதனை மட்டுமே பார்க்க முடியும் மேலும் தேவனின் தீர்க்கதரிசி தவறு செய்கிறார் என்று சொல்ல முடியும், அவர் அதை தானே சொன்னார், டேப்பில் தவறுகள் இருப்பதாக மக்களுக்கு கற்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், அவருடைய முன்குறிக்கப்பட்ட மணவாட்டி, நாம் தேவனைப் பார்க்கிறோம், கேட்கிறோம், அதில் எந்த தவறையும் பாருக்கவில்லை. 

ஒருவர் மனிதனைப் பார்த்தார், மற்றவர் தேவனைப் பார்த்தார். பாருங்கள்? அது தேவன் ஒரு மனிதனின் திரைக்குப்பின்னால் , இருவரையும் அப்படியே சரியாக அமைத்து, ஆனால் நீங்கள் எதைப் பார்க்கவில்லையோஅதில் உங்கள் விசுவாசம்.

 நம்மைப் பொறுத்தவரை, தேவனின் நியாயப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியின் தவறுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்து நம்புவதற்கு முன், நாம் அதை எடுத்து இது கர்த்தர் உரைக்கிறதாவது என்று விசுவாசிப்போம்.

மோசே இரண்டாவது முறை பாறையை அடிக்கவில்லை. அதே ஆவி அந்நாளில், “இதோ, மோசே தவறு செய்கிறான்” என்று கூறியிருக்கும். ஆனால் எப்படியும் தண்ணீர் வந்தது, தவறு என்று அழைத்த அந்த மோசேயிடமிருந்து நீங்கள் குடிக்கவில்லை என்றால், நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்பதாகும். இன்றும் அப்படித்தான். இவ்வளவு குற்றச்சாட்டுகள். 

மோசேக்கு வார்த்தை இருந்தது. இப்போது நினைவில் கொள்ளுங்கள், வார்த்தை பிரத்தியட்மான பிறகு, மோசே மீண்டும் மோசேயாக இருந்தான். பாருங்கள்? ஆனால் அந்த வார்த்தை அவனுக்குள் கொடுக்கப்பட்டிருக்கையில், அவன் தேவனாயிருந்தான்; சரி, அவன் மோசே இல்லை. 

சகோதரர் பிரன்ஹாம் வார்த்தையைக் கொண்டிருந்தார். வார்த்தை பிரத்தியட்ச்சமானப் பிறகு, சகோதரர் பிரன்ஹாம் மீண்டும் சகோதரர் பிரன்ஹாம் ஆனார், ஆனால் அந்த வார்த்தை டேப்பில் மக்களுக்கு வழங்கப்பட அவருக்குள் இருந்தபோது, ​​அவர் தேவன்; அவர் சகோதரர் பிரன்ஹாம் இல்லை. இவ்வாறு நாம் கற்றுக்கொள்கிறோம், டேப்பில் இருப்பது தேவனின் வார்த்தைகள், மேலும் தேவனின் வார்த்தைகளில் எந்த தவறும் இல்லை.

நாம் அதை விசுவாசிப்பது மட்டுமல்ல, ஆனால் நாம் அதன்படி ஜீவிக்கிறோம். அவர்கள் அனைவரும் அதை விட்டு விலகிச் செல்லும்போது, ​​நாம் அதனுடன் இருக்கிறோம்! நாம் அதை விசுவாசிக்கிறோம்! வேறு யாரும் என்ன செய்தாலும் அல்லது சொன்னாலும், நாம் அதை விசுவாசிக்கிறோம், அதன் பிறகு செயல்படுகிறோம். நீங்கள் இல்லை என்றால், நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டாம் . 

எனவே நான் கூறுகிறேன், இயேசு கிறிஸ்துவின் பெயரில் கூறுகிறேன்: நீங்கள் ஒன்றையும் சேர்க்காதீர்கள், எடுக்காதீர்கள், உங்கள் சொந்த யோசனைகளை அதில் வைக்க வேண்டாம், அந்த ஒலிநாடாக்களில் கூறப்பட்டதைச் கூறுங்கள், தேவனாகிய ஆண்டவர் செய்ய கட்டளையிட்டதை அப்படியே சரியாகச் செய்யுங்கள். அதில் எதையும் சேர்க்க வேண்டாம்! 

ஒலிநாடாவை இயக்கி மேலும் , தேவன் நமக்குக் கட்டளையிட்டபடி ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசியுங்கள். இது தேவன் தனது மணவாட்டிகளிடம் உதட்டிலிருந்து காதுக்கு பேசுவது.

தேவன் மீண்டும் திரையைப்போட்டு, மோசேக்கு திரையிலிருந்து நிரூபித்தார், அதே அக்னி ஸ்தம்பத்தால் தன்னைத்தானே திரையிட்டுக் கொண்டார், அதே அக்னி ஸ்தம்பம் கீழே இறங்கியது. அப்போதிருந்து… அவர்களிடமிருந்து, அதனால் அவர்கள் தேவனின் வார்த்தையை மட்டுமே கேட்க முடிந்தது. புரிந்ததா உங்களுக்கு? வெறும் வார்த்தை, அவர்கள் அவருடைய குரலைக் கேட்டனர். ஏனென்றால், மோசே அவர்களுக்கு ஜீவனுள்ள வார்த்தையாக இருந்தான். 

