22-0508 கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட தேவரகசியமாயிருக்கிறார்

செய்தி: 63-0728 கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட தேவரகசியமாயிருக்கிறார்

PDF

BranhamTabernacle.org

அவரது இருதயத்தின் அன்பான ஆப்பிள்களே,

உலகிலேயே நான் மிகப் பெரிய ஸ்லாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன். கர்த்தரை உங்களுக்கு அறிமுகப்படுத்த என்னை அனுமதிக்கிறார், எனவே உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன் அவர் தேர்ந்தெடுத்த பாத்திரத்தின் மூலம் அவர் உங்களிடம் நேரடியாகப் பேச முடியும், அவருடைய எல்லா வார்த்தைகளையும் உங்களிடம் பேசவும் வெளிப்படுத்தவும் முடியும்.

இது தேவ மனுஷன் மட்டுமல்ல, அது தேவனே, அந்த அக்னி ஸ்தம்பம், அந்த பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் நேரடியாகப் பேசுகிறார், உதட்டிலிருந்து காதுக்கு, அவர் தேர்ந்தெடுத்த தீர்க்கதரிசி, நம்முடைய போதகர் என்று அழைக்க நமக்கு ஸ்லாக்கியமும், பாக்கியமும் உள்ளது.

நாம் கேட்பது ஒரு மனிதனையா, அவருடைய சிந்தனையா, அவருடைய யோசனையா அல்லது வார்த்தையின் விளக்கமா என்று யோசிக்க வேண்டாம். இது தேவன் தாமே நம்மிடம் பேசுகிறார், கர்த்தர் உரைக்கிறதாவது.

மக்கள் இதில் மூச்சுத் திணறுவார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நாம் அதைக் குடிப்போம். ஏனென்றால் அது மட்டுமே நம் தாகத்தைத் தணித்து, நம் ஆன்மாவைத் திருப்திப்படுத்துகிறது. இது நித்திய ஜீவனின் வார்த்தைகள். நமக்கு, இது தேவனின் குரல். இது இந்த மணி நேர செய்தி. எனவே, இது வார்த்தை, அந்த குரல், அந்த ஒலிநாடாக்கள் அல்லது எதுவும் இல்லை!

பழங்கால இஸ்ரேலைப் போல ஒரே தலைமையின் கீழ் நாம் ஒன்றுபட்டுள்ளோம். ஒரு தேவன், அக்னி ஸ்தம்பத்தில் நிரூபிக்கப்பட்டு, அவருடைய தீர்க்கதரிசி மூலம் தன்னை வார்த்தையாக வெளிப்படுத்துகிறார். அதே தேவன், அதே அக்னி ஸ்தம்பம், இன்றும் அதே வழியில். தேவன் தன் இயல்பை மாற்றவே முடியாது. அவரது திட்டம் அவர் தொடங்கியதிலிருந்து ஒருபோதும் மாற முடியாது, ஏனென்றால் அவர் எல்லையற்றவர் மேலும் அவரது திட்டம் மற்றும் அவரது யோசனைகள் அனைத்தும் சரியானவை.

அதனால்தான் அவர் ஞாயிற்றுக்கிழமை நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார் என்பதைக் கேட்க நாம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். இந்தச் செய்தி முழுக்க முழுக்க உண்மை என்பதை நாம் அறியும் வரை, அதன் நுனிகளிலும், உள்ளேயும் வெளியேயும் சுற்றிலும் அடித்து, வேதத்தின் மூலமும், காலவரிசைப்படியும் கட்டப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
அங்கே எந்த தவறும் இல்லை.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை, பரிசுத்த ஆவியானவர் செய்தியைப் பிடித்து இன்றைய நிலையில் வைக்கப் போகிறார். அவர் அதைத் தொடங்கிய இடத்திலிருந்து, நிகழ்காலம் வரை அதைக் கட்டியெழுப்புவார்.

ஞாயிற்றுக்கிழமை நமது போதகர் மூலம் தேவன் என்ன சொல்லப் போகிறார் என்பதையும் வெளிப்படுத்தப் போகிறார் என்பதை கொஞ்சம் குடிப்போம்:

நீங்கள் என் இருதயத்தின் ஆப்பிள், ஆவியானவராலும் சத்திய வார்த்தையாலும் கர்த்தருக்குப் பிறப்பிக்கப்பட்டவர்கள். உங்களை ஆசீர்வதித்து, கிறிஸ்துவின் அன்பின் பிணைப்புகளால் உங்களை நெருக்கமாகப் பிணைக்குமாறு நான் தேவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

கர்த்தர் உங்களுக்காக உணவைச் சேமித்து வைத்துள்ளார்; நல்ல, ஆரோக்கியமான தோற்றமுடைய காய்கறிகள், மேலும இங்கே இந்தக் கூடாரத்தில். இன்று, நீங்கள் முழுமையாக மேஜையில் சேகரித்ததைப் பெறப் போகிறீர்கள். நாம் ஜீவிக்கும் நேரத்தில் அது இயேசு கிறிஸ்துவை உங்களுக்கு வெளிப்படுத்தும். இந்தச் செய்தி உங்களைத் தாங்கி பலப்படுத்தும். இது உங்களுக்கு முன்னால் இருக்கும் பணிக்கான ஆவிக்குறிய பலத்தைத் தரும்.

