செய்தி:65-1121 எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்?
வகை காப்புகள்: Uncategorized
21-1123 வழிநடத்தும் தன்மை
21-1122 மறுரூபப்படுத்தும் வல்லமை
21-1121 தாகம்
21-1114 மறுரூபப்படுத்த தேவனுடைய வல்லமை
21-1107 சாத்தானின் ஏதேன்
செய்தி: 65-0829 சாத்தானின் ஏதேன்
21-1031 ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி
21-1024 கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிபடுகிறார்
செய்தி: 65-0822M கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிபடுகிறார்
- 24-0908 கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிபடுகிறார்
- 23-0219 கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிபடுகிறார்
- 21-1024 கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிபடுகிறார்
- 21-0530 கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிபடுகிறார்
- 19-1013 கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிபடுகிறார்
- 17-1112 கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிபடுகிறார்
21-1017 இதை அறியாமல் இருக்கிறாய்
செய்தி: 65-0815 இதை அறியாமல் இருக்கிறாய்
கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன
அன்புள்ள கூடியிருக்கும் கழுகுகளே,
ஓ, என்ன ஒரு தருணம் , என்ன ஓரு நேரம்! எதுவும் செய்யாமல் விடப்படவில்லை. தேவனின் கழுகுகள் பிணத்தைச் சுற்றி கூடிவருகின்றன. தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது. ஒரு முறையும் அது தவறவில்லை, மேலும் நாம் அதை பார்க்க, முன்னரே முன்க்குறிக்கப்பட்டோம் , அதைப் பார்க்க.
பிதாவானவர் தனது தீர்க்கதரிசியை வீட்டிற்கு அழைத்துச் சென்றதிலிருந்து, அவரது மணவாட்டி அவரது குரலைச் சுற்றி இன்று போலவே ஒன்றுக்கூடியிருந்தால். அவருடைய வார்த்தை வரும் வழியை அவர் தேர்ந்தெடுத்தார், அது அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம், முன்னரே தீர்மானிக்கப்பட்ட மற்றும் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை. மேலும், இயேசு கிறிஸ்து தன்னைத் தெரியப்படுத்தி, தீர்க்கதரிசனத்தில் தன்னை அடையாளம் காட்டுகிறார் என்று நாம் இதில் திருப்தியாகவும், உறுதியாகவும் இருக்கிறோம்.
இந்த நாளில் வெளியில் அழைக்கப்பட்ட மக்களைப் போலவே அவர் இஸ்ரவேல் புத்திரர்களை,அவர்களின் பயணத்தில், வனாந்தரத்தின் வழியாக எப்படியாக வழிநடத்தினார். இதோ இங்கே அவர், அறிவியல் ஆராய்ச்சியின் மூலம், அறிவியலுக்கு முன்பாக தன்னை அடையாளம் காட்டினார். மேலும் அவருடைய செயல்களாலும், அவருடைய தீர்க்கதரிசனத்தாலும், இந்த நாளில் அவர் செய்ய, தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட காரியங்கள், அவரை நேற்றும், இன்றும், என்றென்றும் ஒரே மாதிரியாக ஆக்க, முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன. நம் இருதயம் நமக்குள் எரிய இதுபோதுமானதாக இல்லையா?
அன்றைய அப்போஸ்தலர்களைப் போலவே, நாமும் நம் ஜீவியத்திற்கு நியமிக்கப்பட்டோம். நாம் செய்ய வேண்டிய ஒன்று , அவருடைய குரலைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த குரல் தேவனின் எண்ணங்களை வெளிப்படுத்தியது. நாம் அனைத்தையும் விசுவாசிக்கிறோம். நாம் எதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவோ, அல்லது சதுசேயர் அல்லது பரிசேயரிடமோ அல்லது வேறு எவரிடமோ இதைப் பற்றி கேட்க வேண்டியதில்லை. அவர் கூறினார், நாம் அதை விசுவாசிக்கிறோம். அவரது ஆடுகள் அவருடைய குரலைக் கேட்கும், அவருடைய தீர்க்கதரிசி மூலம் பேசுகின்றன.
