24-0114 உங்களிலிருக்கிறவர்

செய்தி: 63-1110E உங்களிலிருக்கிறவர்

BranhamTabernacle.org

அன்புள்ள பரிபூரண விசுவாசமுள்ள விசுவாசிகளே, 

ஒவ்வொரு நாளும் நம்முடைய இருதயம் மிகுந்த எதிர்பார்ப்புடன் துடிக்கிறது. அவர் விரைவில் வருவதற்கான மணிநேரத்திற்காக நாம் காத்திருக்கிறோம். எல்லா ஊழியங்களும் மறைந்துவிட்டன. “நாம் அவருடைய மணவாட்டிகளா” என்று இனி ஆச்சரியப்பட வேண்டியதில்லை? முன்னெப்போதும் இல்லாத வகையில் இது நம் இருதயங்களில் நங்கூறம் இடப்பட்டுள்ளது, நாம் அவருடைய மணவாட்டிகள். 

நாம் ஒரு பரலோக சூழ்நிலையில் சிக்கி, இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைக் கேட்டு, அவருடைய சபையில் மறுபிறவி எடுத்தோம். இந்த செய்தி தேவனின் வார்த்தையால் முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது, அது ஒரு மனிதனாக இருக்க முடியாது, அது தேவன் தனது மணவாட்டிகளிடம் உதட்டிலிருந்து காதில் பேசுவதாக இருக்க வேண்டும். 

இந்த ஒலிநாடாக்களில் நம்முடன் பேசுவது ஒரு மனிதன் அல்ல, அது தேவன் என்று நாம் விசுவாசிகிறோம். 

நான் கூற விரும்புவது என்னெவென்றால், “உங்கள் விசுவாசத்தை ஒருபோதும் இழக்காதீர்கள்.” சாத்தான் என்னைப் பற்றி உங்களுக்குத் தீமையானதைக் கூற அனுமதிக்காதீர்; ஏனெனில், நிறைய இருக்கிறது. ஆனால் நீங்கள் அந்த விசுவாசத்தை வைய்யுங்கள்; ஏனெனில், நீங்கள் அப்படி செய்யாவிட்டால், அது நடக்காது. என்னை, ஒரு மனிதனாகப் பார்க்காதீர்கள்; நான் ஒரு மனிதன், நான் தவறுகள் நிறைந்தவன். ஆனால் நான் அவரைப் பற்றி என்ன சொல்கிறேன் என்று பாருங்கள். அது அவர் தான். அந்த அவர்தான்.

அவர் சொல்வதை நீங்கள் நம்பிக்கையுடன் விசுவாசிக்க வேண்டும் அல்லது அது நடக்காது. பலர் நினைப்பது போல் தேவனின் தீர்க்கதரிசியை நாம் ஒரு மனிதனாக பார்க்கவில்லை. நாம் மனித மாம்சத்தின் திரைக்குப் பின்னால் இருக்கிறோம், நாம் பார்ப்பது மற்றும் கேட்பது எல்லாம் தேவன் மனித உதடுகளால் பேசுவதை மட்டுமே, மேலும் நம்பிக்கைக்கொண்டு மற்றும் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம். 

அதுவே இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு. ஒலிநாடாக்களில் பேசுவது தேவன், மனிதன் அல்ல என்று விசுவாசிக்க வேண்டும். நீங்கள் அதைத் தவறவிட்டால், நண்பரே, நீங்கள் இந்த மணிநேரத்தின் செய்தியைத் தவறவிட்டீர்கள், நீங்கள் மணவாட்டிகளாக இருக்க முடியாது. 

சாத்தான் அதற்கு தனது விளக்கத்தை வைக்கிறான், மேலும் 99% சமயங்களில் அவன் ஏவாளுக்கு செய்ததைப் போலவே செய்தியை மேற்கோள் காட்டுகிறான், ஆனால் அவள் வார்த்தையுடன் இருக்கக் கட்டளையிடப்பட்டாள்; ஆதாம் அவளிடம் சொன்னது தேவன் சொன்னதுதான், வேறு யாரும் சொன்னது அல்ல. அவள் தேவனின் குரலுடன் தறித்திருக்க வேண்டும். 

