admin5 ன் அனைத்து பதிவுகள்

22-0703 கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?

செய்தி: 63-1124M கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?

PDF

BranhamTabernacle.org

22-0626 உங்களிலிருக்கிறவர்

செய்தி: 63-1110E உங்களிலிருக்கிறவர்

BranhamTabernacle.org

அன்புள்ள சிறந்த விசுவாசமுள்ள மணவாட்டியே,

இது தவறான இலக்கணத்துடன் கூடிய எளிய கடிதம் என்று எனக்குத் தெரியும், ஆனால் நம் தீர்க்கதரிசி கூறின ஒவ்வொரு வார்த்தையையும் நாம் விசுவாசிக்கிறோம், அதை ஏற்றுக்கொள்கிறோம் என்பதை உலகம் அறிய விரும்புகிறேன். டேப்பில் அவர் ஏதாவது சொல்வதைக் கேட்டவுடன்,  நாம் அதை விசுவாசிக்கிறோம், நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம், பிறகு தேவன் நம்மிடம் நேரடியாக  பேசுகையில் அதை தனிப்பட்ட முறையில் பெற்றுகொள்கிறோம்.

அது மனிதனாக இருக்க முடியாது, அது தேவனாக இருக்க வேண்டும் என்று தேவனின் வார்த்தையால் பிரசங்கிக்கப்பட்டு, முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இயேசு இருந்தபோது தோன்றிய அதே
அடையாளப் பொருள், இன்று பூமியில் தோன்றியதாக நாம் விசுவாசிக்கிறோம். பரிசுத்த பவுல் அதே இயற்கையுடன் பார்த்த அதே அக்னி ஸ்தம்பம், அதையே செய்து, நம் நாளில் வந்து. அது தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார்:

அவர் தன்னை மேசியாவாக அடையாளப்படுத்திய அதே ஆவிக்குறிய அடையாளம், இன்று அவரை அடையாளப்படுத்தியுள்ளது. அவர் இன்னுமாக மேசியா!

டேப்பை இயக்குவதன் மூலம் ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள்  விசுவாசித்தால் மட்டுமே இந்த பெரிய ஆசீர்வாதங்களைப் பெற முடியும். நீங்கள் அதை நம்பாத ஒருவராக இருந்தால், அறிவுப்பூர்வமாகவோ அல்லது யாரேனும் உங்களுக்குச் சொல்லி முடிவெடுக்க வேண்டும் அல்லது அவர்கள் இப்படி கூறுவார்களென்றால் :  “இது கர்த்தருடைய வார்த்தை, இது வெறும் சகோதரர் பிரான்ஹாம் பேசுகிறார்,” அப்படி என்றால் , இது உங்களுக்கானது அல்ல.

மோசே இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திய காலத்தில், ஒருவர் இருந்தார், அது மோசே. மீதமுள்ளவர்கள் செய்தியை அப்படியே  பின்பற்றினர். பாருங்கள்?

ஆனால் இன்று, அப்படி விசுவாசிக்கும் நமக்கு, நம் இருதயங்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், பொங்கிக்கொண்டும் இருப்பதால், நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது.

அவர் நம்மை மீட்டுவிட்டார் என்று உணர்கிறேன். அவருடைய புஸ்த்தகத்தில் நம் பெயர்கள் இருப்பதாக உணர்கிறேன். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் நாம் மீட்கப்பட்டோம் என்று நான் விசுவாசிக்கிறேன்.

ஏனென்றால் இந்தச் செய்தி தேவனின் குரல் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறது என்று நாம் விசுவாசிப்பதால், தேவனே நம்மிடம் உதட்டோடு காதில் பேசுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவருடைய புஸ்த்தகத்தில் நம் பெயர்கள் உள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நான் இப்படி வைக்கலாமா, இயேசு கிறிஸ்துவின் ஊழியம் இந்த கடைசி நாளில் அவருடைய சபையில் மறுபிறவி எடுத்தது. அதைத்தான் நம்மில் பலர் நம்புகிறோம். நானும் உங்களுடன் விசுவாசிக்கிறேன்.

அதுபோல்தான் நாம் அதை அப்படியே விசுவாசிக்கிறோம், இயேசு கிறிஸ்து மறுபிறவி எடுத்தார், அவரது மணவாட்டிகளிடம் டேப்பில் பேசுகிறார்.

ஒவ்வொரு முறையும் நாம் டேப்பை இயக்கும்போது நமது விசுவாசம் புதிய உச்சத்தை அடைகிறது. இது வேறொரு பிரசங்கியார் பேசுவது அல்ல, இது தேவனே நம்மிடம் பேசுவது. நமக்கு  100% தூய வார்த்தை மட்டுமே வேண்டும்.

உங்களிடம் ஒன்று கேட்கிறேன். வில்லியம் மரியன் பிரன்ஹாம் உங்கள் போதகரா? அவர் தேவனின் ஏழாவது தூதரா? அவர் தேவனிடம் கேட்பதை, தேவன் செய்ததாக நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்த நாளுக்கு அவர் தேவனின் குரல் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறீர்களா? அப்போது ஞாயிறு அன்று சொல்ல முடியாதபடி மீண்டும் ஒருமுறை ஆசீர்வதிக்கப்படப் போகிறீர்கள்.

நீங்கள் ஒலிநாடாக்களைக் கேட்டு, நீங்கள் கேட்பதை விசுவாசித்தால் தவிர, இந்த ஆசீர்வாதத்தைப் பெற வேறு வழியில்லை. தேவன் உங்களிடம் நேரடியாக பேசுகிறார் என்று அவர் சொல்வதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.

நான், உங்கள் போதகராக, உங்கள் சகோதரனாக, எனக்கு என்ன விசுவாசம் இருக்கிறதோ, அதை நான் உங்கள் மீது வைக்கும்படி தேவனிடம் கேட்டேன். நான் கேட்டதை நான் பெறுவேன் என்று விசுவாசிக்கிறேன். இப்போது நீங்கள் அதை என்னுடன் நம்பினால்; அத்தகைய நம்பிக்கையுடன் நான் இந்த மணிநேரத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

நமக்கு, அவர் நம் போதகர். நமது போதகரான தேவனின் தீர்க்கதரிசியை விட அதிகமான அல்லது பெரிய விசுவாசம் கொண்டவர்கள்  உலகில் வேறு யாரும் இல்லை. இப்போது தேவனின் தீர்க்கதரிசி தேவனிடம் அவருடைய பெரிய விசுவாசத்தைத் தரும்படி கேட்டார். நீங்கள் அதை முழு இருதயத்துடன் விசுவாசித்தால், அது இப்போது உங்களுடைய விசுவாசமாகும்….மகிமை, நாம் பெருகிறோம்!!! நம்முடைய விசுவாசம் பலவீனமாக இருந்திருக்கலாம், ஆனால் இனி இல்லை, ஏனென்றால் இப்போது அவருடைய விசுவாசம் நம்மிடம் உள்ளது.

இப்போது, ​​​​தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்கள் துன்பத்தையும், நோயையும் விரட்டி, அதனிடம், “நீ இப்போது போக வேண்டும்” என்று சொல்லுங்கள், ஏனென்றால்  உங்கள் விசுவாசம் உங்களிடம் உள்ளது, மேலும் என்  விசுவாசமும் உங்களுக்கு உள்ளது. இது இயேசு கிருஸ்துவின் வல்லமையுடன் ,எங்கும் நிறைந்தவராக நிரூபித்து, அவர் இங்கே இருக்கிறார் என்பதை நிரூபிக்க, இந்த நேரத்தில் உங்களை நலமாக்குவார்.

நீங்கள் எங்களுடன் வந்து இந்த பெரிய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு நான் என்ன சொல்ல கூடும்? யோசித்துப் பாருங்கள், உங்களுக்கு எது தேவையோ, அதை நீங்கள் கேட்டு, விசுவாசித்தால், நீங்கள் அதைப் பெறலாம்.

ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில்லி நேரத்தில், மணவாட்டிகளுடன் கேளுங்கள். கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் நாம் ஒன்றுகூடி, ஒரே நேரத்தில் கேட்போம், இது கர்த்தர் உரைக்கிறதாவது ,63-1110E அன்று பிரசங்கித்த உங்களிலிருக்கிறவர் என்ற செய்தியைக் கேட்போம்.

ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நேரத்தில் எங்களுடன் உங்களால் கேட்க முடியாவிட்டால், அது பரவாயில்லை, எந்த நேரத்திலும் டேப்களை இயக்கி, மேலும் நீங்கள் கேட்பது தேவனின் குரல் உங்களிடம் பேசுகிறது என்று நீங்கள் விசுவாசியுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

22-0619 இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள்

செய்தி: 63-1110M இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள்

BranhamTabernacle.org

அன்புள்ள தகப்பனே,

உங்களின் விலைமதிப்பற்ற மணவாட்டியை ஊக்குவிக்க, நீங்கள் என்னை சிறிய வழியில் பயன்படுத்திக்கொள்ள  இன்று நான் என்ன எழுத வேண்டும்?

தேவன் நம் நாளில் வந்து மனித மாம்சத்தில் ஜீவித்தார், வில்லியம் மரியன் பிரன்ஹாம் என்ற பெயர் கொண்ட மனிதனில், அதனால் அவர் தனது வார்த்தையை வெளிப்படுத்தவும் நிறைவேற்றவும் முடியும். அதுவே நம் நாளில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு.

அந்தக் குரலைக் கேட்டு, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதும்தான் இன்றைய நாளுக்கான தேவன் அளித்த ஒரே வழி. அவர் தனது பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட பல மனிதர்களை உலகிற்கு அனுப்பினார், ஆனால் அவர் தனது வார்த்தையை வெளிப்படுத்தவும் அவரது மணவாட்டியை வழிநடத்தவும் ஒரே ஒரு மனிதன் மூலம் மட்டுமே அனுப்பி பேசினார்.

அவர் தனது திட்டத்தை அல்லது விஷயங்களைச் செய்யும் முறையை ஒருபோதும் மாற்றுவதில்லை. முதல் முறை எப்படிச் செய்தாரோ, ஒவ்வொரு முறையும் அதையே செய்கிறார். அவர் தனது மக்களை வழிநடத்த, அவரே
அக்னி ஸ்தம்பத்தால் வழி நடத்தினார்.

நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டி, மேலும் பிசாசு எதுவும் செய்யவோ அல்லது சொல்லவோ முடியாது  அதனால் உங்களிடமிருந்து பறிக்க முடியாது, எதுவும் இல்லை! உலகம் தோன்றுவதற்கு முன்பே அவர் உங்களை முன்னறிந்தார். அப்போது அவர் உங்களை அறிந்திருந்தார், அப்போது நீங்கள் அவருடன் இருந்தீர்கள். அவர் உங்கள் பெயரை அறிந்திருந்தார். அவர் உங்களைப் பற்றி அனைத்தையும் அறிந்திருந்தார். உங்கள் ஏற்ற தாழ்வுகளை அவர் அறிந்திருந்தார். அவர் உங்கள் தோல்விகள், உங்கள் தவறுகளை அறிந்திருந்தார், அவர் இன்னும் உங்களை நேசித்தார், ஏனென்றால் நீங்கள் அவருடைய ஒரு பகுதியாக இருந்தீர்கள்.

உங்கள் ஆன்மா அவருடைய வார்த்தையை மட்டுமே உண்ண முடியும். அவருடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவும் உங்களைத் திருப்திப்படுத்த முடியாது. நீங்கள் அவருடைய வார்த்தையைப் படித்து அவரை தியானிக்க விரும்புகிறீர்கள், உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபிக்கிறீர்கள், ஆனால் அவருடைய குரல் உங்களிடம் நேரடியாகப் பேசுவதைக் கேட்கும்போது, ​​அது உங்களை காலத்தின் திரைக்கு அப்பால் உயர்த்துகிறது. நீங்கள் அவருடன் பரலோக சூழலிளில் அமர்ந்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், அவர் உங்களிடம் உதட்டோடு காதுக்கு
பேசும்போது, அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறார், நீங்கள் என் மணவாட்டி என்று
உங்களுக்கு நினைவூட்டுகிறார்,

பிசாசு உங்களைத் தாக்கலாம் மேலும் தாக்கலாம் மேலும் உங்களைத் தாக்கலாம். நீங்கள் சில சமயங்களில் மிகவும் தாழ்ந்தநிலைக்குப்போய், நீங்கள் ஒரு முழுமையான தோல்வியாக உணரலாம்; மற்றவர்களை விட  நீங்கள் மிகவும் தோல்வியுற்றதாக உணரலாம். நீங்கள் மிக மோசமான மோசமானவராக இருந்திருக்கலாம், ஆனால் எங்கோ, உங்கள் ஆன்மாவின் ஆழத்தில், அசைவற்ற சிறிய 
குறள் கூறுவதை நீங்கள் கேட்பீர்கள்: “எதுவும் உன்னை என் வார்த்தையிலிருந்து பிரிக்க முடியாது, நீயே என் வார்த்தை. என் ஆட்டுக்குட்டியின் ஜீவப் புஸ்கத்தகத்தில் நானே உன் பெயரை வைத்தேன்.

இன்று உங்களை ஊக்குவிக்க நான் என்ன சொல்ல முடியும்? தினமும் டேப்களை இயக்குங்கள் , தேவன் உரைக்கிறதாவது கூறுவதை : தேவனின் குரல் பேசுவதின் மூலம் கேளுங்கள்.

இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில்லி நேரப்படி மணவாட்டிகளுடன் ஒன்றுசேர அழைக்கப்படுகிறீர்கள், அந்த சிறிய குரலைக் கேட்க நாம் கூடிவருவோம்:  63-1110M  அன்று பிரசங்கித்த : இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள், என்ற செய்தியைக் கேட்போம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

படிக்க வேண்டிய வேதம்:
ஆதியாகமம் 15:16
பரிசுத்த மத்தேயு 23: 27-34
பரிசுத்த யோவான் 4:23-24 / 6:49 / 14:12
1பேதுரு 3:18-22
2 பேதுரு 2:4-5
யூதா 1:5-6

22-0612 பதறல்கள்

செய்தி: 63-0901E பதறல்கள்

BranhamTabernacle.org

அன்புள்ள தேவனின் இரத்தத்தால் பிணைக்கப்பட்ட, அடையாளத்தால்-பிணைக்கப்பட்ட, உடன்படிக்கை மக்களே.

நினைவில் கொள்ளுங்கள், நாம் ஏவாள் அல்ல, சாத்தானுடன் சமரசம் செய்து கொள்ளும் இந்த சந்தேக நபர்களில் நாமும் ஒன்றல்ல. இந்த வார்த்தையில் நமக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருக்கிறது! ஒலிநாடாக்களில் அவர் எழுதிய மற்றும் பேசிய தேவனின் ஒவ்வொரு வார்த்தையையும் நாம் பிடித்துக்கொடிருக்கிறோம். இது நமக்கு பரிபூரண விசுவாசத்தை அளித்துள்ளது.

நாம் மிகப்பெரிய விசுவாசத்தை கொண்டிருக்க வேண்டும் என்று நாம் பார்த்துக்கொடிருக்கவில்லை. நாம் நல்லவர்களாக இருக்க முயற்சிக்கவில்லை; நாம் ஒருபோதும் நல்லவர்களாக இருக்க மாட்டோம், எப்போதும் நாம் தோல்வியடைவோம். அதைப்போல் ஒரு விசுவாசத்தை வைக்கவேண்டுமென்று அவர் கூறவில்லை, அவர் கூறினார் விசுவாசம்கொள்ளுங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசியுங்கள், அது கர்த்தர் உரைக்கிறதாவது என்றும் அவர் கூறினார். நாம் அதைதான் செய்கிறோம், அது அவருடைய வார்த்தையில் நமக்கு முழுமையான விசுவாசத்தை அளித்துள்ளது.

பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பற்றிப் பிதாவிடம் என்ன அறிக்கை செய்கிறார் என்பதைக் கேட்போம்.

“நான் உங்கள் கட்டளைக்கு கீழ்ப்படிந்தேன். நான் தேடிக்கொண்டிருந்தேன் , உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் சில சிறிய குழுக்களைக் கண்டுபிடித்தேன். நான் சில டேப்  சிறுவர்களை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி சில டேப்களை வாசித்தேன். அவர்கள் டேப்களைக் கேட்டதும், ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்தார்கள். இப்போது அவர்கள் செய்தியைப் பெறுவதற்காக தங்கள் வீட்டை ஒரு சபையாக மாற்றியுள்ளனர். அவை உமது வார்த்தையைக் கேட்கக் கூடிவரும் உமது முன்னறிவிக்கப்பட்ட கழுகுகள்.

அந்த அடையாளத்தில் மற்றும் இந்தமணிநேரச் செய்தியின் கீழ் வரும் அனைத்தும் இரட்சிக்கப்படும் என்று நான் அவர்களிடம் கூறினேன். அவர்கள் உங்களுடனும் உங்கள் வார்த்தையுடனும் ஒன்றாக மாறுவார்கள் என்று நான் அவர்களிடம் கூறினேன். இது அவர்களுக்கு வேலை செய்தால், அப்போது அந்த அடையாளத்தை அவர்களின் குழந்தைகளுக்குப் பயன்படுத்துவார்கள். அவர்களின் அன்புக்குரியவர்களுக்குப் பயன்படுத்துவார்கள், அவர்களை அந்த அடையாளத்தின் கீழ் கொண்டு வாருங்கள், மேலும் அவர்களும்கூட மீட்கப்படுவார்கள்.

டேப்பைகளைக் கேட்டுக் கொண்டிருந்த அவர்களிடம் நான் கூறினேன்: நான் அவர்களை தேவனுக்காகக் உரிமைக்கூறுகிறேன். நான் அதைச் கூறினபோது அவர்கள் அதை முழு இருதயத்தோடும் முழு ஆத்மாவோடும் அதை விசுவாசித்தார்கள்.

அவர்கள் என் மக்கள், நான் விரும்புகிறவர்கள் ஒலிநாடாக்களைக் கேட்கிறார்கள்.

ஏழு முத்திரைகளுக்குப் பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதை கவனிக்கவேண்டும் என்று நான் அவர்களிடம் கூறினேன்: அது மக்களை ஒன்றிணைத்தல், ஒன்றினைக்கப்பட்ட அடையாளங்கள், கடைசி நாட்களில் ஒளிரும் சிவப்பு விளக்கு, இந்த ஒரு விஷயத்தை மூடியது, அந்த அடையாளம்.

ஓ, சபையே, எழும்பி உங்களை உதறிக்கொள்ளுங்கள்! உங்கள் மனசாட்சியைக் கிள்ளுங்கள், உங்களை எழுப்பிக்கொள்ளுங்கள், இந்த மணி நேரத்தில்! நாம் பதறலுடன் இருக்க வேண்டும், அல்லது அழிந்து போக வேண்டும்! கர்த்தரிடமிருந்து ஏதோ ஒன்று வருகிறது! இது கர்த்தர் உரைக்கிறதாவது என்று நான்  அறிவேன். ஏதோ ஒன்று வெளிவருகிறது, மேலும் நாம் அதை அடைய பதறலுடன் இருப்பது நல்லது. இது ஜீவியத்திற்க்கும் இறப்புக்கும் இடையில் உள்ளது. அது நம்மை கடந்து செல்லும், மேலம் நாம் அதை பார்க்க மாட்டோம்.

ஏதோ நடக்கப்போகிறது என்பதை நாம் அறிவோம். தேவனின் வருகை திடீரென, இரகசியமான செல்லுகையாக இருக்கும். நாம் அதற்காக பதறலுடன் இருக்கிறோம். நேரம் நெருங்கிவிட்டது. நம் நாளுக்கான அடையாளத்தை நாம் அறிந்துள்ளோம், அது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஞாயிற்றுக்கிழமை பஸ்காவின் சின்னங்களை நாம் எடுத்துக்கொள்கிறோம், இது அவசரகாலத்தில் எடுக்கப்பட்டது, நாம் உலகம் முழுவதும், அவருடைய வார்த்தையைச் சுற்றி கூடிவருகிறோம். இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு, ஜெபர்சன்வில்லி நேரப்படி, இந்த மாபெரும் நிகழ்வின் ஒரு பகுதியாக வாருங்கள்: 63-0901E  அன்று பிரசங்கித்த”பதறல்கள்” என்ற செய்தியைக் கேளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

படிக்கவேண்டிய வேத வசனங்கள்:

யாத்திராகமம் 12:11

எரேமியா 29:10-14

பரிசுத்த லூக்கா 16:16

பரிசுத்த யோவான் 14:23

கலாத்தியர் 5:6

பரிசுத்த யாக்கோபு 5:16

22-0605 அடையாளம்

செய்தி: 63-0901M அடையாளம்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள கழுகுகளே,

இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில்லி நேரப்படி 63-0901M அன்று பிரங்கித்த ” அடையாளம் ” என்ற செய்தியைக் கேட்போம்.


சகோதரர் ஜோசப் பிரன்ஹாம்

22-0529 பரிபூரண விசுவாசம்

செய்தி: 63-0825E பரிபூரண விசுவாசம்

BranhamTabernacle.org


அன்புள்ள பரிபூரண விசுவாசமுள்ள மணவாட்டியே,

மீண்டும் ஒருமுறை, இந்த செய்தி என்ன என்பதைக் குறித்து என்னால் வார்த்தைகளை பொருத்த முடியவில்லை. இந்தச் செய்தி, தேவனின் தனிப்பட்ட காதல் கடிதங்கள், அவருடைய இரத்தத்தால் எழுதப்பட்ட, அவரது குரலால் பேசப்பட்டது, அதுவே நமக்கு எல்லாமுமாக இருக்கிறது. மற்ற எதுவும் ஒன்றுமில்லாததாக இருக்கிறது. நாம் அவரை நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கிறோம், அது அவருக்கான பரிபூரண அன்பைக் கொடுத்திருக்கிறது. அந்த வார்த்தையிலிருந்து எதுவும் நம்மை அசைக்க முடியாது. அவர் ஒரு நண்பருக்கு நண்பராக நம்முடன் உரையாடுவதைக் கேட்பதைத் தவிர வேறு எந்த திருப்தியும் நம் வாழ்வில் எதுவும் இல்லை.

அது நாம் கூட இல்லை, அது அவர் நமக்குள்  ஜீவிக்கிகிறார், அவரிடம் அழைக்கிறார். இது ஆழமான ஆழத்தின் அழைப்பு. டேப்களை இயக்குவதின் சுத்த மகிழ்ச்சி மற்றும் தேவன் மனிதக் குரலைப் பயன்படுத்துவதைக் கேட்க, நாம் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். உலக அஸ்திபாரத்திற்கு முன்பே அவர் நம்மை நேசித்தார் என்று சொல்வதற்கு; ஏனென்றால், நமக்குள் இருக்கும் எல்லாவற்றிலும் நாம் அவரை நேசிக்கிறோம், அவருக்கும் அவருடைய வார்த்தைக்கும் உண்மையாக இருப்போம் என்பதை அவர் அறிந்திருந்தார்.

நமக்குத் தேவையான அனைத்தையும், அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஒன்றும் தவறிப் போகவில்லை. அவர் தம்முடைய வார்த்தையை கடித வடிவில் எழுதி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்தார், அதனால் அவர் நம்மீது உள்ள அனைத்து அன்பையும் நமக்குச் சொல்ல முடியும்.

