வகை காப்புகள்: Uncategorized

21-0725

ஜூலை 24 2021, கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன , பிரன்ஹாம் கூடாரம் மற்றும் ஜோசப் பிரன்ஹாமின் கடிதம்

துரிதமாக்கப்பட்ட அன்பர்களே,
தனது மணவாட்டிக்கு அவர் அருளிய ஆவிக்குரிய மன்னாவை உண்டுகளிக்க ஒவ்வொரு வாரமும் ஒன்றாக கூடிவர நாம் எப்படி ஆவல்கொள்கிறோம். அது நமது வழிப்பயணத்திதற்கு தேவையான பெலனை நமக்கு கொடுக்கிறது. அது தமது வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு சபையை ஆயத்தப்படுத்த மேசியா வெளிப்படுத்திய அவரது சொந்த வாழ்க்கையாகும்.
அக்னி ஸ்தம்பம் நம்மை அழைத்து அவரது வல்லமைபொருந்திய தீர்க்கதரிசியான வில்லியம் மறியன் பிரான்ஹம் அவர்களது அபிஷேகத்தின் கீழ் நம்மை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்திச்செல்கிறது.
சகோதரர் பிரான்ஹம் அவர்கள் அக்கினி ஸ்தம்பமல்ல. ஆனால் அவர் அந்த அக்கினி ஸ்தம்பத்தின் கீழ்ப்பட்ட அபிஷேகிக்கப்பட்ட தலைவராவார். அந்த அக்கினி ஸ்தம்பம் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் அவரது வார்த்தையை உறுதிப்படுத்த மட்டுமே செய்கிறது. நம் மத்தியில் வெளிப்பட்டது அவரது மகாபெரிய பரிசுத்த ஆவியாகும், மேலும் இதற்கு முன்னர் வந்த மற்றனைத்து தீர்க்கதரிசிகளை காட்டிலும் இது பல்லாயிரம் மடங்கு அதிகமாகும்.
மனுஷ குமாரன் தீர்க்கதரிசன வார்த்தையாக தமது சபைக்குள் மீண்டும் திரும்பி வருவதை, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக தீர்க்கதரிசனங்களில் வெளிப்படுவதை உங்களால் பார்க்க இயலவில்லையா? இதுவரை இப்படியொரு சம்பவம் எந்தவொரு காலத்திலும் நிகழ்ந்ததில்லையே.
நமது ஆவிக்குரிய சிந்தை இவற்றை பற்றிக்கொண்டது. இவற்றை கண்டு நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம். இந்த செய்தி, இந்த ஒலிநாடாக்கள் யாவும் அந்த விதை விதைக்கப்பட்ட இடத்தில் அந்த சிந்தையை பற்றிக்கொள்ள தேவன் அருளிய வழியாகும். அந்த குரலை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம், மேலும் அந்த ஒளி நம்மை அடிக்க, நாம் உயிர் பெற்றுள்ளோம்.
இது நம்மை இப்போதே உன்னதங்களில் அமரச்செய்கிறது. நாம் அமரப்போகிறதில்லை, நாம் அமர்ந்திருக்கிறோம். நாம் முன்னரே உயிர்த்தெழுந்துவிட்டோம், இயக்கவியலும், இயந்திரவியலும் தமது வேலையை முடிக்க சென்றுள்ளது. இது தேவனுடைய ஆவி தங்கும் அவரது பிரசன்னத்திலே நம்மை துரிதமாக்கியுள்ளது. நீங்கள் என்னவாக இருக்கப்போகிறீர்கள் என்பதல்ல, மாறாக நீங்கள் முன்னரே அவ்வண்ணம் இருக்கிறீர்கள் என்பது தான் உண்மை! அதிலிருந்து நம்மை திருட முயற்சிப்பது சாத்தானின் வேலையாகும்.
கே: நீங்கள் உயிர் பெற்றுவிட்டீர்களா?
ப: ஆம்
கே: கிறிஸ்து உங்கள் வாழ்வில் மெய்யாகவே இருக்கிறாரா?
ப: ஆம்
கே: தேவனின் வல்லமை வெளிப்பட்டதா?
ப: ஆம்
கே: தேவன் அருளிய சபைக்குள் தான் நீங்கள் இருக்கிறீர்களா?
ப: ஆம்
கே: நீங்கள் இதில் எப்படி வந்தீர்கள், இதில் நீங்கள் துரிமாக்கப்பட்டீர்கள் என்பதை எப்படி தெரிந்துக்கொண்டீர்கள்?
ப: நமது முழு சிந்தையும், நமது முழு ஆத்மாவும் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. தம்மை உயிருள்ளவராகவும் நம் மத்தியில் தங்கி இருக்கிறவராகவும் நிரூபித்து கிறிஸ்து தாமே நம் மத்தியில் வாசமாய் இருக்கிறார்.
நாம் அவரது மாம்சத்தின் மாம்சமாகவும், எலும்பின் எலும்பாகவும், சரீரத்தின் சரீரமாகவும், நாமத்தின் நாமமாகவும் (பெயரின் பெயராகவும்), அவரது மணவாட்டியாகவும் இருக்கிறோம். நாம் அவருக்குள் இருக்கிறோம். நாம் அவரது மாம்சமும் எலும்பும் ஆவோம்.
