22-0626 உங்களிலிருக்கிறவர்

செய்தி: 63-1110E உங்களிலிருக்கிறவர்

BranhamTabernacle.org

அன்புள்ள சிறந்த விசுவாசமுள்ள மணவாட்டியே,

இது தவறான இலக்கணத்துடன் கூடிய எளிய கடிதம் என்று எனக்குத் தெரியும், ஆனால் நம் தீர்க்கதரிசி கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நாம் விசுவாசிக்கிறோம், அதை ஏற்றுக்கொள்கிறோம் என்பதை உலகம் அறிய விரும்புகிறேன். டேப்பில் அவர் ஏதாவது சொல்வதைக் கேட்டவுடன்,  நாம் அதை விசுவாசிக்கிறோம், நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம், பிறகு தேவன் நம்மிடம் நேரடியாக  பேசுகையில் அதை தனிப்பட்ட முறையில் பெற்றுகொள்கிறோம்.

அது மனிதனாக இருக்க முடியாது, அது தேவனாக இருக்க வேண்டும் என்று தேவனின் வார்த்தையால் பிரசங்கிக்கப்பட்டு, முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இயேசு இருந்தபோது தோன்றிய அதே
அடையாளப் பொருள், இன்று பூமியில் தோன்றியதாக நாம் விசுவாசிக்கிறோம். பரிசுத்த பவுல் அதே இயற்கையுடன் பார்த்த அதே அக்னி ஸ்தம்பம், அதையே செய்து, நம் நாளில் வந்து. அது தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார்:

அவர் தன்னை மேசியாவாக அடையாளப்படுத்திய அதே ஆவிக்குறிய அடையாளம், இன்று அவரை அடையாளப்படுத்தியுள்ளது. அவர் இன்னுமாக மேசியா!

டேப்பை இயக்குவதன் மூலம் ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள்  விசுவாசித்தால் மட்டுமே இந்த பெரிய ஆசீர்வாதங்களைப் பெற முடியும். நீங்கள் அதை நம்பாத ஒருவராக இருந்தால், அறிவுப்பூர்வமாகவோ அல்லது யாரேனும் உங்களுக்குச் சொல்லி முடிவெடுக்க வேண்டும் அல்லது அவர்கள் இப்படி கூறுவார்களென்றால் :  “இது கர்த்தருடைய வார்த்தை, இது வெறும் சகோதரர் பிரான்ஹாம் பேசுகிறார்,” அப்படி என்றால் , இது உங்களுக்கானது அல்ல.

மோசே இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திய காலத்தில், ஒருவர் இருந்தார், அது மோசே. மீதமுள்ளவர்கள் செய்தியை அப்படியே  பின்பற்றினர். பாருங்கள்?

ஆனால் இன்று, அப்படி விசுவாசிக்கும் நமக்கு, நம் இருதயங்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், பொங்கிக்கொண்டும் இருப்பதால், நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது.

அவர் நம்மை மீட்டுவிட்டார் என்று உணர்கிறேன். அவருடைய புஸ்த்தகத்தில் நம் பெயர்கள் இருப்பதாக உணர்கிறேன். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் நாம் மீட்கப்பட்டோம் என்று நான் விசுவாசிக்கிறேன்.

ஏனென்றால் இந்தச் செய்தி தேவனின் குரல் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறது என்று நாம் விசுவாசிப்பதால், தேவனே நம்மிடம் உதட்டோடு காதில் பேசுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவருடைய புஸ்த்தகத்தில் நம் பெயர்கள் உள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நான் இப்படி வைக்கலாமா, இயேசு கிறிஸ்துவின் ஊழியம் இந்த கடைசி நாளில் அவருடைய சபையில் மறுபிறவி எடுத்தது. அதைத்தான் நம்மில் பலர் நம்புகிறோம். நானும் உங்களுடன் விசுவாசிக்கிறேன்.

அதுபோல்தான் நாம் அதை அப்படியே விசுவாசிக்கிறோம், இயேசு கிறிஸ்து மறுபிறவி எடுத்தார், அவரது மணவாட்டிகளிடம் டேப்பில் பேசுகிறார்.