நீங்கள் அதைக் கேட்க விரும்புவீர்கள் என்று எனக்குத் தெரியும் என்பதால் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்: நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நபர், அதை அவர்கள் மட்டுமே கேட்பார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டி, நீங்கள் வீழ்ச்சியடையமாட்டீர்கள், ஆனால் உலகின் மற்ற அனைவரும் அதைப் பற்றி என்ன சொன்னாலும் அந்த வார்த்தையைப் பற்றிக் கொள்வீர்கள். நீங்கள்தான் அந்த வார்த்தை மணவாட்டி!

தேவன் உங்களுக்கு இந்த பெரிய மர்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், அதுதான் ஒரு புதிய பிறப்பு. இப்போது அவர் உங்களை ஒன்றிணைக்கிறார், அங்கு வெளிப்பாடு சரியான இணக்கத்துடன் உள்ளது. தேவன் அதை தம் வார்த்தையின் மூலம் வெளிப்படுத்துகிறார், அதே செயல்களால், அதே காரியங்களால், அந்த வார்த்தையை உங்களில் பிரத்தியட்சமாக்கினார்.

நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது, பரிசுத்த ஆவியானவர் மட்டுமே கிறிஸ்துவின் தெய்வீக வெளிப்பாட்டை வெளிப்படுத்துபவர் மேலும் இது எல்லாக்காலங்களிலும் இருக்கிறது. நினைவில் கொள்ளுங்கள், எல்லா காலங்களிலும்! கர்த்தருடைய வார்த்தை யாருக்கு வந்தது? தீர்க்தரிசிக்கு, மட்டுமே.

நான் ஆயிரக்கணக்கானவர்களுடன் டேப்பில் பேசுகிறேன் என்பதை உணர்ந்தேன், உலகம் முழுவதிலும் டேப் ஊழியம் எங்களுக்கு கிடைத்துள்ளது. மற்ற இடங்களை விட பத்து மடங்கு சிறந்த டேப்பை இங்கிருந்து உருவாக்குகிறோம் என்று தெரிகிறது. இந்த டேப்பைக் கேட்கும் ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் இதைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இப்போது அவர்கள் எந்த டேப்பைக் கேட்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம், ஆனால் நீங்கள் இதைத் தவறவிடக்கூடாது என்று நான் விரும்புகிறேன். டேப் மக்களாகிய நீங்கள்; காடுகளிலே மற்றும் எங்கு கேட்டாலும், இப்போது கேளுங்கள்.

நாம் விசுவாசிக்கும் டேப்கள் நம்மிடம் உள்ளன. சபையில் ஒழுக்கத்தைப் பற்றிய டேப், தேவனின் சபையில் நாம் எப்படி நடந்துகொள்வோம் என்பதை பற்றிய டேப், இங்கே எப்படி ஒன்றாக வந்து பரலோகத்தில் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம் என்பது பற்றிய டேப்கள் நம்மிடம் உள்ளன.

டேப்பை பெற்றுள்ள அனைவருக்கும் அது கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் தோல்வியுற்றால், இந்த டேப்பிற்கு மீண்டும் வாருங்கள். இன்னும் எவ்வளவு காலம் உங்களுடன் இருப்பேன் என்று தெரியவில்லை. நினைவில் வையுங்கள், இதுவே கர்த்தர் சொல்லும் உண்மை. அது தான் உண்மை. இது வேதம்.

சரிரத்தின் தலைமைத்துவம் ஒன்றாக மாறிவிட்டது. அது தேவன் உங்களில் பிரத்தியட்ச்சம் ஆனது, அவருடைய மக்களே. அதனால்தான் கணவனும் மனைவியும் இனி இருவராக இல்லாததற்குக் காரணம் அதுதான்; அவர்கள் ஒன்றே. தேவனும் அவருடைய சபையும் ஒன்று, “உங்களில் உள்ள கிறிஸ்து,” தேவனின் பெரிய வெளிப்பாடாகும்.

இது என் யோசனையல்ல; அது அவருடைய வல்லமை, அது அவருடைய வார்த்தை. அவர் உறுதியளித்தார்; அது இங்கே உள்ளது. அது இங்கே இருக்கும், அது இங்கே இருக்கும் என்றார். நீங்கள் தேவனின் மகன்கள். நீங்கள் அப்படியாக இருப்பீர்கள் அல்ல; நீங்கள் இப்போதே அப்படியாக இருக்கிறீர்கள்!

எங்கள் கோப்பைகளை நிரப்புங்கள் ஆண்டவரே, நாங்கள் அதை உயர்த்துவோம் ஆண்டவரே, வந்து எங்கள் ஆன்மாவின் இந்த தாகத்தைத் தணியுங்கள். பரலோகத்தின் அப்பமே , எங்களுக்கு போதும் என்னும்வரை எங்களுக்கு உணவளிக்கவும். எங்கள் கோப்பையை நிரப்பவும், அதை நிரப்பவும், எங்களை முழுமையாக்கவும்.

ஞாயிற்றுக்கிழமை நாம் கூடிவரும்போது, உலகம் முழுவதும் எத்தகைய மறுமலர்ச்சியின் நேரத்தைக் கொண்டிருப்போம்: 63-0728 அன்று பிரசங்கித்த ,”கிறிஸ்து தேவனின் மர்மம்” என்னும் செய்தி மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரத்தில் வெளிப்படுகிறது.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

படிக்க வேண்டிய வேத வசனங்கள்

பரிசுத்த மத்தேயு – 16:15-17

பரிசுத்த லூக்கா – 24வது அதிகாரம்

பரிசுத்த யோவான் – 5:24 / 14:12

1 கொரிந்தியன் – 2வது அதிகாரம்

எபேசியர் – அதிகாரம் 1

கொலோசெயர் – 1 அதிகாரம்

வெளிப்படுத்துதல் – 7:9-10