நாம் மரிப்பதில்லை, நாம் துரிதமாக்கப்பட்டுள்ளோம். துரிதமாக்கும் வல்லமை நம்மை பாவ வாழ்க்கையிலிருந்து உயிர்பித்து நமது ஆத்துமாவை மாற்றி கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை உயிருள்ளவர்களாக நிலைநிறுத்தியுள்ளது, மேலும் உயிர்த்தெழுதல் அதில் நம்மை தேறினவர்களாகவும் மாற்றும்.
நாம் கிறிஸ்துவுக்குள் பிறப்பிக்கப்பட்டு, மறுரூபமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் நாம் துரிதமாக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு வார்த்தையும் நாம் “ஆமென்” கொண்டு நிறைவு செய்கிறொம்.
நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே சிந்தையுள்ளவர்களாக ஒரே மனதுடன் ஒன்று கூடும் போது நாம் கேட்டுக்கொள்வது எதுவோ அதை நாம் விசுவாசித்து அதில் நம்பிக்கைகொள்ளும் போது அதை அவர் நமக்கு தந்தருளுவார்.
நாம் அவரது பிள்ளைகளாகவும் (குமாரர்கள் குமாரத்திகளாகவும்) மணவாட்டி சபையாகவும் இருப்பதினால் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும், நமது சபைகளிலும், அல்லது நாம் ஒன்று கூடும் எல்லா இடங்களிலும் அவர் இருப்பார் என்பதை நாம் உணருவோமாக/விசுவாசிப்போமாக.
அவர் இங்கே இருக்கிறார் என எனக்கு தெரியும். அவர் இங்கே இருக்கிறார் என்பதை நான் நிச்சயம் நம்புகிறேன். இங்கே அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரையும் குணமாக்கும் அளவிற்கு சபைக்குள் துரிதமாக்கும் வல்லமை இருக்கிறது என்பதும் எனக்கு தெரியும்.
இந்த செய்தியை நீங்கள் நம்புகிறீர்களா? இன்றைக்கான தேவனுடைய வழி இதுவென நீங்கள் நம்புகிறீர்களா? மனுஷ குமாரன் தம்மைத்தாமே மாம்சத்தில் வெளிப்படுத்துகிறார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் நம்புகிறீர்களா?
உங்களுக்கு சரீர சுகமோ, ஆவியில் சுகமோ தேவையா, அல்லது உங்கள் தேவை எதுவாக இருந்தாலும் சரி, நான் சவாலாக சொல்கிறேன் நமது நாளுக்கான அபிஷேகிக்கப்பட்ட, உறுதிபடுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையை நம்புங்கள்:
கர்த்தாவே, அவர்கள் செய்யும் காரியத்தில் அவர்களது விசுவாசத்தை துரிதமாக்க அந்த துரிதமாக்கும் வல்லமையை தந்தருளும். அங்கே ஒரு விசுவாசி மற்றொரு விசுவாசி மீது கைகளை வைத்திருக்கிறார், சரீரத்தில் சரீரமும், வல்லமையில் வல்லமையும் காணப்படுகிறது. ஒரு தேவகுமாரனால் அல்லது ஒரு தேவகுமாரத்தியால், தேவ குமாரனால் வெளிப்படும் தேவ வல்லமை அது. தேவனே, சாத்தான் இந்த ஜனங்களை விட்டு விலகுவானாக! இந்த மதிய வேலையிலே இயேசு கிறிஸ்துவின் கண்டுணரப்பட்ட துரிதமாக்கும் வல்லமை, மற்றும் உயிர்த்தெழும் வல்லமையினால் அவர்கள் குணமாக்கப்படுவார்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அப்படியே ஆகக்கடவது!
தேவன் தந்த ஆராதனை ஸ்தலம் 65-0425 என்கிற பிரசங்கத்தில் வந்து எங்களுடன் சேர்ந்துக்கொண்டு உங்களுக்கான சுகத்தை பெற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொண்டு உன்னதங்களில் நீங்கள் அமர்ந்திருக்கும் காரணத்தால் ஆத்துமாவில் களிகூர்ந்து ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிறு மதியம் 2 மணிக்கு மனுஷ குமாரன் பேசுவதை கேட்பீர்களாக.
சகோ. ஜோசப் பிரான்ஹம்
இச்செய்தியை கேட்பதற்கு முன்னதாக படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
உபாகமம் 16 : 1 – 6
மல்கியா 4 : 5
மத்தேயு 1 : 23
மாற்கு 16 : 17
லூக்கா 17 : 30
யோவான் 4 : 23 / 10 : 1 – 7
ரோமர் 8 : 1 – 11
1 கொரிந்தியர் 12 : 13
எபேசியர் 1 : 21
1 தெசலோனிக்கேயர் 4 : 16
எபிரேயர் 13 : 8
வெளிப்படுத்தல் 22 : 19

