22-0327 இடைவெளியில் நிற்றல்

செய்தி: 63-0623M இடைவெளியில் நிற்றல்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள விசுவாசம் உள்ளவர்களே,

இந்த கடந்த வாரங்களில் நம் அனைவரின் வாழ்விலும் மிகவும் மகிமையானகாலமாகும். தேவன் ஏழு முத்திரைகளை வெளிப்படுத்துவதைக் கேட்டுக்கொண்டு, உலகெங்கிலும் உள்ள அவரது மணவாட்டிகளுடன் ஐக்கியமாக இருப்பது மிகச் சிறந்த சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து என்ன கேட்டோம்?

“அந்த கூர்நினி கோபுரத்தின் உட்புறத்தில், எழுதப்படாத வெள்ளைக் கல் இருந்தது.” அந்த காரணமாகதான் நான் மேற்கு நோக்கி செல்ல வேண்டி இருந்தது.
இந்த தேவதூதர்களின் செய்திகளுடன் தொடர்பு கொண்டு, இங்கே திரும்ப வந்து சபைகளுக்கு அதை மீண்டும் வெளிப்படுத்த.

அந்த 7 தூதர்ககளுடன் இணைவதற்கு அவர் மேற்கு நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது, எழுதப்படாததைக் கூட  நமக்கு வெளிப்படுத்தத் திரும்பி வர வேண்டியிருந்தது; ஆனால் இப்போது, ​​வெளிப்படுத்துதல் மூலம், நமக்கு வெளிப்படுத்தப்பட்டு, நமக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான விசுவாசத்தை அளிக்கிறது.

இந்த செய்திகளை நம் வாழ்நாள் முழுவதும் கேட்டிருக்கிறோம், ஆனால் இப்போதோ அவை முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன; இப்போதுதான் அந்த  நாள், இப்போதுதான் அந்த நேரம். அவர் என்ன கூறினாரோ அது நடக்கப்போகிறதை நாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறோம், உலகத்திலும் சரி, இந்தச் செய்தியிலும் சரி, மேலும் அது இப்போது நம் கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்படுகிறது.

நமது 7வது தேவதூதர் பழங்கால தீர்க்கதரிசிகளைப் போல ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாரா? இல்லை, அவருக்கு முன் இருந்த எல்லா தீர்க்கதரிசிகளையும் விட மிக உயர்ந்த பதவிக்கு அவர் அழைக்கப்பட்டார். ஏனென்றால்,  மனுஷகுமாரன் தன்னை மனித மாம்சத்தில் வெளிப்படுத்துகிறார், 2000 ஆண்டுகளுக்கு முன்பு அவர் செய்ததுப்போலவே. நம் புதிய வீட்டிற்கு மணவாட்டியை வழிநடத்த நம் தீர்க்கதரிசி அழைக்கப்பட்டார், பின்னர் அவர் நம்மை தேவனுக்கு அறிமுகப்படுத்துவார்.

அவருடைய ஊழியம் மோசேயின் ஜீவியத்தைப்போல மிகசரியாக  செய்ததாக அவர் நம்மிடம் கூறினார். மோசே அக்னி ஸ்தம்பத்தை பின்தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தபோது, ​​மனிதர்கள் எழுந்து அவரை எதிர்கொண்டனர். இந்த மனிதர்கள் அழைக்கப்பட்டு, வாக்குத்தத்தம் தேசத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் மோசேக்கு சவால் விடுட்டார்கள், அவர் தன்னை அதிகமாகப் போட்டுக் கொண்டார் என்றார்கள்; பரிசுத்தவான்களில் அவர் மட்டும் அழைக்கப்படவில்லை, அவர்களும் பரிசுத்தவான்கள், அவர்களும் ஏதாவது பிரசங்கிக்க வேண்டியிருந்தது.

அவர் கூறினார் அவர்கள் பரிசுத்தமான மனிதர்கள், மேலும் அவர்களுக்கு உண்மையிலேயே ஏதாவது செய்ய வேண்டி இருந்தது, ஆனால் மக்களை வழிநடத்த தேவன் அவரை, மோசேயை, ஒரு மனிதரை, அந்த மக்களை வழிநடத்த அழைத்தார்.

