23-0326 கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு

செய்தி: 65-1125 கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு

BranhamTabernacle.org

அன்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டியே,

கர்த்தராகிய இயேசு இந்த ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டிற்கு வரும்போது நீங்கள் என்ன கொடுக்கும்படி இருப்பீர்கள் , உங்கள் படுக்கையில் அமர்ந்து, உங்கள் கண்களைப் பார்த்து, உங்களிடம் நேரடியாகப் பேசினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களால் பேச முடியாது. உங்களுக்கு பேசும்படி  இருக்காது. நீங்கள் செய்ய விரும்புவது எல்லாம் அவரைப் பார்த்து அழுவதுதான். வாயைத் திறக்கக்கூட பயப்படுவீர்கள். உங்களால் என்ன சொல்ல முடியும்? உங்கள் மனதில் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள், ஆண்டவரே, நீங்கள் இங்கே என் வீட்டில் இருக்க நான் மிகவும் தகுதியற்றவன். நான் தாழ்ந்தவர்களில் தாழ்ந்தவன். நான் உங்களை பல முறை தவறவிட்டேன் ஆண்டவரே, ஆனால் ஆண்டவரே, நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.

அப்போது நீங்கள் உங்கள் இருதயத்தில் உணர்ந்து கொள்வீர்கள், நான் என்ன நினைக்கிறேன் என்று அவருக்குத் தெரியும், அவருக்கு மறைவானது எதுவும் இல்லை. என் இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிவார்.

அவருடைய விலையேறப்பெற்ற கண்களை நீங்கள் பார்க்கும்போது, ​​அத்தகைய அன்பையும் இரக்கத்தையும் நீங்கள் காண்பீர்கள். அவருடைய வாயைக்கூட திறக்காமல் உங்களிடம் அவர் பேசிக் கொண்டிருப்பார். அவர் உண்மையிலேயே இங்கே, என் வீட்டில், என்னுடன் இருக்கிறார் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.

அவர் உங்களிடம் ஏதோ சொல்லப் போகிறார் என்பதை நீங்கள் பார்த்தவுடன் உங்கள் இருதயம் இன்னும் அதிகமாக துடிக்கத் தொடங்கும். ஒரே நேரத்தில், நீங்கள் இதுவரை கேட்டிராத இனிமையான குரல், “என் அன்பான அன்பே, கவலைப்படாதே, உன் பெயர் என் ஆட்டுக்குட்டியின் ஜீவ புஸ்கத்தகத்தில் உள்ளது. உங்கள் இயற்கையான சங்கத்தின் பழைய புத்தகம் அல்ல, ஆனால் எனது புதிய மணவாட்டி புத்தகம். இது என்னுடனான உங்கள் திருமண சான்றிதழ்.

என் அன்பே, உங்கள் பாவங்கள் மற்றும் தோல்விகள் அனைத்தும் மன்னிக்கப்பட்டதுமட்டும் அல்ல, ஆனால் எனக்கோ நீங்கள் நீதிமானாக்கப்பட்டவர்கள். என் கண்களில், நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

நீங்கள் என் விலைமதிப்பற்ற, நல்லொழுக்கமுள்ள, பாவமற்ற மகன் மற்றும் மகள். நீங்கள் தூய்மையாக நிற்கிறீர்கள்; என் சொந்த இரத்தத்தின் நீரால் கழுவப்பட்ட என் கலப்படமற்ற மணவாட்டி.

சந்திரன், நட்சத்திரங்கள் அல்லது மூலக்கூறுகள் இருப்பதற்கு முன்பே, நீங்கள் என் மகன் மற்றும் மகளாக இருந்தீர்கள். ஆரம்பத்தில் என்னில் இருந்த சரீர பண்புகளின்  வெளிப்பாடு நீங்கள்.

உங்கள் ஆவிக்குறிய மரபணு என்னுள் இருந்தது, ஏனென்றால் நீங்கள் எனது பண்புகளின் வெளிப்பாடு, எனது எண்ணங்கள். உலகம் அஸ்திபாரத்திற்கு முன்னும் கூட நீங்கள் என்னில் இருந்தீர்கள்.

