22-0130 முதலாம் முத்திரை

செய்தி: 63-0318 முதலாம் முத்திரை

PDF

BranhamTabernacle.org

அன்புள்ள பரலோகத்தின் ராணியே,

நான், உன்னுடைய ராஜா, ஞாயிற்றுக்கிழமை உன்னிடம் இடி முழக்கம் இட்டு , நீ என் மணவாட்டி என்று கூறப்போகிறேன். நான் உன்னை முன்னறிதேன். நான் உன்னை மீட்டுவிட்டேன். நான் உன்னை நீதிமானாக்கினேன், உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்த்தகத்தில் உன்னுடைய பெயரை வைத்தேன். நீ என்னுடை இனிமையான ராணி.

நான் உனக்காகக் காத்திருந்து மேலும் காத்திருந்தேன், அதனால் என் முதல் ஆதாம் இழந்த அனைத்தையும் என்னால் மீட்டெடுக்க முடிந்தது. அவன் இழந்த அனைத்து உரிமைகளும். அவனது கூட்டுரவு மற்றும் மேலும் ஜீவியத்திற்கான உரிமை. நான் அவனுக்கு பூமியின் முழுமையான மற்றும் மேலான கட்டுப்பாட்டைக் கொடுத்தேன். நான் பிரபஞ்சத்தின் தேவனாகவும் அவன் பூமியின் தேவனாகவும் இருந்தான்.

இந்த பூமியை அவன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். அவனால் பேச முடியும், அவனால் பெயரிட முடியும், அவனால் இயற்கையை நிறுத்த முடியும், அவன் விரும்பிய எதையும் செய்ய முடியும். ஆனால் அவன் அனைத்தையும் இழந்தான்.

இப்போது, என் வார்த்தையில் நான் உங்களுக்கு உறுதியளித்தபடி, அவன் இழந்த அனைத்தையும் நான் மீட்டுத் தந்துள்ளேன். அது மீட்கப்பட்டது. ஆதாமினால் இழந்த அனைத்து சட்டப்பூர்வ உடைமைகளும் இப்போது உங்களுடையது. நித்திய ஜீவனின் சுருக்கமான உரிமைப் பத்திரத்தின் சட்டப்பூர்வ உடைமை, அதாவது ஆதாம் இழந்த அனைத்தையும் இப்போது நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.

நான் உங்கள் இனத்தான் மீட்பர் ஆனேன். என்னுடையதை நான் உரிமை கோரினேன். நான் என் பிதாவின் கையிலிருந்து மீட்பின் புத்தகத்தை எடுத்து, புத்தகத்திலிருந்து முத்திரைகளைக் கிழித்து, அதை உங்களுக்கு வெளிப்படுத்த என் ஏழாவது தேவ தூதரை அனுப்பினேன். அவர் உங்களுக்கு அசல் வேதாகமத்தின் விசுவாசத்தை மீட்டெடுப்பார், மேலும் எனது எல்லா ரகசியங்களையும் அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

நான் என் முதல் முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட ஆதாமின் மூலம் இவற்றை உங்களுக்கு வெளிப்படுத்தி நிரூபித்துள்ளேன்; என் ஏழாவது தேவ தீர்க்கதரிசி தூதர். அவர் பேசி, அணில்களை உருவாக்கவும், மீனுக்கு மறுபடியும் உயிர் கொடுக்கவும், வளிமண்டலத்தை கட்டுப்படுத்தவும், புயல்களை வந்த இடத்திற்குகே திரும்பவும் அனுப்ப முடியும். அவர் பேசி மறித்தவர்களை எழுப்பவும் முடியும். உலகுக்குக் காட்டுவதற்காக அவருடன் எனது படத்தையும் எடுத்திருந்தேன், இது எனது முதல் மீட்டெடுக்கப்பட்ட ஆதாம், அவருக்கு செவிக்கொடுங்கள் . இப்போது நீ, என்னுடைய ராணியே, ஆதாம் இழந்த அனைத்தும் உன்னுடையது.

நான் வரும் நேரத்தில் என் ஏழாவது தூதர் பூமியில் இருப்பார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களை எனக்கு அறிமுகப்படுத்துவார். அந்த கடைசி எக்காளம் சத்தத்தின்போது, கிறிஸ்துவில் மறித்தவர்கள் உயிர்த்தெழுவார்கள். என் ஏழாவது தூதர் தனது செய்தியைக் கொடுக்கும் அதே நேரத்தில், உயிருடன் இருப்பவர்களும் எஞ்சியிருப்பவர்களும் அவர்களுடன் சேர்ந்து ஆகாயத்தில் என்னைச் சந்திப்பார்கள். கடைசி முத்திரை திறக்கப்பட்டது. அந்த கடைசி எக்காளம் ஒலிக்கும்; நான் என் உடைமைகளைப் பெற வெளியே வருவேன், உங்களை, பின்னர் உங்களை நம் திருமண விருந்துக்கு அழைத்துச் செல்வேன்.

என் அன்பான ராணியே, நான் உங்களுடன் பேசுவதைக் கேளுங்கள், உனக்குத் தேவையான அனைத்தையும் உனக்கு வெளிப்படுத்துகிறேன். இந்த உணவை உனக்காக சேமித்து வைத்துள்ளேன், அதனால் நீ என் ராணியாக ஆகலாம். நான் ஜெபர்சன்வில்லி நேரத்தில் மதியம் 12:00 மணிக்கு உன்னுடன் பேசுவேன், அங்கு நான் உனக்கு 63-0318 அன்று பிரசங்கித்த முதலாம் முத்திரையை இடி முழக்கமிடுவேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

செய்தியைக் கேட்பதற்குத் தயாராக படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

பரிசுத்த மத்தேயு 10:1 / 11:1-14 / 24:6 / 28:19
பரிசுத்த யோவான் 12:23-28 அப்போஸ்தலர் 2:38
2 தெசலோனிக்கேயர் 2:3-12
எபிரெயர் 4:12
வெளிப்படுத்துதல் 6:1-2 / 10:1-7 / 12: 7-9/ 13:16 / 19:11-16
மல்கியா 3வது மற்றும் 4வது முழு அததியாயங்கள் மேலும்
டானியல் 8:23-25 / 11:21 / 9:25-27