உலகம் இதுவரை அறிந்திராத மகத்தான நாள் இது. இயேசு கிறிஸ்துவின் ஜீவியம், அவருடைய தீர்க்கதரிசியின் வாழ்க்கையில் ஜுவித்து, வெளிப்படுத்தியது, இப்போது அவரது மணவாட்டிகளான நம்மில் மாம்சமாக ஜீவிக்கிறார். 

அவர் நமக்குக் கட்டளையிட்டதை நாம் சரியாகச் செய்கிறோம்: ஒலிநாடாக்களில் தேவனின் குரலுடன் தறித்திருப்பதன் மூலம் வார்த்தையுடன் தறித்திருங்கள். இது இன்றைய தேவனின் ஒலிநாடா ஊழியம் மற்றும் நிகழ்ச்சி. 

வில்லியம் மரியன் பிரன்ஹாம் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழாவது தூதுவர் என்று நீங்கள் உண்மையிலேயே விசுவாசித்தால், தேவனின் வார்த்தையில் மறைந்திருக்கும் அனைத்து மர்மங்களையும் பேசவும் வெளிப்படுத்தவும் தேவன் தேர்ந்தெடுத்தவர், தேவனின் குரல் இந்த தலைமுறைக்கு, மற்ற மனிதர்களைப் போல நம்பிக்கை கொண்ட ஒரு மனிதர், ஒருவர். கர்த்தருடைய தூதர் கூறின்னார், “மக்கள் உங்களை விசுவாசித்தால், உங்கள் ஜெபத்திற்க்கு முன் எதுவும் நிற்காது”, இந்த ஞாயிற்றுக்கிழமை வேறு எதிலும் இல்லாத சிவப்பு கடித நாளாக இருக்கும்.

இந்தச் செய்தியின் வெளிப்பாட்டை நம்மிடமிருந்து எடுக்கக்கூடியது எதுவும் இல்லை, எதுவும் இல்லை. நாம் அதை ஒருபோதும் சந்தேகிக்க முடியாது. அவர் கூறின்னால் அதை விசுவாசிப்போம். நாம் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் நாம் அதை விசுவாசிக்கிறோம். 

இயேசுவே நமக்குச் கூறின்னார்: “உலகத்திலுள்ளவனைவிட உன்னில் இருப்பவர் பெரியவர்.” அது நம் இருதயத்தில் பதியட்டும். அவருடைய ஆவி நம்மில் ஜீவிக்கிறது. அதை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? இப்போது, ​​இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும்போது, ​​பரிசுத்த ஆவியானவர், அக்கினித் ஸ்தம்பமாகிய தேவன் தாமே நம்மில் வாழ்ந்துகொண்டு ஜுவிக்கிறாரா? அது உண்மை என்று நமக்கு எப்படித் தெரியும்? தேவன் அதைக் கூறின்னார்!! 

நாம் தோல்வியடைந்தவர்கள் என்று சாத்தான் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறான். அவன் சொல்வது சரிதான், நாம்தான். அவன் நமக்கு நினைவூட்டுகிறான், நாம் வார்த்தையில் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. மீண்டும், நாம் இல்லை. செய்வதை விட நமக்குத் தெரிந்தவற்றைச் சிறப்பாகச் செய்கிறோம். எங்களை மன்னியுங்கள் ஆண்டவரே, அவன் சொல்வது சரிதான். 

ஆனால், நமது தவறுகள், பலவீனங்கள், தோல்விகள் அனைத்திலும் கூட, நாம் மணவாட்டிகள் என்பதை அது மாற்றாது. நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம்! 

