21-0801 அவருடைய வார்த்தையை நிரூபித்தல்

செய்தி: 65-0426 அவருடைய வார்த்தையை நிரூபித்தல்

BranhamTabernacle.org

கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன

அன்புள்ள கற்றுக்கொள்ளுகிற குழந்தைகளே,

கிறிஸ்துவின் மணவாட்டியாக பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில் ஒன்றுகூடி, ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் என்ன ஒரு பரலோக சூழலில் அமர்ந்துக் கொண்டிருக்கிறோம். இது நமது சாவுக்கேதுவான சரித்திரத்திலிருந்து துரிதப்படுத்துவதை நாம்மால் உணர முடிகிறது.

நீங்கள் ஒலிநாடாவை இயக்கி, தேவனின் குரலைக் கேட்பதை விட பெரிய அபிஷேகம், பெரிய சூழல் எதுவும் இல்லை. ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கவும் நம்பவும் தேவன் நம் காதுகளை நிர்ணயித்துள்ளார், ஏனென்றால் அது எல், ஏலா, எலோஹிம், தன்னிறைவு பெற்றவர், போதுமானவர், வலிமையானவர், நாம் அவருடைய பிரத்தியட்சமான மகன்களும் மற்றும் மகள்களாகவும் இருக்கிறோம் என்று அவர் நம் ஒவ்வொருவரிடமும் பேசி நமக்கு வெளிப்படுத்துகிறார்.

உலகம் முழுவதிலுமிருந்து தேவனுடைய முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதை எவ்வளவு சக்தி வாய்ந்தது, தங்கள் புனிதமான கரங்களை ஒருவருக்கொருவர் வைத்து. நம் வீடுகளும் சபைகளும் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தால் நிரம்பியிருக்கிறது. நம்மிடம் யார் பேசுகிறார் என்பது நமக்குத் தெரிந்ததால், நம்முடைய நம்பிக்கை கட்டமைக்கப்பட்டது. பிறகு துரிதப்படுத்தும் சக்தி நம்மிடம் இருப்பதாக அவர் நம்மிடம் கூறினார். அவர் சொன்னதால் நாம் முழு இருதயத்தோடும் ஆத்மாவோடும் நம்பினோம்.

பிறகு நாம் கூறும்படி அவர் கூறினார்,” ஆண்டவராகிய தேவனே , நான் முழு இருதத்துடன் நம்புகிறேன்” . ஒவ்வொரு வார்த்தையையும் நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து, அவர் கூறும்போது திரும்பச் சொன்னோம். அவர் கூறினார், “இது போன்ற ஒரு குழுவில் நோய் நிற்க முடியாது.” இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது எங்கள் ஆவி மகிழ்ச்சியடைந்தது, ஏனென்றால் என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியும்.

அவர் கூறினார், “பரிசுத்த ஆவியை விரும்பும் அனைவரும், உங்கள் கரங்களை உயர்த்துங்கள், நீங்கள் விரும்பும் இடத்தில் … தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் பரிசுத்த ஆவியால் நிரப்புவார் என்று நான் நம்புகிறேன்.”அந்த நேரத்தில், நாங்கள் அவருடைய பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டோம், மீண்டும் நிரப்பப்பட்டோம், தேவனின் குரல் அப்படியே சொன்னது.

பின்னர் அவர்களின் சரிர சுகம் வேண்டியவர்களுக்கு, “இயேசு கிறிஸ்துவின் பெயரால், உங்கள் காலில் நின்று உங்கள் சுகத்தை ஏற்கும்படி நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார். அந்த தருணத்தில், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு விசுவாசியும், விசுவாசம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்கள், குணமடைந்தனர்.

இது எங்கே நடந்தது? ஒரு சிறிய குழு மக்கள் ஒன்றுக் கூடும் இடத்திலா? இல்லை, அது உலகைச் சுற்றி இருந்தது, மணவாட்டி பரலோக சுழளில் ஒன்றாக அமர்ந்து நம் நாளுக்கான தேவனின் குரலைக் கேட்க்கும்போது.

எந்தவொரு மனிதனோ அல்லது மனிதனின் குழுவோ மணவாட்டியை அப்படி இணைப்பது என்பது சாத்தியமற்றது. பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே அந்த நாளுக்கு அவருடைய தூதர் மூலமாக பேசுவதன் மூலம் அதைச் செய்ய முடியும். இந்த செய்தி தேவனால் உரைக்கப்பட்டது. வியப்படைவதிற்கில்லை, யூகிக்கப்படுவதற்ககில்லை, இதுவே இன்றைக்கு அவர் அளித்த வழி என்பதை தேவன் நிரூபித்துள்ளார்.

