23-0507 சிமிர்னா சபையின் காலம்

செய்தி: 60-1206 சிமிர்னா சபையின் காலம்

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள உண்மையான விசுவாசிகளே,

நாம் எகிப்திலிருந்து வெளியேறி, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்ட இஸ்ரவேலின் குழந்தைகளைப் போல இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றாக பயணித்தோம். தேவனின் ஒரே அற்புதங்களை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்; அடிக்கப்பட்ட பாறையில் இருந்து ஒரே மன்னா மற்றும் தண்ணீரை அனைவரும் உண்டனர். நாம் அனைவரும் அக்னி ஸ்தம்பத்தை பின்பற்றுவதாகக் கூறி உரிமை கோறினோம். ஆனால் அப்போது வாக்களிக்கப்பட்ட தேசத்தை அடைந்தது இருவர் மட்டுமே. ஏன்? இருவர் மட்டுமே உண்மையானவர்கள் அல்லது உண்மையான விசுவாசிகள். அன்றும் இன்றும் என்ன வித்தியாசம்? உண்மையான விசுவாசிகள் வார்த்தையுடன் தறித்திருந்தார்கள்.

ஆவியானவர் சொல்வதைக் கேட்கக்கூடிய ஒரே ஒரு விசேஷமான குழு மட்டுமே உள்ளது. உண்மையான வெளிப்பாட்டைப் பெறும் ஒரு விசேஷமான குழு. அந்தக் குழு தேவனுடையது. அவர்கள் ஆவியானவர் சொல்வதைக் கேட்டு, அதைப் பெற்றுக்கொண்டார்கள்.

நாம்தான் தேவனுடைய ஆவியைக் கொண்ட அந்த விசேஷ குழுவாக இருக்கிறோம். நாம் தேவனால் பிறந்தவர்கள். நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆவியால் அவருடைய சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பெற்றவர்கள்.

ஆவியானவர் சொல்வதைக் கேட்பதே உண்மையான ஆதாரம். அந்த ஆவியானது பேசுகிறது. அந்த ஆவியானது போதிக்கிறது. தான் வரும்போது செய்வேன் என்று இயேசு சொன்னது அதைத்தான். யோவான் 14:26, “அவர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.”

அவர் நம் ஒவ்வொருவரிலும் ஜீவிக்கிறார் என்று இயேசு நமக்கு வாக்குறுதி அளித்தார். அவர் நம்மை தனி நபராக முன்சென்று, வழிநடத்தி, நடத்துவார். ஆனால் இன்று 72 ஆண்டுகளுக்கு முன்பு, தேவன் தனது வலிமைமிக்க தேவ தூதர் மூலம் பேசி, “நான் உங்களுக்கு தேவனின் குரல்” என்று உலகிற்கு அறிவித்தார். “பரிசுத்த ஆவியான எனக்கு ஒரு குரல் இருக்கிறது, உங்களிடம் பேசவும், என் எல்லா ரகசியங்களையும் வெளிப்படுத்தவும் பயன்படுத்துவேன்” என்று அவர் ஒவ்வொரு உயிரினத்திடமும் கூறினார். அவரது குரல் நம்மிடம் உதட்டிலிருந்து காதுக்கு பேசுவதை நாம் கேட்பதற்கு, அவரது குரலைப் பதிவுசெய்ய அவருக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை,

ஒலிநாடாக்களில் அவருடைய குரலைக் கேட்பதன் மூலம், நீங்கள் கேட்பது உண்மை என்று நீங்கள் ஆச்சரியப்படவோ, நம்பவோ அல்லது பிரார்த்தனை செய்யவோ வேண்டியதில்லை. ஒலிநாடாவை இயக்கினால் போதும், “இது கர்த்தர் உரைக்கிறதாவது” என்று தேவனின் குரல் அவர்களுக்கு அறிவிப்பதை அவர்கள் கேட்க முடியும்.