தேவன் தனது திட்டத்தை மாற்ற முடியாது, மேலும் அவரால் முடியாது. அவர் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். எனவே, நம்மைப் பொறுத்தவரை, அவருடைய நியாயப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி, வில்லியம் மரியன் பிரன்ஹாம் நமது தேவனின் குரல் மற்றும் நம் நாளுக்கான ஜீவிக்கும் வார்த்தை. 

இப்போது அது நமக்கு எழுதப்பட்ட வார்த்தை மட்டும் அல்ல, அது ஒரு உண்மை. நாம் அவரில் இருக்கிறோம். இப்போது நாம் அனுபவிக்கிறோம். இப்போது நாம் அவரைப் பார்க்கிறோம். இப்போது நாம் அவரை, வார்த்தையாக, தம்மை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். அது மறைக்கப்பட்டுள்ளது, வெளியே, ஏனெனில் (ஏன்?) அது மனித சதையில் திரை போடப்பட்டுள்ளது. பாருங்கள்?

என்னவாக இருந்தாலும், அவர்கள் அதைப் பார்ப்பதில்லை. ஏன்? அது அவர்களுக்காக அனுப்பப்படவில்லை.

 நீங்கள் அதைப் பார்ப்பதால், நீங்கள் யார் என்று அவர் மீண்டும் ஒருமுறை சொல்வதைக் கேட்க நீங்கள் தயாரா? அவர் மகிமையின் அரண்களிலிருந்து கீழே பார்க்கும்போது, ​​உங்களைக் காணும்போது, ​​அவர் யாரைப் பார்க்கிறார்? 

• நான் வார்த்தை பிரத்தியட்மாவதைக் காண்கிறேன். இந்த கடைசி நாட்களில் அவர் என்ன செய்வேன் என்று கூறினாரோ, அது வளர்ந்து வருவதை நான் காண்கிறேன். அந்த பழுக்க வைக்கும் வார்த்தையிலிருந்து வரும் அந்த ஷெக்கினா அப்பத்தை பிள்ளைகள் சாப்பிடுவதை நான் பார்க்கிறேன், அதை விசுவாசிப்பதை. ஆமென்! 

• நீங்களே திரையாக இருந்து அவரை திரையில் வைப்பதால், அப்போது நாம் அவருடைய ஒரு பகுதியாக மாறுகிறோம். கிறிஸ்து உங்களில் இருக்கும்வரை, கிறிஸ்து தேவனாக இருந்ததைப் போல, நீங்கள் அவருடைய பகுதியாக இருக்கிறீர்கள். தேவன் அவருக்குள் இருந்ததால், அவரை தேவனாக்கினார். கிறிஸ்து உங்களில் இருப்பதால், மகிமையின் நம்பிக்கை, நீங்கள் கிறிஸ்துவின் ஒரு பகுதியாக மாறுகிறீர்கள்.

• நீங்கள், இப்படியாக கூறப்பட்டுள்ளது “நீங்கள் எழுதப்பட்ட நிருபங்கள்,” அல்லது, “நீங்கள் எழுதப்பட்ட, பிரத்தியட்மாக்கப்பட்ட வார்த்தை,” இதில் எதையும் சேர்க்க முடியாது. “நான் எழுதப்பட்ட நிருபம்” என்று நீங்கள் கூறிவிட்டு, மேலும் ஏதோ விதமான ஏதோ ஜீவியத்தை வாழமுடியாது,ஆனால் இது ஏற்கனவே எழுதியாயிற்று, ஏனெனில் இதில் ஒன்றையும் சேர்க்கவோ அல்லது எடுக்கவோ முடியாது. 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர் நம்மைப் பார்க்கிறார். நாம் அவரைப் பார்க்கிறோம். நாம் இன்று அவருடைய பிரத்தியட்மான வார்த்தை . 

ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு எங்களுடன் இனையுங்கள் , ஜெபர்சன்வில்லே நேரப்படி, தேவன் நம் முன் நிற்கையில்; அக்னி ஸ்தம்பம் மனித மாம்சத்தில் திரையிடப்பட்டு, இந்த நாளில் நாம் வாழ வேண்டிய வார்த்தையை நம்மிடம் பேசுகிறது. இது ஷெக்கினா மகிமை நம்மை பழுக்க வைக்கிறது. விசுவாசிகளுக்காக வைக்கப்பட்டுள்ள திருக்காட்சிஅப்பம். 

தேவன் திரைநீக்கப்படுதல் 64-0614M 

சகோ. ஜோசப் பிரான்ஹாம் 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்: 

மத்தேயு 24:24 

பரிசுத்த லூக்கா 17: 28-29 

பரிசுத்த யோவான் 14:14 

1 கொரிந்தியர் 12:13 

2 கொரிந்தியர் 3:6 – , 2 கொரிந்தியர் 4:3 

பிலிப்பியர் 2:1-8 

1 தீமோத்தேயு 3:16 

எபிரெயர் 13:8 

வெளிப்படுத்துதல் 10:7 & 19:13 

யாத்திராகமம் 19 மற்றும் 20 அதிகாரம்

யோவேல் 2:28 

மல்கியா 4:5