23-0402 ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல்

செய்தி: 65-1204 ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல்

BranhamTabernacle.org

அன்புள்ள வார்த்தையின் மேல் வார்த்தையே,

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உலகம் முழுவதிலும் இருக்கும் இந்த “டேப் மக்களிடையே” என்ன நடக்கிறது என்று பல சபைகள் புதிருடனும், கலக்கத்துடனும், புரியாமலும் தடுமாறிக்கொண்டும் மற்றும் குழப்பமுற்றும் இருக்கின்றன. 

இது கிறிஸ்துவின் மணவாட்டிகளின் காணக்கூடாத ஒன்றியம், குமாரனின் முன்னிலையில் அமர்ந்து, பழுக்க வைக்கிறது, நம்மை தயார்படுத்துகிறது. நம் பரலோக மணவாளன் அவருடன் இருக்கும் நம் எதிர்கால வீட்டைப் பற்றி நம்மிடம் கூறுகிறார்.

சில வாரங்களுக்கு முன்புதான் அவர் நம்மிடம் கூறினார்: “இந்த உலகம் உங்கள் வீடு அல்ல, இது சாத்தானின் ஏதேன், மேலும் நான் அதை அக்னியால் அழிப்பேன். உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பே என் மணவாட்டிகளாக நான் தேர்ந்தெடுத்த என் அன்பு நிறைந்தவர்கள் நீங்கள். இப்போது, ​​இந்த ஞாயிற்றுக்கிழமை நான் உங்களுக்கு விரைவில் வரவிருக்கும் எடுத்துக்கொள்ளப்படுவதைப் பற்றிச் கூறப் போகிறேன். 

நாம் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறோம். அதை நாம் காற்றுவாக்கில உணர முடிகிறது. அவ்வளவு சீக்கிரமாக காரியங்கள் நடக்கின்றன. 

வேதாகமம் என்ன கூறின்னதோ அது இந்த நாளில் நடக்கும், அது நாளுக்கு நாள் நடக்கிறது. ஏன், அந்த பாலைவனங்களில் அது மிக வேகமாக குவிந்து கொண்டிருக்கிறது, மேலும் என்னால் அதைத் தொடர முடியவில்லை. நாம் இயேசுவின் வருகைக்கு மிக அருகில் இருக்கிறோம், அவருடைய சபையுடன் ஐக்கியமாக இருக்கிறோம், அங்கே அந்த வார்த்தையானது வார்த்தையாகிறது.

இந்த நாளின் மணவாட்டியான அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட சீமாட்டியான, நமக்காக இவை அனைத்தும் நடைபெறுகின்றன. இந்த விஷயங்கள் வெளிவருவதை நாம் மட்டுமே பார்க்கிறோம்.

அவர் இந்த யுகத்திற்குகாக நம்மை முன்னறிவித்துள்ளார், நம் இடத்தை வேறு யாரும் எடுக்க முடியாது. நாம் இப்போது வெளிப்படுத்தப்பட்ட மகன்கள் மற்றும் மகள்கள் அதனால் நாம் அவருடன் கூட்டுறவு கொள்ள முடியும்; அதைத்தான் அவர் விரும்புகிறார். 

நாம்தான் வார்த்தையின் மேல் வார்த்தையாகவும், கிருமியின் மேல் கிருமியாகவும், ஜீவனின் மேல் ஜீவனாகவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியின் முழு உருவமாகவும் இருக்கிறோம். 

உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால், பேசுங்கள். நீங்கள் வார்த்தையின் மேல் உள்ள வார்த்தை. நம்மைச் சுற்றியிருக்கும் உலகில் உள்ள இருளைப் பார்க்காதீர்கள்; சுகமின்மை, நோய், கொலை, விரக்தி, ஆணா பெண்ணா என்று தெரியாத மனிதர்களின் பைத்தியக்காரத்தனம். நாம்தான் மணவாட்டி, முன்னறிவிக்கப்பட்ட, நியாயப்படுத்தப்பட்ட, வெளிப்படுத்தப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி . 

எதற்கும் பயப்பட வேண்டாம். சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். நேரம் நெருங்கிவிட்டது. இந்த பூச்சிகள் நிறைந்த வீட்டை விட்டு வெளியேற நாம் உறுதி செய்கிறோம், மகிமை!!! 

வாருங்கள், ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஜெஃபர்சன்வில் நேரப்படி எங்களுடன்” ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளபபடுதலுக்கு” தயாராகுங்கள். நீங்கள் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டீர்கள். 

சகோ. ஜோசப் பிரான்ஹாம். 

சங்கீதம் 27:1-5