21-0718 மூன்றாம் யாத்திரை

செய்தி: 63-0630m மூன்றாம் யாத்திரை

PDF

BranhamTabernacle.org

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்புள்ள, பிரத்தியட்சமான மகன்கள் மற்றும் மகள்கள்,,எங்கிருந்து தொடங்குவது என்பது ஒருவருக்கும் தெரியாத நிலையில். அதை சிந்தித்து, நாம்  அனைவரும்  உலகெங்கிலும் இருந்து  ஒன்றாக பரலோக சூழலில் அமர்ந்திருக்கிறோம், அந்த உயிருள்ள ஜீவத்தண்ணீரிலிருந்து குடித்துக்கொண்டிருக்கிறோம் , அவருடைய பிரத்தியட்சமான மகன்களாகவும் மகள்களாகவும் இருக்கிறோம். இந்த செய்தி நமக்கு ஒரு முழுமையான புரிதலை அளிக்கிறது, நம்மை நிலைநிறுத்துகிறது, கிறிஸ்து இயேசுவில் நாம் யார் என்று கூறுகிறது.
 
இந்த செய்தி என்ன செய்கிறது?
“நான் உன்னை ஆதரிக்கிறேன், உங்களை ஒரு கற்புள்ள கன்னியாக கிறிஸ்துவிடம் ஈடுபடுத்துகிறேன்.”
 
மகிமை, தேவன் தம்முடைய, 7 வது தேவ தூதரை ஒரு தூய்மையான கன்னியாக நம்மிடம் பேசும்படி அனுப்பினார். அவர் பேசும்  ஒவ்வொரு வார்த்தையினாலும் நாம் தீர்மானிக்கப்படுவோம்.  அப்படியென்றால் நீங்கள் ஒலிநாடாவை இயக்கவேண்டும்.
 