இந்த செய்தி டேப்களில், தேவனின் குரல். இது இயேசு கிறிஸ்துவின் முழு வெளிப்பாடு, பழைய மற்றும் புதிய ஏற்பாடு ஒன்றாக உள்ளன. அனைத்து ரகசியங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நாம் அதில் எதையும் சேர்க்கவோ எடுக்கவோ கூடாது . அவர் கட்டளையிட்டபடி நாம் செய்கிறோம், அந்த வார்த்தையுடன் இருங்கள்.
அதோ அங்கேதான் நிற்கிறீர்கள். அது மனிதனுக்குள் இருக்கிறது. அந்த வார்த்தையை உள்ளே நிறுத்தவும், வார்த்தையுடன் தரித்திருக்கவும் , பொருட்படுத்தாது.
அவர் தீர்க்கதரிசனம் உரைத்து , என்ன நடக்கப்போகிறது என்று எங்களிடம் கூறினார். முழு உலகமும் பைத்தியக்காரத்தனத்தில் குழுவாக உள்ளது, மேலும் அவர்கள் ஒருக்கூட்ட வெறி பிடித்தவர்களாக மாரும் வரை மோசமாக மோசமாக ஆகிவிடுவார்கள்.
ஏதாவது நடக்கப்போகிறது, ஏதாவது நடக்கும் என்று நாம் பார்க்கப் போகும் நேரம் நெருங்கிவிட்டது என்று அவர் கூறினார். மேலும் இந்த செய்திகள் அனைத்தும் பின்னணி மற்றும் ஒரு குறுகிய, விரைவான செய்திக்கு அடித்தளம் அமைத்து, அது முழு நாடுகளையும் உலுக்கும். இந்த விஷயங்கள் இப்போதே நடைபெறுவதை நாம் சரியாக இப்போது காண்கிறோம் என்று நான் நம்புகிறேன்.
மேலும் அது எனக்குத் தெறியும் , நான் இந்த பூமியிலிருந்து விலகிச் சென்ற பிறகும், அந்த டேப்கள் மற்றும் புத்தகங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை நான் அறிவேன், உங்களில் பல இளம் குழந்தைகள் வரும் நாட்களில் இதை கண்டுக்களிடிப்பீர்கள், அது சரியாக உண்மையே , ஏனென்றால் நான் அதை தேவனின் நாமத்தில் பேசுகிறேன்.
தீர்க்கதரிசி சொன்ன கனவுகளின் அனைத்து விவரங்களையும் நாம் கவனமாக கவனிப்போம். பிரமிடு போன்ற கூர்மையான வடிவத்தில், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சென்ற பாறையில் அவர் நிற்பது. அவர் குதிரையின் மேல் இருந்தார், அவர்கள் தங்கள் ஜீவியத்தில் அதுப்போல் எப்போதும் பார்த்திருக்கமாட்டார்கள் ; பெரிய வெள்ளை குதிரை, அதன் வெள்ளை முடியானது கீழே தொங்கியபடி.
எப்படி ஒரு வெள்ளை மேகம் இறங்கி வந்து அவரை கட்டி கொண்டு சென்றது. சிறிது நேரம் கழித்து அது அவரை மேஜையின் மேல் அமர வைத்தது, அவர் பனி வெள்ளை நிறத்தில் இருந்தார். அவர் அங்கு நின்று அதிகாரத்துடன் பேசினார். அதில் எந்த யூகமும் இல்லை. ஒவ்வொரு மனிதனும் அவர் சொன்னதை சரியாக புரிந்து கொண்டான்.
“நான் இந்த பாதையில் இன்னொரு முறை செல்வேன்!”
இது இன்று
நடந்துக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம் என்று
நான் விசுவாசிக்கிறேன். இந்த செய்திகள் மீண்டும் அந்த பாதையில் பயணிக்கின்றன. தேவன் தனது கழுகுகளை உலகம் முழுவதிலுமிருந்து அழைக்கிறார். அவர்கள் அவருடைய வார்த்தை, அவரது குரல், இந்த செய்தியைச் சுற்றி ஒன்றுசேருகின்றன.