அவர்களுகென்று இடம் இருந்தது. அவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள். “மோசே சொல்வதைக் கேளுங்கள்” என்று மக்களுக்குச் சொல்வதன் மூலம் அவர்கள் அழைக்கப்பட்டதையும் செய்ய நியமித்ததையும் அவர்கள் செய்து கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் இன்னும் ஏதாவது சொல்ல விரும்பினர் அல்லது மோசே என்ன சொல்கிறார் என்பதை விளக்க விரும்பினர். மோசேயின் பேச்சைக் கேட்க , ஜனங்களைக் குறிப்பதால் மட்டும் அவர்கள் திருப்தியடையவில்லை. அவர்கள் மக்களை வழிநடத்த விரும்பினர். அவர்கள் செய்ய நியமித்ததை விட அதிகமாக அல்லது வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினர்.

நம் தீர்க்கதரிசி யார், அல்லது அவர் என்ன செய்ய அழைக்கப்பட்டார் என்று உங்கள் மனதில் எப்போதாவது சந்தேகம் இருந்தால், நமது தீர்க்கதரிசியின் பெயரைப் பிரன்ஹாம்   (  B- R- A- N- H-A-M )  என்று வைப்பதன் மூலம் தேவன் பூமியில் என்றென்றும் அடையாளமாக உருவாக்கிய மலைத்தொடரைப் பார்க்க மேற்கு நோக்கி உங்களை அழைக்கிறேன். ,
அந்த மலையின் மேல்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி என்றால். அவர் உங்களைத் தேர்ந்தெடுத்து முன்னறிந்தார். அவருடைய வார்த்தை உங்களில் ஜீவித்து மற்றும் வாழ்கிறது. நீங்கள் மாம்சமாகிய உயிருள்ள வார்த்தையாக இருக்கிறீர்கள். அவர் உங்களுக்கு அவருடைய வார்த்தையின் வெளிப்பாட்டைக் கொடுத்தார். சாத்தானுக்கு உங்கள் மீது அதிகாரம் இல்லை. அந்த எடுத்துக்கொள்ளப்படுதலின் விசுவாசம் உங்களில் ஜீவித்து மற்றும் வாசம் செய்கிறது.

பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மணவாட்டியை இன்றைக்கு அவர் வழங்கிய ஒரே வழியின் மூலம் வழிநடத்துகிறார், அவருடைய 7வது தேவதூத தீர்க்கதரிசியின் மூலம் அந்த வார்த்தையானது பேசப்பட்டது. அந்த தீர்க்கதரிசியே நம் போதகர்.

எந்தவொரு புதிய டேப் செய்தியும் முதலில் சேமிப்புக்கிடங்கு வீட்டிலிருந்து வரும், கர்த்தர் அதை மாற்றும் வரை போதகர் எங்களுக்கு உறுதியளித்தார். அதற்காகவே சேமித்து வைக்கப்பட்ட நாடாக்கள் தயாரிக்கப்படும்.

அவர் தனது உதவி போதகர் சகோதரர் நெவில்லுக்கும், இப்போது அவருடைய அருளால் நானே, தேவாலயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

எங்கள் அன்பான போதகர் சகோதரர் நெவில்லுக்கு நீங்கள் உதவ வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். ஆண்டவரே, அவர் இந்தச் சேமித்த உணவை எடுத்து, தேவனின் ஆட்டுக்குட்டிகளுக்கு உணவளிக்கும்படி, அவரை கிருபையுடனும், வல்லமையுடனும், புரிந்துகொள்ளுதலுடனும் ஆக்குங்கள்.

இந்த ஒளிநாடாக்கள் தீர்க்கதரிசி போதகராக அழைக்கப்பட்டவர்களுக்கானது. கர்த்தர் சொல்வதை நீங்கள் கேட்க விரும்பினால், ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில்லி நேரப்படி 63-0623M அன்று பிசங்கித்த : இடைவெளியில் நிற்றல்  செய்தியை எங்களுடன் கேளுங்கள் , பத்தி எண் 27 இல் செய்தியைத் தொடங்குவோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

வேத வசனங்கள்


எண்ணகமம் 16: 3-4