23-0430 எபேசு சபையின் காலம்

செய்தி: 60-1205 எபேசு சபையின் காலம்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள அடிக்கப்பட்ட தூய தங்கமே, 

உங்கள் ஒவ்வொருவரோடும் ஐக்கியமாக இருப்பதற்கும், ஆவிக்குள் நுழைவதற்கும், தேவன் நம்மிடம் உதட்டோடு காதுக்கு பேசுவதைக் கேட்பதற்கும் நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர் நமக்கு வெளிப்படுத்தும் விஷயங்களுக்கு முடிவே இல்லை. நம் இருதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளன. நம் ஆன்மாக்கள் குமிழ்கின்றன. நாம் எதைக் கேட்டுகொண்டிருக்கிறோமோ அதை ஒருவர் எப்படி புரிந்து கொள்ள முடியும்?

கர்த்தர் தாமே நமக்குச் சொல்வதைக் கவனியுங்கள்: “நீங்களே என் உண்மையான சபை, என் மணவாட்டி. என்னைப் பொறுத்தவரை, நீங்கள் தூய தங்கத்திற்கு ஒப்பிடப்படுகிறீர்கள். உங்கள் நீதியே என் நீதி. உங்கள் பண்புக்கூறுகள் எனது சொந்த சிறப்புவாய்ந்த பண்புகளாகும். உங்களுடைய அடையாளம் என்னுள் இருக்கிறது. நான் என்னவாக இருக்கிறேனோ, நீங்கள் அதைப் பிரதிபலிக்கிறீர்கள். என்னிடம் இருப்பதை, நீங்கள் பிரத்தியட்ச்சமாக்குகிறீர்கள்.

 என்னைப் பொறுத்தவரை, உங்களில் எந்தத் தவறும் இல்லை, உள்ளேயும் வெளியேயும் நீங்கள் மகிமைநிறைந்தவர்கள். ஆரம்பம் முதல் முடிவு வரை, நீங்கள் என்னுடைய படைப்பாக இருக்கிறீர்கள்…மேலும் எனது அனைத்து படைப்புகளும் பரிபூரனமானவை. 

நீங்கள் ஒருபோதும் நியாயத்தீர்ப்பில் இருக்கமாட்டீர்கள், ஏனென்றால் பாவத்தை உங்கள் மீது சுமத்தப்பட முடியாது. பூமியின் அஸ்திவாரம் போடப்படுவதற்கு முன்பே, என்னுடைய நோக்கம் உங்களுடன் என் நித்திய ஜீவனைப் பகிர்ந்துகொள்வதாக இருந்தது.

இந்த வார்த்தைகளை ஒருவர் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என்ன நடக்கிறது என்பதை நம் மனம் எப்படி புரிந்து கொள்ளும்? என்ன வெளிப்படுகிறது? என்பதை யோசித்துப் பாருங்கள், “ஓ, அப்போஸ்தலர்கள் முதன்முதலில் அனுப்பப்பட்ட முதல் யுகத்தில் நான் அங்கேயே இருந்திருந்தால்” என்று நம் இருதயத்தில் அழ வேண்டிய அவசியமில்லை. நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் அவர் சார்ஹம்ஸத்திலும் அல்லது அவரது வழிகளிலும் மாறாதவர், இப்போது நம் மத்தியில் இருக்கிறார், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று நம்மிடம் பேசுகிறார். உலக வரலாற்றில் நாம் வாழும் இந்த ஜீவியமே மிகப்பெரிய நேரம்.

கிறிஸ்து விட்டுச் சென்ற துன்பங்களால் நாம் அடிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறோம். அறுக்கப்பட்ட ஆடுகளாகக் கணக்கிடப்படுகிறோம். நாம் நாள் முழுவதும் கொல்லப்படுகிறோம். நாம் மிகவும் கஷ்டப்படுகிறோம், ஆனால் எல்லாவற்றிலும், நாம் பழிவாங்குவதில்லை, மற்றவர்களை துன்பப்படுத்தவும் இல்லை. அவரைப் பொறுத்தவரை, நாம் தூய அடிக்கப்பட்ட தங்கமாக இருக்கிறோம், வணங்கவில்லை, உடைக்கப்படவில்லை, அழிக்கப்படவில்லை, ஆனால் இந்த ஜீவியத்தின் சோதனைகள் மற்றும் 

பரிட்சைகளால் என்றென்றும் அழகு மற்றும் மகிழ்ச்சியின் பொருளாக உருவானது. 

அவர் இப்போது மற்ற அனைவருக்கும், “உங்கள் முதல் காதலுக்குத் திரும்புகள்” என்று எச்சரிக்கிறார். நீங்கள் ஒரு வார்த்தையையும் மாற்ற முடியாது, ஒரு புள்ளி அல்லது கோடு கூட மாற்ற முடியாது என்பதில் அவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். அதுதான் ஏதேன் தோட்டத்தில் சாத்தானின் அசல் தந்திரம். ஒரு வார்த்தை சேர்க்கப்பட்டது, ஒரு வார்த்தை நீக்கப்பட்டது, அது வார்த்தைக்கு எதிரானது. 

இந்த கடைசி யுகத்தில் பல பொய்யான தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள் என்று எச்சரிக்கிறார், மக்களிடம் அவர்கள் கூறுவதை அவர்கள் நம்பாவிட்டால் நீங்கள் தொலைந்து போவீர்கள் என்று கூறுகிறார்கள். 

அதில் எதுவும் சேர்க்கப்படவில்லை, எதுவும் எடுக்கப்படவில்லை, எதுவும் மாற்றப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அஙகே ஒரே ஒரு வழி இருக்கிறது… அது தேவனின் தூய குரலைக் கேட்பதன் மூலம்… ஒலிநாடாவை இயக்கவும். 