உலகம் நிர்வாணமாக, பரிதாபமாக, பரிதாபமான குருடாக இருக்கிறது, மேலும் அது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் மணவாட்டி வார்த்தையால் ஆடை அணிந்துள்ளாள், ஆவியால் மகிமைப்படுத்தப்படுகிறாள், அவருடைய கிருபையால் மகிழ்ச்சியடைகிறாள், நாம் யார் என்பதை நாம் பார்த்து அறியலாம்: அவரது மணவாட்டி.
அவர் தனக்குத் தெரிந்தவரை நம்மிடம் கூறினார், இதை தடுக்க அவர் எதையும் பார்க்கவில்லை ,இந்த சமயத்தில், கர்த்தராகிய இயேசுவின் வருகை அவருடைய சபையின் தயார்நிலை வெளியில் உள்ளது.
கழுகுகளே, நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வோம். ஜெபர்சன்வில் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணியளவில் பிணத்தைச் சுற்றி எங்களுடன் கூடிவர நான் உங்களை அழைக்கிறேன், நம் நாளுக்கான தேவனின் குரலைக் கேட்க, விரைவில் வரும் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு நாம் தயாராவோம்: 65-0815 இதை அறியாமல் இருக்கிறாய் , செய்தியைக் கேட்போம்.
சகோ. ஜோசப் பிரன்ஹாம்
படிக்க்வேண்டிய வேத வசனங்கள் :
வெளிப்படுத்துதல் 3: 14-19
கொலோசெயர் 1: 9-20
21-1010 தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்
செய்தி: 65-0801E தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்
- 24-0825 தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்
- 23-0205 தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்
- 21-1010 தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்
- இன்றைய தினத்திற்கான மேற்கோள்
- 20-0223 தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்
- 18-1104 தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்
- 17-0129 தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்
கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன
அன்புள்ள கிறிஸ்துவின் சிறு கன்னிகையே, வார்த்தையே, மந்தையே, மணவாட்டியே,
நாம்தான் அவருடைய வார்த்தை மணவாட்டி நம் வார்த்தை மணவாளன் மற்றும் அவரது ஆயிரம் வருட தேனிலவுக்காக காத்திருக்கிறோம். நாம் ஒரு குரலை மட்டுமே கேட்போம். “என் ஆடுகள் என் சத்ததிர்க்கு செவிக்கொடுக்கும். ஒரு அந்நியரை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள். ” அவருடைய குரல் என்ன?
எந்த ஒரு மனிதனின் குரல் அவருடைய வார்த்தையா. மேலும் இதோ, வேதாகத்தில் , இதில் ஒரு வார்த்தையும் சேர்க்கவோ அல்லது அதிலிருந்து எடுக்கவோ கூடாது என்று கூறப்படுகிறது. அந்த குரலில் அப்படியே சரியாக தரித்திருங்கள். “ஒரு அந்நியனை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்,” ஒரு ஸ்தாபனத்தை.
அந்த குரல் அவருடைய குரலாகும், அவருடைய வார்த்தையின் ஒரே தெய்வீக மொழிபெயர்ப்பாளர், அவரது தீர்க்கதரிசி, வில்லியம் மரியன் பிரன்ஹாம் மூலம் டேப்பில் பேசுகிறார். இயேசு கிறிஸ்து மனித உதடுகளால் பேசுகிறார். மனிதனின் வார்த்தைகள், மனிதனின் எண்ணங்கள் அல்லது மனிதனின் விளக்கம் பற்றி நாங்கள் அக்கறைப்படுவதில்லை, நம் நாளுக்கான நியாயமான குரலைப் பற்றி மட்டுமே நாங்கள் அக்கறைக்கொள்கிறோம். அது தேவன் உறைக்கிறதாவது.
