21-0725

ஜூலை 24 2021, கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன , பிரன்ஹாம் கூடாரம் மற்றும் ஜோசப் பிரன்ஹாமின் கடிதம்

துரிதமாக்கப்பட்ட அன்பர்களே,
தனது மணவாட்டிக்கு அவர் அருளிய ஆவிக்குரிய மன்னாவை உண்டுகளிக்க ஒவ்வொரு வாரமும் ஒன்றாக கூடிவர நாம் எப்படி ஆவல்கொள்கிறோம். அது நமது வழிப்பயணத்திதற்கு தேவையான பெலனை நமக்கு கொடுக்கிறது. அது தமது வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு சபையை ஆயத்தப்படுத்த மேசியா வெளிப்படுத்திய அவரது சொந்த வாழ்க்கையாகும்.
அக்னி ஸ்தம்பம் நம்மை அழைத்து அவரது வல்லமைபொருந்திய தீர்க்கதரிசியான வில்லியம் மறியன் பிரான்ஹம் அவர்களது அபிஷேகத்தின் கீழ் நம்மை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்திச்செல்கிறது.
சகோதரர் பிரான்ஹம் அவர்கள் அக்கினி ஸ்தம்பமல்ல. ஆனால் அவர் அந்த அக்கினி ஸ்தம்பத்தின் கீழ்ப்பட்ட அபிஷேகிக்கப்பட்ட தலைவராவார். அந்த அக்கினி ஸ்தம்பம் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் அவரது வார்த்தையை உறுதிப்படுத்த மட்டுமே செய்கிறது. நம் மத்தியில் வெளிப்பட்டது அவரது மகாபெரிய பரிசுத்த ஆவியாகும், மேலும் இதற்கு முன்னர் வந்த மற்றனைத்து தீர்க்கதரிசிகளை காட்டிலும் இது பல்லாயிரம் மடங்கு அதிகமாகும்.
மனுஷ குமாரன் தீர்க்கதரிசன வார்த்தையாக தமது சபைக்குள் மீண்டும் திரும்பி வருவதை, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக தீர்க்கதரிசனங்களில் வெளிப்படுவதை உங்களால் பார்க்க இயலவில்லையா? இதுவரை இப்படியொரு சம்பவம் எந்தவொரு காலத்திலும் நிகழ்ந்ததில்லையே.
நமது ஆவிக்குரிய சிந்தை இவற்றை பற்றிக்கொண்டது. இவற்றை கண்டு நாம் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறோம். இந்த செய்தி, இந்த ஒலிநாடாக்கள் யாவும் அந்த விதை விதைக்கப்பட்ட இடத்தில் அந்த சிந்தையை பற்றிக்கொள்ள தேவன் அருளிய வழியாகும். அந்த குரலை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம், மேலும் அந்த ஒளி நம்மை அடிக்க, நாம் உயிர் பெற்றுள்ளோம்.
இது நம்மை இப்போதே உன்னதங்களில் அமரச்செய்கிறது. நாம் அமரப்போகிறதில்லை, நாம் அமர்ந்திருக்கிறோம். நாம் முன்னரே உயிர்த்தெழுந்துவிட்டோம், இயக்கவியலும், இயந்திரவியலும் தமது வேலையை முடிக்க சென்றுள்ளது. இது தேவனுடைய ஆவி தங்கும் அவரது பிரசன்னத்திலே நம்மை துரிதமாக்கியுள்ளது. நீங்கள் என்னவாக இருக்கப்போகிறீர்கள் என்பதல்ல, மாறாக நீங்கள் முன்னரே அவ்வண்ணம் இருக்கிறீர்கள் என்பது தான் உண்மை! அதிலிருந்து நம்மை திருட முயற்சிப்பது சாத்தானின் வேலையாகும்.
கே: நீங்கள் உயிர் பெற்றுவிட்டீர்களா?
ப: ஆம்
கே: கிறிஸ்து உங்கள் வாழ்வில் மெய்யாகவே இருக்கிறாரா?
ப: ஆம்
கே: தேவனின் வல்லமை வெளிப்பட்டதா?
ப: ஆம்
கே: தேவன் அருளிய சபைக்குள் தான் நீங்கள் இருக்கிறீர்களா?
ப: ஆம்
கே: நீங்கள் இதில் எப்படி வந்தீர்கள், இதில் நீங்கள் துரிமாக்கப்பட்டீர்கள் என்பதை எப்படி தெரிந்துக்கொண்டீர்கள்?
ப: நமது முழு சிந்தையும், நமது முழு ஆத்மாவும் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. தம்மை உயிருள்ளவராகவும் நம் மத்தியில் தங்கி இருக்கிறவராகவும் நிரூபித்து கிறிஸ்து தாமே நம் மத்தியில் வாசமாய் இருக்கிறார்.
நாம் அவரது மாம்சத்தின் மாம்சமாகவும், எலும்பின் எலும்பாகவும், சரீரத்தின் சரீரமாகவும், நாமத்தின் நாமமாகவும் (பெயரின் பெயராகவும்), அவரது மணவாட்டியாகவும் இருக்கிறோம். நாம் அவருக்குள் இருக்கிறோம். நாம் அவரது மாம்சமும் எலும்பும் ஆவோம்.