தங்கள் வீடுகளில் தினமும் செய்தியைக் கேட்பதன் முக்கியத்துவத்தை தங்கள் ஆடுகளுக்குச் சொல்வதோடு மட்டுமல்லாமல், ஆனால் உண்மையான ஊழியராக இருந்து, இந்த செய்தியை, இந்த குரலை, இந்த ஒலிநாடாக்களை, முதலில் வைப்பதன் மூலம், உண்மையாக, விசுவாசத்தோடு கற்பித்த ஊழியர்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

இவற்றைச் சொல்வதன் மூலம், நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, சபைகளைப் பிளவுபடுத்துவதாகவும், மக்களை சபைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறேன். அது உண்மையல்ல. அவர்களின் சபைகளில் டேப்களை முதலாக வைக்காத இந்த சபைகளிலிருந்து மக்களை வார்த்தை அழைத்துச் செல்கிறது. தேவனின் தீர்க்கதரிசியின் வார்த்தையைக் கேட்க அவர்கள் பசியுடன் இருக்கிறார்கள். அவர்கள் கேட்க விரும்பும் மிக முக்கியமான செய்தி மற்றும் குரலாக இதை உணர்கிறார்கள். தங்கள் சபையில் டேப்களை இயக்குவது தேவனின் சரியான விருப்பம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

நான் மக்களிடம் எப்பொழுதும் கூறுவதுண்டு , “சபைகளுக்குச் செல்லுங்கள்” என்று கூறினேன். அவர்கள் இதைக் கேட்கும்போது: “பிரசங்கிகள் இன்னும் பிரசங்கிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டால் “ஆம்.” என்று கூறி அவர்கள் பிரசங்கிக்கக் கூடாது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை அல்லது நினைக்கவில்லை. நான் போதகர்கள், ஆசாரியர்கள்,  போதகர்களிடம்,  ” தேவன் உங்களை என்ன செய்ய அழைத்தாரோ அதைச் செய்யுங்கள், ஆனால் தயவு செய்து, உங்கள் ஊழியத்தை அல்ல, 

தேவனின் குரலை ஒலிநாடாவை முதலில் வைக்கவும்”. அதுவே என்னுடைய வெளிப்பாடு. அவர்கள் செய்ய நினைப்பது போல் செய்ய வேண்டும். நான் உணர்த்ப்பட்டதையும் பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் எனக்கு உரிமை உண்டு. சகோ. பிரன்ஹாம் சபையில் ஒலிநாடாவை இயக்கவேண்டும் என்று சொல்லவில்லை என்று அவர்கள் கூற விரும்பினால், தேவனின் குரலை அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், அது அவர்களுடையது.

பரிசுத்த ஆவியானவரே, எப்போதுமே அவருடைய மணவாட்டியை வழிநடத்துகிறார். “ஒலிநாடாவை இயக்கவும், என் தீர்க்கதரிசி, என் குரல், என் பரிசுத்த ஆவியுடன் தரிதிருங்கள்” என்று அவர் நம்மிடம் கூறுகிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம்.

சரி, இதற்கு முன் எலியா தீர்க்கதரிசியைப் போல நாம் அதை ஒரு மோதலைப் பெறுவோம். நீங்கள் தேவனின் பிள்ளையாக இருந்தால், நீங்கள் இந்த வேதாகமத்தின் தீர்க்கதரிசியுடன் தரித்திருப்பீர்கள். இந்த வார்த்தையோடு. இந்த மணிநேரத்தை, இந்த காலத்தையும் கவனியுங்கள். 

வேதாகமத்தின் தீர்க்கதரிசி யார், அந்த வார்த்தை, அந்த பரிசுத்த ஆவியானவர்!

பரிசுத்த ஆவியானவரே இந்த மணி நேரத்தின் தீர்க்கதரிசி; அவர் தனது வார்த்தையை நியாயப்படுத்துகிறார், அதை நிரூபிக்கிறார். பரிசுத்த ஆவி  மோசேயின் காலத்தின் தீர்க்கதரிசி. பரிசுத்த ஆவியானவர் மிகாயாவின் நேரத்தின் தீர்க்கதரிசி. வார்த்தையை எழுதிய பரிசுத்த ஆவியானவர் வந்து வார்த்தையை உறுதிப்படுத்துகிறார். 

இந்த நேரத்தின் பரிசுத்த ஆவியானவர் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் நம்மை வழிநடத்துகிறார், அவர் ஒவ்வொரு காலத்திலும் இதை செய்துள்ளார். தேவன் தனது திட்டத்தை ஒருபோதும் மாற்றுவதில்லை. 

ஆகையால், பரிசுத்த ஆவியானவர் தம் தீர்க்கதரிசி மூலம் பேசுவதைக் கேட்டு, நம்முடைய செய்தியைக் கொண்டு வரும்படி நம்மை வழிநடத்துவதன் மூலம், 60 -1205 அன்று பிரசங்கித்த” எபேசு சபை காலம்” என்ற செய்தியைக் கேட்க பிற்பகல் 12:00 மணிக்கு. , ஜெபர்சன்வில்லே நேரத்தில், தேவனின் நிகழ்ச்சித்திட்டமாக நாம் கருதும் செயலில் எங்களுடன் இனைய உங்களை அழைக்கிறோம்.

சகோ. ஜோசப் பிரன்ஹாம் 

அப்போஸ்தலர் 20:27-30 

வெளிப்படுத்துதல் 2:1-7 …