தேவன் நம் தீர்க்கதரிசியின் கைகளை நகர்த்தினார். தேவன் தரிசனங்களில் அவருடைய கண்களை நகர்த்தினார். அவர் பார்த்ததைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. அவரால் எதுவும் பேச முடியவில்லை, ஏனெனில் தேவன் அவரது நாக்கை , அவரது விரல், அவரது உடலின் ஒவ்வொரு உறுப்பையும் தேவன் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டிருந்தார். அவருடைய தீர்க்கதரிசிகள் தேவர்கள் என்று வேதாகமம் கூறினதில் ஆச்சரியமில்லை; அவர்கள் தேவனின் ஒரு பகுதி! அவர் நம்முடைய நாளுக்கான பிரத்தியட்சமாக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை.
வேதாகமமானது தீர்க்கதரிசனத்தின் மூலம், நாம் வாழும் நாள் மற்றும் நேரத்தை முன்னறிவிக்கிறது. அது என்ன வகையான நிகழ்வுகள் நடக்கும். அதில் எழுதியபடி சரியாக முன்னறிவிக்கிறது, மேலும் ஒரு காலத்தையும் தவறவிடவில்லை. அதைப் பார்க்க முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவர்கள் அதைப் பார்ப்பார்கள். இது வார்த்தையுடன் வார்த்தை இணைவதாகும்.
ஒவ்வொரு காலத்திலும், இந்த வார்த்தைக்கு மனிதர்கள் தங்கள் சொந்த விளக்கத்தை வைக்க அனுமதிக்கிறார்கள், மேலும் அது நடக்கிற நிகழ்வுக்கு கண்மூடித்தனமாக இருக்க காரணமாகிறது. பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களிடமும் அதுவே நடந்தது.
அவர்கள் மக்களிடம், “நாங்கள் தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள். வார்த்தை என்ன சொல்கிறது என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்ல வேண்டும். உங்களுக்காக நாங்கள் அதை விளக்க வேண்டும். ” என்று கூறினார்கள்.
அந்த நாளில் எப்படி இருந்ததோ அதுபோல்தான் இன்றும். ஏமாற்றும் பகுதி என்னவென்றால் அவர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள். வார்தைக்கு ஊழியஞ்செய்ய அவர்களுக்கு தேவனிடமிருந்து அழைப்பு இருக்கிறது. தீர்க்கதரிசி சொன்னதை அவர்கள் மக்களுக்குச் சொல்ல வேண்டும், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் தேவனின் குரலை விட அவர்களின் ஊழியத்தை மிக முக்கியமானதாக மாற்றுவதன் மூலம் அவர்களின் ஈடுபாட்டை வைக்கிறார்கள்.
தேவனின் தீர்க்கதரிசி என்ன கூறினாரோ அந்த விளக்கத்தைச் சுற்றி, மக்களை எவ்வாறு தங்கள் ஊழியத்தைச் சுற்றி ஒன்று திரட்ட அவர்கள் முயற்சிக்க விரும்புகிறார்கள் என்பதைக் கவனியுங்கள், ஆனால் அவர்களால் அதை அப்படி செய்ய முடியாது.
அவர்கள் சபைகளில் டேப்களை இயக்காததை நியாயப்படுத்த, அவர்கள் பின்னால் ஒளிந்துக்கொண்டு, மக்களை பயமுறுத்துகிறார்கள், “அவர்கள் மனிதனை அதிகமாக வைக்கிறார்கள், அவரை வணங்குகிறார்கள், இயேசு கிறிஸ்துவை அல்ல. ஒரே இடத்தில் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் கேட்பது ஒரு ஸ்தாபனம். சகோதரர் பிரன்ஹாம் , சபைகளில் டேப்களை இயக்குங்கள் என்று கூறவில்லை ”, என்கிறார்கள். இதனால் உண்மையான காரணத்தைத் தவிர்த்து, அவர்கள் தங்கள் சபைகளில் டேப்களை இயக்க விரும்பவில்லை. சபைகளில் டேப்களை கேட்பதை விட அவர்களின் ஊழியம், அவர்களின் புரிதல், அழைப்பு ஆகியவை அவர்களுக்கு மிகவும் முக்கியம். அவர்கள் இதைச் சொல்லத் துணிய மாட்டார்கள், இல்லை, ஆனால் அவர்களின் செயல்கள் அவர்களுக்காகப் பேசுகின்றன.