குமாரனின் பிரசன்னத்தில் வைத்து, வார்த்தையைக் கேட்பதால் பழுத்துக்கொண்டிருக்கிறீர்கள்,நீங்களே என் ஆவிக்குரிய மணவாட்டி. இப்போது நீங்கள் ஒரு மறுமலர்ச்சியைப் பெறத் தொடங்கியுள்ளீர்கள், திரும்பி வந்து என் வார்த்தையுடன் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் என் தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டி சீமாட்டி.

நீங்கள் இப்போது என்னுடன் ஒரு ஆவிக்குறிய ஐக்கியத்தை கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மாம்சம் வார்த்தையாகிறது, மேலும் வார்த்தை மாம்சமாகிறது; பிரத்தியட்ச்சம் ஆக்கப்பட்டு மற்றும் நிரூபிக்கப்பட்டது. நான் என்ன கூறினேனோ அது இந்த நாளில் நிறைவேரும், அது நாளுக்கு நாள் நடந்துக்கொண்டிருக்கிறது. அந்த வார்த்தையானது வார்த்தையாகிறது.

இந்த கடைசி நாளுக்கான உண்மையான வெளிப்பாடு உங்களிடம் உள்ளது: இந்த செய்தியின் மூலம் என் மணவாட்டி ஒன்றுசேரப்படுகிறது. வேறு எந்த காலத்திலும் நான் இதை உறுதியளிக்கவில்லை. இந்த யுகத்தில் நான் உங்களுக்கு வாக்குறுதி அளித்தேன்: மல்கியா 4, லூக்கா 17:30, பரிசுத்த யோவான் 14:12, யோவேல் 2:38.

இந்த ஞாயிற்றுக்கிழமை நாம் நன்றி தெரிவிக்கும் விருந்து ஒன்றைக் கொண்டாடப் போகிறோம், அப்போது நான் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் கூறுவேன். நான் உங்களுடன் பல மணிநேரம் செலவிடுவேன், கூட்டுறவு மற்றும் என் வார்த்தையின் மீது விருந்துண்டு. என் வார்த்தை, என் தீர்க்கதரிசி, என் குரல், ஒலிநாடாவை இயக்குவதன் மூலம் நீங்கள் எனது சரியான பரிபூரண சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நான் என் வார்த்தையில் அவர்களிடம் கூறினேன், நான் வாசலில் நின்று தட்டுகிறேன். ஒருவன் என் குரலைக் கேட்டு, கதவைத் திறந்தால், நான் அவனிடம் வந்து , அவனோடு நான் ,  உணவருந்துவேன், அவன் என்னோடும் இருப்பான். பலர் கேட்க மாட்டார்கள், தங்கள் கதவைத் திறக்க மாட்டார்கள், ஆனால் வெளிப்பாட்டின் மூலம், நீங்கள் உங்கள் கதவைத் திறந்து என்னை வரவேற்றீர்கள்.

அவர்கள் தங்கள் சபைகளில் என் குரலை இயக்குவதில் உடன்படவில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியானவரை வார்த்தையால் தங்கள் மனதைத் தேட அனுமதித்தால், அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அபிஷேகம் செய்யப்பட்ட வார்த்தையாகிய கிறிஸ்து உங்கள் சொந்த மனசாட்சியைத் தேடட்டும். அவர் உங்களுக்குள் வரட்டும், அது சரியா இல்லையா என்று பாருங்கள்.

உங்களை ஒன்று சேர்ப்பது ஒரு பிரிவாக இருக்காது என்று நான் சொன்னேன், வேதாகமத்தில் உள்ள ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஆண்களின் குழுவாக இருக்கும் என்று நான் எப்போதாவது சொன்னேனா? இல்லை! இது ஒரு மனிதனின் செய்தி என்று நான் சொன்னேன்; மேலும் நீங்கள் கேட்டு மற்றும் கீழ்ப்படிந்தீர்கள்.

அவர்கள் ஆரம்பத்திலிருந்தே எனது அசல் திட்டத்தைக் கேட்டு ஏற்றுக்கொள்ளாததால், நான் அவர்களுக்கு போதகர்கள், ஆசிரியர்கள், அப்போஸ்தலர்கள், போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை அனுப்பினேன். ஆனால் எனது உண்மையான மற்றும் சரியான திட்டத்திறாக்கு அவர்களை திரும்பிச் செல்ல அவர்கள் அனுப்பப்பட்டனர். என் வலிமைமிக்க தீர்க்கதரிசி ஏனென்றால் அது உங்களுக்கு தேவனின் குரல்.

அவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், ஆனால் உங்களை வழிநடத்த எனக்கு ஒரே ஒரு தீர்க்கதரிசி தூதர் மட்டுமே இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசி. நான் உங்களிடம் பலமுறை சொன்னேன் அல்லவா, அவரால் பேசப்பட்ட என் வார்த்தைக்கு விளக்கம் தேவையில்லை,  அவர் கூறின்ன எதிலும் எதையும் சேர்க்கவோ எடுக்கவோ வேண்டாம், டேப்களில் அவர் சொன்னதைச் சொல்லுங்கள்? அதுதான் தீர்க்கதரிசி, பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துகிறார்.

உன்னை என் மணவாட்டி என்று அழைக்க நான் அனுப்பியவர் அவர். அவர்தான் உங்களை எனக்கு அறிமுகப்படுத்துவார். என் மணவாட்டியே, உன்னைப் பற்றிய முன்னோட்டத்தை அவருக்குக் காட்டியபோது என்னுடன் நின்றவர் அவர். சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சிகொடுக்க இயேசுவான நான் என்னுடைய தேவ தூதரை அனுப்பியிருக்கிறேன் என்று நான் சொன்னபோது, ​​அவரைப் பற்றி எல்லாவற்றையும் வெளிப்படுத்தினேன். இது நான் தான், நான் அவருடைய உடலையும் குரலையும் உன்னிடம் பேச பயன்படுத்துகிறேன்.

என்ன ஒரு அற்புதமான நாளை நாம் அவருடன் சேர்ந்து பெற்றுள்ளோம். நாம் நம் வாழ்வில் ஒருபோதும் மகிழ்ச்சியாகவோ அல்லது அதிக திருப்தியாகவோ இருந்ததில்லை. இதுதான். இதற்காகதான் நாம் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தோம்.

நம் உள்ளத்திலோ, மனதிலோ சந்தேகத்தின் நிழல் இல்லை. ஏனென்றால், நாம் கேட்கும் ஒவ்வொரு செய்தியிலும், நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். ஒரே ஒரு குரல் மட்டுமே உங்களை ஒன்றிணைக்கும், உங்களை முழுமையாக்கும் மற்றும் உங்களை ஒன்றிணைக்கும்…நான், நான் என் தீர்க்கதரிசி மூலம் பேசுகிறேன். அது அவருடைய வார்த்தைகள் அல்ல, என் வார்த்தைகள். இது நான் வழங்கிய வழி.

மேஜை முழுவதும் பரவியுள்ளது. இது முட்டைக்கோஸ், மற்றும் டர்னிப்ஸ், மற்றும் முள்ளங்கிகள் நிறைந்தது… வார்த்தையின் மேல் வார்த்தை, வார்த்தையின் மேல். முன்னெப்போதும் இல்லாத வகையில் நன்றி தெரிவிக்கும் விருந்து கொண்டாடப் போகிறோம். மணவாட்டி தங்களிடம் பேசும் தேவனின் குரலைக் கேட்பதற்காக அவர்களின் மேசைகளைச் சுற்றிக் கூடும் போது உலகம் முழுவதும் ஒரு ஜூபிலி இருக்கும். நம்முடைய வீடுகளும் சபைகளும் அவருடைய பிரசன்னத்தால் நிரப்பப்படும். நம்முடைய மகிமைகள், அல்லேலூயாக்கள் தவிற நாம் வேறெதுவும் பேச முடியாமல் இருப்போம், கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

மணவாட்டியின் குடும்ப நன்றி தெரிவிக்கும் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு வாருங்கள், அவர் நமக்கு உணவளிப்பதால். தாமதமாக்க வேண்டாம், ஞாயிற்றுக்கிழமை, சரியாக மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரத்தில் விருந்து தொடங்குவோம். அவர் அங்கு இருப்பார், ஏனென்றால் அவர் என்னிடம் கூறினார்.

நான் வருகிறேன், 65-1125 அன்று பிரசங்கித்த கிறிஸ்துவின் மணவாட்டியின் காணகூடாத இணைப்புப் பற்றி நான் உங்களுக்கு கூறுகிறேன்.

நான் உங்களை அங்கே மேசையில் பார்க்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

இப்படியாகவும் கூறலாம்: அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டி