22-0814 சிறந்த வேலைப்பாடு

செய்தி: 64-0705 சிறந்த வேலைப்பாடு

BranhamTabernacle.org

அன்புள்ள சிறந்தவேலைப்பாடுகளே 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நம் ஒவ்வொருவரைப் பற்றி நம் போதகர் சொன்னதை நினைவுபடுத்தாமல் நான் எப்படி இன்று எழுத முடியும்?

ஆனால் என்னால் எங்கு செல்ல முடிந்தாலும், எனக்குத் தெரிந்தவரை இந்தக் குழுவைப் போல் என்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு குழு எனக்கு இந்த பூமியில் இல்லை, தேவன் எப்போதும் நம்மை மிகவும் பிரிக்க முடியாதவர்களாக வைக்கட்டும், வரவிருக்கும் ராஜ்யத்தில் நாம் ஒன்றாக இருக்கவேண்டும்; அதுவே என் ஜெபம்.

தேவனின் தீர்க்கதரிசியோடும், தேவன் டேப்பில் பேசிய செய்தியோடும் நம்மைப் போல ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு குழு இந்த பூமியில் இல்லை. மேலும் நாம் அப்படி செய்வதால், அவருடனும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடனும் அந்தப் புதிய ராஜ்யத்தில் நாம் பிரிக்க முடியாதவர்களாக இருப்போம். இதைவிட எதுவும் சிறப்பாக இருக்க முடியாது! 

இவைகள்தான் நம் வாழ்வின் மிகச்சிறந்த நாட்கள். கிறிஸ்துவுக்கும் அவரது கடைசிக்கால செய்திக்கும் முட்டாளாக இருப்பதில் நாம் முழுமையாக திருப்தி அடைகிறோம். 

டேப்பில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிவாசிப்பதாலும், மேலும், ஓளிநாடாவை இயக்கவும் என்று கூறுவதாலும் நாம் வினோதமானவர்கள் என்று அழைக்கப்படுகிறோம்.

நாம் ஒரே ஒரு சபையை சேர்ந்தவர்கள். நாம் அதில் சேரவில்லை, நாம் அதில் பிறந்தோம். ஒவ்வொரு வாரமும் உலகம் முழுவதிலுமிருந்து நாம் ஒன்றுகூடி கிறிஸ்துவை நேசித்து, “ஓ, நான் உங்களை எவ்வளவாக நேசிக்கிறேன் ‘யேசுவே!’” என்று கூறுகிறோம். 

நாம் உலகிற்கு ஒரு வினோதமானவர்களாக இருக்கலாம், ஆனால் பிதா நம் நாளில் தன்னைப் பற்றிய வெளிப்பாட்டை நமக்கு கொடுத்தார், தேவன் மாமிச சரிரத்தில் இருக்கிறார், அது அவருடைய மணவாட்டியாகிய நம்மை அவரிடம் இழுத்தது. 

இது எவ்வளவு எளிமையானது நாம் இதை நாம் நேசிக்கிறோம், ஆனால் அதே நேரத்தில், அது எவ்வளவு ஆழமானது. ஆனால் அதைப் பார்க்க உங்களிடம் ஒரு வெளிப்பாடு இருக்க வேண்டும், மேலும் அது நம்மிடம் இருக்கிறது. 

மனித திரையில் தன்னை மறைத்து, அவருடைய சபையில் மறைத்துக்கொண்டு, உங்கள் விசுவாசத்தினாலும், என் விசுவாசத்தினாலும் அவரை வெளிப்படித்திக்கொண்டு, ஒன்றாக, ஒன்றுசேர்ந்து, தேவனுடன் ஒன்றாக ஆகுவது. நீங்கள் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது; நான் இல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது; மேலும் தேவன் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. எனவே, ஒன்றாக இருப்பது அது நம்மை ஒருமித்து வைக்கிறது, அது இணைக்கிறது. தேவன் என்னை ஒரு காரணத்திற்காக அனுப்பினார்; நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா; மேலும் அதோ அது நடக்கும். அது அப்படியே, பாருங்கள், அது உறுதி செய்யப்பட்டது.