இது உண்மையான கடைசிக் கால செய்தி, நம் நாளுக்கான தேவனின் குரல் என்று நம்புவதாகக் கூறும் எந்த உண்மையான உத்தமமான ஊழியரும், தங்கள் சபைகளில் டேப்களை இயக்காமல் இருப்பதற்கு ஒருபோதும் ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்கமாட்டார்கள். வார்த்தையின் மணவாட்டியுடன் அந்த அறிக்கையை சரிபாருங்கள்.
ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல்
2:00 மணிக்கு அனைவரும் கேட்க வேண்டும் என்றும் அல்லது நீங்கள் மணவாட்டி அல்ல என்றும் நான் ஒருபோதும் கூறவில்லை. மேலும், நான் ஒருபோதும் மனிதனை வணங்கியதில்லை. எல்லா புகழையும் பெற்றவர் இயேசு கிறிஸ்து. அந்த வார்த்தை நமக்கு கூறினபடி மனிதனுக்குள் இருக்கும் தேவனை நான் வணங்குகிறேன். அவர்கள் எவ்வளவு வஞ்சிப்பவர்களும் மற்றும் குருடராகவும் இருக்கிறார்கள். என் சகோதரரே வேதத்தை வாசியுங்கள், அது சரியாக அங்கே இருக்கிறது.
எந்த ஊழியரும், அல்லது ஊழியரின் குழுவோ, மணவாட்டியை ஒருபோதும் இணைக்க மாட்டார்கள் என்று பிசாசுக்கு தெரியும்; அவர்கள் ஒருவருக்கொருவர் கூட உடன்படவில்லை. மெதடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பைடீரியன் மற்றும் பெந்தேகோஸ்தலைப் போலவே, அவர்களில் யாராவது அல்லது அவர்களுடைய இனைப்பானது மணவாட்டியை எப்படி ஒன்றிணைக்க முடியும் … அது வெறுமனே முடியாது.
மணவாட்டியை ஒன்றிணைக்கக்கூடிய ஒரே விஷயம் டேப்களில் அந்த தேவனின் குரல் … மேலும் அது அதைச் செய்கிறது!
எதிரி அதை வெறுக்கிறான், அதனால் அவன் அதை அழிக்க முயற்சிக்கிறான், ஆனால் அதைச் செய்ய இயலாது …. மகிமை!
எப்போதும்போல, அவர்கள் எப்போதும், காலத்தின் முடிவில், எப்போதும் ஒரு குழப்பம் வரும் வரை தங்கள் இறையியலாளர்கள் மற்றும் மதகுருக்களால் இத்தகைய குழப்பத்தில் சிக்கியுள்ளனர். எப்போதும் அவர்களின் விளக்கம் தவறானது, ஒரு முறையும் தவறை தடுக்க முடியவில்லை. தேவனின் வார்த்தை சரியானதாக இருக்க ஒரு முறை கூட தவறியதில்லை. அதுதான் வித்தியாசம்.
உறுதியாக இருக்க ஒரு வழி இருக்கிறது, தேவனின் வார்த்தையோடு இருங்ஙகள், டேப்களில் இருக்கும் அந்த தேவனின் குரல். உங்கள் வேதாகமத்தைப் வாசியுங்கள், இந்த நாளில் என்னென்ன நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்று அது உங்களுக்குச் கூறும். இந்த நாளில் வரப்போகும் அவருடைய வலிமையான தேவத்தூதரைப் பற்றி அது உங்களுக்குச் கூறும். அந்த குரலில் தரித்திருக்கவும், அவர் தேர்ந்தெடுத்த தூதருடன் இருக்கவும் அது உங்களுக்குச் கூறும்.
