22-0710 மூன்று வகைகளான விசுவாசிகள்

செய்தி: 63-1124E மூன்று வகைகளான விசுவாசிகள்

BranhamTabernacle.org

 அன்புள்ள விசுவாசிகளே, 

இதை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்,சகலத்தையும் உண்டாக்கி, ஒழுங்குபடுத்திய தேவன், நம்மை மீட்பதற்காக, நம்மிடையே மாம்சமானார். பின்னர் அவர் தனது மகத்தான பிரசன்னத்தால் நம்மை மிகவும் கொளரவப்படுத்தினார், அதனால் அவர் கடைசி நாட்களில் இந்த பாவ பூமியில் இங்கே நின்று, அவருடைய வார்த்தையை நிரூபிப்பார், ஏனென்றால் அவர் அந்த வார்த்தைக்கு கடமைப்பட்டவர். 

பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை நமக்கு உயிர்ப்பித்திருக்கிறார். அது உயிர்பித்துவிட்டது. விசுவாசத்தினால் நாம் அதை காண்கிறோம். அது அப்படி என்று நாம் அறிந்திருக்கிறோம் ஏனென்றால் வார்த்தை அப்படி கூறினது , மேலும் ஆவியானவர் அந்த வார்த்தையை நமக்குத் துரிதப்படுத்துகிறார். தீர்க்கதரி கூறினது போலவே, மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையால் இப்போது நாம் ஒன்றுபடுகிறோம்.

அந்த விசுவாசி அதை விசுவாசிக்கும், (என்ன?) அந்த வார்த்தையை . மதத்தை அல்ல; அந்த வார்த்தையை! ஸ்தாபனம் அல்ல; அந்த வார்த்தையை! வேறு யாரோ சொல்வது அல்ல; வார்த்தை என்ன சொல்கிறதோ அதை! இப்போது, ​​நினைவில் கொள்ளுங்கள், இதுதான் விசுவாசி. விசுவாசி கேள்வி கேட்பதில்லை. விசுவாசி இப்படி கூறவில்லை, “அது எப்படி இருக்கும்? எனக்கு மட்டும் அதை விளக்கினால்!” அதுதான் அவிசுவாசி . ஊஹூம். இது அந்த விசுவாசி, அது எதுவாக இருந்தாலும், “இது வார்த்தையாக இருந்தால், இது வார்த்தை! அது உண்மை.” அதுதான் விசுவாசி. 

ஒவ்வொரு தலைப்பையும், ஒவ்வொரு குறிப்பையும், அதில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அது உண்மையாக இருக்க வேண்டும். நீங்கள் இப்படியாக கூறினால், “நான் அதை நம்பவில்லை. அதில் சிலது தேவனுடையது, சிலது மனிதனுடையது, சில வேட்டைக் கதைகள் உள்ளது. சரி, அப்படி என்றால் நீங்கள் ஒரு அவ்விசுவாசி. விசுவாசி கேள்வி கேட்கவில்லை. விசுவாசி அதை விசுவாசிக்கும், அது எப்படித் தோன்றினாலும் அல்லது வேறு யாரேனும் அதைப் பற்றி என்ன சொன்னாலும், அது எவ்வளவு சாத்தியமற்றது என்று தோன்றினாலும், நாம் அதை விசுவாசிப்போம்!

இங்கே இருக்கும் ஒவ்வொரு நபரும், தற்போது, ​​இந்த டேப்பைக் கேட்கும் ஒவ்வொரு நபரும்; மேலும் சில நாட்களில் நான் இந்த உலகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தாலும், இந்த ஒலிநாடாக்கள் இன்னும் ஜீவிக்கும். அது சரி. பாருங்கள்? நீங்கள் இந்த வகைகளில் ஒன்றில் உள்ளீர்கள். அவற்றில் ஒன்றில் நீங்கள் இருக்க வேண்டும். 

நாம் கடைசி நாட்களில் ஜீவிக்கிறோம், உங்கள் ஜீவியத்தைப் பார்த்து, நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள்பார்க்க வேண்டும். “அக்கினி ஸ்தம்பத்தால் நிரூபிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசியை தேவன் அனுப்பினார் என்று நான் விசுவாசிக்கிறேன்?” என்று நீங்கள் கூறுகிறீர்களா? ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசியுங்கள் என்று கூறின்னார். டேப்பில் உள்ளதைச் சரியாகச் கூறவும், ஒரு வார்த்தையையும் மாற்ற வேண்டாம். அவர் சொன்னதை வைத்து நாம் தீர்மானிக்கப்படுவோம், யாரோ ஒருவர் என்ன சொன்னார், அல்லது யாரோ அவர் என்ன சொல்கிறார் என்று சொல்வதன் மூலம் அல்ல, ஆனால் ஒலிநாடாக்கள் என்ன சொல்கிறது. 

அல்லது, நீங்கள் கோரா மற்றும் தாத்தானுடன் போகபோகிறீர்களா, மேலும் அவர்கள் இப்படியாக கூறினார்கள் “அவர் மட்டும் பரிசுத்தவான் அல்ல” அவர் செய்த இந்தக் காரியங்களைச் செய்ய மற்றவர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் தேவனின் தீர்க்கதரிசி மீது அதிகமாக கவனம் செலுத்துகிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் இப்போது எங்களையும் வழிநடத்துகிறார். இது வேறு காலமாக இருக்கிறது ”.