உங்களுக்கு சுகமளித்தல் தேவையா: ஒலிநாடாவை இயக்கவும். திருமணம் செய்ய வேண்டுமா: ஒலிநாடாவை இயக்கவும். புதைக்கப்பட வேண்டுமா: ஒலிநாடாவை இயக்கவும். உங்கள் இருதயத்தில் ஒரு கேள்வி உள்ளதா: ஒலிநாடாவை இயக்கவும். உங்களுக்கு ஏதாவது ஆலோசனை தேவையா: ஒலிநாடாவை இயக்கவும். நீங்கள் உங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டுமா: ஒலிநாடாவை இயக்கவும். உங்கள் வாழ்க்கையை என்ன செய்வது என்று தெரியவில்லையா: ஒலிநாடாவை இயக்கவும், ஒலிநாடாவை இயக்கி பரிசுத்த ஆவியானவர், உங்களுடன் தேவனின் குரலில் ,உதட்டோடு காதுகளுக்கு பேசுவதைக் கேளுங்கள்.

பரிசுத்த ஆவியானவரே இன்றைய நாளின் தீர்க்கதரிசி. அவர் உலகிற்குச் சொன்னார், இது உங்களுக்கு என் குரலாக இருக்க நான் முன்னறிவித்த குரல். நான் மற்றவர்களை என் பரிசுத்த ஆவியால் நிரப்புவேன், உங்களுக்கு உதவ நான் அவர்களை அனுப்பியுள்ளேன், ஆனால் என்னிடம் ஒரே ஒரு குரல் மட்டுமே உள்ளது, அதை நான் என் குரல் என்று அறிவிக்கிறேன்.அவரைக் கேளுங்கள் என்று உலகிற்கு நிரூபிப்பதற்காக அவருடன் எனது புகைப்படத்தையும் எடுத்துள்ளேன்.

தயவுசெய்து என்னை தவறாக எண்ணாதீர்கள். ஆம், அபிஷேகம் செய்யப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட தேவனின் மனிதர்கள் இருக்கிறார்கள், அவர் தம் பிள்ளைகளுக்கு உதவி செய்ய அழைத்திருக்கிறார். அவர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டுகிறேன். அவர்களும் உங்களுக்கு அறிவுரை, ஆறுதல் மற்றும் ஜீவியப் பயணத்தில் வழிகாட்டலாம். தேவன் ஒரு நோக்கத்திற்காக அவர்களை இங்கு வைத்துள்ளார். ஆனால் நீங்கள் பெறக்கூடிய மிக முக்கியமான அறிவுரையும், ஆறுதலும் மற்றும் வழிகாட்டுதலும், ஒலிநாடாவை இயக்குவதன் மூலம் உங்களுடன் பேசும் தேவனின் குரலில் மட்டும்தான். நான் உங்களுக்குச் கூறும் எதுவும், அல்லது வேறு எந்த மனிதன் கூறுவதும், அது முதலில் டேப்பில் உள்ள தேவனின் குரலில் இருந்தே வர வேண்டும்.

உங்களுடன் பேசும் தேவனின் குரலைக் கேட்பதை விட உங்கள் ஜீவியத்தில் முக்கியமானது எதுவுமில்லை.தேவனின் நியாயமான குரலுக்கு செவிசாய்ப்பதை விட, இந்த உலகில் நான் செய்யக்கூடிய பெரிய காரியம் அல்லது என் வாழ்க்கையில் வேறு ஏதாவது முக்கியமானது இருக்கிறதா? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். சகோ. ஜோசப் கூறுவதைக் கேட்பதா? இல்லை, வேறு எந்த மனிதன் பேசுவதைக் கேட்பதா? இல்லை. ஆனால் அந்த குரலை விட பெரிது வேறு எதுவும் இல்லை.

யாரேனும் தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் வெளிப்பாடு மற்றும் பரிசுத்த ஆவி இருந்தால் அவர்கள் இதற்கு ஆமென் என்று சொல்ல வேண்டும். ஒலிநாடாவை இயக்குவதை விட பெரியது இந்த உலகில் எதுவுமில்லை.

அந்த வார்த்தையுடன் தறித்திருக்க இந்த இறுதி நேரத்தில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். தேவனின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் போப்பின் வார்த்தைகளில் இருந்து, பேசப்பட்டவற்றின் ஒரு புள்ளி அல்லது கோடு மாற்றுவதால் தேவனின் பார்வையில், இது அனைத்தும் வார்த்தைக்கு எதிரானது, இது அந்து கிருஸ்து.