அன்றைக்கு எம்மாவு சாலையில் நடந்து செல்லும் மனிதர்களைப் போன்றவர்கள் நாம். பகலில் அவர் நம்முடன் பேசுவதை நாம் கேட்கிறோம். பிறகு நாம் அவரை நம் வீடுகளுக்கு அழைக்கிறோம், அதனால் அவருடன் மட்டுமே நாம் இருப்பதற்காக. பின்னர் அவர் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றைச் செய்கிறார், நித்திய ஜீவஅப்பத்தை உடைக்கிறார். நாம் அவரை உடனடியாக அடையாளம் காண்கிறோம். அப்போது நாம் , வழியில் அவர் நம்முடன் பேசும்போது நம் இருதயம் நமக்குள் எரியவில்லையா என்று கூறுகிறோம். 

ஒவ்வொரு வாரமும் நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிவருகிறோம், “இந்த வாரம் அவர் என்ன சொல்லப் போகிறார் மற்றும் என்ன நமக்கு வெளிப்படுத்தப் போகிறார்” என்று ஆச்சரியப்படுகிறோம். நாம் ஒருவருக்கொருவர் மேற்கோள்களைப் பகிர்ந்து கொள்கிறோம், வாரம் முழுவதும் அதைப் பற்றி பேசுகிறோம். “அவர் சொன்னதை நீங்கள் கேட்டீர்களா”: என்று கூறுகிறோம்.

எனது தலைசிறந்த படைப்பை உருவாக்க எனக்கு நாலாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன; ஆனால் இப்போது நான் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக மற்றொரு தலைசிறந்த படைப்பை உருவாக்கி வருகிறேன், நீ, என் மணவாடடியே. எனது முதல் தலைசிறந்த படைப்பான எனது வார்த்தையை உருவாக்கியதைப் போலவே, அவருடைய ஒருபோதும் மாறாத முறையால் அதைச் செய்துள்ளேன். அதுதான் நான் எனது தலைசிறந்த படைப்புகளை உருவாக்குகிறேன், ஏனென்றால் அது சரியான வார்த்தையாக இருக்கும்போது மட்டுமே நீங்கள் ஒரு சிறந்த தலைசிறந்த படைப்பாக இருக்க முடியும்.

 என் சகோதரனே, இதைப் பற்றி தவறாக நினைக்காதே, ஆனால் ஒரு நிமிடம் யோசி. அவர் மணவாட்டியை உருவாக்க, அவரிடமிருந்த அசல் படைப்பை அவர் எடுத்தார் என்றால், அவர் வேறொரு படைப்பை உருவாக்கவில்லை. அவர் அசல் படைப்பின் ஒரு பகுதியை எடுத்தார். பின்னர், அவர் வார்த்தையாக இருந்தால், மணவாட்டி என்னவாக இருக்க வேண்டும்? அது அசல் வார்த்தையாக இருக்க வேண்டும், வார்த்தையில் ஜீவிக்கும் தேவன். 

நாம் ஜூபிலியைப் பற்றி பேசுகையில். நாம் அந்த அசல் படைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறோம். நாம் அசல் வார்த்தையின் ஒரு பகுதியாக இருக்கிறோம். தேவன் நம்மில் ஜீவிக்கிறார். நாம் அவருடைய தலைசிறந்த வேலைப்பாடு. நாம் அவருடைய தீர்க்கதரிசியுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் குழுவாக இருக்கிறோம். அவருடைய தீர்க்கதரிசி மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் நாம் பிரிக்க முடியாதவர்கள். நாம் அவருடன் ஒருவராக இருக்கிறோம். 

எங்களில் உள்ளதைப் போல உங்கள் இருதயமும் உங்களுக்குள் எரிய வேண்டும் என நீங்களும் விரும்பினால், இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில்லி நேரத்தில் எங்களுடன் இனையுங்கள், மணவாட்டிகளின் ஒரு பகுதி ஒன்று கூடி அவரை நம் வீட்டிலும், நம் சபைகளிலும், தேவன் பேசுவதைக் கேட்கும்போதும், நித்திய ஜீவனின் வார்த்தைகளை நமக்கு வெளிப்படுத்தும்போதும், அவர் நமக்குச் : சிறந்த வேலைப்பாடு 64-0705. 

செய்தியைக் கொண்டுவருகையில்

சகோ. ஜோசப் பிரான்ஹாம் 

செய்திக்கு முன் படிக்க வேண்டிய வேதம்: 

ஏசாயா 53:1-12 

மல்கியா 3:6 

பரிசுத்த மத்தேயு 24:24 

பரிசுத்த மாற்கு 9:7

 பரிசுத்த யோவான் 12:24 / 14:19