நீங்கள் இந்த வகைகளில் ஒன்றில் உள்ளீர்கள். உங்கள் தற்போதைய நிலையில், தற்போதைய மனநிலையில், இந்த காணக்கூடிய பார்வையாளர்களில் நீங்களும் இங்கே இருக்கிறீர்கள், மேலும் இந்த டேப்பின் கண்ணுக்கு தெரியாத பார்வையாளர்களில் நீங்களும் இருக்கிறீர்கள், இந்த டேப்பைக் கேட்ட பிறகு உங்கள் தற்போதைய மனநிலை, உங்களுக்கு என்ன என்பதை நிரூபிக்கிறது. நீங்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர்கள். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் வார்த்தையின் மீது விசுவாசம் உள்ளவரா மேலும் அதனுடன் தரித்திருப்பீர்களா அல்லது நீங்கள் வெளிநடப்பு செய்வீர்களா, அல்லது அந்த டேப்பை மூடுவீர்களா . 

கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்பாவதாக, நாம்தான் அந்த உண்மையான விசுவாசிகள், வேறு யாரோ ஒருவரால் வற்புறுத்தப்பட்டவர்கள் அல்ல; வேறு ஏதோவொன்று காரியத்தால் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அந்த வார்த்தையையே வெளிப்படுத்தினார். அந்த வார்த்தையானது தெளிவாகி, நிருபிக்கப்பட்டு மேலும் வெளிப்படுத்தப்பட்டதை நாம் காண்கிறோம்.

சோதனைகள், தூசி நிறைந்த சாலைகள், துன்புறுத்தலின் வெப்பமான சோதனை ஆகியவற்றால் நாம் உட்படுத்தப்படுகிறோம், ஆனால் நம் இருதயங்களின் விசுவாசம் அந்த வார்த்தையின் பொருளைத் தாக்குகிறது. நாம் இப்போது நம்மை வடிவமைத்து செல்ல தயாராக இருக்கிறோம். நாம் தேவனின் பிள்ளைகள், அவருடைய வார்த்தையில் சரியாக உருவாக்கப்பட்டவர்கள். நாம் ஜீவிக்கும் உதாரணங்களாக இருக்கிறோம், தேவனுடைய வார்த்தை நம் மூலம் ஜீவிக்கிறது. சோதனைகள் நம்மை உலுக்கி, நம்மை மிகக் கீழே தள்ளினாலும் , அப்போது நாம் எங்கு நிற்போம் என்று பார்பதர்காக, ஆனாலும் நம்மை அசைக்க முடியாது, நாம் ஒவ்வொரு வார்த்தையிலும் நிற்க்கிறோம். 

நீங்கள் யார் என்று அவர் கூறுவேதைக் கேளுங்கள்.

தேவன் உலகத்தைப் உண்டாக்கினபோது உங்களில் ஒவ்வொரு பகுதியும் இங்கே இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போதே உங்கள் உடலை இங்கே வைத்தார். மேலும் தேவனைத் தவிர வேறு எதுவும் அதை எடுத்துச் செல்ல முடியாது. 

அதை உங்களிடமிருந்து எதுவும் பறிக்க முடியாது. நீங்கள் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் உங்கள் இடத்தை யாரும் பிடிக்க முடியாது. “நான் ஒரு இல்லத்தரசி” என்று நீங்கள் கூறுகிறீர்களா. உங்கள் இடத்தை யாரும் பிடிக்க முடியாது! தேவன், தம்முடைய பெரிய பொருளாதாரத்தில், கிறிஸ்துவின் சரீரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும், அதனால் உங்கள் இடத்தைப் பிடிக்க யாரும் இல்லை. 

மகிமை… அல்லேலூயா… தேவன் சேமித்து வைத்த உணவைக் கேட்பது மகத்தானதாகவும் இன்னும் மகத்தானதாகவும் இருக்கிறது. நாம் யார் என்று தேவன், தாம் தேர்ந்தெடுத்த தூதர் மூலம் பேசுவதை நாம் எவ்வளவு அதிகமாகக் கேட்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நமது விசுவாசம் அதிகமாகிறது. இது தெரிந்ததில் தனி மகிழ்ச்சி:

நாம்தான் “உண்மையான விசுவாசிகள்” 

நாம்தான் “அவர்களில் ஒருவர்” 

நாம்தான் “மணவாட்டி”

கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலிருந்து நாம் கூடிவருவதால், ஜெபர்சன்வில்லி நேரப்படி மதியம் 12:00 மணிக்கு உலகம் முழுவதிலுமிருந்து வரும் மணவாட்டி எங்களுடன் டேப்பை இயக்க செய்து உங்களை செய்தியைக் கேட்க அழைக்க விரும்புகிறேன் : 63-1124E. அன்று பிரசங்கித்த மூன்று வகையான விசுவாசிகள் என்ற செய்தியைக் கேட்போம். இதைத்தான் பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துகிறார். நம்மைப் பொறுத்தவரை இது தேவனின் திட்டம். 

டேப்பை இயக்கவும்: தேவன் உங்கள் இருதயத்தில் எந்த டேப்பை வைத்தாலும்.

டேப்பை இயக்கவும்: நீங்கள் தேர்வு செய்யும் நேரத்தில் கேளுங்கள். 

டேப்பை இயக்கவும்: இதுதான் உங்களுக்கான எனது செய்தி.

 சகோ. ஜோசப் பிரன்ஹாம். 

படிக்க வேண்டிய வேத வசனம்

பரிசுத்த யோவான் 6:60 – 71