அப்போது அவர் நம்மிடம் கூறியது போல் அவருடைய அன்பு இன்னும் அதிகமாகிறது: “நான் மீண்டும் ஒருமுறை மாம்சத்தில் வந்து உங்களிடம் வாய்விட்டுப் பேசுவேன், அதனால் தவறான புரிதல், குழப்பம், விளக்கம் தேவைப்படாது. நான் எனது நேரத்தை எடுத்துக்கொண்டு, என் அன்பை உங்களுக்கு வெளிப்படுத்துவேன், நீங்கள் அதை மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்க முடியும். பிதா என்னில் இருக்கிறார், நான் உங்களில் இருக்கிறேன், நீங்கள் என்னில் இருக்கிறீர்கள், நாம் ஒன்று என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் மாம்சம் என் மாம்சம், உங்கள் எலும்பு என் எலும்பு, உங்கள் ஆவி என் ஆவி.

என் இருதயத்தில் உள்ள அனைத்தையும் மிக தெளிவாகச் சொல்கிறேன். நான் அதை மிகவும் தெளிவாக்குகிறேன், சந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள், நான் எழுதிய மற்றும் பேசிய வார்த்தைகள் உங்களுக்காக, அவை ஒருபோதும் தோல்வியடையாது.

நான் உங்களுக்கு பரிபூரண விசுவாசத்தைத் தருவேன், அது எல்லாச் சூழ்நிலைகளிலும் தலைமைத்துவமாக இருக்கும். எதிரி என்ன சொன்னாலும் பரவாயில்லை, நீங்கள் என் வார்த்தை என்ன சொல்கிறது என்பதில் உங்களுக்கு பரிபூரண விசுவாசம் இருப்பதால் அது அதில் தேர்ச்சி பெறும். எதிரி உங்களுக்கு என்ன சொல்ல முயன்றாலும், நீங்கள் அவர்களை கவனிக்க வேண்டாம். உங்கள் காதுகள் வேறு எதற்கும் செவிடாக உள்ளன, ஆனால் என் ஆவி உங்களுக்கு ஏற்கனவே கூறியது. இது உங்கள் இருதயங்களில் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதிலிருந்து உங்களை நகர்த்த எதுவும் செய்யப் போவதில்லை.

இந்தச் செய்தியை அறிந்துகொள்வதில் நமக்கு இருக்கும் அந்த பரிபூரண விசுவாசமானது, இது கர்த்தர் உரைக்கிறதாவது, நாம் அதே பரிபூரண விசுவாசத்தை, அவர் நமக்குச் கூறின அவரது ஒவ்வொரு வார்த்தையின் வாக்குறுதியும் நம்முடையது. நாம் நோய்வாய்ப்பட்டிருந்து மேலும் நமக்கு சுகமலித்தல் தேவைப்பட்டால், அது நம்முடையது. நமக்கு ஏதேனும் தேவை இருந்தால், நாம் அதைப் பெறலாம், ஏனென்றால் நாம் அவருடைய ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறோம். நாம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை வெளிப்படுத்தும் கடைசி நாளின் அபிஷேகம் செய்யப்பட்ட மேசியாக்கள்.

அவர் தம்மையே நமக்குள் ஊற்றிக் கொண்டிருப்பது, அது ஒரு காதலாக இருக்கிறது. அந்த மகத்தான திருமண விருந்துக்காக நாம் அவருடன் ஒன்றாகி விடுகிறோம். அவருடைய ஆவி இங்கே நம்மோடும் நமக்குள்ளும் இருக்கிறது. நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான், அதை விசுவாசிப்பது, மற்றும் அதை ஏற்றுக்கொள்வது.

நாம் தேவனின் 7வது தூதன் அல்ல, ஆனால் நாம் அவருடைய மகன்கள் மற்றும் மகள்கள். நம் கைகள் அவருடைய கைகள். டேப்பில் பேசப்பட்டது,  கர்த்தர் உரைக்கிறதாவது என்று நாம் விசுவாசிக்கிறோம். அது ஜீவிக்கும் வார்த்தை.

அவருடைய தீர்க்கதரிசி நமது போதகர். பதிவுசெய்யப்பட்ட வார்த்தையை நாம் கேட்கும்போது, ​​தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார் என்று விசுவாசிக்கிறோம் என்று விசுவாசிக்கும் பரிபூரண நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

தேவன் தம் தீர்க்கதரிசியின் மூலம் நம்மிடம் பேசுவதைக் கேட்க நாம் உலகம் முழுவதும் ஒன்றுகூடும்போது, ​​தேவன் தம்முடைய மணவாட்டியை தம்முடைய நியாயப்படுத்தப்பட்ட வார்த்தையைச் சுற்றிக் கொண்டு வருவதால், நம்முடைய விசுவாசம் உயர்வாகவும் உயர்ந்ததாகவும் இருக்கிறது.

நாளை என்பது மற்ற நாள் போல் இருக்காது. அவர் நமக்குக் கொடுத்திருக்கும் நம் பரிபூரண விசுவாசத்தை  நாம் எடுத்துக்கொள்வோம், நமக்குத் தேவையான எல்லாவற்றிலும் அதைப் பயன்படுத்துவோம், மேலும் அக்னி ஸ்தம்பம்  அவர் தேர்ந்தெடுத்த தூதர் மூலம் பேசி நமக்குச் கூறுவதுப்போல் அதைப் பெறுவோம்:

நான் உனக்கு என்ன செய்தேன் தெரியுமா? நீங்கள் என்னை, “உங்கள் போதகர்” என்று அழைத்தீர்கள்; நீங்கள் நன்றாக சொல்கிறீர்கள், ஏனென்றால் நான் அப்படித்தான். நான், உங்கள் போதகர் என்றால், இயேசு கிறிஸ்துவால் அடையாளம் காணப்பட்டதினால், நான் அவருடைய வேலையைச் செய்கிறேன், என் வார்த்தையை விசுவாசியுங்கள். இந்த விசுவாசச் செயலைச் செய்து, உங்கள் மீது கை வைப்பதன் மூலம், உங்களைத் துன்புறுத்தும் நோய் மற்றும் துன்பங்களை நான் கண்டனம் செய்தேன். அதை விசுவாசியுங்கள், அதனால் உங்கள் கோரிக்கையை நீங்கள் பெறுவீர்கள், அது என்னவாக இருந்தாலும், விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் சாத்தியமாகும். நீங்கள் ஜெபிக்கும்போது, ​​நீங்கள் கேட்டதை நீங்கள் பெறுவீர்கள் என்று விசுவாசியுங்கள். நான் அதைப் பெறுகிறேன் என்று நான் உண்மையிலேயே விசுவாசிக்கிறேன், என் இருதயத்தில் உங்கள் ஒவ்வொரு குணப்படுத்துதலையும் ஏற்றுக்கொள்கிறேன், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன், அது முடிந்தது என்று. நான் அதை விசுவாசிக்கிறேன், என்னில் உள்ள அனைத்தையும் கொண்டு நான் அதை விசுவாசிக்கிறேன்.

இந்த நாளுக்காகப் பேசப்பட்டு, பதிவுசெய்யப்பட்ட, நியாயப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்ட,
தேவனின் குரலாக இந்தச் செய்தி உள்ளதென்று நம்மில் உள்ள அனைத்தையும்க்கொண்டு விசுவாசிக்கிறோம். நாம் எதைக் கேட்டாலும் பெறுவோம் என்று விசுவாசிக்கிறோம், ஏனென்றால் அது  கர்த்தர் உரைக்கிறதாவது, அது நம்முடையது.

ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் இனையுங்கள்,  64-0825E அன்று பிரசங்கித்த : பரிபூரண  விசுவாசம், நமக்கு தேவையான அனைத்தையும் எப்படிப் பெறுவது என்று நம்மிடம் தேவனின் தீர்க்கதரிசி கூறுவதைக் கேட்போம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்



படிக்க வேண்டிய வேத வசனங்கள் :

பரிசுத்த மார்க் 11:22-26 / 16:15-18

பரிசுத்த யோவான் 14:12 / 15:7

எபிரெயர் 11:1 / 4:14

யாக்கோபு 5:14

1 யோவான் 3:21

22-0522 நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்?

செய்தி: 63-0825M நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்?

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள ஐக்கியம்கொள்பவர்களே,

நேரமும் நித்தியும் ஒன்றாகக் கலக்கும், அது தேவனும் அவருடைய மக்களும் ஒன்றாக கலக்கும்போது.

நான் தேவனின் மணவாட்டி ஒன்றாக கலக்க அழைக்கிறேன். இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரத்தில் . 63-0825m அன்று பிசங்கித்த: நான் எப்படி ஜெயங்கொள்ள முடியும்? என்ற செய்தியைக் கேட்க அழைக்கிறேன்.

சகோதரன். ஜோசப் பிரன்ஹாம்

ஆராதனைக்கு முன் படிக்க வேண்டிய வேதம் வசனங்கள்.

வெளிப்படுத்துதல் : 3ஆம் அதிகாரம் 21 முதல் 22 வசனம் வரை.

22-0515 இணையும் நேரமும் அடையாளமும்

செய்தி: 63-0818 இணையும் நேரமும் அடையாளமும்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள முதன்மையான மணவாட்டியே,

ஞாயிற்றுக்கிழமை அன்று உலகெங்கிலும் ,பரலோக சூழலில் நாம் ஒன்றாக அமர்ந்திருந்தபோது, ​​தேவனின் ஒரே குரல் நம்மிடம் பேசுவதை நாம் கேட்டுக் கொண்டிருந்தோம். எப்பொழுதும் போல, அவர் என்ன கூறப்போகிறார் என்று நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம். இன்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார்?

அவருடைய வார்த்தைகளை நாம் இதற்கு முன்பு பலமுறை கேட்டிருக்கலாம், ஆனால் அந்த நாள் வித்தியாசமாக இருக்கும் என்று நாம் அறிந்திருக்கிறோம். நாம் இதுவரை கேள்விப்படாத ஒன்றைக் கேட்போம். நாம் கற்பனை செய்வதை விட அதிக வெளிப்பாட்டைப் பெறுவோம். அவர் நம் இருதயங்களையும், மனதையும், ஆன்மாவையும் திறந்து, இப்போது இருக்கும் ஒன்றை, சரியான காலத்தில் வெளிப்படுத்துவார்.

பிறகு அது நடக்கும். மணவாளன் தனது மணவாட்டிகளுக்குச் சொல்லக்கூடிய மற்றும் வெளிப்படுத்தக்கூடிய மிகச் சிறந்த வார்த்தைகள், “நீங்களே தெய்வீக சரீரத்தின் முழுமையான முழுமை, முதன்மையானவர்கள். எனக்குள் இருந்த அனைத்தையும், நான் கிறிஸ்துவுக்குள் ஊற்றினேன்; கிறிஸ்துவில்  இருந்த அனைத்தையும், நான் உங்களுக்குள் ஊற்றினேன். நீங்கள் என் சரியான தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை மணவாட்டி.

நம் முழு உள்ளமும் மகிழ்ச்சியில் துள்ளியது. தகப்பனானவர் நம்மிடம் கூறினார், நாம்தான் அவருடைய மணவாட்டி. நாம்தான் அவர் நேசிக்கிறார். நாம் அவருடைய வார்த்தையால் செறிவூட்டப்பட்டுள்ளோம், அவருடைய வார்த்தை மட்டுமே. நம் கருப்பை வேறு எதற்கும் மூடப்பட்டுள்ளது. அவர் நமக்காக காத்திருந்தார், ஏங்குகிறார்…நமக்காக!!

மேலும் என்னவென்று யூகியுங்கள்? இந்த வார்த்தைகளை நம்மிடம் சொல்ல அவர் வேறு யாரையும் அனுப்பவில்லை, அவர் மீண்டும் ஒருமுறை மனித மாமிசத்தில் வந்து வசித்தார், அதனால் அவர் நேரடியாக, உதட்டோடு காதுகளில் பேச முடியும், மேலும் “நான் உன்னை நேசிக்கிறேன், என் நேச மணவாட்டி.” என்று நம்மிடம் கூறுகிறார்.

நாம் பாடல் பாடுவதை விரும்புகிறோம், ஐக்கியம் கொள்வதை விரும்புகிறோம், விசுவாசிகளுடன் கூடிவருவதை விரும்புகிறோம், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நாம் விரும்புவது தேவனின் குரலைக் கேட்பது; இது தேவன் உரைக்கிறதாவது, நம்மிடம் நேரடியாகப் பேசுவது. ஒவ்வொரு செய்தியும் நமக்குத் தனிப்பட்ட காதல் கடிதம். அவர் நமக்குச் சொல்ல விரும்பும் ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு காந்த நாடாவில் வைத்தார், அதனால் அவற்றை நாமே கேட்க முடியும்.

இந்த ஞாயிற்றுக்கிழமை நாம் கூடும்போது அவர் நமக்கு என்ன சொல்லப் போகிறார்? மேல்ம் இது என்ன காலம்?

ஏசாயா பேசி, “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்” என்று கூறினார், ஆனால் இது நடபதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தது. தாவீது ராஜா, “அவர்கள் என் கைகளையும் கால்களையும் துளைக்கிறார்கள்” என்றார். அவர் தனது கைகள் மற்றும் கால்களைப் போல பேசினார், ஆனால் காலம் இதுவல்ல, இன்னும் 1000 ஆண்டுகள் கடந்து செல்லும்.

தேவன் நம் நாளில் நம் தீர்க்கதரிசி மூலம் பேசினார், இந்த நாள் வரும் வரை பல விஷயங்கள் நடக்க முடியாது என்று கூறினார். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடுகளும் உலகமும் ஒன்றுபடுவதை நாம் காண்கிறோம். கம்யூனிசம் என்பது கடந்த காலத்தின் ஒரு விஷயம் என்றும் அழிந்துவிட்டதாகவும் நாம் நினைத்தோம், ஆனால் இப்போது அது மிகவும் உயிருடன் இருப்பதையும் தேவனின் கைகளில் ஒரு கருவியாக இருப்பதையும் காண்கிறோம், அவர் தீர்க்கதரிசனம் சொல்லி நமக்குச் சொன்னதுபோல.

அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் இனி இல்லை மேலும் அந்தப்பனிப்போர் முடிந்துவிட்டதாக உலகம் நினைத்தது, . ஆனால் இன்று அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் நிஜமாகிவிட்டது. அவர் சொன்னது போலவே எல்லாம் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த காலம் வந்துவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை, அவர் மீண்டும் நம்மிடம் நேரடியாகப் பேசுவார், உதட்டோடு காதுக்கு, நாம் கேட்பதற்காகப் பேசப்பட்டு சேமிக்கப்பட்ட மற்றொரு காதல் கடிதத்தைக் கேட்போம். அவர் நமக்கு என்ன சொல்லி வெளிப்படுத்துவார்? அந்த காலம் என்ன? என்ன நடக்கிறது?

தேவன் தனது மணவாட்டியை ஒன்றுபடுத்துகிறார். அவள் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் ஒன்றாக வருகிறாள். இது ஒன்றுபடுவதற்கான நேரமாக உள்ளது, அது இப்போது உள்ளது. அவள் எதற்காக ஒன்றுபடுகிறாள்? அந்த எடுத்துக்கொள்ளப்படுவதற்காக.

