செய்தி: 65-0725m கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்
கழுகுகள் ஒன்றாக கூடுகின்றன
அன்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மணவாட்டியே,
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம், இயேசு கூறினார் ஏமாற்றப்படாமல் இருப்பதற்காக,
ஏனென்றால் அவர்கள் அந்த வார்த்தையாக இருக்கிறார்கள். அவர்கள் வேறு ஒன்றுமாக இருக்க முடியாது. அவர்கள் வேறு எதையும் கேட்க முடியாது. அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது.
இந்த வார்த்தைகளை பேசுவதற்காக தேவன், இந்த உலகின் அஸ்திவாரம்
முன்பே தனது தீர்க்கதரிசியை தேர்ந்தெடுத்தார் என்பதை அறிவதை விட ஜூவியத்தில் பெரிது எதுவுமில்லை. பின்னர், அவர் தனது குரலைப் பதிவு செய்ய அனுமதித்தார், எனவே அவரின் முன்
அறிந்த மணவாட்டி, அவரின் அந்த பதிவுசெய்த மற்றும் சேமித்து வைத்துக் குரலைக் கேட்கலாம், ஏனென்றால் நமக்கு இவை
தெரிய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்:
• நாம் தான் வார்த்தை.
• நம்மை ஏமாற்ற முடியாது.
• நாம் வேறு ஒன்றுமாக இருக்க முடியாது .
• நாம் வேறு எதையும் கேட்க முடியாது.
• நமக்கு வேறு எதுவும் தெரியாது.
வரலாற்றில் வேறு எந்த நாளிளும் இல்லாத அளவுக்கு இன்று நமக்கு ஊக்கம் தேவை என்று அவருக்குத் தெரியும். முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்கள் தீவிரமடைகிறது. அவரது மணவாட்டி சோதனைக்கு உட்படுத்தப்படுவாள். ஆனால் அவர் தனது மணவாட்டிக்கு
அவர்கள் யார் என்பதை நினைவூட்ட முடிந்தால், அவருடைய பரிபூரண விருப்பத்தில் அவர்கள் அவருடைய அன்பானவர்கள் என்பதை அறிந்து அவர்கள் மகிழ்ச்சியடையலாம்.
சாத்தான் நம்மீது எதை வீசினாலும், நாம் எதைச் சந்தித்தாக வேண்டுமானாலும், இப்போது நமக்குத் தெரியும், அவர் ஒரு மணவாட்டியைத் தேர்ந்தெடுக்கிறார், நாம்தான் அந்த மணவாட்டி. வார்த்தையின் வெளிப்பாட்டைப் பற்றி நாம் வெட்கப்படவில்லை. தேவனின் விருப்பமில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய நாம் ஒருபோதும் முயற்சிக்க மாட்டோம். நம்மைப் பொறுத்தவரை, இது நமக்கு ஒரு சரியான நேரத்தில் ஆவிக்குறிய உணவு. இறுதி நேரத்தில் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் இருப்பதை நாம் அறிந்துக்கொள்வோம், ஆனால் நாம் வார்த்தையுடன் இருப்போம்.
இதே உத்தரவாதத்தை நீங்கள் விரும்பினால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரத்திற்கு எங்களுடன் வந்து : 65-0725M கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள், செய்தியைக் கேட்க இனையுங்கள்
சகோ. ஜோசப் பிரன்ஹாம்
பரிசுத்த மத்தேயு 5: 44-45 / 7:21 / 24: 15-28
பரிசுத்த லூக்கா 17:30 / 18: 1-8
பரிசுத்த யோவான் 14:12
எபேசியர் 1: 5
II தீமோத்தேயு 3: 1-8
எபிரெயர் 6: 1-8 / 11: 4
வெளிப்பாடு 10: 1-7 / 16: 13-14
மல்க்கியா 4: 5
I இராஜாக்கள் 22: 1-28
எரேமியா: அத்திகாரம் 27 & 28