அவர் தனது முதல் வேதாகமத்தை வானத்தில் எழுதினார். பின்னர் அவர் தனது இரண்டாவது வேதாகமத்தை கல்லில் எழுதினார். அவரது மூன்றாவது வேதாகமத்தை பெரிய, புத்திசாலித்தனமான அறிவுசார்ந்த உலகம் வர காகிதத்தில் எழுதப்பட்டது. ஆனால் இன்று, மிகப் பெரிய வெளிப்பாட்டின் நாள், அவருடைய முழுமையான மற்றும் பரிபூரணமான தலைசிறந்த படைப்பு தேவனின் குரல், மணவாட்டியை அழைக்கிறது . அந்த ஒலிநாடாவிலிருந்து:
“மேலும் கர்த்தராகிய இயேசு வரும்போது எங்களை உங்கள் ஊழியத்தின் கோப்பைகளாகக் காண்பிப்பீர்கள்.”
நாம் அனைவரும் ஒரே உடன்படிக்கையுடன் கூச்சலிடுவோம்,”எங்களுக்கு தெரியும்! நாங்கள் உறுதியுடன் ஓய்வெடுக்கிறோம். ” “நீங்கள் எங்களை அவரிடம் முன்வைப்பீர்கள், பின்னர் நாம் அனைவரும் மீண்டும் பூமிக்குச் சென்று, என்றென்றும் வாழ்வோம்” என்று கூறினார்.
 
கிறிஸ்துவின் மணவாட்டி யாரை கூச்சலிட்டது  , எங்களை முன்வைப்பார் என்று கூறினது? தேவனுடைய தீர்க்கதரிசி அவருடைய ஊழியத்தின் நிமித்தமாக.  உங்கள் சபைகளில் ஏன் ஒலிநாடாவை இயக்க விரும்பவில்லை?
 
 மணவாட்டியின் வெளிப்பாடு நம்மில் வெளிப்படும் வரை இந்த செய்தி, இந்த ஒலிநாடாக்கள் மட்டுமே சபைகளை தேவனுடன் இசைந்து கொண்டு வர முடியும். “ஒலிநாடாவுடன் தரித்திருங்கள்” என்று உங்களிடம் கூறவேண்டுமென்று எனக்கு எப்படித் தெரியும், தீர்க்கதரிசி கூறினதை காண நான் மீண்டும் வரைபடத்திற்குச் சென்றேன்.
 
ஆவிக்குரிய மனம் அதைப் பிடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன். நீங்கள் அதை பிடுத்துக்கொள்வீர்கள்  என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படியிருந்தாலும், நீங்கள் ஒவ்வொரு நாட்டையும் பார்வையிட முடியாது. அதற்கு ஒலிநாடாக்களை அனுப்பலாம். அந்த விதை விதைக்கப்பட்ட இடத்தில் அந்த மனதைப் பிடிக்க தேவனுக்கு ஏதேனும் வழி இருக்கும்.
 சரி, ஒளி அதைத் தாக்கியவுடன், அது போய்விட்டது, உயிரை எடுத்துவிடும். கிணற்றின் அருகில் இருந்த சிறிய பெண்ணைப் போலவே, “அது இருக்கிறது” என்றாள். அவள் அதைப் பிடித்தாள்.
எங்களுக்கு இது பாறையில் இருக்கும் தேன், இது சொல்லமுடியாத மகிழ்ச்சிய, இது ஆசீர்வதிக்கப்பட்ட உறுதி, இது ஆன்மாவின் நங்கூரம், இது எங்கள் நம்பிக்கையும் தங்குமிடமும், இது யுகங்களின் பாறை, இது எல்லாமுமாக இருக்கிறது.
 
நம்முடைய ஆவிக்குரிய மனம் அனைத்தும் குழப்பமடையவில்லை. அவர் யார் என்று நமக்குத் தெரியும். அவர் என்னவென்று நமக்குத் தெரியும். நாம் யார் என்பது நமக்கு தெரியும். . நாம் எங்கு செல்கிறோம் என்பது நாமெல்லோருக்கும்  தெரியும். நாம் யாரை நம்பினோம், சம்மதித்தோம் என்று நமக்கு தெரியும், நாம் இந்த நாளுக்கு எதிராக செய்ததை அவர் காத்துக்கொள்வர்.
 
