22-0403 அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு

செய்தி: 63-0623E அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு

BranhamTabernacle.org

எல்லோரும் உள்ளே இருக்கிறீர்களா,

தேவனுக்கு மகிமை உன்டாவதாக, என்ன ஒரு நாளில் நாம் ஜீவிக்கிறோம். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று ஒவ்வொரு செயலாலும் நிரூபிக்கப்பட்ட ஒரு செய்தியை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர் பூமியில் இருந்தபோது அவர் செய்த அதே காரியங்களை அது செய்திருக்கிறது; வியாதியஸ்தரை சுகப்படுத்தி, இருதயத்தின் இரகசிய ங்களை அறிந்து, நடக்கவிருக்கும் விஷயங்களைக் வெளிப்படுத்தி, மறித்தவர்களை எழுப்பி, மேலும் ஒவ்வொரு முறையும் அது மிகசரியானதாக இருக்கிறது.

மலையின் உச்சியில் இருந்த மண்ணையெல்லாம் தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது. பாறையைத் தவிர வேறு எதுவும் இல்லை.அந்த கற்பாறைகள் மீது மர்மமான எழுத்து இருந்தது, எனவே தேவன் அவருடைய மணவாட்டிகளுக்கு எழுதப்பட்டதை விளக்குவதற்கு அவருடைய வலிமைமிக்க தீர்க்கதரிசியை அனுப்பினார். இப்போது வேதாகமம்மானது முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.

அவர் தனது வலிமைமிக்க தூதரை மலையின் மீது அழைத்துச் சென்று, ஆண்டவரின் வாளைத் தன் கையில் வைத்தார். அவருடைய தூதன் அந்த மலையின் உச்சியை வெட்டி மேலே உயர்த்தினார். அதன் உட்பகுதியில் வெள்ளைப் பாறை இருந்தது, கிரானைட் கற்களில் எழுதப்பட்டிருக்கவில்லை.

அவர் மேற்கு நோக்கிச் செல்லும்போது இதைப் பார்க்கச் சொன்னார். பின்னர் அவர் ஏழு தேவ தூதர்களின் நடுவில் சிக்கி, திரும்பி வந்து, பாறையில் எழுதப்படாத அனைத்தையும்கூட நமக்கு வெளிப்படுத்தினார்.

“இவர் என் ஊழியக்காரர். மேலும், மோசேயைப் போலவே மக்களை வழிநடத்தும் ஒரு இக்காலத்தின் தீர்க்கதரிசியாக நான் அவரை அழைத்தேன். அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது, அவர் நடைமுறையைப் பற்றி பேச முடியும். அல்லது மோசே செய்தது போல, ஈக்களில் பேசுவது போல. அணில்கள் மற்றும் பலவற்றைப் பற்றியும், ஏற்கனவே நடந்த விஷயங்களைப் பற்றியும் நமக்குத் தெரியும். லிட்டில் ஹாட்டி ரைட், அவளுடைய வீட்டில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

W-I-L-L-I-A-M M-A-R-R-I-O-N B-R-A-N-H-A-M இன்றைக்கு தனது மணவாட்டியை வழிநடத்த அவர் தேர்ந்தெடுத்த தேவனின் மனிதர். அவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மாம்சத்தில் வந்தபோது பேசியதைப் போல நம்மிடம் பேச அவர் தேர்ந்தெடுத்த மாம்சமானவர். ஒவ்வொரு வேதமும் அதை நிரூபிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தினார். இப்போது அவர் யாராக இருக்கிறார் என்றும், அவர் யார் என்றும், மேலும் நாம் யார் என்பதற்கான உண்மையான வெளிப்பாடு நம்மிடம் உள்ளது: நாம் அவருடைய தேர்ந்தெடுத்த இனிமையான மணவாட்டி.