நாம் மரிப்பதில்லை, நாம் துரிதமாக்கப்பட்டுள்ளோம். துரிதமாக்கும் வல்லமை நம்மை பாவ வாழ்க்கையிலிருந்து உயிர்பித்து நமது ஆத்துமாவை மாற்றி கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை உயிருள்ளவர்களாக நிலைநிறுத்தியுள்ளது, மேலும் உயிர்த்தெழுதல் அதில் நம்மை தேறினவர்களாகவும் மாற்றும்.
நாம் கிறிஸ்துவுக்குள் பிறப்பிக்கப்பட்டு, மறுரூபமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் நாம் துரிதமாக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு வார்த்தையும் நாம் “ஆமென்” கொண்டு நிறைவு செய்கிறொம்.
நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே சிந்தையுள்ளவர்களாக ஒரே மனதுடன் ஒன்று கூடும் போது நாம் கேட்டுக்கொள்வது எதுவோ அதை நாம் விசுவாசித்து அதில் நம்பிக்கைகொள்ளும் போது அதை அவர் நமக்கு தந்தருளுவார்.
நாம் அவரது பிள்ளைகளாகவும் (குமாரர்கள் குமாரத்திகளாகவும்) மணவாட்டி சபையாகவும் இருப்பதினால் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும், நமது சபைகளிலும், அல்லது நாம் ஒன்று கூடும் எல்லா இடங்களிலும் அவர் இருப்பார் என்பதை நாம் உணருவோமாக/விசுவாசிப்போமாக.
அவர் இங்கே இருக்கிறார் என எனக்கு தெரியும். அவர் இங்கே இருக்கிறார் என்பதை நான் நிச்சயம் நம்புகிறேன். இங்கே அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரையும் குணமாக்கும் அளவிற்கு சபைக்குள் துரிதமாக்கும் வல்லமை இருக்கிறது என்பதும் எனக்கு தெரியும்.
இந்த செய்தியை நீங்கள் நம்புகிறீர்களா? இன்றைக்கான தேவனுடைய வழி இதுவென நீங்கள் நம்புகிறீர்களா? மனுஷ குமாரன் தம்மைத்தாமே மாம்சத்தில் வெளிப்படுத்துகிறார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் நம்புகிறீர்களா?
உங்களுக்கு சரீர சுகமோ, ஆவியில் சுகமோ தேவையா, அல்லது உங்கள் தேவை எதுவாக இருந்தாலும் சரி, நான் சவாலாக சொல்கிறேன் நமது நாளுக்கான அபிஷேகிக்கப்பட்ட, உறுதிபடுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையை நம்புங்கள்:
கர்த்தாவே, அவர்கள் செய்யும் காரியத்தில் அவர்களது விசுவாசத்தை துரிதமாக்க அந்த துரிதமாக்கும் வல்லமையை தந்தருளும். அங்கே ஒரு விசுவாசி மற்றொரு விசுவாசி மீது கைகளை வைத்திருக்கிறார், சரீரத்தில் சரீரமும், வல்லமையில் வல்லமையும் காணப்படுகிறது. ஒரு தேவகுமாரனால் அல்லது ஒரு தேவகுமாரத்தியால், தேவ குமாரனால் வெளிப்படும் தேவ வல்லமை அது. தேவனே, சாத்தான் இந்த ஜனங்களை விட்டு விலகுவானாக! இந்த மதிய வேலையிலே இயேசு கிறிஸ்துவின் கண்டுணரப்பட்ட துரிதமாக்கும் வல்லமை, மற்றும் உயிர்த்தெழும் வல்லமையினால் அவர்கள் குணமாக்கப்படுவார்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அப்படியே ஆகக்கடவது!
தேவன் தந்த ஆராதனை ஸ்தலம் 65-0425 என்கிற பிரசங்கத்தில் வந்து எங்களுடன் சேர்ந்துக்கொண்டு உங்களுக்கான சுகத்தை பெற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொண்டு உன்னதங்களில் நீங்கள் அமர்ந்திருக்கும் காரணத்தால் ஆத்துமாவில் களிகூர்ந்து ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிறு மதியம் 2 மணிக்கு மனுஷ குமாரன் பேசுவதை கேட்பீர்களாக.
சகோ. ஜோசப் பிரான்ஹம்
இச்செய்தியை கேட்பதற்கு முன்னதாக படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
உபாகமம் 16 : 1 – 6
மல்கியா 4 : 5
மத்தேயு 1 : 23
மாற்கு 16 : 17
லூக்கா 17 : 30
யோவான் 4 : 23 / 10 : 1 – 7
ரோமர் 8 : 1 – 11
1 கொரிந்தியர் 12 : 13
எபேசியர் 1 : 21
1 தெசலோனிக்கேயர் 4 : 16
எபிரேயர் 13 : 8
வெளிப்படுத்தல் 22 : 19