உலகெங்கிலும் தேவனின் குரலை நாம் கேட்கும்போது இந்த செய்தி என்ன செய்கிறது? மணவாட்டியை வார்த்தையுடன் ஐக்கியப்படுத்துகிறது. அந்த வார்த்தை தேவன். மணவாளன் என்பது வார்த்தை. மணவாட்டி அந்த வார்த்தையைக் கேட்கும், நாம் ஒரு ஐக்கியத்தில் ஒன்றாக வருகிறோம். நாம் ஒரு திருமணத்திற்கு தயாராகி வருகிறோம், அங்கு நாம் வார்த்தையுடன் ஒன்றாக மாறுகிறோம்.

பிதாவில் உள்ள அனைத்தும் நானே; மேலும் என்னில் உள்ள அனைத்தும், நீங்களே; மேலும் உங்களில் உள்ள  அனைத்தும், நானே. மேலும், நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.” பாருங்கள்? “அந்த நாளில்.” எந்த நாள்? இந்த நாள்! தேவன் வெளிப்படுத்தப்படுவதைப் பற்றிய பெரிய மறைந்திருக்கும் மர்மங்களை நாம் காண்கிறோம். ஓ, நான் அதை எவ்வாறாக நேசிக்கிறேன்!

இப்போதே அந்த நேரம். இப்போதே அந்த காலம். மணவாட்டி மணவாளனுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டாள். “இதோ, மணவாளன் வருகிறார்!” என்ற நள்ளிரவில் கூக்குரல் இடுவதை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  நாம் சரியாக கடைசி நேரத்தில் இருக்கிறோம்.

ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெஃபர்சன்வில்லே நேரத்தில் நாம் வார்த்தையைச் சுற்றி ஒன்றுபடும்போது, ​​எங்களுடன் ஒன்றுபடுங்கள், தேவனின் குரல் நமக்குச் சொல்வதைக் கேட்போம்: 63-0818 அன்று பிசங்கித்த இணையும் நேரமும் அடையாளமும்
செய்தியைக் கேட்போம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

படிக்க வேண்டிய வேதங்கள்
சங்கீதம் 86: 1-11.
பரிசுத்த மத்தேயு 16 : 1 – 3

22-0508 கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட தேவரகசியமாயிருக்கிறார்

செய்தி: 63-0728 கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட தேவரகசியமாயிருக்கிறார்

PDF

BranhamTabernacle.org

அவரது இருதயத்தின் அன்பான ஆப்பிள்களே,

உலகிலேயே நான் மிகப் பெரிய ஸ்லாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன். கர்த்தரை உங்களுக்கு அறிமுகப்படுத்த என்னை அனுமதிக்கிறார், எனவே உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன் அவர் தேர்ந்தெடுத்த பாத்திரத்தின் மூலம் அவர் உங்களிடம் நேரடியாகப் பேச முடியும், அவருடைய எல்லா வார்த்தைகளையும் உங்களிடம் பேசவும் வெளிப்படுத்தவும் முடியும்.

இது தேவ மனுஷன் மட்டுமல்ல, அது தேவனே, அந்த அக்னி ஸ்தம்பம், அந்த பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் நேரடியாகப் பேசுகிறார், உதட்டிலிருந்து காதுக்கு, அவர் தேர்ந்தெடுத்த தீர்க்கதரிசி, நம்முடைய போதகர் என்று அழைக்க நமக்கு ஸ்லாக்கியமும், பாக்கியமும் உள்ளது.

நாம் கேட்பது ஒரு மனிதனையா, அவருடைய சிந்தனையா, அவருடைய யோசனையா அல்லது வார்த்தையின் விளக்கமா என்று யோசிக்க வேண்டாம். இது தேவன் தாமே நம்மிடம் பேசுகிறார், கர்த்தர் உரைக்கிறதாவது.

மக்கள் இதில் மூச்சுத் திணறுவார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நாம் அதைக் குடிப்போம். ஏனென்றால் அது மட்டுமே நம் தாகத்தைத் தணித்து, நம் ஆன்மாவைத் திருப்திப்படுத்துகிறது. இது நித்திய ஜீவனின் வார்த்தைகள். நமக்கு, இது தேவனின் குரல். இது இந்த மணி நேர செய்தி. எனவே, இது வார்த்தை, அந்த குரல், அந்த ஒலிநாடாக்கள் அல்லது எதுவும் இல்லை!

பழங்கால இஸ்ரேலைப் போல ஒரே தலைமையின் கீழ் நாம் ஒன்றுபட்டுள்ளோம். ஒரு தேவன், அக்னி ஸ்தம்பத்தில் நிரூபிக்கப்பட்டு, அவருடைய தீர்க்கதரிசி மூலம் தன்னை வார்த்தையாக வெளிப்படுத்துகிறார். அதே தேவன், அதே அக்னி ஸ்தம்பம், இன்றும் அதே வழியில். தேவன் தன் இயல்பை மாற்றவே முடியாது. அவரது திட்டம் அவர் தொடங்கியதிலிருந்து ஒருபோதும் மாற முடியாது, ஏனென்றால் அவர் எல்லையற்றவர் மேலும் அவரது திட்டம் மற்றும் அவரது யோசனைகள் அனைத்தும் சரியானவை.

அதனால்தான் அவர் ஞாயிற்றுக்கிழமை நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்பதைக் கேட்க நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். இந்தச் செய்தி முழுக்க முழுக்க உண்மை என்பதை நாம் அறியும் வரை, அதன் நுனிகளிலும், உள்ளேயும் வெளியேயும் சுற்றிலும் அடித்து, வேதத்தின் மூலமும், காலவரிசைப்படியும் கட்டப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
அங்கே எந்த தவறும் இல்லை.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை, பரிசுத்த ஆவியானவர் செய்தியைப் பிடித்து இன்றைய நிலையில் வைக்கப் போகிறார். அவர் அதைத் தொடங்கிய இடத்திலிருந்து, நிகழ்காலம் வரை அதைக் கட்டியெழுப்புவார்.

ஞாயிற்றுக்கிழமை நமது போதகர் மூலம் தேவன் என்ன சொல்லப் போகிறார் என்பதையும் வெளிப்படுத்தப் போகிறார் என்பதை கொஞ்சம் குடிப்போம்:

நீங்கள் என் இருதயத்தின் ஆப்பிள், ஆவியானவராலும் சத்திய வார்த்தையாலும் கர்த்தருக்குப் பிறப்பிக்கப்பட்டவர்கள். உங்களை ஆசீர்வதித்து, கிறிஸ்துவின் அன்பின் பிணைப்புகளால் உங்களை நெருக்கமாகப் பிணைக்குமாறு நான் தேவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

கர்த்தர் உங்களுக்காக உணவைச் சேமித்து வைத்துள்ளார்; நல்ல, ஆரோக்கியமான தோற்றமுடைய காய்கறிகள், மேலும இங்கே இந்தக் கூடாரத்தில். இன்று, நீங்கள் முழுமையாக மேஜையில் சேகரித்ததைப் பெறப் போகிறீர்கள். நாம் ஜீவிக்கும் நேரத்தில் அது இயேசு கிறிஸ்துவை உங்களுக்கு வெளிப்படுத்தும். இந்தச் செய்தி உங்களைத் தாங்கி பலப்படுத்தும். இது உங்களுக்கு முன்னால் இருக்கும் பணிக்கான ஆவிக்குறிய பலத்தைத் தரும்.

நீங்கள் அதைக் கேட்க விரும்புவீர்கள் என்று எனக்குத் தெரியும் என்பதால் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்: நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நபர், அதை அவர்கள் மட்டுமே கேட்பார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டி, நீங்கள் வீழ்ச்சியடையமாட்டீர்கள், ஆனால் உலகின் மற்ற அனைவரும் அதைப் பற்றி என்ன சொன்னாலும் அந்த வார்த்தையைப் பற்றிக் கொள்வீர்கள். நீங்கள்தான் அந்த வார்த்தை மணவாட்டி!