நாம் தேவனுடைய தூதர்கள் என்று நமக்கு வெளிப்படுத்தியிருந்தால், பரலோகத்தில் உள்ள அனைத்து சக்திகளும், தேவனுடைய அனைத்துமே, அவருடைய தேவதூதர்கள் மற்றும் அவருடைய எல்லா சக்திகளும் நம்முடைய வார்த்தைகளுக்கு பின்னால் நிற்கின்றன. தேவனுடைய வார்த்தையை மதிக்க வேண்டும், ஏனென்றால் அவர் கூறினார், ” – பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ” என்றார்
 
 
வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரம் இது. வெளியேறுவது நம் கையில் உள்ளது. யார் யார் என்பதை தேவன் நமக்குக் காட்டுகிறார். இயேசு கிறிஸ்துவின்மணவாட்டி, வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்குள் செல்லுவாள்.
 
அவருடைய முதல் யாத்திரையில், அவர் அவர்களை ஒரு இயற்கையான நிலத்திலிருந்து, ஒரு இயற்கையான நிலத்திற்கு கொண்டு வந்தார். இரண்டாவது யாத்திரையில், அவர் அவர்களை ஒரு ஆவிக்குரிய நிலையில் இருந்து, பரிசுத்த ஆவியின் ஆவிக்குரிய ஞானஸ்நானத்திற்கு கொண்டு வந்தார். இப்போது அவர் பரிசுத்த ஆவியின் ஆவிக்குரிய ஞானஸ்நானத்திலிருந்து, நித்தியத்திற்கு, அதே அக்னி ஸ்தம்பதால், அதே அபிஷேகம் செய்யப்பட்ட முறையால், அதே தேவன் அதே காரியங்களைச் செய்கிறார்!
 
அந்த காற்று அலறினாலும் அந்த புயல் அடித்தாலும், நாம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறோம். நாம் சரியாக அந்த  ஒவ்வொரு வார்த்தையிலும் இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம்.
 
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு , ஜெபர்சன்வில்லி நேரத்தில் எங்களுடன் கலந்துகொள்ளுகள், நம்முடைய நாட்களுக்கான பேசப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையில் இளைப்பாறுகள். அவருடைய விறைவான வருகைக்கு நீங்கள் தயாராகுங்கள்: மூன்றாம் யாத்திராகமம் 63-0630M கேளுங்கள்.
 
 
சகோதரர். ஜோசப் பிரன்ஹாம்
 
யாத்திராகமம் 3: 1-12
ஆதியாகமம்  : 37
ஆதியாகமம் : 43

21-0711 புத்திரசுவிகாரம் – நான்காம் பகுதி

https://branhamtabernacle.org/ta/streaming/viewservice/689ADC9E-FA29-4253-9E04-4E94DA7CD014

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்புள்ள கழுகுகளே , நாம் அனைவரும் ஒன்றுகூடி செய்தி புத்திரசுவிகாரம் # 4 60-0522E , இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரத்தில் கேட்போம்.

By ஜோசப் பிரன்ஹாம்

செய்திக்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

எபேசியர்: 1: 8-22 / 2:1 /4: 30
எபிரெயர் 7: 1-3
ஆதியாகமம் 14: 18-24
மத்தேயு 26: 26-29
யோவான் 17:17
கலாத்தியர் 1: 8
யோபு 38

21-0704 புத்திரசுவிகாரம் – மூன்றாம் பகுதி

BranhamTabernacle.org

21-0627 புத்திர சுவிகாரம் – இரண்டாம் பகுதி

BranhamTabernacle.org

21-0620 புத்திர சுவிகாரம் – முதலாம் பகுதி

https://branhamtabernacle.org/ta/streaming/viewservice/4219BB81-AE74-48BB-BC64-649CB84E1F6B

21-0606 ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி

செய்தி: 65-0822E ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி

BranhamTabernacle.org

>

21-0530 கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிபடுகிறார்

செய்தி: 65-0822M கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிபடுகிறார்

BranhamTabernacle.org