நம்மெல்லோருக்கும் எவ்வளவு ஓய்வு மற்றும் அமைதி இருக்கிறது. நமக்கு சொல்லப்பட்டதில் நாம் ஒருபோதும் கவலைப்படவோ அல்லது கேள்வி கேட்கவோ தேவையில்லை. அதைச் சரிபார்க்க நாம் ஒருபோதும் வார்த்தைக்குத் திரும்ப வேண்டியதில்லை, ஏனென்றால் நம் நாளுக்காக தேவனின் நிரூபிக்கப்பட்ட வார்த்தையை நாம் கேட்கிறோம். நாம் உட்கார்ந்து, நம்முடைய இதயங்களையும், மனதையும், ஆன்மாவையும் திறந்து, ஆமென், ஆமென், ஆமென் என்று கூறுவோம்.

இல்லை, நாம் தகுதியற்றவர்கள். இல்லை, நமக்கு எல்லாமும் புரியவில்லை. ஆனால் நாம் ஒவ்வொரு வார்த்தையையும் நம்புகிறோம். அவர் உங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் என்பதற்கான உண்மையான அடையாளம் என்றும், அவருடைய மணவாட்டி மட்டுமே ஒவ்வொரு வார்த்தையையும் நம்பும் என்று கூறினார். நாம்தான் அந்த மணவாட்டி …. அல்லேலூயா !.

இது சிறந்த, ஆழமான சிந்தனையாளர்களிடமிருந்து கடந்து சென்று ,கற்றுக்கொள்வதற்காக குழந்தைகளுக்கு அதை வெளிப்படுத்துகிறது.

நான் கற்றுக்கொள்ளும் குழந்தை என்பதால் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

ஒவ்வொரு யுகத்திலும் அவர் யார் என்பதை அவர் பல நூற்றாண்டுகளாக நிரூபித்துள்ளார். அவர் தனது தீர்க்கதரிசிகள் மூலம் அதை நிரூபித்தார். அவர் மாம்சத்தில் வந்தபோது அதை நிரூபித்தார், நம் பாவங்களை எடுத்து சிலுவையில் அறைந்தார், பின்னர் மீண்டும் எழுந்து பரிசுத்த ஆவியை திருப்ப வும் அனுப்பினார்.

இப்போது அவர் நம்முடைய வார்த்தையில் வாக்குறுதியளித்தபடி மீண்டும் வந்து மனித மாமிசத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்தியதன் மூலம் நம் நாளில் அதை நிரூபித்துள்ளார். அவர் தன்னை மணஷகுமார்ன் என்று நிரூபித்தார், இயேசு கிறிஸ்துவின் ஊழியம், மனித மாம்சத்தில் மறைக்கப்பட்டது.

இப்போது, அவருடைய இறுதி அத்தியாயம், இந்த பெரிய திட்டத்திற்கான காரணம், நமக்காக வர, அவருடைய முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட, நிரூபிக்கப்பட்ட மணவாட்டி , அந்த வார்த்தையில் தங்கியிருக்கிறது.

இயேசு 5000 பேரிடம் பேசியபோது அந்த நாளில் நீங்கள் மலையில் இருந்திருக்க விரும்புகிறீர்களா? ரொட்டிகளையும் மீன்களையும் வழங்குவதன் மூலம் அவர் யார் என்பதை உலகுக்கு நிரூபிப்பதை நீங்கள் விரும்புவீர்களா? அந்த அபிஷேகத்தின் கீழ் உட்கார்ந்து, அவருடைய குரலைக் கேட்டு அவருடைய நித்திய ஜிவியத்தின் வார்த்தைகளால் உங்கள் இதயத்தை ஆறுதல்படுத்துவதை நீங்கள் விரும்புகிறீர்களா?

இந்த செய்தியை முழு மனதுடன் நம்பினால் உங்களால் முடியும்.

இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணிக்கு ஜெஃபர்சன்வில் நேரத்தில் எங்களுடன் மலையில் உள்ள அபிஷேகத்தின் கீழ் அமர்ந்து, தேவன் நம் நாளில் யார் என்பதை உலகுக்கு நிரூபிப்பதைக் கேளுங்கள். லூக்கா 17:30 உங்களிடம் பேசுவது மற்றும் B-R-A-N-H-A-M சொல்வது உங்களுக்கு நிரூபிக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குரல். அவருடைய வார்த்தையை நிரூபித்தல் 65-0426. கேட்க வாருங்கள்

சகோ. ஜோசப் பிரன்ஹாம்

படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

மத்தேயு 11: 4-19 / 28:20
மார்க் 11: 22-26
லூக்கா 8: 40-56 / 17:30
யோவான் 14:12
எபிரெயர் 4: 12-15 / 13: 8
மல்க்கியா 4