சாத்தான், வேதாகமத்தில், எந்த புத்தகத்தை வெறுக்கிறான் என்றால், அது வெளிப்படுத்தல் புத்தகம். இது கிறிஸ்துவால் எழுதப்பட்டது. பின்னர் அந்த ஆவியின் படி, கிறிஸ்துதாமே தனது 7 வது தேவ தூதனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்.
இவைகளுக்குப் பிறகு, மற்றொரு தேவதூதர் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைக் கண்டேன், பெரும் வல்லமை இருந்தது; மேலும் அவரது மகிமையால் பூமி வெளிச்சம் அடைந்தது.
பூமி அவருடைய மகிமையால் ஒளிரும் என்று கிறிஸ்துவே கூறி
னார். அவர் “என் மகிமை” மூலம் வெளிச்சம் என்று சொல்லவில்லை. உங்கள் புரிதலின் படி, கிறிஸ்துவே தனது 7 வது தேவதூதருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள்.
அந்த பூமிக்குரிய தூதர் கிறிஸ்துவுக்கு மிக நெருக்கமாக இருந்தார், யோவான் அவரை வணங்க முயன்றார், இரண்டு முறை, ஆனால் அவர், “இல்லை !, தேவனை வணங்குங்கள்” என்றார். அதைத்தான் நாம் செய்கிறோம், தேவனை வணங்குங்கள். நாம் மனிதனுக்கு அதிகமாக இடமளிக்கவில்லை, கிறிஸ்து அந்த வார்த்தை என்ன கூறினது அதைக் கூறுகிகிறோம் … “அந்த பூமியானது அவருடைய மகிமையால் வெளிச்சமடைகிறது.” இது வெளிப்பாட்டின் மூலம் நமக்கு தூண்டுதலை அளிக்கிறது.
தேவன் தனது சொந்த விருப்பப்படி, ஒவ்வொரு காலத்திற்கும் தீர்க்கதரிசிகளைத் தேர்ந்தெடுத்தார். கவனியங்கள். அந்த காலத்திற்கு ஏற்றவாறு அந்த தீர்க்கதரிசியின் தன்மையை அவர் பொருத்துகிறார். பாருங்கள், அவர் என்ன செய்தாலும் அவர் தனது பாணிக்கு பொருந்துகிறார். அவர் படித்தவராக இருந்தாலும் சரி, படிக்காதவராக இருந்தாலும் சரி. அவர் பரிசுகள், அவர் பிரசங்கிக்கும் விதம், அவருக்கு இருக்கும் பரிசுகள் ஆகியவற்றுடன் பொருந்துகிறது. மேலும் அந்த குறிப்பிட்ட காலத்திற்கான செய்தி, தேவன் குறிப்பிட்ட சில விஷயங்கள் நடக்க வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்தார் மற்றும் வேறு எதுவும் அதன் இடத்தில் இருக்க முடியாது.
ஞாயிறு அன்று டேப்களை இயக்குங்கள், எந்த டேப் செய்தியாக இருந்தாலும், எதுவும் அதன் இடத்தை பிடிக்க முடியாது. நாங்கள் ஒளிநாடாவை கேட்கும்போது நீங்களும் பிரன்ஹாம் கூடாரத்தில் சேர விரும்பினால், உங்களை வரவேற்கிறோம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணியளவில் ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் சேர அழைக்கப்படுகிறோம்: தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்குகிற சம்பவங்கள் : 65-0801E.
சகோ. ஜோசப் பிரன்ஹாம்
படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
ஆதியாகமம்: 22: 17-18
சங்கீதம்: 16:10 / அதிகாரம் 22 / 35:11 / 41: 9
சகரியா 11:12 / 13: 7
ஏசாயா: 9: 6 /40: 3-5 / 50: 6 /53: 7-12
மல்க்கியா : 3: 1 /4 வது அதிகாரம்
பரிசுத்த யோவான் : 15:26
பரிசுத்த லூக்கா : 17:30 / 24: 12-35
ரோமர்: 8: 5-13 எபிரேயர்: 1: 1 /13: 8
வெளிப்பாடு: 1: 1-3 / அதிகாரம் 10