தேவன் உங்களுக்கு இந்த பெரிய மர்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், அதுதான் ஒரு புதிய பிறப்பு. இப்போது அவர் உங்களை ஒன்றிணைக்கிறார், அங்கு வெளிப்பாடு சரியான இணக்கத்துடன் உள்ளது. தேவன் அதை தம் வார்த்தையின் மூலம் வெளிப்படுத்துகிறார், அதே செயல்களால், அதே காரியங்களால், அந்த வார்த்தையை உங்களில் பிரத்தியட்சமாக்கினார்.

நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது, பரிசுத்த ஆவியானவர் மட்டுமே கிறிஸ்துவின் தெய்வீக வெளிப்பாட்டை வெளிப்படுத்துபவர் மேலும் இது எல்லாக்காலங்களிலும் இருக்கிறது. நினைவில் கொள்ளுங்கள், எல்லா காலங்களிலும்! கர்த்தருடைய வார்த்தை யாருக்கு வந்தது? தீர்க்தரிசிக்கு, மட்டுமே.

நான் ஆயிரக்கணக்கானவர்களுடன் டேப்பில் பேசுகிறேன் என்பதை உணர்ந்தேன், உலகம் முழுவதிலும் டேப் ஊழியம் எங்களுக்கு கிடைத்துள்ளது. மற்ற இடங்களை விட பத்து மடங்கு சிறந்த டேப்பை இங்கிருந்து உருவாக்குகிறோம் என்று தெரிகிறது. இந்த டேப்பைக் கேட்கும் ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் இதைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இப்போது அவர்கள் எந்த டேப்பைக் கேட்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம், ஆனால் நீங்கள் இதைத் தவறவிடக்கூடாது என்று நான் விரும்புகிறேன். டேப் மக்களாகிய நீங்கள்; காடுகளிலே மற்றும் எங்கு கேட்டாலும், இப்போது கேளுங்கள்.

நாம் விசுவாசிக்கும் டேப்கள் நம்மிடம் உள்ளன. சபையில் ஒழுக்கத்தைப் பற்றிய டேப், தேவனின் சபையில் நாம் எப்படி நடந்துகொள்வோம் என்பதை பற்றிய டேப், இங்கே எப்படி ஒன்றாக வந்து பரலோகத்தில் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம் என்பது பற்றிய டேப்கள் நம்மிடம் உள்ளன.

டேப்பை பெற்றுள்ள அனைவருக்கும் அது கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் தோல்வியுற்றால், இந்த டேப்பிற்கு மீண்டும் வாருங்கள். இன்னும் எவ்வளவு காலம் உங்களுடன் இருப்பேன் என்று தெரியவில்லை. நினைவில் வையுங்கள், இதுவே கர்த்தர் சொல்லும் உண்மை. அது தான் உண்மை. இது வேதம்.

சரிரத்தின் தலைமைத்துவம் ஒன்றாக மாறிவிட்டது. அது தேவன் உங்களில் பிரத்தியட்ச்சம் ஆனது, அவருடைய மக்களே. அதனால்தான் கணவனும் மனைவியும் இனி இருவராக இல்லாததற்குக் காரணம் அதுதான்; அவர்கள் ஒன்றே. தேவனும் அவருடைய சபையும் ஒன்று, “உங்களில் உள்ள கிறிஸ்து,” தேவனின் பெரிய வெளிப்பாடாகும்.

இது என் யோசனையல்ல; அது அவருடைய வல்லமை, அது அவருடைய வார்த்தை. அவர் உறுதியளித்தார்; அது இங்கே உள்ளது. அது இங்கே இருக்கும், அது இங்கே இருக்கும் என்றார். நீங்கள் தேவனின் மகன்கள். நீங்கள் அப்படியாக இருப்பீர்கள் அல்ல; நீங்கள் இப்போதே அப்படியாக இருக்கிறீர்கள்!

எங்கள் கோப்பைகளை நிரப்புங்கள் ஆண்டவரே, நாங்கள் அதை உயர்த்துவோம் ஆண்டவரே, வந்து எங்கள் ஆன்மாவின் இந்த தாகத்தைத் தணியுங்கள். பரலோகத்தின் அப்பமே , எங்களுக்கு போதும் என்னும்வரை எங்களுக்கு உணவளிக்கவும். எங்கள் கோப்பையை நிரப்பவும், அதை நிரப்பவும், எங்களை முழுமையாக்கவும்.

ஞாயிற்றுக்கிழமை நாம் கூடிவரும்போது, உலகம் முழுவதும் எத்தகைய மறுமலர்ச்சியின் நேரத்தைக் கொண்டிருப்போம்: 63-0728 அன்று பிரசங்கித்த ,”கிறிஸ்து தேவனின் மர்மம்” என்னும் செய்தி மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரத்தில் வெளிப்படுகிறது.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

படிக்க வேண்டிய வேத வசனங்கள்

பரிசுத்த மத்தேயு – 16:15-17

பரிசுத்த லூக்கா – 24வது அதிகாரம்

பரிசுத்த யோவான் – 5:24 / 14:12

1 கொரிந்தியன் – 2வது அதிகாரம்

எபேசியர் – அதிகாரம் 1

கொலோசெயர் – 1 அதிகாரம்

வெளிப்படுத்துதல் – 7:9-10

22-0501 தேவன் மனிதனை முதலில் எச்சரிக்காமல் அவனை நியாயத்தீர்ப்புக்குள் கொண்டு வருகிறதில்லை

செய்தி: 63-0724 தேவன் மனிதனை முதலில் எச்சரிக்காமல் அவனை நியாயத்தீர்ப்புக்குள் கொண்டு வருகிறதில்லை

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள சிறிய சுருள்வில், முக்கிய சுருள்வில் அல்லது நீங்கள் எதுவாக இருந்தாலும்:

நாம் அனைவரும் கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறோம், நமது நிலையில், ஒற்றுமையாக, அவருக்காக நம்மால் இயன்ற மிகச் சிறந்த வேலையைச் செய்ய முயற்சிக்கிறோம். அவருடைய வார்த்தையான இந்தச் செய்தியைத் தவிர வேறு எதுவும் நமக்கு முக்கியமில்லை.

தேவனின் தீர்க்கதரிசி நம்மிடம் சொல்வதைக் கேட்க நாம் விரும்புகிறோம்: அது “உங்களில் சில மனிதர்களைப் பற்றி, ஏதோ இருக்கிறது. நீங்கள் என் ஜீவியத்தில் ஒரு சிறப்புமிக்க மனிதர்களாக இருக்கிறீர்கள். நான் விரும்பும் இன்னொன்று இருக்கிறது.
அது நான் உங்களைச் சந்திக்கவும் உங்களுடன் பேசவும் விரும்புகிறேன்.”

“நான் என்னுடைய சொந்த சிறிய தாழ்மையான ஊழியத்தைச் சுற்றிப் பார்க்கிறேன்; இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றும் மாற்தவராக இருக்கிறார், அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நான் காண்கிறேன்; மணவாட்டியின் குழுவை ஒன்றாக அழைத்து மற்றும் ஒன்றிணைக்கிறது. இது சக்கரத்தில் இருந்து ஒரு சக்கரத்தை  எடுப்பதை போன்றது.”

அது ஒரு மனிதன் அல்ல என்பது நமக்குத் தெரியும், அது அவருடைய மணமவாட்டியை ஒன்று சேர்க்கும் தேவனின் வார்த்தை என்பதை நாம் அறிவோம். நாம் செய்யும் காரியங்கள் தேவனைவிட குறைவானவை அல்ல. இனி அப்படி இருந்திருக்கலாம், அது அப்படி இருக்கலாம், அது போல் காணப்படலாம், என்று இல்லை அது தேவன்!!

இது எங்களுக்கு மிகவும் விலையுயர்ந்த முத்து என்று நாம் கூறும் அந்த இடத்திற்கு வந்துள்ளோம். எவரொருவர் நமக்கு எதிராகச் சொன்னாலும் அதிலிருந்து நாம் விலகிவிட்டோம். மனிதன் எதைச் சாதித்திருக்கிறான் அல்லது என்ன சொல்கிறான்  என்று நாம் பார்க்கவில்லை, தேவன் என்ன சொன்னார், நம் நாளில் அவர் என்ன செய்வார் என்று அவர் வாக்குறுதி அளித்தார் என்று பார்க்கிறோம், அதை அவர் செய்வதைப் பார்க்கிறோம்.