ஒவ்வொரு முறையும் நாம் டேப்பை இயக்கும்போது நமது விசுவாசம் புதிய உச்சத்தை அடைகிறது. இது வேறொரு பிரசங்கியார் பேசுவது அல்ல, இது தேவனே நம்மிடம் பேசுவது. நமக்கு  100% தூய வார்த்தை மட்டுமே வேண்டும்.

உங்களிடம் ஒன்று கேட்கிறேன். வில்லியம் மரியன் பிரன்ஹாம் உங்கள் போதகரா? அவர் தேவனின் ஏழாவது தூதரா? அவர் தேவனிடம் கேட்பதை, தேவன் செய்ததாக நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்த நாளுக்கு அவர் தேவனின் குரல் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறீர்களா? அப்போது ஞாயிறு அன்று சொல்ல முடியாதபடி மீண்டும் ஒருமுறை ஆசீர்வதிக்கப்படப் போகிறீர்கள்.

நீங்கள் ஒலிநாடாக்களைக் கேட்டு, நீங்கள் கேட்பதை விசுவாசித்தால் தவிர, இந்த ஆசீர்வாதத்தைப் பெற வேறு வழியில்லை. தேவன் உங்களிடம் நேரடியாக பேசுகிறார் என்று அவர் சொல்வதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.

நான், உங்கள் போதகராக, உங்கள் சகோதரனாக, எனக்கு என்ன விசுவாசம் இருக்கிறதோ, அதை நான் உங்கள் மீது வைக்கும்படி தேவனிடம் கேட்டேன். நான் கேட்டதை நான் பெறுவேன் என்று விசுவாசிக்கிறேன். இப்போது நீங்கள் அதை என்னுடன் நம்பினால்; அத்தகைய நம்பிக்கையுடன் நான் இந்த மணிநேரத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

நமக்கு, அவர் நம் போதகர். நமது போதகரான தேவனின் தீர்க்கதரிசியை விட அதிகமான அல்லது பெரிய விசுவாசம் கொண்டவர்கள்  உலகில் வேறு யாரும் இல்லை. இப்போது தேவனின் தீர்க்கதரிசி தேவனிடம் அவருடைய பெரிய விசுவாசத்தைத் தரும்படி கேட்டார். நீங்கள் அதை முழு இருதயத்துடன் விசுவாசித்தால், அது இப்போது உங்களுடைய விசுவாசமாகும்….மகிமை, நாம் பெருகிறோம்!!! நம்முடைய விசுவாசம் பலவீனமாக இருந்திருக்கலாம், ஆனால் இனி இல்லை, ஏனென்றால் இப்போது அவருடைய விசுவாசம் நம்மிடம் உள்ளது.

இப்போது, ​​​​தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்கள் துன்பத்தையும், நோயையும் விரட்டி, அதனிடம், “நீ இப்போது போக வேண்டும்” என்று சொல்லுங்கள், ஏனென்றால்  உங்கள் விசுவாசம் உங்களிடம் உள்ளது, மேலும் என்  விசுவாசமும் உங்களுக்கு உள்ளது. இது இயேசு கிருஸ்துவின் வல்லமையுடன் ,எங்கும் நிறைந்தவராக நிரூபித்து, அவர் இங்கே இருக்கிறார் என்பதை நிரூபிக்க, இந்த நேரத்தில் உங்களை நலமாக்குவார்.

நீங்கள் எங்களுடன் வந்து இந்த பெரிய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு நான் என்ன சொல்ல கூடும்? யோசித்துப் பாருங்கள், உங்களுக்கு எது தேவையோ, அதை நீங்கள் கேட்டு, விசுவாசித்தால், நீங்கள் அதைப் பெறலாம்.

ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில்லி நேரத்தில், மணவாட்டிகளுடன் கேளுங்கள். கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் நாம் ஒன்றுகூடி, ஒரே நேரத்தில் கேட்போம், இது கர்த்தர் உரைக்கிறதாவது ,63-1110E அன்று பிரசங்கித்த உங்களிலிருக்கிறவர் என்ற செய்தியைக் கேட்போம்.

ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நேரத்தில் எங்களுடன் உங்களால் கேட்க முடியாவிட்டால், அது பரவாயில்லை, எந்த நேரத்திலும் டேப்களை இயக்கி, மேலும் நீங்கள் கேட்பது தேவனின் குரல் உங்களிடம் பேசுகிறது என்று நீங்கள் விசுவாசியுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்