22-1106 வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை

செய்தி: 65-0217 வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை

BranhamTabernacle.org

அன்புள்ள கற்புள்ள வார்த்தை மணவாட்டியே, 

நாம் இங்கே இருக்கிறோம். நாம் வந்துவிட்டோம். நேரம் நெருங்கிவிட்டது. விதையிலிருந்து பதறானது பிரிந்தது. நாம் குமாரனின் பிரசன்னத்தில் இளைபாருகிறோம், கனிந்து வருகிறோம். நம்முடைய சிறிய குழு கிறிஸ்துவுக்குப் பக்குவப்படும் வரை, அவருடைய மேஜையில் அப்பமாக மாறும் வரை நாம் அந்த பிரசன்னத்தில் இருப்போம். தேவனுக்கு நன்றி! 

இந்தச் செய்தி மல்கியா 4ய் நியாயப்படுத்தியது, லூக்கா 17:30 நியாயப்படுத்தியது, எபிரேயர் 13:8 நியாயப்படுத்தியது, பரிசுத்த யோவான் 14:12 நியாயப்படுத்தியது , வெளிப்படுத்துதல் 10வது அதிகாரத்தை நியாயப்படுத்தியது, மேலும் அந்த ஏழு முத்திரையை திறந்தது, தேவனின் மர்மங்கள், சர்பத்தின் வித்து, திருமணம் மற்றும் விவாகரத்து மேலும் இந்த எல்லா மர்மங்களும் இத்தனை ஆண்டுகளாக அக்னி ஸ்தம்பத்திற்க்கு அடியில் மறைக்கப்பட்டிருந்தது.

 நாம்தான் வார்த்தைக்கு கற்புள்ளவர்களாக இருக்கிறோம். நாம் வேறு எதையும் தொடவும் முடியாது, தொடவும் மாட்டோம். நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியும் தூய்மையும் புதியதாகவும் இருக்கும்; இது பரலோகத்திலிருந்து விழுந்த புதிய மன்னா.

ஆனால் கடைசிக் காலத்தில் இரண்டு ஆவிகள் மிக நெருக்கமாக இருக்கும், அது முடிந்தால் தெறிந்துக்கொள்ளப்பட்டவர்களையே வஞ்சிக்கும் என்று அவர் நம்மை எச்சரித்தார். எனவே, அந்த ஆவி மணவாட்டியாகத் தோன்றுவதால் நாம் அதைத் தேட வேண்டும்.

கவனியுங்கள், அது எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்று பாருங்கள். மத்தேயு கூறினார், பரிசுத்த மத்தேயு 24:24, “கடைசி நாட்களில் இரண்டு ஆவிகள்,” சபை மக்களின் சபை ஆவி மற்றும் மணவாட்டியின் மணவாட்டி ஆவி, “அது மிகவும் நெருக்கமாக இருக்கும். அது முடிந்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்.” அந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது. 

சபை மக்களின் ஆவியும் மணவாட்டியின் ஆவியும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருக்கும் என்று அவர் கூறினார். அதாவது, சபை மக்களின் ஆவி அந்த நேரத்தில் இருக்கும் செய்தியை அவர்கள் விசுவாசிக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்.

அது மெதடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பைடிரியன் அல்லது பெந்தேகோஸ்தே ஆக இருக்காது; அவர்கள் வார்த்தையிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள் மேலும் செய்தியை நிராகரிக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் மணவாட்டிகளுக்கு நெருக்கமான ஆவி இல்லை. 

சாத்தான் மிகவும் ஏமாற்ற முயற்சித்திருக்கிறான், வெற்றியும் பெற்றிருக்கிறான். ஆரம்பத்திலிருந்தே கூட, “நிச்சயமாக” என்று அவன் எளிமையாகச் சொன்னான், இதனால் ஏவாளுக்கு தனது பகுத்தறிவைப் பயன்படுத்தும்படி கூறினான், மேலும் அவள் வார்த்தைக்கு மட்டும் செவிசாய்க்கக்கூடாது. அவளுக்கு கட்டளையிடப்பட்ட ஒரே ஒரு விஷயம் இருக்கிறது: வார்த்தையுடன் இரு.

உண்மையானது:

உங்களிடம் ஒரு கேள்வி இருந்தால், அதற்கு ஒரு பதில் இருக்க வேண்டும். அதைத்தான் தீர்க்கதரிசி நமக்குச் சொன்னார். வார்த்தையிலிருந்து பதில் வர வேண்டும். வார்த்தை ஒரு தீர்க்கதரிசிக்கு மட்டுமே வருகிறது. தீர்க்கதரிசி மட்டுமே வார்த்தையின் மொழிபெயர்ப்பாளர். எந்த ஆணோ பெண்ணோ உங்களிடம் பதில் சொன்னால், அது தீர்க்கதரிசி ஏற்கனவே கூறியதாக இருக்க வேண்டும். அது அவர்களின் விளக்கமாகவோ, யோசனையாகவோ, புரிதலாகவோ இருக்க முடியாது. தேவனின் நியாயப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியின் வார்த்தையுடன் அவர்கள் அதை ஆதரிக்க வேண்டும். இது தீர்க்கதரிசியின் வார்த்தையோடு கூட்டுவது அல்ல, அது வெறுமனே, தீர்க்கதரிசி என்ன கூறினாரோ அது தான். 

இப்போது அதில் இரண்டு சிந்திக்கும் பள்ளிகள் உள்ளன.

1.நீங்கள் கேட்க வேண்டியது மிக முக்கியமான செய்திகள் என்பதால், டேப்பில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.

 2: டேப்பில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டியதில்லை, மேலும் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்திகளை இப்போது ஊழியம் கொண்டுள்ளது. 