இதுதான் நம்முடைய இருதியானது. நாம் இருக்கும் அனைத்தும், நாம் இருந்த அனைத்தும், நாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அனைத்தும் இந்த செய்தியில் வைக்கப்பட்டுள்ளது. இது நமக்கு ஜீவியத்தை விட மேலானது.

உலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தீர்ப்புக்குத் தயாராகுங்கள் என்று தேவன் எச்சரிக்கை கொடுப்பதைக் காண்கிறோம்,   அணுகுண்டுகள் தொங்கப்பட்டு, அனைத்தும் தயாராக உள்ளன.
இந்த முறை, இது நோவாவின் நாட்களிலோ அல்லது ஆபிரகாமின் நாட்களிலோ இருந்தது போன்ற ஒரு சிறிய குழுவினருக்கு மட்டுமல்ல; தேவன் உலக மக்களை எச்சரிக்கிறார், அவருடைய தீர்க்கதரிசி மூலம் பேசுகிறார்,
இது உங்கள் கடைசி எச்சரிக்கை.

அவர் நம்மிடம் கூறுகிறார், “இதை நான் அனுமதிக்கும் முன், நான் சோதோமுக்கு செய்ததைப் போலவே, அதிலிருந்து வெளியே வா என்று கடைசியாக அழைக்கிறேன். தயாராய் இரு. அங்கே ஏதோ நடக்கப் போகிறது”.


உலகம் அவர்களின் மாபெரும் அறிவியல் சாதனைகளைச் சார்ந்துள்ளது; கலப்பினங்கள் தலைமுறைகளுக்கு மரணத்தை கொண்டு வந்தது . புத்திசாலி மற்றும் படித்தவர்கள் அறிவார்ந்த பக்கங்களில் செல்கிறார்கள்: ஐக்கிய நாடுகள், NATO, உலக நாடுகள் சங்கம். ஒவ்வொரு நாளும் நியாயத்தீர்ப்பு நெருங்கி வருவதைக் காண்கிறோம். ரஷ்யா, போர், எண்ணெய் , வாட்டிகன், யூதர்கள், அணு குண்டுகள் என தீர்க்கதரிசி வெகு தொலைவில் பார்த்து, நமக்குச் சொன்னது நடக்கும்.

இனி என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்க வேண்டியதில்லை. இது ஒவ்வொரு நாளும் நடந்துக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், உலகில் பயம் என்பது ஒரு நிஜம் மற்றும் ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகிறது.



ஆனால் அவர் எசேக்கியாவின் நாட்களில் செய்ததைப் போலவே, தேவன் தம் தீர்க்கதரிசி மூலம் பேசி மக்களை எச்சரித்தார், “தயாராயிருங்கள், ஏனென்றால் தீர்ப்புகள் வீழ்ச்சியடையப்போகிறது”. அவருடைய தீர்க்கதரிசி வரவிருக்கும் காலத்திற்கு மக்களை தயார்படுத்தினார்.



நோவா தனது காலத்திற்கு மக்களை தயார்படுத்தினார். இது நியாயத்தீர்ப்புக்கு முன் கருணையின் அழைப்பு. தேவனுக்கு ஒரு அளிக்கப்பட்டவழி இருந்தது, அவர்களை வழிநடத்த ஒரு தீர்க்கதரிசி.

நோவாவின் காலத்தில் செய்ததைப் போலவே, அவர் எப்போதும் தனது தீர்க்கதரிசி மூலம் தனது வார்த்தையை அனுப்புகிறார். நோவாவின் நாட்களிலும் அவர் அதையே செய்தார். ஏலியின் நாட்களில்-… மோசேயின் நாட்களில், அவர் அதையே செய்ததைக் காண்கிறோம். அவர் தம்முடைய தீர்க்கதரிசியை அவர்களுக்கு அனுப்பினார், அவர்கள் அவிசுவாசத்திலிருந்து தங்களைப் பிரித்துக் கொண்டார்கள். இப்போது, ​​அந்த வகையானது வெளிவருகிறது. அந்த வகையானதுதான் அதை நம்பியது.

எல்லா அவிசுவாசத்திலிருந்தும் நம்மைப் பிரித்துவிட்டோம். தேவன் இன்று தம் மணவாட்டிகளுக்கு ஒரு வழியை அளித்துள்ளார். அவர் தம் வார்த்தையில் நமக்கு உறுதியளித்தார், “தீர்ப்புக்கு முன், நான் என் சிறிய தாழ்மையான மந்தையைக் கூட்டிச் செல்ல உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவேன், நான் அவர்களை ஒரு பக்கத்தில் உட்கார வைப்பேன், அவர்கள் சமாதானமாக இருப்பார்கள், நிலுவையில் உள்ள தீர்ப்புக்காகவும் தப்பிக்கவும் காத்திருக்கிறார்கள். ”.

நாம்தான் அந்த சிறு மந்தை. நம்மைதான் தகப்பனானவர் அன்பு செலுத்தினார் மேலும் அவரது விரைவில் வரவிருக்கும் வருகைக்காக நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். நம்மைச் சுற்றி உலகம் சிதைந்து கொண்டிருக்கிறது, ஆனால் நாம் ஓய்வாகவும் அமைதியாகவும் இருக்கிறோம்.

நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். உலகில் நாம் எங்கிருந்தாலும், அவருடைய வார்த்தையைச் சுற்றி, அவருடைய குரலைச் சுற்றி நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கு தேவன் ஒரு வழியைக் கொடுத்துள்ளார். இது தேவன் கொடுத்த வழி.

மேலும் இந்த தீர்க்கதரிசி அவர்களை தேவன் கொடுத்த வழிக்கு வழிநடத்தினார். இப்போது, ​​அது தேவனின் காரியங்களைச் செய்யும் வழி. பாருங்கள்?

எங்களுடன் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள், மேலும் : 63-0724  அன்று பிரசங்கித்த செய்தி, தேவன் மனிதனை முதலில் எச்சரிக்காமல் அவனை நியாத்தீர்ப்புக்குள் கொண்டு வருகிறதில்லை, இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில்லி நேரத்தில் கேட்க எங்களுடன் இனையுங்கள். இது தேவனின் குரல் பேசி மேலும் : இது இன்று நான் வழங்கிய வழி, என்று நமக்குச் கூறுகிறது.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்


படிக்கவேன்டிய  வேத வசனங்கள்:

ஏசாயா – 38:1-5


1.அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

2. அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:

3. ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.

4. அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:

5. நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.




ஆமோஸ்

1 அதிகாரம்

1. தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்.

2. கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பரின் தாபரங்கள் துக்கங்கொண்டாடும்; கர்மேலின் கொடுமுடியும் காய்ந்துபோகும்.

3. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் போரடித்தார்களே.

4. ஆசகேலின் வீட்டிலே தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும்.

5. நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனைப் பெத்ஏதேனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்; அப்பொழுது சீரியாவின் ஜனங்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

6. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே.

7. காத்சாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரமனைகளைப் பட்சிக்கும்.

8. நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகிறவனை அஸ்கலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

9. மேலும்: தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சகோதரரின் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்களை முழுதும் ஏதோமியர் கையில் ஒப்புவித்தார்களே.

10. தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

11. மேலும்: ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் தன் சகோதரனைப் பட்டயத்தோடே தொடர்ந்து, தன் மனதை இரக்கமற்றதாக்கி, தன் கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்தியகாலமாக வைத்திருக்கிறானே.

12. தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

13. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே.

14. ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புசலாகவும் அதின் அரமனைகளைப் பட்சிக்கும்.

15. அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.