நாம் நம்மையோ அல்லது நம்மால் செய்யக்கூடிய எதையும் பார்க்கவில்லை, நாம் ஒரு குழப்பம். அவர் நம்மைத் தேர்ந்தெடுத்து, அவருடைய வார்த்தையின் வெளிப்பாட்டைக் கொடுத்தார் என்பதை நாம் அறிவோம், அந்த வெளிப்பாட்டை நம்மிடமிருந்து எதுவும் எடுக்க முடியாது. அது நம் இருதயத்திலும் ஆன்மாவிலும் பதியப்பட்டுள்ளது. 

நாம் பரிபூரன விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் நம்மிடம் கூறினார். நாங்கள் செய்கிறோம் ஆண்டவரே, உமது வார்த்தையில் பரிபூரண விசுவாசம். உங்கள் தீர்க்கதரிசி கூறியதில் இது கர்த்தர் உரைக்கிறதாவது என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது அவருடைய வார்த்தையல்ல, எங்களுக்கான உமது வார்த்தை.

உங்கள் தீர்க்கதரிசி எங்களுக்குத் கூறின்னார் தேவையானது எதுவோ, நாங்கள் விசுவாசித்து, உமது வார்த்தையை விசுவாசித்தால், எங்களுக்குத் தேவையானதை நாங்கள் பெறலாம். நாங்கள் விசுவாசிக்கிறோம். 

ஆண்டவரே, எனக்கு ஒரு தேவை இருக்கிறது. உமது வார்த்தையில் நான் கொண்டுள்ள முழு நம்பிக்கையுடன் நான் உங்கள் முன் வருகிறேன், ஏனென்றால் அது தோல்வியடையாது. ஆனால் இன்று, ஆண்டவரே, நான் என் நம்பிக்கையுடன் மட்டுமல்ல, உமது வலிமைமிக்க ஏழாவது தூதருக்கு நீங்கள் கொடுத்த விசுவாசத்தோடும் உங்கள் முன் வருகிறேன். 

ஓ ஆண்டவரே, எங்களிடம் இரக்கம் காட்டும்படி நான் உம்மை வேண்டுகிறேன். மேலும் தற்போது இங்கு உள்ள ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எந்த வகையான நோய் அல்லது துன்பம் கொண்டவர்களாக இருக்கட்டும்; மேலும் மோசே தன்னை உடைத்து எறிந்ததுப்போல, மக்களுக்காக, இன்று இரவு நான் என் இருதயத்தை உம் முன் வைக்கிறேன், ஆண்டவரே. நான் வைத்திருக்கும் முழு விசுவாசம், அது உங்களில் உள்ளது, நீங்கள் எனக்குக் கொடுத்தீர்கள், நான் அதை அவர்களுக்குக் கொடுக்கிறேன். 

நான் கூறுகிறேன்: என்னிடம் உள்ளதைப் போன்றதைப்போலவே இந்த பார்வையாளர்களுக்கும் கொடுங்கள்! நாசரெயரான இயேசு கிறிஸ்துவின் பெயரில், உங்கள் நோயைத் துறந்து விடுங்கள், ஏனென்றால் உங்கள் உயிரைப் பறிக்க முயற்சிக்கும் பிசாசை விட உங்களில் இருப்பவர் பெரியவர். நீங்கள் தேவனின் பிள்ளைகள். நீங்கள் மீட்கப்பட்டவர்கள். 

அது முடிந்தது. அவருடைய வார்த்தை தோல்வியடையாது. நமக்கு எது தேவையோ அதை நாம் பெற்றுக்கொள்ளலாம். 

ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு எங்களுடன் இனையுங்கள், இந்த மாபெரும் ஆசீர்வாதத்தையும் அபிஷேகத்தையும் தேவனிடமிருந்து பெற மணவாட்டிகளின் ஒரு பகுதி உலகம் முழுவதிலுமிருந்து கூடிவருகிறது, தேவனின் குரலைக் கேட்கையில் அவரது விசுவாசத்தையே நம் விசுவாசத்துடன் வைப்பார். 

சகோ. ஜோசப் பிரான்ஹாம் 

63-1110E  உங்களிலிருக்கிறவர்