அவருடைய வார்த்தையுடன் இருப்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை அறிவோம். இது அத்தகைய மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருகிறது. அது நமக்கு என்ன அர்த்தம் என்பதை வெறும் வார்த்தைகளில் மட்டும் வெளிப்படுத்த முடியாது.

அங்கே வித்தியாசமான ஒன்று இருப்பதை நாம் எப்போதும் நம் இருதயத்திலும் உள்ளத்திலும் ஆழமாக அறிந்திருக்கிறோம். நாம் பாவத்தில் இருந்தபோதும், நம்மால் விளக்க முடியாத ஏதோ ஒன்று இருந்தது என்பது நமக்குத் தெரியும், ஆனால் அது அங்கேயே இருந்தது. இப்போது நமக்கு தெரியும். இதற்கு முன்பு நாம் இதைப் போல் உணர்ந்ததில்லை, இனி எந்த சந்தேகமும் இல்லை, ஆச்சரியப்படுவதற்கு இல்லை, மேலும் கேள்வி கேட்கபதற்கும் இல்லை, இது நம் உள்ளத்தில் பொறிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. தேவனுக்கு மகிமை!!

நாம்தான் இவை அனைத்தும் நிகழும் வரை ஒழிந்து போகாத தலைமுறை. நம் கண் முன்னே நடக்கும் துரோகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் தலைமுறை நாம். நேரம் நெருங்கிவிட்டது. அவரது வருகையின் ஒளிரும் சிவப்பு விளக்கு இங்கே உள்ளது. அவரது கடைசி எச்சரிக்கை நடைபெறுகிறது.

மரணமும் அழிவும் நம்மைச் சுற்றியே இருக்கிறது. நாம் சோதோம் மற்றும் கொமோராவில் வசிக்கிறோம். அசுத்தம், பாவம், பயத்தால் மனிதனின் இதயம் செயலிழக்கிறது, அணுகுண்டுகள், நாடுகளுக்கு இடையே உள்ள துயரங்கள், மற்றும் தேவன் தாமே நமக்குச் கூறுகிறார் நாம் ஒன்றுபட்டு, முழு நேரமும் பரலோக சூழலில் ஒன்றாக அமர்ந்திருக்கும் வேலையில் , தேவன்தாமே கூறுகிறார் பயப்பட வேண்டாம், நீங்கள் என் இனிமையானவர்கள். உனக்கு எதுவும் ஆகாது. வழியில் நான் உங்களுடன் பேசும்போது உங்கள் இருதயங்கள் உங்களுக்குள் எரியட்டும், மேலும் நான் கூறுகிறேன் நீங்கள் என் மணவாட்டி .

இந்த ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அந்த சத்தமானது நடந்துக்கொண்டிருக்கும்போது, எங்களுடன் ஒன்றினையுங்கள். அந்த கடக்கும்போது போடப்படும் தடையானது கீழே வருகிறது. சிவப்பு விளக்கு ஒளிரத் தொடங்கியது.

நீங்கள் எங்களுடன் வர நினைத்தால், அந்த வேர்க்கடலைப் பையை கீழே எறிந்துவிட்டு, உங்கள் பேச்சை நிறுத்திவிட்டு, உங்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு தயாராகுங்கள் அல்லது நீங்கள் பின்தங்கிவிடுவீர்கள், ஏனெனில் அவர் உள்ளூரில் சில நிமிடங்களுக்கு மட்டுமே நின்றிறுப்பார். 63-0623E அன்று பிரசங்கித்த , அந்த ஒளிரும் சிவப்பு விளக்கான அவருடைய வருகையின் அடையாளத்தில் ,அவர் பேச வருகிறார்:

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

செய்திக்கு முன் படிக்க வேண்டிய வசனங்கள்:

பரிசுத்த மத்தேயு 5:28 / 22:20 / 24 அதிகாரம்

2 தீமோத்தேயு – 4வது அதிகாரம்

யூதா எழுதின நிருபம் 1:7

ஆதியாகமம் – 6 அதிகாரம்