சாமுவேலின் காலத்து மக்களைப் போல் நாம் இருக்க விரும்பவில்லை.

அவர்கள் சாமுவேலை அணுகி ஒரு ராஜாவைக் கேட்டபோது. சாமுவேல் அவரது இருதயம் ஏறக்குறைய தோல்வியடையும் அளவுக்கு திகைத்துப் போனார். இந்த பரிசுத்தப்படுத்தப்பட்ட, வேதம் நிரூபிக்கப்பட்ட தீர்க்கதரிசி மூலம் தேவன் தம் மக்களை வழிநடத்தி வருகிறார், மேலும் அவர் நிராகரிக்கப்பட்டதாக உணர்ந்தார்…

தேவனின் அற்புதங்கள், ஞானம், ஏற்பாடு மற்றும் பாதுகாப்பை நாம் பாராட்டுகிறோம். நாம் அதை விசுவாசிக்கிறோம். நாம் அதை விரும்புகிறோம். மேலும் அது இல்லாமல் இருக்க நாம் விரும்பவில்லை. ஒரு ராஜா நம்மை போருக்கு வழிநடத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் …

“…நம்மை வழிநடத்த நம்மில் ஒருவரான ராஜா வேண்டும்.”

மேலும் தேவன் சாமுவேலிடம் கூறினார், “கவனி, அவர்கள் உன்னை நிராகரிக்கவில்லை, ஆனால் அவர்கள் என்னை ஆளாதபடி என்னை நிராகரித்தார்கள்” என்றார்.

மாறாக, எலியாவிடம் பேசும்போது எலிஷாவைப் போல் உணர்கிறோம். எலியா அவரிடம் வெளிப்படையாகச் சொன்னார், (இன்று அவர் டேப்பில் சொன்னதுதான்,) நான் போகும் வரை நீ இங்கேயே இரு. எலிஷா அதை செய்யமாட்டார், அதைச் செய்ய முடியவில்லை, அவருடைய நாளுக்கான வார்த்தையின் வெளிப்பாடு அவருக்கு இருந்தது.

இப்போது, ​​அவர்கள் பயணம் செய்து, பள்ளிக்கு வருவதைப் பார்க்கிறோம். அதற்கு அவன், “நீ இப்போது இங்கேயே இரு. இங்கே இருங்கள், குடியேறி, இறையியலின் நல்ல ஆசிரியராக இருங்கள், மேலும் பல. நீங்கள் ஒருவேளை, ஒருநாள், இங்குள்ள கல்லூரியின் டீன் ஆகலாம். ஆனால் நான் இன்னும் சிறிது தூரம் கீழே செல்ல வேண்டும்.

57 தேவனின் ஒரு மனிதன் கல்லூரியின் டீனாக இருப்பதில் திருப்தி அடைவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இல்லை ஐயா. அவர், “ கர்த்தர் ஜீவிக்கிறார் அதுப்போல் உன் ஆன்மா ஜீவிக்கும்   அதில். எனக்கு அது பிடிக்கும். உங்கள் தாயாரிடமிருந்தோ, உங்கள் பாப்பாவிலிருந்தோ அல்லது உங்கள் போதகரிடமிருந்தோ எவ்வளவு ஊக்கம் வந்தாலும், அதனுடன் தறித்திருங்கள். அவருடன் தறித்திருங்கள்.

கர்த்தர் ஜீவிப்பதால், நான் ஒலிநாடாவை இயக்குவதன் மூலம் தேவனின் குரலுடன் தறித்திருப்பேன், ஏனென்றால் இது கர்த்தர் உரைக்கிறதாவது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்கள் மந்தையுடன் இனையுங்கள், அவருடைய குரல் நம்மிடம் பேசுவதைக் கேட்கவும் மேலும் நமக்கு வெளிப்பாட்டைக் கொண்டு வரவும்,60-1206 அன்று பிரசங்கித்த : சிமிர்னா சபையின் காலம் என்ற செய்தியைக் கேளுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

வெளிப்படுத்துதல் 2:8-11