இரண்டாவது சிந்தனைக்கு பல, பல மாறுபாடுகள் உள்ளன:  பரிசுத்த ஆவியானவர் என்னையும் அல்லது எனது போதகரையும் நமக்குச் சொல்வதற்கு வழிநடத்துவார். சகோதரர் பிரன்ஹாம் டேப்பில் சொன்னதை விட அதிகம் தேவை. வார்த்தையை விளக்க அல்லது உடைக்க உங்களுக்கு ஊழியம் இருக்க வேண்டும். ஊழியம் இல்லாமல் நீங்கள் மணவாட்டிளாக இருக்க முடியாது. 

இன்னும் பல முரண்பாடுகள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையும் பட்டியலிட முடியாது. ஆனால் முதலாவதிற்கு எந்த மாறுபாடுகளும் முரண்பாடுகளும் இல்லை. 

இது வெறுமனே, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசியுங்கள். 

இந்த கடைசி நேரச் செய்தியை விசுவாசிப்பவர்களாக, நீங்கள் இந்த பின்வரும் கேள்விகளைக் கேட்க வேண்டும்:

1.ஒலிநாடாக்களில் தீர்க்கதரிசி கூறியது உங்கள் முற்றிலுமானது என்று நீங்கள் நம்புகிறீர்களா அல்லது அது உங்கள் அல்லது உங்கள் போதகர் மூலமாக பரிசுத்த ஆவியானவர் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

2: ஐந்து கட்ட ஊழியத்தில் மணவாட்டி கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்திகள் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா அல்லது டேப்பில் உள்ள செய்தியா? 

உங்கள் மேய்பர், போதகர், ஆசாரியர் , சுவிசேஷகர் அல்லது தீர்க்கதரிசி உங்களை டேப்களைக் கேட்பதே நீங்கள் கேட்க மிக முக்கியமான செய்திகள் என்று உங்களுக்குச் சொல்லவில்லை என்றால், அவர்கள் பொய்யானவர், மேலும் தீர்க்கதரிசி எச்சரித்த அந்த ஆவியானது வந்துவிடும். 

நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான செய்திகள் அவை என்று அவர் சொல்லி, அவருடைய சபையில் டேப்களை இயக்க மறுத்தால், ஏதோ தவறு இருக்கிறது. டேப்களைக் கேட்பது நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம் என்று அவர் உண்மையிலேயே நம்பினால், அவர் முதலில் டேப்களை இயக்குவார், பின்னர் அவருக்கு உணர்த்தப்பட்டால் பிரசங்கம் செய்வார். 

எளிய உதாரணம்:

சுத்தமான தண்ணீரைக் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான ஒன்று என்று நான் சொல்வேன் என்றால் ஒரே மேலும் ஒரு சான்றளிக்கப்பட்ட மற்றும் நிரூபிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் மட்டுமே உள்ளது… ஆனால் நீங்கள் என் வீட்டிற்கு இரவு உணவிற்கு வரும்போது, ​​அந்த சான்றிதழை பெற்றத் தண்ணீரை நான் உங்களுக்கு வழங்கவில்லை என்றால். நான் உங்களுக்குச் கூறுகிறேன், “அந்தத் தண்ணீரை உங்கள் வீட்டிலிருந்தே நீங்கள் குடிக்கலாம், ஆனால் என் வீட்டில் நான் உங்களுக்குக் கொடுப்பதை நீங்கள் குடிக்க வேண்டும்.” 

அந்தத் தண்ணீர்தான் உங்கள் ஆரோக்கியத்திற்காக நான் கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த விஷயம், அது உங்களுக்கு வாழ்வைத் தரும் என்றால், நீங்கள் என் வீட்டிற்குள் நுழையும் போது நான் உங்களுக்கு முதலில் கொடுக்கப் போவது சுத்தமான குடிநீரைத்தான். 

 “உங்கள் சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குங்கள், இது உங்கள் மக்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம். இது கர்த்தர் உரைக்கிறதாவது.” என்று நான் சொல்வது தவறா அல்லது, ” சபையில் டேப்களை இயக்குவது தவறு, எங்கள் சபையில் டேப்களை இயக்க சகோதரர் பிரன்ஹாம் ஒருபோதும் சொல்லவில்லை. மக்கள் தங்கள் வீடுகளில், தங்கள் கார்களில், எல்லா நேரத்திலும் டேப்களை இயக்கலாம் என்று நாங்கள் கூறுகிறோம், ஆனால் சபையில் அவர்கள் நான் கூறுவதைக் கேட்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது தவறா.

எந்த ஆவி உங்களை வழிநடத்துகிறது? “ஒலி நாடாக்களில் கூறப்படுவது எனது முற்றலுமானது மற்றும் நான் கேட்கக்கூடிய மிக முக்கியமான விஷயம்” என்று நீங்கள் கூறுகிறீர்களா? அல்லது, “ஒலிநாடாக்கள் போதாது. இது என்னுடைய முழுமையானது அல்ல, கேட்பதற்கு மிக முக்கியமான விஷயம் அல்ல, அந்த ஊழியமே என்பீர்களா”? 

இப்போது இது வித்து நேரம், அல்லது மணவாட்டி நேரம்.அந்த பதறானது மறித்துவிட்டது. அந்த பதறானது காய்ந்துவிட்டது. கற்புள்ள வார்த்தை நேரம், தொடப்படவில்லை. இது ஒரு கன்னி, நினைவில் கொள்ளுங்கள், ஒரு கன்னிகை வார்த்தை நேரம்.

இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி பரலோகத்திலிருந்து விழுந்த புதிய மன்னாவைக் கேளுங்கள்:  65-0218 அன்று பிரசங்கித்த ” வித்து பதருடன் சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்ற செய்தியைக் கேளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்